உ.பி-க்கு இன்னும் இரண்டு ஆண்டுகளில் தேர்தல். புலம்பெயர்வு தொழிலாளர் பிரச்னை பாஜகவுக்கு பெரும் சவாலாக மாறி இருக்கிறது.
ஏற்கனவே, கர்நாடகம், திருப்பூர் பகுதிகளில் புலம்பெயர்வு தொழிலாளர்களை தக்கவைக்கும் முயற்சிகள் நடவடிக்கைகள் நடக்கின்றன.
'ஓஹோ, அப்படியா ! அப்படியானால், உ.பி தொழிலாளர்கள் எங்கள் மாநிலத்துக்குள்ளே நுழைய வேண்டும் என்றால், எங்களிடம், எங்கள் அரசிடம் அனுமதி வாங்கட்டும்' என எச்சரித்திருக்கிறார் ராஜ் தாக்கரே.
முறையான உணவின்மை, வசதிகளின்மையால் அரசின் கண்காணிப்பு குறைபாடுகள் மீது ஏகப்பட்ட விமர்சனங்கள்.
மகாராட்டிரத்திலிருந்து தங்கள் மாநில தொழிலாளர்களை திரும்ப வாங்கிக்கொள்ள பல மாநில அரசுகள் மறுத்துவிட்டன.
பீகார் பின்னர் 'case to case' முடிவு எடுப்போம் என்றது.
கடைசியில் மத்திய இந்திய தலைக்கட்டு சரத் பவார் மாநில முதல்வர்களிடம் பஞ்சாயத்து பேசி பிரச்னையை முடித்துவிட்டார்.
ஏனெனில், யோகி தனது கண்டிஷன் பேச்சில், 'if they need our resource' என்கிறார். அதையொட்டி, அது தேசிய இன பிரச்னையாக மாறியுள்ளது.
எந்த அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கும் மாநிலங்களுக்கு இது நிரந்தர தலைவலிதான்.
இதர தேசிய இனங்கள், வேலை கொடுக்கும் இனங்கள், இந்தநேரத்தில் விழித்துக்கொள்ள வேண்டும்.
இல்லையென்றால், புலம்பெயர்வு அரசியலும், பெரும்பான்மைவாத இந்துத்துவ அரசியலாக மாறிவிடும்.
ராஜ் தாக்கரேயின் குரல் அந்த விழிப்புணர்வின் தொடக்கமாக இருக்கட்டும்.