திவாண்ணா Profile picture
May 29, 2020 7 tweets 2 min read Read on X
#குட்டிக்கதை -1
ஒரு முதிய துறவி தனியாக சாலை வழியே சென்று கொண்டு இருந்தார். காட்டுவழியாக வெகு தூரம் சென்று ஒரு பெரும் நதியை படகில் கடந்து அடுத்த ஊர் செல்ல வேண்டும்.
வழியில் ஒரு இளம் துறவி வந்து சேர்ந்தார்.
"நீங்கள் எங்கே போகிறீர்கள்?" என்றார் இளம் துறவி.
"அடுத்த ஊருக்கு..."
1/7
"ஓ, காட்டு வழியாக செல்ல வேண்டும். நானும் கூட வரலாமா? பேச்சுத்துணையாக இருக்கும்!"
" தாராளமாக..."
வழி நெடுக தர்ம விசாரம் - குறிப்பாக சந்நியாஸ நிலையின் கட்டுப்பாடுகளை- பேசிக்கொண்டு நடந்தனர். இளம் துறவி பல விஷயங்களை விவாதித்தார்.
கடைசியில் சந்நியாசி பணம் வைத்துக்கொள்ளலாமா கூடாதா
2/7
என்று விசாரம் நடந்தது. கூடாது என்பது பெரியவரின் கொள்கை. அவசரத்துக்காக சிறிதளவு வைத்துக்கொண்டால் தப்பில்லை என்பது இளையவரின் வாதம்.
"சந்நியாசி பணத்தை கையால் தொடுவது கூட பிரச்சினை உண்டு பண்ணலாம்; பணம் வைத்துக்கொள்ளாவிட்டால் எல்லாம் பகவான் பார்த்துக்கொள்வான்" என்றார் பெரியவர்.
3/7
இந்த நேரத்தில் காட்டு வழியின் எல்லை வந்துவிட்டது. இருட்டும் நேரமும் ஆகிவிட்டது.
ஆற்றை கடக்க இலவச படகு சேவையின் கடைசி படகு போய்விட்டது.
இரவு நேரம் வந்தால் மிருகங்களின் நடமாட்டமும் அவற்றால் தொந்திரவும் இருக்கும் என்பதால் நதியை அவசியம் கடக்க வேண்டிய சூழ்நிலை என்று இளம் துறவி
4/7
கருதினார். அங்கும் இங்கும் தேடி ஒரு படகோட்டியை கண்டு பிடித்தார். பணம் தருவதாக சொன்னதும் அவனும் ஆற்றை கடக்க படகு ஓட்ட சம்மதித்தான்.

ஆற்றை கடந்தபின் இளம் துறவி தன்னிடமிருந்த சிறு பண முடிப்பை திறந்து அவனுக்கு பணம் கொடுத்தார்.
பின்னர் ஊரை நோக்கி செல்ல ஆரம்பித்தனர், இளம் துறவி
5/7
சொன்னார். "பார்த்தீர்களா? நான் சொன்ன படியே ஆயிற்று. என்னிடம் கொஞ்சம் பணம் இருந்ததால்தானே இப்போது நாம் ஆற்றை கடக்க முடிந்தது? நான் கூட வரவில்லையானால் நீங்கள் என்ன செய்து இருப்பீர்கள்?"
6/7
பெரியவர் சிரித்துக்கொண்டே சொன்னார்: "அப்பா, நான் தனியாகத்தானே புறப்பட்டேன்? வழியில் நீயாக வந்து சேர்ந்து கொண்டாய். பணம் இல்லாத சந்நியாசிக்கு பணம் வைத்து இருப்பவர் வந்து உதவ வேண்டும் என்பது இறைவன் விருப்பம் போலிருக்கிறது!"

இளம் துறவி வாயடைத்துப்போனார்.
7/7

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with திவாண்ணா

திவாண்ணா Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @drtvasudevan

Feb 2, 2021
English Translation of Shri.Vimal Jain’s tweet:
For several years we have been consuming imported pulses. 2 years back Modi ji started stopping it and now it has been completely stopped. this protest against farmers laws is just a Sham. the real reason and story are here.
1/n
Let us read. In 2005 Manmohan stopped the subsidies for pulses. after 2 years Netherland, Australia and Canada entered into understanding with the government which was importing the pulses. several big pulses farms came up in Canada. they were handed over to the Punjabi sikhs
2/n
who were residing there and so India started importing Canadian pulses in a big way. big importers like Amarinder, Kamal nath and such congressmen along with akalis like Badal were there. they started selling the pulses the rate of 200 to 250 per kilo and soon they were
3/n
Read 16 tweets
Oct 11, 2020
#நான்யார்? - 16
அப்படின்னா பக்தி செய்யறது எல்லாம் வேணாமா?
நம்மோட உள்ள்ள்ள்ள்ளே இருக்கிற சொரூபமேதான் கடவுள். யார் தன்னையே இந்த கடவுளுக்கு கொடுத்துவிடறானோ அவந்தான் மிகச்சிறந்த பக்திமான்! அதனால உள்ளே இருக்கிற ஆத்மாபத்திய சிந்தனைக்கு மட்டுமே இடம் கொடுத்து மத்த சிந்தனை எதுக்கும்
1/8
இடம் கொடுக்காம ஆத்ம நிஷ்டையிலேயே இருக்கறதுதான் முழு அர்ப்பணிப்பு -சாக்ரிஃபைஸ்!
பின்னே நாம செய்ய வேண்டிய காரியங்களை எல்லாம் யார் செய்வாங்க?
முன்னே சூரியனைப்பத்தி சொன்னா மாதிரி இயற்கையா எல்லாம் நடக்கும். ஒரு பரமேஸ்வர சக்தி அப்படி தன் முன்னிலையில் எல்லாம் தானாக நடக்க விதிச்சு
2/8
இருக்கு. அப்படி இருக்கறப்ப எதுக்கு நாம இப்படி செய்யணும் அப்படி செய்யணும்ன்னு மண்டையை உடைச்சுக்கணும்? பரமேஸ்வரன் மேல பாரத்தை போட்டுட்டு சும்மா இருக்க கத்துக்கணும்.
ஒரு ட்ரெய்ன்ல போறோம். நம்ம தலை மேல ஒரு கனமான மூட்டையை வெச்சுகிட்டு போறோம். யாரும் என்னப்பா இதுன்னு கேட்டா நான்
3/8
Read 8 tweets
Oct 10, 2020
#நான்யார்? - 15
நடக்கறது எல்லாமே கடவுளோட வேலைதானே?
சூரியன் உதிக்கணும்ன்னு நினைச்சா உதிக்கறான்? அது இயற்கை. ஆனா அதுக்கப்பறமா உலகத்துல சூடு ஏறுது; கந்தக பூமில வாழறவங்க சூட்டை உணருவாங்க. சூரியன் உதிச்சா தாமரை மலருது. தரையில் இருக்கற ஈரம் உலருது. இதெல்லாம் இயற்கைதானே? காந்தக்கல்
1/7
முன்னே வைக்கிற இரும்பு ஊசி அதால கவரப்படறது இயற்கை என்கிறது போல ஈஸ்வரனோட சந்நிதியில பூமியில் அத்தனை பேரும் அவரவர் வேலையை செய்ய ஆரம்பிக்கறாங்க. என்ன செய்யறாங்க என்கிறது அவரவர் கர்மாவை பொருத்து அமையுது. இவரிவர் இப்படி இப்படி செய்யணும்ன்னு ஈஸ்வரனுக்கு சங்கல்பம் ஒண்ணும்
2/7
கிடையாது.
நிஷ்காம்ய கர்மம் பத்தி தெரியுமில்லே? முன்னேயே அது பத்தி பாத்து இருக்கோம். மனுஷனுக்கே இயற்கையா செய்கிற கர்மாவுடைய பலன் அவனுக்கு ஒட்டாதுன்னா ஈஸ்வரனோட சன்னிதான விசேஷத்தால மட்டுமே நடக்கும் கர்மாவுக்கும் அவருக்கும் எப்படி சம்பந்தம் வரும்?
சூரியனோட முன்னிலையில்
3/7
Read 7 tweets
Oct 9, 2020
#நான்யார்? - 14

அந்த சொரூபம் எப்படி இருக்கும்? அதோட இயல்பு என்ன?
சொரூபம் மட்டுமே இயல்பா இருக்கும். அதுவே ஆத்மாவோட சொரூபம். நாம உலகம், சீவன், கடவுள்ன்னு எல்லாம் சொல்கிறோமே அது எல்லாமே இது மேல தோற்றுவிக்கப்பட்ட கற்பனைகளே.
கடற்கரையில ஒரு சிப்பி இருக்கு. நாம கடற்கரையில் உலாவ
1
போகறப்ப இது நம் கண்ணுல படுது. சூரிய ஒளியில இது பளிச்சுன்னு இருக்கு. நாம அதை ஏதோ வெள்ளியால செஞ்ச பொருள் அங்கே கிடக்குன்னு நினைப்போம். கிட்டே போய் பார்க்கிற வரைக்கும் இது நமக்கு வெள்ளியாத்தான் தோணும். கிட்டே போய் பார்த்தா து வெள்ளி இல்லே, சிப்பின்னு தெரியும்.
அது போலத்தான்
2
இதுவும். சீவன், ஈஸ்வரன், உலகம்ன்னு எல்லாம் கற்பனை செஞ்சது எல்லாம் ஒரே பொருளைத்தான். விசாரணை செஞ்ச பிறகே அப்படி எல்லாம் ஒண்ணுமில்லை; அது நம்மோட பார்வையை பொருத்தே இருந்ததுன்னு தெரிய வரும்.
16. சொரூபத்தின் இயல்பு என்ன?
யதார்த்தமா யுள்ளது ஆத்மசொரூப மொன்றே.
3/4
Read 4 tweets
Oct 8, 2020
#நான்யார்? - 13

ம்ம்ம்... ஒரு வேளை நீங்க சொல்லறத நம்பி விசாரணையை ஆரம்பிச்சுட்டேன்னு வைங்க. எது வரைக்கும் அதை செய்யணும்?
எது வரைக்கும் உலக விஷயங்களில ஈர்ப்பு இருக்கோ அது வரை செய்யணும். நினைவுகள் எப்பல்லாம் தோணுதோ அப்பல்லாம் அவை கிளம்பற இடத்திலேயே நசுக்கணும். அத எப்படி
1/5
செய்யறதுன்னு ஏற்கெனெவே பாத்து இருக்கோம்.
முன் காலத்து ராஜா ராணி கதை மாதிரி. ஒரு கோட்டையிலேந்து வீரர்கள் வந்து கொண்டே இருக்காங்க. அவங்க வர வர ராஜ குமாரன் அவங்களை வெட்டி வீழ்த்திகிட்டே இருப்பான்னு கதை வருமில்ல? அந்த மாதிரி மனசுலேந்து எண்ணங்கள் வர வர அதை எல்லா நசுக்கி
2/5
போட்டுகிட்டே இருந்தா ஒரு வழியா வாசனைகள் எல்லாம் போய் அவை வரது நின்னுடும். சொரூபத்தையே த்யானம் செய்து கொண்டு இருப்பதே போதும். சொரூபத்தை அடைஞ்சுடுவான்.

15. விசாரணை எதுவரையில் வேண்டும்?
மனத்தின்கண் எதுவரையில் விஷய வாசனைகளிருக்கின்றனவோ, அதுவரையில் நான் யார் என்னும்
3/5
Read 5 tweets
Oct 3, 2020
#நான்_யார்? - 8
மனசாலத்தான் பார்க்கிறோம்ன்னா அந்த மனசோட சுய ரூபம் என்ன?
ஆத்மா ஆத்மான்னு சொல்லறாங்களே அதில இருக்கிற ஒரு அதிசயமான சக்திதான் மனசு என்கிறது. நாம் விழிப்போட இருக்கோம்; கனவு காண்கிறோம் என்றால் அதை மனசே தோற்றுவிக்கிறது. நாம இதைப்பார்க்கிறோம் அதைப்பார்க்கிறோம்ன்னா
1/12
அப்படி மனசு நினைக்கிறது. அதாவது அதை மனசே தோற்றுவிக்கிறது. இந்த மனசு என்ன? நினைவுகள்தான். நினைப்புகள் இல்லைன்னா மனசும் இல்லை.
இந்த ஐம்பொறிகள் வழியா மனசு வெளியே பார்க்கிறது. இதோ இந்த ரோஜாப்பூ இளம் சிவப்பா இருக்கு. நல்ல வாசனையோட இருக்கு. ரொம்ப மிருதுவா இருக்கு. ஊஊஊ! கூட
2/12
முள்ளும் இருக்கு. ரொம்ப அழகா இருக்கு - இந்த ரீதியில மனசு அதைப்பத்தி நினைக்க நினைக்க அதை நாம பார்க்கிறோம். ரொம்ப பிஸியா இருக்கோம். வேகமா அந்த ரோஜாச்செடியை தாண்டி போறோம். அதை பார்க்கக்கூட இல்லை! அப்ப நம்மைப்பொறுத்த வரை அது இல்லை. ஏம்பா வந்த வழில ஒரு ரோஜாச்செடி இருந்ததாப்பான்னு
3/12
Read 12 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(