My Authors
Read all threads
பிராமீன் பருந்து -#Brahminykite

1885 ல் சென்னை உர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நடக்கிறது. அப்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தவர் சர். முத்துசாமி ஐயர்.

அந்த வழக்கை ஆங்கிலேய நீதிபதி போர்ட்டரும் முத்துசாமி ஐயரும் விசாரிக்கிறார்கள்.
அந்த வழக்கு என்னவென்றால் ஆசாரி ஒருவர் கோவிலினுள் சென்று அவரே அபிஷேகம் செய்தார், அதனால் சிவலிங்கத்தை அசுத்தப்படுத்திவிட்டார் என்பது. கோர்ட்டில் Ipc மதம் சம்பந்தமான குற்றங்களை விவரிக்கும் defile என்ற சொல்லுக்கு இயற்கையான அசுத்தி என்றுதான் பொருள்கொள்ளவேண்டும் என ..
வெள்ளை நீதிபதியான போர்ட்டர் சொல்கிறார். ஆனால் பிராமணரான சர் முத்துசாமி ஐயர் Defile என்ற சொல்லுக்கு பிராமணர்கள் எந்த அர்த்தத்தில் பொருள் கொள்கிறார்களோ அப்படியே பொருள் கொள்ளவேண்டும் என்று கருத்து தெரிவிக்கிறார்.

அதன் அடிப்படையில் தாந்திரிகமான அசுத்தி என்று ..
அவ்வார்த்தைக்கு பொருள் கொள்ளப்பட்டது.
அதாவது பிராமணர்களைத்தவிர மற்றவர்கள் டெட்டாலில் குளித்து விட்டு வந்தாலும் சடங்குமொழியில் அசுத்தமானவர்களே.
பிராமணன் மாதக்கணக்கில் குளிக்காமலிருந்து, குண்டிகழுவாமல் வந்தாலும் சுத்தமானவனே என்பதுதான் பொருள்.
நீதிபதி சர் முத்துசாமி ஐயரின் கருத்தை ஏற்று சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்த ஆசாரிக்கு தண்டனை வழங்கப்பட்டது. அதன் பிறகு கோவில், சனாதனம் தொடர்பான எந்த வழக்குகள் வந்தாலும் முத்துசாமி ஐயரின்
கருத்தை பிரமாணமாகக்காட்டி தண்டித்திருக்கிறார்கள்.
1866 ல் -ஆரட்டு -அஷ்டமி என்ற விழா நடந்தபோது நடந்த சம்பவம்.
அப்போது ஆர் ஹெச் பெர்குசன் என்பவருக்கு நிகழ்ந்தது.
காவல்துறை துணைகண்காணிப்பாளர் அந்தஸ்தில் இருந்த. அவர் பொதுத்தெருவில் தனிப்பட்ட முறையிலும், அரசு அலுவலர் என்ற முறையிலும் அனைவர்க்
கும் முன்பாக அவமானப்படுத்தப்பட்டேன்...
என குறிந்பெழுதி வைத்திருக்கிறார்.

அவ்வளவு ஏன் திருவிதாங்கூர் திவான் ராகவையா மன்னரே ஆனாலும் தீட்டுதான் என்று கூறியதாக குறிப்புகளில் இருக்கிறது.

அடுத்து ஒரு சுவாரஸ்யமான சம்பவம்.

1923 ல் திருவனந்தபுரம் கோட்டையில் முறைஜெபம் நடந்துகொண்டிருந்தது.
(அரசர் ஒருவர் அரசை விரிவுபடுத்தும்போது மற்றவர்களோடு பிராமணர்களையும் கொன்றுவிட்டாராம். அதற்கு பரிகாரமாக இந்த முறைஜெபம்.
இதில் நம்பூரிகள் அரசவிருந்தினர்களாக அழைக்கப்படுவார்கள். அப்போதும் அரசன் கொன்ற மற்ற சாதியினரை அழைப்பதில்லை. பிராமணர்களுக்கு வாரி வழங்கும் விழா இது.
6 ஆண்டுகளுக்கு ஒருமுறை அறுபது நாட்கள் நடக்குமாம். இந்த அறுபது நாட்களில் ஒவ்வொரு பிராமணனின் தேவையும் தனியாக விசாரிக்கப்பட்டு நிறைவேற்றப்படுமாம். தினமும் பணம் தட்சணையாக வழங்கப்படுமாம். இதுதான் முறைஜெபம்.இந்த ஜெபத்தினை 25 முறை நடத்திவிட்டு நிறுத்திவிட மன்னர் முடிவுசெய்திருந்தாராம்
ஆனால் 1923 ல் நடப்பது 28 வது ஜெபம்.
காரணம் எளிதில் யூகிக்கக்கூடியதே.
பார்ப்பனர்கள் தொடரச்சொல்லி பேராசையால் ஏதேனும் சனாதன, சாங்கிய, வேதப்பெயரால் வற்புறுத்தி தொடரச்செய்திருக்க வேண்டும்.
இந்த ஜெபத்திற்கு பொது முதலிலிருந்தே (அரசின் பணம்) பணம் செலவழிக்கப்பட்டது.
ஆரம்பத்தில் ஒரு ஜெபத்திற்கு 75 000 ₹ அனுமதிக்கப்பட்டது. 1923 ல் பொது முதலிலிருந்து ஆறு லட்ச ரூபாயை அனுமதித்திருக்கிறார்கள்.)

அந்த வளாகத்திலேயே நீதிமன்றமும் இருந்தது. அங்கே ஒரு வழக்கு சம்பந்தமாக நாடார் சமுதாயத்தாரான வழக்கறிஞர் மாதவன் வருகிறார்.
அவரது வருகையால் அந்த இடமே தீட்டுப்பட்டுவிட்டதாக மாதவனை வெளியேறச்சொல்லி மாவட்ட மாஜிஸ்ட்ரேட்டும் முறைஜெபம் நடத்துவதற்கான தனி அதிகாரியுமான சி. கோவிந்தப்பிள்ளை உத்தரவிடுகிறார்.

பிறகு இருக்கவே இருக்கிறது தோள்சீலை போராட்டம்.
இந்த அவமரியாதைகளை வைதீக பார்ப்பனர்களால் சுமந்து திரிந்தவர்கள் இப்போது அதே பார்ப்பனர்களின் சங்கிப்படையில் இருக்கிறார்கள்.

சாதிய இழிவுகள் எப்படியெல்லாம் எங்கெல்லாம் நுழையும் என்பதற்கு ஒரு வரம்பே கிடையாது.

சாதாரணமாக நாம் பருந்தைப்பார்க்கிறோம்.
அதிலும் சனாதனம் விளையாடியது இப்போது கழுத்து வெள்ளையாக உள்ள பருந்தை பிராமின் பருந்து என்றும், ஊர்ப்பருந்தை பறையா பருந்து என்றும் மாற்றியிருக்கிறார்கள்.

சாதி வெறியில் ஊறித்திளைத்திருந்த இவர்கள் மெதுவாக அதை இடைசாதிகள் பக்கம் தள்ளிவிட்டார்கள்.
ஊருக்குள் செருப்பை தூக்கிக்கொண்டும், தலைத்துண்டை கழற்றிக்கொண்டும் சைக்கிளை தள்ளிக்கொண்டும் நடந்தவர்கள் இன்னும் நினைவிலிருக்கிறார்கள்.
சமீபத்தில்கூட இரட்டை டம்ளர் முறை பெரிதாக பேசப்பட்டது.
அலகாபாத்தில் ஒரு நீதிபதி தாழ்த்தப்பட்டவர் முன்பு நீதிபதியாக அங்கிருந்ததற்காக நீதிமன்ற அறையை கழுவ உத்தரவிட்டார்.

இதையெல்லாம் சனாதனிகளின் கட்சியான பீஜேபி இப்போது மறுத்து திருப்பிப் போடுகிறது.

இவர்களை தொடர்ந்து அம்பலப்படுத்திக்கொண்டே இருக்கவேண்டும்..
இல்லையென்றால் 11 ஆயிரம் மருத்துவ உயர்கல்வி சீட்டுகள் மட்டுமல்ல, மறுபடியும் முன்பிருந்தது போலவே ஆகும்.
பிராமணர்கள், சத்ரியர்கள் மட்டுந்தான் சொத்துவாங்கமுடியும், அரசின் சொத்துக்கள், பணமெல்லாம் பிராமணர்களுக்கு தானமாக வழங்கப்படவேண்டும் என்ற நிலையும் மறுபடி வரலாம்.
பறையா பருந்து குறித்த லிங்க்கை இணைத்திருக்கிறேன்.

bbc.com/tamil/india-49…

எழுதியவர் : Aran Kumar
Brahminy kite என்ற பெயரை மாற்றத் தான் அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். போதிய எண்ணிக்கையில் மக்கள் ஆதரவாக விண்ணப்பம் பூர்த்தி செய்தால் வரும் நாட்களில் மாற்றி விடலாம்.
#obc
#OBCreservation

docs.google.com/forms/d/e/1FAI…
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Keep Current with sivagsk

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!