யாரிவள்? பெயரே வித்யாசமாக இருக்கிறதே.... எனப் புருவம் உயர்த்துவோர்க்கும், ந்ருஸிம்ம பக்தர்களுக்கும்... படிப்பில் ஆவல் கொண்டவர்களுக்கும்.... ஒரு குட்டிக் காதல் கதை... இன்றைய நாள் இனிதே நடக்க....
ஸத்ய யுகம் எனப்படும் க்ருதயுகத்தில், ந்ருஸிம்ஹ (நரசிம்ம) அவதாரம் எடுத்தார் பகவான். அவர் அவதாரம் எடுத்து, பூலோகம் வந்து ஹிரண்யனை வதைத்தும், உக்ரம் குறையாததால் தவமியற்ற ஆரம்பித்தார் யோக ந்ருஸிம்ஹராக..
பல காலமாகியும் பகவான் திரும்பாததால், ப்ரபஞ்சம் நினைத்துக் கவலையுற்றாள் லக்ஷ்மி.
அகோபிலத்தின் அருகே அவர் தவத்திலிருப்பது கண்டாள். அவரை தவத்தினின்று கலைக்க பயந்து, அங்கிருந்த #செஞ்சு என்னும் ஒரு வனவாசியர்களிடத்தில் மகளாகப் பிறந்து வளர்ந்தாள்.
ந்ருஸிம்ஹரின் தவம் முடிந்து, குஹா ந்ருஸிம்ஹராக வெளியில் வந்தவர் கண்ணில் பட்டுவிட்டாள். அவளைக் கண்டதும், தன் லக்ஷ்மி என
அறிந்த பகவான், அவளிடம் சென்றார். ஆனால் தாயாரோ கோபமாக இருப்பதாக, முகத்தைத் திருப்பிக் கொண்டு பாவனை செய்தார். லக்ஷ்மி தேவியின் சினம் தனிக்க, பகவான் அவளைக் கொஞ்சு மொழியில் கெஞ்சினார்....
பின்னர் மனம் இறங்கிய லக்ஷ்மி தேவிக்கும், பகவானுக்கும், அம்மலைவாழ் மக்களின் முறைப்படி,
திருமணம் இனிதாக நடந்தேறியது. பகவானும் (தன் மனைவியிடம்) காதல் கொண்ட கதை இது. அம்மலை வாசிகள் அகோபிலம் பகுதியில் பன்னெடுங்காலமாக வசித்து வருபவர்கள்.
அவர்கள் இனத்திற்கு #செஞ்சு என்று பெயர். அங்கே வளர்ந்ததால், தாயார் #செஞ்சுலக்ஷ்மி ஆனார்.
இன்று ஜாதி பேசி ப்ரச்சனை பண்ணும் ஜந்துக்களுக்கும், மதம் மாற்றும் ஜென்மங்களுக்கும், இது போல் அதிகம் மக்கள் அறியாத கதை பல உள்ளது... என்பதை செருப்பால் அடித்தாற்போல் கூறி அவர்கள் வாயை மூடுவது நமது கடமையில் ஒன்று...
🍁வாஸவி நாராயணன்🍁
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஒரு மன்னனுக்கு நிறைய குழந்தைகள். அந்த நாட்டின் சட்டப்படி மன்னனின் வாரிசுகளில் யாருக்கு மக்களிடம் அதிக செல்வாக்கு இருக்கிறதோ அவர்களே மன்னனாக முடியும்.
அந்த வகையில் மன்னனின் பிள்ளைகளில் ஒருவன் மக்களிடம் அவன் அந்த நாட்டு அரசனானால்
அவர்களுக்கு நிறைய சலுகைகள் வழங்குவதாக உறுதியளித்தான். அவனின் பேச்சு மக்களை ஈர்த்தது. மக்கள் அதில் மதி மயங்கினர். அதனால் அவனை அமோகமாக ஆதரித்தனர். அவனும் அந்நாட்டின் மன்னனானான்.
ஆனால் அவன் மன்னனான பின் அவன் கொடுத்திருந்த உறுதிமொழிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை.
இதனால் மக்கள் வெறுப்படைந்து இருந்தனர். மக்களின் சார்பாக மன்னரிடம் மெய்க்காப்பாளனாக வேலை பார்த்த ஒருவன் அவரிடம் கேட்டான்,
"மன்னா! உங்கள் வார்த்தைகளை நம்பித்தான் மக்கள் உங்களுக்கு ஆதரவளித்தார்கள். ஆனால் நீங்கள் அவர்களின் ஆதரவை மட்டும் பெற்றுக்கொண்டு அவர்களுக்குச் செய்வதாகச் சொன்ன
ஒரு முறை மகாகவி காளிதாசர் வயல்வெளியே வெயிலில் நடந்து சென்ற போது தாகம் எடுத்தது. சற்று தூரத்தில் ஒரு கிராமப்பெண், கிணற்றில் தண்ணீர் சேந்தி, குடத்தில் எடுத்து வந்துக்கொண்டிருந்தாள். காளிதாசர் அவரைப் பார்த்து
”அம்மா தாகமாக இருக்கு.
கொஞ்சம் தண்ணீர் தருவீர்களா?” எனக் கேட்டார். அந்த பெண்ணும்,
”தருகிறேன். உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்”
என்றாள். உடனே காளிதாசருக்கு ஒரு உயர்வு மனப்பான்மை ஏற்பட்டு, ’இந்தப் பெண்ணிடம் நாம் யார் என்று சொல்ல வேண்டுமா?’ என நினைத்து.
”நான் ஒரு பயணி அம்மா” என்றார்!
உடன் அந்த பெண்,
“உலகில் இரண்டு பயணிகள் தான்! ஒருவர் *சந்திரன், ஒருவர் சூரியன்*. இவர்கள்தான் இரவு பகலெனப் பயணிப்பவர்கள்” என்றாள்!
”சரி என்னை விருந்தினர் என்று வைத்துக் கொள்” என்றார் காளிதாசர்! உடனே அந்தப் பெண்,
“உலகில் இரண்டு விருந்தினர்தான்! *ஒன்று செல்வம், இரண்டு இளமை*!
இதை எழுதியவர் என் மனநிலையைப் படித்தது போலவே எழுதியுள்ளார். அவரது எழுத்தை இங்கே தருகிறேன்.
”வாழ்க்கையில் முதன் தடவையாக ஒரு இந்திய அரசியல்வாதியை அவரது அரசியல் ராஜதந்திரங்களுக்காகவே ரொம்பப் பிடித்துப் போகிறது. சொல்லப்போனால்...
அவரது பரம ரசிகையாகவே மாறிக்கொண்டு வருகிறேன். அவர் தான் எஸ். ஜெய்சங்கர் என்று அழைக்கப்படும் இந்திய வெளியுறவு அமைச்சர் பத்மஶ்ரீ. ஸுப்ரமண்யம் ஜெய்சங்கர்.
ஒரு அரசியல்வாதியாக, ஒரு தலைவராக, ஒரு ராஜதந்திரியாக, ஒரு திறமையான வெளியுறவுத்துறை அமைச்சராக, ஒரு அறிவுஜீவியாக,
ஒரு கெத்தான ஆசாமியாக என எல்லாக் கோணங்களிலும் இந்த மனுஷன் ரொம்பவே கவர்கிறார்.
09/01/1955-ல் பிறந்த ஜெய்சங்கர், அரசியல் மற்றும் அறிவியலில் எம்.ஏ மற்றும் எம்.பில் பட்டம் பெற்று, பின் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (JNU) சர்வதேச உறவுகளில் (International relations)
சற்று விவரமான பதிவு. பொறுமையாகப் படித்து அறியுங்கள்.
பெய்ட் (Bayte) துவாரகாவில் உள்ள இரண்டு தீவுகளுக்கு உரிமை கோரிய சன்னி வஃப் வாரியத்தின் மனுவை குஜராத் உயர்நீதிமன்றம் சென்ற மாதம் நிராகரித்தது.
இந்துக்களின் புனித யாத்திரை ஸ்தலமான பெய்ட் துவாரகா தீவில் உள்ள இரண்டு தீவுகளுக்கு உரிமை கோரி குஜராத் உயர்நீதிமன்றத்தில் சன்னி வஃப் வாரியம் மனு தாக்கல் செய்தது.
பெய்ட் துவாரகா தீவின் தொகுப்பில் 8 சிறிய தீவுகள் உள்ளன. பெய்ட் துவாரகாவில் தங்களுக்குச் சொந்தமான இரு தீவுகள் இருப்பதாக
வஃப் வாரியம் மனுவில் கூறியிருந்தது. நீதிமன்றம்,
“நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஸ்ரீக்ருஷ்ணர் நகரில் உள்ள நிலத்திற்கு வஃப் வாரியம் எப்படி உரிமை கோர முடியும்?” எனக் கேள்வி எழுப்பியது.
ஸ்ரீ க்ருஷ்ணர் துவாரகாவை ஆண்டபோது, பெய்ட் துவாரகாவின் இருப்பிடமாக