(இந்தி நல்லெண்ணத் தூதுக்குழுவினருக்கு 11.10.1950 அன்று அண்ணா அளித்த பேட்டி)
சதுர்வேதி: எங்கள் தூதுக்குழு அரசியல் சார்பற்றது. சமாதானம், நட்பு ஆகியவைகளைப் பலப்படு்த்தும் நோக்கத்துடனேயே வந்திருக்கிறோம்.
மகிழ்ச்சி. ஆனால், துரதிர்ஷ்ட வசமாக, யார் என்னைப்பற்றித் தப்பாகப் பிரசாரம் செய்கிறார்களோ அவர்களையே நீங்கள் முதலில் சந்தித்திருக்கிறீர்கள்
சதுர்வேதி: இல்லை. இல்லை. அப்படி நினைக்காதீர்கள்
தேசிய மொழியாக இருக்கவேண்டும் என்று இந்தியைப் புகுத்துபவர்கள் காரணம் சொல்கிறார்கள். அதைக் காட்டியே இராஜகோபாலாச்சாரியார் இந்தியைப் கொண்டுவந்தார்.
அதோடு எங்கள் மொழி என்றால் எல்லோரும் போற்றும் ஒரு சிறந்த மொழி.இலக்கிய வளமும் சிறந்த அழகும் வாய்ந்தது.
இந்தி அழகுள்ளதல்ல. இலக்கிய வளங்கொண்டதல்ல என்று தங்கள் போன்றோரே ஒப்புக் கொண்டுள்ளீர்கள். ஆகவே, அத்தகைய ஒரு மொழி, எங்கள்மீது ஏன் சுமத்தப்பட வேண்டும்?
எங்கள் எதிர்ப்புக்கு அரசியல்
இந்தியா ஒரே நாடு என்ற எண்ணத்திலேயே இந்தி மொழி ஆதரவாளர்கள் அரசியல் மொழியாக வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.
சி.என்.ஏ:
இல்லை சகோதரி! இந்தியா நாடல்ல. உபகண்டம். பல இனங்கள் வாழும் ஒரு பரந்த நிலப் பரப்பு.இங்கே ஒரே ஆட்சி நிலவுவது என்பது முடியாதது. அதேபோல,ஒரே மொழி அரசாங்க மொழி ஆவதும் இயலாது. இந்த இடத்தில் உங்களுக்கு ஒன்று கூற விரும்புகிறேன்.
சி.என்.ஏ.: நாங்கள் கோரும் திராவிடநாடு பூகோள நீதியிலும் சரித்திர ரீதியிலும் எப்போதும் தனியாகவே இருந்ததாகும். வட இந்தியாவைப் போன்றதல்ல. பெரிய பெரிய சாம்ராஜ்யங்கள் வடக்கே இருந்திருக்கின்றன.
பிரிட்டிஷார் இந்தியாவுக்கு வந்து, இந்திய நாட்டைத் தங்கள் வசப்படுத்திய பின்னரே இந்தியா உருவாயிற்று.
அதற்கு முன்னதாகத் தென்னாடு - தக்காணம் - ஒரு சுதந்திர நாடாகத்தான் இருந்தது
சதுர்வேதி: தாங்கள் தனிநாடு கோருவதன் நோக்கம் என்ன?
சி.என்.ஏ.: எல்லா அதிகாரங்களும் எம்மிடமே இருக்கவேண்டும் என்பதுதான்.
சி.என்.ஏ.: சாத்தியம்தான். எங்களை நாங்கள் ஆண்டு கொள்வதற்கான அத்துணை வசதிகளும் உள்ளன.
சதுர்வேதி: அதாவது, திராவிடஸ்தான் பொருளாதார வசதி நிறைந்த ஒரு தனிப்பகுதி என்று தெரிந்துகொண்டேன். அப்படித்தானே?
சி.என்.ஏ.: ஆமாம்!