வாஷிங்டன் : எல்லைப் பிரச்னையில், இந்தியாவை வம்புக்கிழுத்த விவகாரம், 'பூமராங்' போல, சீனாவையே தாக்கியுள்ளது. எல்லையில் நடந்த மோதலில் உயிரிழந்த வீரர்களின் எண்ணிக்கையை தெரிவிக்க, சீன அரசு மறுத்து வருவதால்,
அதனால், சீனாவில் ராணுவப் புரட்சி ஏற்படும் ஆபத்து உள்ளதாக கூறப்படுகிறது.மற்ற நாடுகளை ஆக்கிரமிக்கும் கொள்கை கொண்டுள்ள சீனா, இந்தியாவிடமும் வாலாட்ட முனைந்தது.
இதற்கிடையே, ஜூன், 15ம் தேதி, இரு ராணுவத்துக்கும் இடையே கைகலப்பு மற்றும் மோதல் ஏற்பட்டது. அதில், இந்திய ராணுவத்தைச் சேர்ந்த, 20 பேர் உயிரிழந்தனர். சீன தரப்பில், 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
அதேபோல், சீன ராணுவத்தில் பணியாற்றிய முன்னாள் வீரர்களும், ஓய்வூதியம் உள்ளிட்டவை கேட்டு நீண்ட காலமாக போராடி வருகின்றனர். அவர்களும், அதிபர் ஷீ ஜிங்பிங் அரசுக்கு எதிராக அதிருப்தியில் உள்ளனர்.
அதனால், சில ராணுவ உயரதிகாரிகள், முன்னாள் ராணுவ வீரர்களுடன் இணைந்து, அரசுக்கு எதிராக, ராணுவப் புரட்சியில் ஈடுபடும் ஆபத்து உள்ளதாக தெரிகிறது.இது குறித்து, அமெரிக்காவில் இருந்து வெளிவரும், 'வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகையில், ஒரு கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், அவர் கூறியுள்ளதாவது:எல்லையில் நடந்த மோதலில், உயிரிழந்த வீரர்கள் குறித்த விபரங்களை இந்தியா வெளியிட்டது.
அதனால், உரிய உதவிகள் கேட்டு, முன்னாள் வீரர்கள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அதிபர் ஷீ ஜிங்பிங்குக்கு எதிரான மனநிலையில், பல லட்சக்கணக்கான முன்னாள் வீர்ரகள் உள்ளனர்.
அடுத்து வரும் வாரங்களில், முன்னாள் ராணுவத்தினரின் போராட்டம் தீவிரமாகும். அது நடந்தால், ராணுவப் புரட்சிக்கு முன்னோட்டமாக இருக்கும்.இவ்வாறு கட்டுரையில் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவைத் தொடர்ந்து, எல்லைப் பிரச்னை தொடர்பாக, பல நாடுகள், சீனாவுக்கு எதிராக அணி திரண்டு வருகின்றன. இந்த நிலையில், மற்றொரு ஆசிய நாடான மியான்மரும், சீனாவுக்கு எதிராக களமிறங்கிஉள்ளது.
'லடாக் எல்லைப் பகுதியில், மீண்டும் அமைதி நிலவும் வகையில், சீனா செயல்பட வேண்டும்' என, இந்தியா வலியுறுத்திஉள்ளது.டில்லியில், வெளியுறவு செய்தி தொடர்பாளர், அனுராக் ஸ்ரீவஸ்தவா கூறியதாவது;
களில் பதற்றத்தை குறைத்து, அமைதி நிலவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சீனாவிடம், இந்தியா மீண்டும் வலியுறுத்திஉள்ளது. இரு நாடுகளின், ராணுவ கமாண்டர்களுக்கு இடையே நடந்த பேச்சில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுஉள்ளது.
தினமலர்