1. சேவையை வியாபாரமாக்கும் நாட்டில் வியாபாரத்தை கூட சேவையாக செய்யும் மனிதர்கள்...
❤️
30நாற்பது வருடமாக ஒரு கடையை வைத்து நடத்திகிட்டு இன்னும் அந்த கடை ஒரு வெயில் மழை ஒழுகும் கூரையின் கீழ் செயல் படுகிறது என்றால் நிச்சயமாக சொல்ல முடியும் அவர்கள் அங்கே வியாபாரம் எல்லாம் செய்யவில்லை
2. ஒரு மாபெரும் மக்கள் சேவை செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று. ஏழை எளியவர்களுக்கு பசி போக்கிக் கொண்டிருக்கிறார்கள் அந்த கடையை வைத்து நடத்தும் மனிதர்கள்.
நாளை ஞாயிற்றுக் கிழமை இந்த வார புரதத்தேவையை இன்றே வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். அந்தோணிசாமிக்கு தமிழ் நாட்டில் எங்கே விலை
3. குறைவாக தரமாக என்னவெல்லாம் கிடைக்கும் என்பது அத்துபடி. அப்படி போனவாரம் யானை பார்க்க போனபோது தொண்டாமுத்தூரில் 1கிலோ மட்டன் 500ரூ. தான்.. நான் வாங்கி தருகிறேன் வாங்க என்று கூப்பிட்டது நினைவில் இருந்தது.
இன்று காலை அதற்கான தேவை வந்துவிடவும் இருவரும் கிளம்பினோம் தொண்டாமுத்தூரை
4. நோக்கி. காலை மணி 10 தாண்டி விடவும் வயிற்றில் பசி கிள்ள ஆரம்பித்து விட்டது.
“பசிக்கிறது அந்தோணி..”
“தொண்டாமுத்தூர்ல ஒரு பாட்டி கடை இருக்கு... கிராமத்து சமையல். வாங்க உங்களுக்கு இட்லி, தோசை வாங்கி தாரேன்” னு கூட்டிகிட்டு போனார்.
தொண்டாமுத்தூர் பிருந்தாவன் சீனியர் சிடிசன்
5. பவுண்டேசன் பிரிவில் வாகனத்தை நிறுத்தச் சொன்னார்.
மிகவும் எளிமையான ஒரு கடை உள்ளே வெளிச்சம் இல்லை. உள்ளே போனவுடன் எல்லாம் இருட்டாக இருந்தது. சிறிது நேரத்தில் கண்கள் பழகி இருட்டுக்குள் கண் தெரிய ஆரம்பித்தது. எங்களுக்கு முன்னால் இரண்டு மனிதர்கள் சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர்.
6. உள்ளே நுழைவதற்கு முன்னரே அந்த தோசை சுடும் மணம் எனது நெஞ்சை நிறைக்க ஆரம்பித்தது.
உளுந்தும் அரிசியும் அரைத்து முதல் நாள் ஒன்றாக கலந்து வைத்துவிட்டால் உற்பத்தி ஆகும் ஈஸ்ட் தோசையில், முட்டை முட்டையாக கோலம் போட்டுவிட்டு காற்றில் கலந்துவிடும் அந்த வாசம். கிராமத்தில் அம்மா தோசை
7. சுடும்போது இதற்கு முன் வந்த அந்த இனிமையான மணம் நகர வாழ்க்கையில் நுகர்ந்து பார்க்கவே இல்லை.
சமையல் அறை சாப்பிடும் டைனிங் எல்லாமுமே ஒரே இடத்தில்தான். அந்தோணி சாமி அடுப்பு பக்கத்தில் இருந்த ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டார். “குளிர் நேரத்தில் இங்கே உக்காந்து சாப்பிட்டால் நல்ல
8. இதமாக இருக்கும்” அவர் அங்கே ஒரு நிரந்தர வாடிக்கையாளர் என புரிந்தது. அடுப்பில் தென்னை மட்டை எரிந்து கொண்டிருந்தது விறகு அடுப்புதான் சமையலுக்கு.
10மணிக்கே 5இட்லிதான் இருந்தது. எங்களுக்கு ஆளுக்கு 2இட்லியும் முட்டை தோசை ஆர்டர் கொடுத்துவிட்டு காத்திருந்தோம். நீண்ட நாட்களாக
9. அளவாகவே காலை உணவை எடுத்துக் கொள்ளும் பழக்கம் இருந்ததால் அதிகம் சாப்பிடவில்லை. ஆனாலும், சாப்பிட்ட 2இட்லியும், முட்டை தோசையும் மனதில் இன்னும் இனிமையாக நிற்கிறது. சாம்பாரும் சட்டினியும் வேற லெவல் சுவை. கிராமத்து மணம் கமழும் சுவையுடன் இருந்தது. முட்டை தோசை வீட்டு தோசையின் மேல்
10. இந்திய வரைபடம் வரைந்தது போல இருந்தது.
முட்டை தோசையை இலையில் வைத்துவிட்டு சட்டினி சாம்பார் வரவில்லை. அங்கே உக்காந்துகிட்டு செல்போனை முறைத்துக் கொண்டிருந்த பையனை பார்த்து “டேய் தம்பி வாட்சப்பை நோண்டியது போதும்... கஸ்டமரை கவனி சட்டினி சாம்பார் ஊத்து” அதட்டினார் அந்தோணி.
11. “தம்பி தம்பி அந்த பையனும் உங்கள மாதிரி சாப்பிட வந்தவன் தான்” னு பாட்டி சொல்ல, “உங்க பேரன் இல்லையா இது.? நான் அவன் தான்னு நெனச்சேன்” என்று சிரித்தார் சமாளிப்பதில் வல்லவரான அந்தோணி. பல்பு வாங்குறது எல்லாம் சர்வ சாதாரணம் எங்களுக்கு அதைப்பற்றி கவலைப்பட்டதும் இல்லை... அலட்டிக்
12. கொள்வதும் இல்லை. குப்புற விழுந்தாலும் மீசையில் எங்களுக்கு ஒருநாளும் மண் ஒட்டவே ஒட்டாது. என் தவறை நீ மறைத்து எனக்காய் அர்ச்சனை வாங்கினாய் டைப் எனக்கு அவர்.
சாப்பிட்டு விட்டு “அம்மா நான் ஒரு படம் எடுத்துக் கொள்ளட்டுமா?” என்று கேட்க சிரித்துக் கொண்டே சம்மதித்தார்கள். அவர்கள்
13. கல்லில் தோசை ஊற்றும் அழகை படமாக எனது மொபைலில் பதிவு செய்து கொண்டே “இந்த கடைக்கு என்ன பெயர்.? உங்கள் பெயர் என்னம்மா.?” என்று கேட்டதற்கு “கடைக்கு பெயர் எல்லாம் வைக்கலைங்க... என் பெயர் சோமசுந்தரி” என்று வெள்ளந்தியாய் சிரித்தார்கள்.
நீண்டநாட்களுக்கு பிறகு கொரோனா காலத்தில் ஒரு
14. சுவையான உணவை ருசித்த மகிழ்ச்சியில் இருவரும் மட்டன் வாங்க கிளம்பினோம்.
-முகநூலில் ஒரு நண்பரின் பதிவு
❤️❤️❤️
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
அநேகமாய் இந்தப் பதிவில் இணைத்திருக்கும் இந்தப் படம்... பதிவைப் படித்த பிறகு மறுபடி ஒரு முறை உங்களை இப்படத்தைப் பார்க்கத் தூண்டின்லும் தூண்டும் என்றே நினைக்கிறேன்.
நண்பகல் நேரத்து மயக்கம்... என்றால் அது மதிய உணவுக்குப் பின்னான சிறு உறக்கம். உறங்கி உடனே++
எழுந்து விட்டால் நாம் உறங்கினோமா இல்லையா என்ற குழப்பம் ஏற்படும். அதிகம் உறங்கிவிட்டாலோ எழும்போது அது மாலையா பகலா என்ற குழப்பம் உண்டாகும். அதுபோல இந்தக் படத்தில் நாம் பார்த்த கதை அங்கே நிகழ்ந்ததா... இல்லை நிகழ்ந்தது போன்ற கற்பனையா என்று நம்முடன் டைரக்டர் விளையாடும் விளையாட்டு ++
தான் நண்பகல் நேரத்து மயக்கம் படத்தின் கதை. தமிழும் மலையாளமும் ஒன்றோடு ஒன்று கலந்து நிற்கும் போஸ்டர் டிசைன் சொல்வது போன்ற ஒரு குழப்பமான மயக்கம் அது.
படத்தில் ஒரு மதிய உணவுக்குப் பின்னான உறக்கத்தில் விழும் ஜேம்ஸ் விழிக்கும் போது சுந்தரமாய் விழிக்கிறான். பிறகு ஒருநாள் முழுவதும் ++
1. கொஞ்ச நாள் ஸ்கூல்ல பசங்க அது பண்ணாய்ங்க, இது பண்ணாய்ங்கனு விடாம வீடியோ போட்டு குறை சொன்னாய்ங்க ரெண்டு மாசம் முன்ன. தீபாவளி அப்ப டாஸ்மாக் சேல்ஸ் டாட்கெட் வைக்கறாய்ங்க, தீபாவளிக்கு குடிச்சே அழியறானுங்கனு குறை சொன்னாய்ங்க. இப்ப பொங்கலுக்கு துணிவு வாரிசுனு சினிமா ஸ்டார் பின்னாடி
"இத்தனை பேர் இருக்கற இந்தியால ஒரு 11 பேர் இல்லையா.. ஃபுட்பால் விளையாட.?" ன்னு திடீர்னு ஒரு லெபனானி என்ஜினியர் எங்களைப் பார்த்து கேட்டான் இங்க.
"நாங்க காலனியா இருந்தவங்க. அதனால கிரிக்கெட் அடிக்ட் ஆகிட்டோம் போல"னு நான் பதில் சொன்னேன் எப்பவும் போல.
உடனே
2. கூட இருந்த இன்னொரு எகிப்தைச் சேர்ந்த என்ஜினியர், "ஏன்.. நாங்களும்தான் காலனியா இருந்தோம். நாங்க என்ன கிரிக்கெட்டா ஆடறோம்.? ஃபுட்பால் தான ஆடறோம். இவ்வளவு ஏன்... நம்மை காலனியா வெச்சிருந்த இங்கிலாந்து கிட்டயே பெரிய ஃபுட்பால் டீம் இருக்கே.!"னு கேட்டதும், யோசிக்க ஆரம்பிச்சேன்
ஆனா,
3. இப்ப எனக்கு உதவிக்கு வந்த இன்னொரு இந்தியர் சொன்ன பதில் கொஞ்சம் பொருத்தமா தெரிஞ்சது.
அவர் சொன்னாரு, "இந்தியா ஒரு விநோதமான நாடு. இங்க அரசியல்ல விளையாடுவாங்க. விளையாட்டுல அரசியல் பண்ணுவாங்க.
இங்க ஃபுட்பால் மட்டுமில்லை. எங்க தேசிய விளையாட்டான ஹாக்கியவே அம்புட்டு கவனிக்க
விக்ரம் காதலிச்சு அவர் வீட்டால விரட்டப்பட்ட பொண்ணு தான் பாண்டியனை கட்டிகிட்டு, அவன் செத்த பிறகு
2. திரும்ப வந்து பழி வாங்க காத்திருக்குனு புரிய இன்னும் கொஞ்சம் நேரம் எடுக்குது.
வாய்ஸ் ஓவர்ல இந்த உறவெல்லாம் தெளிவுபடுத்திட்டு படத்தை ஸ்டார்ட் பண்ணிருந்தா படம் ஆரம்பிக்கறப்பவே கொஞ்சம் குழப்பம் இல்லாமல் பிக்கப் ஆகியிருக்கும்.
இதுல பாண்டியனை ஐஸ்வர்யாராய் கட்டிக்கிச்சா.. இல்லை,
3. விக்ரம் அப்படி நெனச்சார்னு அடுத்த பார்ட்ல ட்விஸ்ட் வைக்கப் போறாய்ங்களா தெரியலை. அப்படி வெச்சா சோழர்களேட உளவுப்படை பத்தி வேற நமக்கு சந்தேகம் வந்துடும்.
கூடவே, முறைப்படி விக்ரம் தான் மூத்தவர், அடுத்த அரசன்னு இருக்கறப்ப.. அவரை விட்டுட்டு எதுக்கு எல்லோரும் ஜெயம் ரவியை குறி
பொன்னியின் செல்வன் படத்தில் வரும் இந்தப் பாத்திரம் தான் உண்மையில் என்னை கவனிக்க வைத்தது.
சோழ தேசத்தில் அநாதையாய் இருக்கும் இவர், முதலில் சோழ இளவரசனை தனது அழகால் வளைக்கிறார்.
பிறகு சோழ இளவரசியால் விரட்டப்பட்டு காணாமல் போனாலும், பாண்டிய மன்னனை மணந்து பாண்டிய அரசியாய்
2. வாழ்கிறார்.
போரில் பாண்டியமன்னனை அதே சோழ இளவரசன் கொன்றதும், சோழ தேசம் திரும்பி அடுத்து தேசத்தைக் கைப்பற்ற விரும்பும் பழுவேட்டரையரைத்தான் மணந்திருக்கிறார்.
அப்படியே பழுவேட்டரையர் இறந்தாலும் சோழ இளவரசன் இன்னும் மணமுடிக்காமல்தான் இருக்கிறான்.
இடையில் வந்தியத்தேவனையும் வளைக்கப்
3. பார்க்கிறார்.
எல்லாப் பெண்களும் அழகுடன்தான் பிறக்கிறார்கள். ஆனால் அழகுடன் கொஞ்சம் அறிவும் உள்ள பெண்கள் அந்த அழகை வைத்து அரசனை அடிமையாக்கி, அத்தனை சவுகரியங்களை அனுபவித்து விடுகிறார்கள்.
யோசித்துப் பாருங்கள்.
பில்கேட்ஸ் மைக்ரோசாப்ட் கம்பெனியை வளர்க்கிறார்... ஆனால் பில்கேட்ஸ்ன்