1. சேவையை வியாபாரமாக்கும் நாட்டில் வியாபாரத்தை கூட சேவையாக செய்யும் மனிதர்கள்...
❤️
30நாற்பது வருடமாக ஒரு கடையை வைத்து நடத்திகிட்டு இன்னும் அந்த கடை ஒரு வெயில் மழை ஒழுகும் கூரையின் கீழ் செயல் படுகிறது என்றால் நிச்சயமாக சொல்ல முடியும் அவர்கள் அங்கே வியாபாரம் எல்லாம் செய்யவில்லை
2. ஒரு மாபெரும் மக்கள் சேவை செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று. ஏழை எளியவர்களுக்கு பசி போக்கிக் கொண்டிருக்கிறார்கள் அந்த கடையை வைத்து நடத்தும் மனிதர்கள்.
நாளை ஞாயிற்றுக் கிழமை இந்த வார புரதத்தேவையை இன்றே வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். அந்தோணிசாமிக்கு தமிழ் நாட்டில் எங்கே விலை
3. குறைவாக தரமாக என்னவெல்லாம் கிடைக்கும் என்பது அத்துபடி. அப்படி போனவாரம் யானை பார்க்க போனபோது தொண்டாமுத்தூரில் 1கிலோ மட்டன் 500ரூ. தான்.. நான் வாங்கி தருகிறேன் வாங்க என்று கூப்பிட்டது நினைவில் இருந்தது.
இன்று காலை அதற்கான தேவை வந்துவிடவும் இருவரும் கிளம்பினோம் தொண்டாமுத்தூரை
4. நோக்கி. காலை மணி 10 தாண்டி விடவும் வயிற்றில் பசி கிள்ள ஆரம்பித்து விட்டது.
“பசிக்கிறது அந்தோணி..”
“தொண்டாமுத்தூர்ல ஒரு பாட்டி கடை இருக்கு... கிராமத்து சமையல். வாங்க உங்களுக்கு இட்லி, தோசை வாங்கி தாரேன்” னு கூட்டிகிட்டு போனார்.
தொண்டாமுத்தூர் பிருந்தாவன் சீனியர் சிடிசன்
5. பவுண்டேசன் பிரிவில் வாகனத்தை நிறுத்தச் சொன்னார்.
மிகவும் எளிமையான ஒரு கடை உள்ளே வெளிச்சம் இல்லை. உள்ளே போனவுடன் எல்லாம் இருட்டாக இருந்தது. சிறிது நேரத்தில் கண்கள் பழகி இருட்டுக்குள் கண் தெரிய ஆரம்பித்தது. எங்களுக்கு முன்னால் இரண்டு மனிதர்கள் சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர்.
6. உள்ளே நுழைவதற்கு முன்னரே அந்த தோசை சுடும் மணம் எனது நெஞ்சை நிறைக்க ஆரம்பித்தது.
உளுந்தும் அரிசியும் அரைத்து முதல் நாள் ஒன்றாக கலந்து வைத்துவிட்டால் உற்பத்தி ஆகும் ஈஸ்ட் தோசையில், முட்டை முட்டையாக கோலம் போட்டுவிட்டு காற்றில் கலந்துவிடும் அந்த வாசம். கிராமத்தில் அம்மா தோசை
7. சுடும்போது இதற்கு முன் வந்த அந்த இனிமையான மணம் நகர வாழ்க்கையில் நுகர்ந்து பார்க்கவே இல்லை.
சமையல் அறை சாப்பிடும் டைனிங் எல்லாமுமே ஒரே இடத்தில்தான். அந்தோணி சாமி அடுப்பு பக்கத்தில் இருந்த ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டார். “குளிர் நேரத்தில் இங்கே உக்காந்து சாப்பிட்டால் நல்ல
8. இதமாக இருக்கும்” அவர் அங்கே ஒரு நிரந்தர வாடிக்கையாளர் என புரிந்தது. அடுப்பில் தென்னை மட்டை எரிந்து கொண்டிருந்தது விறகு அடுப்புதான் சமையலுக்கு.
10மணிக்கே 5இட்லிதான் இருந்தது. எங்களுக்கு ஆளுக்கு 2இட்லியும் முட்டை தோசை ஆர்டர் கொடுத்துவிட்டு காத்திருந்தோம். நீண்ட நாட்களாக
9. அளவாகவே காலை உணவை எடுத்துக் கொள்ளும் பழக்கம் இருந்ததால் அதிகம் சாப்பிடவில்லை. ஆனாலும், சாப்பிட்ட 2இட்லியும், முட்டை தோசையும் மனதில் இன்னும் இனிமையாக நிற்கிறது. சாம்பாரும் சட்டினியும் வேற லெவல் சுவை. கிராமத்து மணம் கமழும் சுவையுடன் இருந்தது. முட்டை தோசை வீட்டு தோசையின் மேல்
10. இந்திய வரைபடம் வரைந்தது போல இருந்தது.
முட்டை தோசையை இலையில் வைத்துவிட்டு சட்டினி சாம்பார் வரவில்லை. அங்கே உக்காந்துகிட்டு செல்போனை முறைத்துக் கொண்டிருந்த பையனை பார்த்து “டேய் தம்பி வாட்சப்பை நோண்டியது போதும்... கஸ்டமரை கவனி சட்டினி சாம்பார் ஊத்து” அதட்டினார் அந்தோணி.
11. “தம்பி தம்பி அந்த பையனும் உங்கள மாதிரி சாப்பிட வந்தவன் தான்” னு பாட்டி சொல்ல, “உங்க பேரன் இல்லையா இது.? நான் அவன் தான்னு நெனச்சேன்” என்று சிரித்தார் சமாளிப்பதில் வல்லவரான அந்தோணி. பல்பு வாங்குறது எல்லாம் சர்வ சாதாரணம் எங்களுக்கு அதைப்பற்றி கவலைப்பட்டதும் இல்லை... அலட்டிக்
12. கொள்வதும் இல்லை. குப்புற விழுந்தாலும் மீசையில் எங்களுக்கு ஒருநாளும் மண் ஒட்டவே ஒட்டாது. என் தவறை நீ மறைத்து எனக்காய் அர்ச்சனை வாங்கினாய் டைப் எனக்கு அவர்.
சாப்பிட்டு விட்டு “அம்மா நான் ஒரு படம் எடுத்துக் கொள்ளட்டுமா?” என்று கேட்க சிரித்துக் கொண்டே சம்மதித்தார்கள். அவர்கள்
13. கல்லில் தோசை ஊற்றும் அழகை படமாக எனது மொபைலில் பதிவு செய்து கொண்டே “இந்த கடைக்கு என்ன பெயர்.? உங்கள் பெயர் என்னம்மா.?” என்று கேட்டதற்கு “கடைக்கு பெயர் எல்லாம் வைக்கலைங்க... என் பெயர் சோமசுந்தரி” என்று வெள்ளந்தியாய் சிரித்தார்கள்.
நீண்டநாட்களுக்கு பிறகு கொரோனா காலத்தில் ஒரு
14. சுவையான உணவை ருசித்த மகிழ்ச்சியில் இருவரும் மட்டன் வாங்க கிளம்பினோம்.
-முகநூலில் ஒரு நண்பரின் பதிவு
❤️❤️❤️
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
1. புத்தம் புது காலை விடியாதா...
என்றொரு அந்தாலஜி அமேசான் ப்ரைமில் ஓடிக் கொண்டிருக்கிறது.
அதில் "மெளனமே பார்வையாய்" எனும் மூன்றாவது எபிசோட் மதுமிதா இயக்கத்தில், நதியா - ஜோஜு ஜார்ஜ் நடிப்பில், கிட்டத்தட்ட வசனமே இல்லாமல் அசத்தி... பரவலாய் கவனத்தை பெற்றிருந்தது.
ஒரு சாதாரண
2. குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் பிணக்கு, அதன் பிறகான வீம்பு, அது உடையும் அந்தத் தருணம், யாரும் யாரிடமும் மன்னிப்புக் கூட கோர வேண்டியிராத அவர்கள் உள்ளாடும் காதல். இதையெல்லாம் பகிர வார்த்தை கூடத் தேவையில்லை என்பதை மிக அழகாக காட்டியிருந்தனர்.
கதையே இல்லாத இந்த
3. எபிசோடின் கதை கூட எழுத்தாளர் சுஜாதாவுடையது என்று நினைக்கிறேன்.
ஒருமுறை எழுத்தாளர் சுஜாதாவின் திருமண ஃபோட்டோவைக் காட்டி அவர் மனைவியிடம் காட்டிக் கேட்டபோது, அவர் சொன்னார்.
“1963 ஜனவரி 28 கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சத்திரத்தில் எங்க கல்யாணம் நடந்தது. கல்யாணக் கோலத்தில் நாங்க
1. ஆரம்பத்திலேயே சொல்லி விடுகிறேன் இது இந்தப் படத்திற்கான விமர்சனம் அல்ல.
ஒரு மனிதன் மற்றொரு நபரை கொலை செய்து விட்டால் கொலையுண்ட நபரின் வருமானம் குடும்ப சூழலை கணக்கிட்டு 'இரத்த பணம்' (பிளட் மணி) கொலை செய்த நபரிடமிருந்து வசூலிக்கப்படும். கொலை செய்யப்பட்டவரின் வாரிசுகள் மன்னித்து
2. விட்டால் கொலை செய்தவர் தண்டனையிலிருந்தும் விலக்களிக்கப் படுவார். சில சமயம் இந்தப் பணத்தை அவர்கள் மறுத்து விடுவதும் உண்டு.
இந்தக் கருவை மையமாகக் கொண்டு வந்திருக்கும் படம்தான் இந்த ப்ளட் மணி.
ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சகோதரர்கள் துபாயில் செய்யாத கொலைக்கு தண்டனையாக மாட்டிக்
3.கொள்கிறார்கள். இரத்த பணம் 30லட்சம் கொடுத்திருந்தும் தூக்கில் போட நேரம் குறிக்கப்படுகிறது. அவர்கள் விடுதலையாகி விடுவார்கள் என நம்பியிருக்கும் குடும்பம் விஷயம் தெரிந்து உதவிக்காக அழுகையில், அதைக்காணும் ஒரு தொலைக்காட்சி செய்தியாளர் அதற்கு எப்படி உதவ முயற்சிக்கிறார். அந்த ஒருநாளில்
1. பெரும்பாலும் அலி தன் வெற்றிக்கு தேவையான அளவை விட ஒரு அடியும் எதிராளி மேல் விழக்கூடாது என்பதில் மிக கவனமாக இருப்பவர்.
எதிராளி மயங்கி விழும்போது அடிக்க மாட்டார், விழுந்து எழும் வரை சீண்ட மாட்டார். எதிராளிக்கு முடியாத நிலை வரும்போது அவரே நடுவரிடம் போட்டியை முடிக்க வேண்டுகோள்
2. வைப்பார். அதனாலயே அலியிடம் தோல்வியுற்றவர்கள் கூட அவரை பெரிதும் நேசித்தனர்.
உலக பிரசித்தி பெற்ற George foreman என்னும் ஜாம்பவான் உடனான சண்டையில் தோல்வியுற்ற foreman "the greatest of all his punch was the one not landed, when i was falling" என்பார். அதாவது ஃபோர்மேன் நாக்அவுட்
3. ஆகி நிலைதடுமாறி கீழே விழுகின்ற நேரத்தில் அலி முழு வேகத்தில் கையை ஓங்கி குத்த செல்வார், ஒரு விநாடி சுதாரித்து ஃபோர்மேனின் நிலை கண்டு ஓங்கிய கையை அப்படியே நிறுத்தி விடுவார். அதை தான் ஃபோர்மேன் சிலாகித்து கூறுவார்.
இப்படியாகபட்ட அலி ஒரே ஒரு போட்டியில் மட்டும் எதிராளியை அவரின்
1. நல்ல சிறுகதை எழுதுவது எப்படி?
-சுஜாதா பாலகுமாரனுக்குக் கொடுத்த டிப்ஸ்
முன்கதைச் சுருக்கம் என்ற பாலகுமாரன் சுயசரிதையிலிருந்து: பாலகுமாரனுக்கு ஆரம்ப காலத்தில் சிறுகதை எழுதுவதில் நுட்பங்கள் பிடிபடவில்லையாம். ஒரு முறை சுப்ரமணியராஜுவுடன் சுஜாதாவை சந்தித்து “எத்தனை ட்ரை பண்ணாலும்
2. சிறுகதை எழுத வரலை. சிக்கறது. தப்பா கதை எழுதறோம்னு தெரியறது. ஒரு நல்ல சிறுகதை எப்படி எழுதறது?” என்று கேட்டிருக்கிறார். சுஜாதா பத்து நிமிஷத்தில் சொல்லித் தருகிறேன் என்று ஒரு மணி நேரம் விளக்கினாராம். அது கீழே.
கதை எழுதறது கஷ்டம் இல்லைய்யா, சுலபம். ஒரு பத்து நிமிஷம் நான் சொல்லித்
3.தரேன். புடிச்சுக்க!
முதல் வரில கதை ஆரம்பி. உதாரணத்துக்கு ஒண்ணு சொல்றேன். இப்படி ஆரம்பி.
ராமு ஜன்னல் பக்கம் நின்றபடி தன் தலையை அழுத்தி வாரிக் கொண்டிருந்தான். தெருவில் ஒருவன் நடந்து போய்க்கொண்டிருப்பது தெரிந்தது. ராமு திகைத்தான். தெருவில் நடந்தவனுக்கு தலையே இல்லை. ஃபுல் ஸ்டாப்.
1. அச்சிறுமி கருப்பினத்தைச் சேர்ந்தவள் என்பதால் அமெரிக்க பள்ளியில் அனுமதிக்கப்படவில்லை. அமெரிக்காவின் வெள்ளை இனக் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் கருப்பின மாணவர்கள் யாரும் அனுமதிக்கப்படாத காலம் அது. அந்நாட்டின் உச்சநீதிமன்றம் வெள்ளையர் பயிலும் பள்ளிகளில் கருப்பினக் குழந்தைகளும்
2. சேர்க்கப்பட வேண்டும் என உத்தரவிட்டது.
ஆனாலும் லூசியானா மாநிலத்தில் வெள்ளையர் பயின்ற பள்ளிகள் கருப்பினத்தவர் பயில அனுமதிக்கவில்லை. நீதிமன்ற உத்தரவை அரசுப் பள்ளிகள் கடைபிடிக்கும்படி கடுமையாக வலியுறுத்தப்பட்டது. எனவே கருப்பின மாணவர்கள் பள்ளியில் சேர்வதை தடை செய்ய பள்ளிகள் ஒரு
3. யுக்தியைக் கையாண்டன. அதுதான் நுழைவு தேர்வு எனும் தடைக்கல். நுழைவுத் தேர்வில் கருப்பினக் குழந்தைகள் தேர்ச்சி பெற இயலாது என நினைத்தனர்.
ஆனால் இந்த நுழைவுத் தேர்வினை எழுதி 6 குழந்தைகள் தேர்ச்சி பெற்றனர். ஆனாலும் அக்குழந்தைகள் பள்ளியில் சேர பயந்தார்கள். ஆனால் அதில் ஒரு சிறுமி