உங்கள் வீட்டுப் பக்கத்தில் அல்லது பணிபுரியும் இடத்தின் அருகில் இருந்து கொரானா தொற்று பாதிக்கப்பட்ட நபர் என அடையாளம் காணப்பட்டு யாரையாவது ஆம்புலன்சில் அழைத்து சென்றால் தயவுசெய்து அவர்களை வீடியோ படம் எடுக்காதீர்கள்.... அதை சமூக வலைதளங்களில் பரப்பாதீர்கள்.
இப்படி படம் எடுத்து அவர்களை மனம் வருத்தப்பட வைக்க வேண்டாம்.
மாறாக உங்களது பால்கனியில் இருந்தோ அல்லது நமது கேட்டின் அருகில் இருந்தோ தூரத்தில் நின்று அவரை நோக்கி கையை உயர்த்தி நாங்க இருக்கோம்.... தைரியமாக இருங்க....
ஏனெனில் தற்பொழுது கொரானா பரவிவரும் வேகத்தைப் பார்த்தால் உங்க வீட்டு வாசலிலும் ஒரு நாள் ஆம்புலன்ஸ் வந்து நிற்கும் சூழ்நிலையும் ஏற்படலாம்.
1. அவர்களை மதியுங்கள்.
2. அவர்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்....
3. நாம் மனிதாபிமானம் மிக்கவர்கள் என்பதை அவர்கள் உணரும் அளவுக்கு நடந்து கொள்ளுங்கள்.
4. மற்றவர்களிடம் அவர்களை குறித்த பயத்தையோ, பீதியையோ, ஏற்படுத்தி இகழ்ச்சி உண்டாக்க வேண்டாம்.
பீதிகளையும் அவதூறுகளையும் பரப்ப வேண்டாம்.
பாதுகாப்பாக இருப்போம்.... பத்திரமாக இருப்போம்....
அன்புடையவர்களாகவும் இருப்போம்.
- (படித்ததில் பிடித்த ஆங்கில பதிவின் எனது தமிழாக்கம்)
🇮🇳🙏🇮🇳