டேனியப்பா Profile picture
Aug 21, 2020 5 tweets 1 min read Read on X
1. டேனியின் அடக் கழுத.!
🙈🙉🙊

பஸ் அந்த மெய்ன் ரோட்டுத் திருப்பத்தில் இறக்கி விட்டது எங்களை.

நண்பர் வந்து அவர் வீட்டுக்கு கூட்டிச் செல்வதற்காகக் காத்திருந்த நேரம்.

போய்க் கொண்டிருந்த கார் பஸ்களை இடைஞ்சல் செய்வது போல் சாலையில் இங்கும் அங்குமாக குறுக்கே துள்ளிக் குதித்து ஓடிக் Image
2. கொண்டிருந்தது ஒரு அழகான கழுதைக் குட்டி.

போகிற வருகிற கார் பைக்குகளெல்லாம் அந்த குட்டிக் கழுதைக்காக நின்று தயங்கிச் செல்வதை சந்தோஷமாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் டேனி.

பார்த்துக் கொண்டிருந்த நானும் மெல்ல டேனியைச் சீண்டும் நோக்கில், “அந்தக் குட்டிக் கழுதைதான் டேனி.!’
3. என்றதும்...
“நான் ஒண்ணும் கழுதையில்ல...” என்று சிணுங்கினான் டேனி.

“அது டேனிதான். பாரு எப்படிக் குறும்பு பண்ணுதுனு.!” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே... ஒரு பஸ் அந்தக் கழுதைக்குப் பக்கத்தில் பெரிதாய் ஹார்ன் செய்தது.

பஸ் ஹார்னின் அலறலில் அது பயந்து வாலைக் காலுக்கும்
4. மடக்கியபடி அலைபாய... எங்கிருந்தோ ஓடி வந்த அம்மா அந்தக் குட்டியின் அருகே ஓடி அது ரோட்டின் ஓரத்திற்கு வர உதவ ஆரம்பித்தது.

இதுதான் சான்ஸ் என்று நான் அவனை இன்னும் சீண்டலாம் என்று, “ஹைய்யா... டேனிக் கழுதை, பக்கத்துலயே அம்மாக் கழுதை.!” என்றேன்.
சொல்லிவிட்டு அவன் முகத்தைப் பார்க்க..
5. எதையோ யோசித்த டேனி என் முகத்தைப் பார்த்துச் சொன்னான்.

“அப்ப... இப்ப இன்னும் ஒரு கழுதை வரணுமே.!”

🤐🤐🤐 Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with டேனியப்பா

டேனியப்பா Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @minimeens

Feb 26, 2023
நண்பகல் நேரத்து மயக்கம்

அநேகமாய் இந்தப் பதிவில் இணைத்திருக்கும் இந்தப் படம்... பதிவைப் படித்த பிறகு மறுபடி ஒரு முறை உங்களை இப்படத்தைப் பார்க்கத் தூண்டின்லும் தூண்டும் என்றே நினைக்கிறேன்.

நண்பகல் நேரத்து மயக்கம்... என்றால் அது மதிய உணவுக்குப் பின்னான சிறு உறக்கம். உறங்கி உடனே++
எழுந்து விட்டால் நாம் உறங்கினோமா இல்லையா என்ற குழப்பம் ஏற்படும். அதிகம் உறங்கிவிட்டாலோ எழும்போது அது மாலையா பகலா என்ற குழப்பம் உண்டாகும். அதுபோல இந்தக் படத்தில் நாம் பார்த்த கதை அங்கே நிகழ்ந்ததா... இல்லை நிகழ்ந்தது போன்ற கற்பனையா என்று நம்முடன் டைரக்டர் விளையாடும் விளையாட்டு ++
தான் நண்பகல் நேரத்து மயக்கம் படத்தின் கதை. தமிழும் மலையாளமும் ஒன்றோடு ஒன்று கலந்து நிற்கும் போஸ்டர் டிசைன் சொல்வது போன்ற ஒரு குழப்பமான மயக்கம் அது.

படத்தில் ஒரு மதிய உணவுக்குப் பின்னான உறக்கத்தில் விழும் ஜேம்ஸ் விழிக்கும் போது சுந்தரமாய் விழிக்கிறான். பிறகு ஒருநாள் முழுவதும் ++
Read 15 tweets
Jan 15, 2023
1. கொஞ்ச நாள் ஸ்கூல்ல பசங்க அது பண்ணாய்ங்க, இது பண்ணாய்ங்கனு விடாம வீடியோ போட்டு குறை சொன்னாய்ங்க ரெண்டு மாசம் முன்ன. தீபாவளி அப்ப டாஸ்மாக் சேல்ஸ் டாட்கெட் வைக்கறாய்ங்க, தீபாவளிக்கு குடிச்சே அழியறானுங்கனு குறை சொன்னாய்ங்க. இப்ப பொங்கலுக்கு துணிவு வாரிசுனு சினிமா ஸ்டார் பின்னாடி
2. சுத்தறாய்ங்கனு... இதைப் புடிச்சுகிட்டு தொங்கிட்டு இருக்கறாய்ங்க அத்தனை வாட்சப் வாயனுகளும், பூமர் அங்கிள்ஸும்.

ஆனா பாருங்க.. இதே ஊர்ல தான் 50வருஷம் முன்னாடி எம்ஜியார் சிவாஜிக்கு அடிச்சுக்கிட்டு இருந்தாய்ங்க. எம்ஜியார் ஓட்டுப் போட்டு முதலமைச்சரே ஆக்கினாய்ங்க. 30வருஷம் முன்னாடி
3. கமல் ரஜினிக்கு அடிச்சுக்கிட்டு இருந்தாய்ங்க‌. இன்னிவரைக்கும் ரஜினியை அரசியலுக்கும் கூப்பிட்டுட்டு தான் இருக்காய்ங்க. குஷ்பூவுக்கு கோயில் கட்டினாய்ங்க... சில்க் ஸ்மிதா கடிச்ச ஆப்பிளை ஏலத்துக்கு எடுத்தாய்ங்க. ஆனா இன்னிக்கு தமிழ்நாடு என்ன நாசமாவா போச்சு. இன்னிக்கும் வேலையில்லாத்
Read 7 tweets
Nov 21, 2022
1. இந்தியக் கால்பந்து.!

"இத்தனை பேர் இருக்கற இந்தியால ஒரு 11 பேர் இல்லையா.. ஃபுட்பால் விளையாட.?" ன்னு திடீர்னு ஒரு லெபனானி என்ஜினியர் எங்களைப் பார்த்து கேட்டான் இங்க.

"நாங்க காலனியா இருந்தவங்க. அதனால கிரிக்கெட் அடிக்ட் ஆகிட்டோம் போல"னு நான் பதில் சொன்னேன் எப்பவும் போல.

உடனே
2. கூட இருந்த இன்னொரு எகிப்தைச் சேர்ந்த என்ஜினியர், "ஏன்.. நாங்களும்தான் காலனியா இருந்தோம். நாங்க என்ன கிரிக்கெட்டா ஆடறோம்.? ஃபுட்பால் தான ஆடறோம். இவ்வளவு ஏன்... நம்மை காலனியா வெச்சிருந்த இங்கிலாந்து கிட்டயே பெரிய ஃபுட்பால் டீம் இருக்கே.!"னு கேட்டதும், யோசிக்க ஆரம்பிச்சேன்

ஆனா,
3. இப்ப எனக்கு உதவிக்கு வந்த இன்னொரு இந்தியர் சொன்ன பதில் கொஞ்சம் பொருத்தமா தெரிஞ்சது.

அவர் சொன்னாரு, "இந்தியா ஒரு விநோதமான நாடு. இங்க அரசியல்ல விளையாடுவாங்க. விளையாட்டுல அரசியல் பண்ணுவாங்க.

இங்க ஃபுட்பால் மட்டுமில்லை. எங்க தேசிய விளையாட்டான ஹாக்கியவே அம்புட்டு கவனிக்க
Read 5 tweets
Oct 1, 2022
1. பொன்னியின் செல்வன்
நாவல் படிக்காத ஒரு வாசகனின் விமர்சனம்:

முதல் குறையா பட்டது... விக்ரம், த்ரிஷா, ஜெயம் ரவி மூணு பேரும் சகோதர சகோதரினு புரியறதுக்குள்ளயே இன்டர்வெல் வந்துடுது.

விக்ரம் காதலிச்சு அவர் வீட்டால விரட்டப்பட்ட பொண்ணு தான் பாண்டியனை கட்டிகிட்டு, அவன் செத்த பிறகு
2. திரும்ப வந்து பழி வாங்க காத்திருக்குனு புரிய இன்னும் கொஞ்சம் நேரம் எடுக்குது.

வாய்ஸ் ஓவர்ல இந்த உறவெல்லாம் தெளிவுபடுத்திட்டு படத்தை ஸ்டார்ட் பண்ணிருந்தா படம் ஆரம்பிக்கறப்பவே கொஞ்சம் குழப்பம் இல்லாமல் பிக்கப் ஆகியிருக்கும்.

இதுல பாண்டியனை ஐஸ்வர்யாராய் கட்டிக்கிச்சா.. இல்லை,
3. விக்ரம் அப்படி நெனச்சார்னு அடுத்த பார்ட்ல ட்விஸ்ட் வைக்கப் போறாய்ங்களா தெரியலை. அப்படி வெச்சா சோழர்களேட உளவுப்படை பத்தி வேற நமக்கு சந்தேகம் வந்துடும்.

கூடவே, முறைப்படி விக்ரம் தான் மூத்தவர், அடுத்த அரசன்னு இருக்கறப்ப.. அவரை விட்டுட்டு எதுக்கு எல்லோரும் ஜெயம் ரவியை குறி
Read 8 tweets
Oct 1, 2022
1. நந்தினி:

பொன்னியின் செல்வன் படத்தில் வரும் இந்தப் பாத்திரம் தான் உண்மையில் என்னை கவனிக்க வைத்தது.

சோழ தேசத்தில் அநாதையாய் இருக்கும் இவர், முதலில் சோழ இளவரசனை தனது அழகால் வளைக்கிறார்.

பிறகு சோழ இளவரசியால் விரட்டப்பட்டு காணாமல் போனாலும், பாண்டிய மன்னனை மணந்து பாண்டிய அரசியாய்
2. வாழ்கிறார்.

போரில் பாண்டியமன்னனை அதே சோழ இளவரசன் கொன்றதும், சோழ தேசம் திரும்பி அடுத்து தேசத்தைக் கைப்பற்ற விரும்பும் பழுவேட்டரையரைத்தான் மணந்திருக்கிறார்.

அப்படியே பழுவேட்டரையர் இறந்தாலும் சோழ இளவரசன் இன்னும் மணமுடிக்காமல்தான் இருக்கிறான்.

இடையில் வந்தியத்தேவனையும் வளைக்கப்
3. பார்க்கிறார்.

எல்லாப் பெண்களும் அழகுடன்தான் பிறக்கிறார்கள். ஆனால் அழகுடன் கொஞ்சம் அறிவும் உள்ள பெண்கள் அந்த அழகை வைத்து அரசனை அடிமையாக்கி, அத்தனை சவுகரியங்களை அனுபவித்து விடுகிறார்கள்.

யோசித்துப் பாருங்கள்.
பில்கேட்ஸ் மைக்ரோசாப்ட் கம்பெனியை வளர்க்கிறார்... ஆனால் பில்கேட்ஸ்ன்
Read 5 tweets
Jan 17, 2022
1. வெள்ளையன் முதலில் இங்கு வியாபாரியாய் நுழைந்தான்.

பிறகு வியாபாரத்தை பெருக்க ஒப்பந்தங்கள் போட்டான்.

ஒப்பந்தங்கள் மூலம் கடன்கள், சலுகைகள் கொடுப்பதாய் நம்ப வைத்தான்.

அதன் மூலம் அதிகார மையங்களை வசியப் படுத்தினான்.

பிறகு, கடனுக்கு பதிலாய் நிலப் பரப்புகளை வாங்கிக் கொண்டான்.
2. அங்கு வரி விதிக்கும் உரிமை பெற்றான்.

பிறகு அவனே இந்தியா முழுமைக்கும் ஆளும் சக்தியாய் உருவெடுத்தான்.

தமிழகமே சேர சோழ பாண்டியர் எனவும் சிற்றரசுகள் பலவாகவும் பிரிந்து கிடந்த காலம்.

இந்தியா எத்தனை துண்டுகள் இப்படி இருந்ததுவோ தெரியாது.

வெள்ளையன் வராமல் இருந்திருந்தால் இன்னும்
3. அப்படியே கூட இருந்திருப்போம்.

ஆனால், வெள்ளையனை எதிர்க்க, வெள்ளையன் ஆண்ட அத்தனை பகுதி மக்களும் ஒன்று சேர வேண்டி இருந்தது.

அப்படி எதிர்க்கையில் ஆளுக்கு ஒரு வழி இருந்தது.

காந்தி ஒரு வழி...
போஸ் ஒரு வழி...
பகத்சிங் ஒரு வழி...
பாரதி ஒரு வழி...
என்று ஆளாளுக்கு ஒரு வழி இருந்தது.
Read 12 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(