My Authors
Read all threads
‘ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி…’ என்று ஆண்டாள் போற்றும் வாமன மூர்த்தியின் அவதாரம், ஆவணி மாத வளர்பிறை துவாதசி திதியும் ஸ்ரவண நக்ஷத்ரமும் கூடிய நாளில் ஏற்பட்டதால், ஒவ்வொரு வருடமும் அந்த நாள் #வாமன_ஜயந்தி என்று கொண்டாடப்படுகிறது. மகாபலி பிரகலாதனனின் பேரன். 100 அசுவமேத யாகங்கள்
செய்தால் இந்திரப் பதவியை அடையலாம் என்று முடிவு செய்து யாகங்களைச் செய்யத் தொடங்கினான். அவ்வாறு அவன் யாகம் செய்துமுடித்துவிட்டால் தேவலோகம் முழுமையும் நிரந்தரமாக அவன் வசமாகிவிடும் என்பதால் தேவர்கள் அனைவரும் மகாவிஷ்ணுவிடம் சரண் அடைந்து தங்களைக் காக்குமாறு வேண்டினர்.அதற்கு மகாவிஷ்ணு,
மகாபலி முறைப்படி யாகம் செய்கிறான். மேலும், அவனுக்கு குருவின் பரிபூரண அனுக்கிரகம் உள்ளது. அவன் எப்போது அவன் குருவால் சபிக்கப்படுகிறானோ அப்போதே அவனை என்னால் வெல்ல முடியும் என்று கூறினார். மகாவிஷ்ணுவின் பதிலைக் கேட்ட தேவர்களின் தாயான அதிதி பயோவ் விரதத்தை மேற்கொள்ள, பூஜைக்கு மகிழ்ந்த
விஷ்ணு சிறு பாலகனாகத் தோன்றி அவருக்கும் காஷ்யபருக்கும் காட்சி கொடுத்தார். அவ்வாறு அவர் காட்சி கொடுத்த தினம் ஆவணி மாத வளர்பிறை துவாதசி திதி. அந்த பாலக ரூபமே 'வாமனர்' அவதாரம். மகாவிஷ்ணு முதன்முதலில் முழுமனித வடிவில் தோன்றிய அவதாரமும் வாமன அவதாரமே. வாமனன் என்றால் குள்ளமானவர்
என்றும் அழகானவர் என்றும் பொருள். குள்ளமானவராகத் தோன்றினாலும் உலகையே அளந்து விஸ்வரூபம் எடுத்துச் சிறப்பித்த அவதாரம், வாமன அவதாரம். ஒளிவீசும் முகத்தைக் கொண்டவராகத் திகழ்ந்த அந்தப் பாலகனுக்கு கதிரவனே காயத்ரி மந்திரம் உபதேசித்தார். பிரம்மனே முப்புரிநூல் அணிவித்தார். கலைமகள் தன் கை
ருத்ராட்ச மாலையை வழங்க சந்திரன் தண்டமும் பூமிதேவி மான் தோலும் கொடுத்தார். வாமனர் பிரம்மச்சாரியின் கோலம் கொண்டு மகாபலியின் யாகசாலைக்குச் சென்றார். மகாபலி வாரிவாரி வழங்கி தானம் செய்துகொண்டிருக்கும் அவைக்கு எழுந்தருளிய வாமனரைக் கண்டு அவையோர் எள்ளி நகையாடினர். ஆனால், மகாபலியோ
மரியாதைகளோடு அவரை வரவேற்று என்ன வேண்டும் என்று கேட்டான். அதற்கு வாமனரும், மூன்று அடி நிலம் வேண்டும் என்று கேட்டார்.
மகாபலியின் குருவான சுக்கிராச்சார்யாருக்கு சந்தேகம் ஏற்பட அவர் தன் தவவலிமையால் வந்திருப்பது மகாவிஷ்ணுவே என்பதை அறிந்துகொண்டார். மகாபலியிடம் சென்று, வந்திருப்பது
நாராயணனே என்று சொல்லி அவர் கேட்கும் வரத்தைத் தர வேண்டாம் என்று சொல்லித் தடுத்தார். ஆனால் மகாபலியோ தன்னிடம் தானம் கேட்டவருக்கு இல்லை என்று சொல்லமுடியாது என்றான். இதனால் சுக்கிராச்சார்யாரின் மனம் வருத்தம் அடைந்தது. இந்தத் தருணத்துக்காக காத்திருந்ததுபோல மகாவிஷ்ணுவும் மூன்றடி நிலத்தை
தானம் பெற்று முதல் அடியால் உலகையும் இரண்டாம் அடியால் வானையும் அளந்தார். வாக்குக் கொடுத்தபடி மூன்றாம் அடியை எங்கே வைப்பது? என்று மகாபலியிடம் கேட்டபோது அவனும் தலை வணங்கி தன் தலை மீதுவைக்குமாறு கேட்டுக்கொண்டான். பிற அவதாரங்களில் சம்ஹாரம் செய்த மகாவிஷ்ணு இந்த அவதாரத்தில் சம்ஹாரம்
இன்றி மகாபலிக்கு அனுக்கிரகமே செய்தார். தசாவதாரங்களில் உத்தம அவதாரம் என்ற ஏற்றம் பெற்றது வாமன அவதாரம். மற்ற அவதாரங்களில் அசுரர்களை வதம் செய்யும் பகவான் இதில் மட்டும் யாரையும் கொல்லவில்லை. மாறாக மகாபலியின் ஆணவத்தைப் போக்கி பிறவாநிலை அளித்தார். நெடுமால் என்று பெயருக்கேற்ப நெடியவனாக
வளர்ந்து மண்ணுலகையும், விண்ணுலகையும் திருவடியால் அளந்தார். மூன்றடியும் அளந்த பிறகு, இன்னும் ஒற்றை விரலை ஒற்றை விரலை நீட்டிக் கொண்டிருக்கிறார் அன்று நீட்டியது மகாபலியிடம் கடைசி அடி நிலத்தைக் கேட்பதற்காக. இன்று நீட்டியிருப்பது ஆணவத்தை விடுத்து, அவரிடம் நம்மைச் சரணடையச் செய்வதற்காக!
பக்தர்கள் பற்றிக்கொள்ள விரும்புவது இறைவனின் திருவடியையே, அப்படிப்பட்ட அற்புதத் திருவடியின் ஸ்பரிசத்தைப் பெறும் வாய்ப்பை எண்ணி மகிழ்ந்த மகாபலி, பாதாள லோகம் செல்லும் பேற்றை தன் பாக்கியமாகவே எண்ணி ஏற்றார். அடுத்து வரும் சார்வாணி மனுவந்திரத்திலே பலியே இந்திரனாக விளங்கப் போகிறான்.
அதுவரை சுதல லோகத்தில் சகல சம்பத்துகளும் பெற்று பலி அங்கு இருந்து வரட்டும் என்றார். மகாபலி வாமனரிடம் தான் ஒவ்வொரு ஆண்டும் தன் நாட்டு (கேரளா) மக்களை காண வருவதற்கு அனுமதி தரவேண்டும் என்று வரம் கேட்டார், மகாவிஷ்ணுவும் அந்த வரத்தை மாவலிக்கு அளித்தார். இப்படி மகாபலி சக்கரவர்த்தி
ஒவ்வொரு ஆண்டும் தன் நாட்டு மக்களை காண வரும் நாளே #ஓணம் #Onam பண்டிகையாக கேரளா முழுவதும் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. முக்கியமாக ஓணம் பண்டிகை மகாபலி வதம் நடந்த இடமான திருக்காட்கரை காட்கரையப்பன் கோயிலில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது
#HappyOnam2020
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Keep Current with அன்பெழில்

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!