Sri Sankara Charitham by Maha Periyava–Sankara Jayanti in Kamakshi temple
“மடத்தோடேயே ஸம்பந்தப்பட்டது காஞ்சி காமாக்ஷி ஆலயம். ஆசார்யாளுடைய சரித்ர ஸம்பந்தமும் விசேஷமாக உள்ள ஆலயம் அது. அதனால் அங்கே ஆசார்யாளுக்கு பிம்பம் இருக்கிறது. உயரமாகத் தனி ஸந்நிதி, சிலா விக்ரஹம், உத்ஸவ விக்ரஹம்
எல்லாம் இருக்கின்றன. சிலா விக்ரஹம் பெரிய மூர்த்தியாக இருக்கிறது. அவ்வளவு பெரிசாக எந்த ஆசார்ய புருஷருக்குமே விக்ரஹம் இருப்பதாகத் தெரியவில்லை. புருஷாக்ருதி என்னும்படி, அதிலும் இந்த நோஞ்சான் காலத்துப் புருஷாக்ருதியாக இல்லாமல் ஆசார்யாள் இருந்த அந்தப் பூர்வகாலத்தின் த்ருடகாத்ரமான
கம்பீர புருஷாக்ருதியில் அந்த விக்ரஹம் இருக்கிறது. அங்கே மாத்ரம் சங்கர ஜயந்தி உத்ஸவமும் நல்லமுறையில் கொண்டாடப்பட்டு வருகிறது. ஜயந்தி உத்ஸவங்களைக் கொண்டாடுவதில் இரண்டு வகை உண்டு. கர்ப்போத்ஸவம் என்பது ஒன்று. ஜன்மோத்ஸவம் என்பது இன்னொன்று. ஜயந்திக்கு முன்னால் உத்ஸவம் ஆரம்பித்து
ஜயந்தியன்று பத்தாம் நாள் உத்ஸவம் பூர்த்தியாகும்படிக் கொண்டாடுவது கர்ப்போத்ஸவம். பத்து மாஸ கர்ப்பத்துக்குப் பதிலாகப் பத்து நாள் உத்ஸவம். ஜயந்தியன்றே ஆரம்பித்து அப்புறம் பத்துநாள் உத்ஸவம் நடத்திப் புண்யாஹவாசன தினத்தில் முடிக்கிற மாதிரிப் பூர்த்தி செய்வது ஜன்மோத்ஸவம் எனப்படும்.
ஆசார்ய ஜயந்தியை கர்ப்போத்ஸவமாகப் பண்ணும் இடங்களில் சுக்ல பஞ்சமியான ஜயந்திக்குப் பத்து நாள் முந்தி என்றால், ‘க்ருஷ்ண பக்ஷத்தில் ஆரம்பிக்க வேண்டியிருக்கிறதே, தேய்ப்பிறை அவ்வளவு ச்லாக்யமில்லையே’ என்று நாலைந்து நாள் தள்ளி அமாவாஸ்யையன்று ஆரம்பித்துப் பஞ்சமியோடு முடிக்கிறார்கள்.
காஞ்சி காமாக்ஷி கோவிலில் ஜன்மோத்ஸவமாகச் கொண்டாடுகிறார்கள். ஜயந்தியன்று ஆரம்பித்துப் பூர்ணிமையன்று பூர்த்தி செய்கிறார்கள். அந்த உத்ஸவம் தேவஸ்தானத் திட்டத்திலேயே நடத்தப்பட்டு வருவது. வேறெங்கேயும் இப்படி தேவஸ்தானக் கட்டளையாக ஆசார்யாளுக்கு உத்ஸவமில்லை; தனிப்பட்ட உபயதார்கள் செய்யும்
உத்ஸவம்தான் நடக்கிறது. மற்ற ஆசார்ய புருஷர்களுக்கும் அடியார்களுக்கும் அநேக ஆலயங்களில் நடக்கிறதுபோல நம் ஆசார்யாளுக்கு நடக்காத குறைக்குக் கொஞ்சம் ஈடு செய்வதாகக் காஞ்சீபுரத்தில் மாத்ரம் விமர்சையோடு உத்ஸவம் நடக்கிறது. ப்ரதி தினமும் பகவத்பாதாளின் உத்ஸவ விக்ரஹத்தைப் புறப்பாடு செய்து
அம்பாள் ஸந்நிதியான காயத்ரி மண்டபத்துக்கு வெளிப்பக்கம் பீடம் போட்டு எழுந்தருளப் பண்ணி அவர் பண்ணிய ஸ்தோத்ரங்களுக்குள் மிகவும் உயர்ந்ததான ‘ஸெளந்தர்ய லஹரி’யிலிருந்து தினம் பத்து ஸ்லோகம் வீதம் அர்ச்சகர்கள் அர்ப்பணம் பண்ணுகிறார்கள். ஒவ்வொரு ஸ்லோகத்துக்கும் ஒரு தீபாராதனை செய்கிறார்கள்.
பத்து நாளில் இப்படி ஸெளந்தர்ய லஹரியின் நூறு ஸ்லோகங்களும் ஒதப்பட்டு அம்பாளுக்கு அர்ப்பணமாகப் பாராயணம் செய்யப்படுகின்றன. கடைசி நாளில் ஒரு வித்யாஸம்: வெளி ப்ராகாரத்தில் சுக்ரவார மண்டபம் என்று இருக்கிறது. விடாயாற்றி உத்ஸவம் முதலானவற்றில் அம்பாளை அங்கேதான் எழுந்தருளச் செய்து தீபாராதனை
நடத்துவார்கள். ஸ்ரீ சங்கர ஜயந்தி உத்ஸவத்தின் பத்தாவது தினத்தில் இந்த மண்டபத்திலேயே உத்ஸவ காமாக்ஷி, உத்ஸவ ஆசார்யாள் இரண்டு பேரையும் எழுந்தருளப் பண்ணிக் கடைசிப் பத்து ஸ்லோகம் சொல்லிப் பூர்த்தி செய்கிறார்கள். ஆசார்யாளுக்கு அம்பாள் ப்ரஸாதமாகப் பரிவட்டம் கட்டி மரியாதைகள் செய்து
உத்ஸவத்தை முடிக்கிறார்கள். இது போல ஊர் உலகம் பூராவும் அவருக்கு நடக்க வேண்டும்.” - காஞ்சி முனிவர் ஶ்ரீ சந்திரசேகர சரஸ்வதி ஸ்வாமிகள் #தெய்வத்தின்குரல்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#புன்னைநல்லூர்_கோதண்டராமர்
தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் அருகில் கோதண்டராமர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கோதண்டராமர் மூலவராக உள்ளார். அவருடன் சீதை, லட்சுமணன் மற்றும் சுக்ரீவன் வீற்றிருக்கின்றனர். மூலவர்களான ராமர், சீதை, லட்சுமணன் மற்றும் சுக்றிவன் விக்ரகங்கள்
சாளக்கிராமக் கல்லால் உருவாக்கப் பட்டுள்ளன. இதன்மூலம், புனிதமான சாளக்கிராம கல்லால் செய்யப்பட்ட அனைத்து மூலவர்களையும் கொண்ட ஒரே ராமர் கோவில் என்ற சிறப்பை பெற்றுள்ளது. அன்றைய காலகட்டத்தில் வாழ்ந்த மக்களில் சிலர் திருமண நிகழ்ச்சியில் மகாவிஷ்ணுவின் அம்சமாக கருதப்படும் சாளக்கிராம
கல்லை சீர்வரிசையாக வழங்குவதை வழக்கமாகக் கொண்டு இருந்தனர். சாளக்கிராமம் என்பது நேபாளத்தில் உள்ள கண்டகி நதியில் உருவாகும் ஒருவகையான அழகிய தெய்வீகம் நிறைந்த கல் ஆகும். நேபாள மன்னனும், தஞ்சையை ஆட்சி செய்த மராட்டிய மன்னரும் சம்பந்தியானார்கள். அப்போது, நேபாள மன்னர், தஞ்சை மன்னருக்கு
ஸ்ரீமதே ஸ்ரீவன் சடகோப ஸ்ரீ ரங்கநாத யதீந்திர மஹா தேசிகன் (46வது அழகியசிங்கர்)
ஜூன் 23, 1955, மன்மத வருஷம் ஆனி மாதம், திருவாரூர் மாவட்டம், தில்லை விளாகத்தில் கௌண்டினிய கோத்திரத்தைச் சேர்ந்த வைதீக குடும்பத்தில் விசேஷமான நாளாகும். பக்தவத்சல ஆச்சாரியார் மற்றும் ஸ்ரீமதி ராஜலட்சுமி
ஆகியோருக்கு 4வது குழந்தையாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ரங்கராஜன் என்று பெயர் சூட்டப்பட்டு உரிய நேரத்தில் முறையான வேத சம்ஸ்காரம் செய்யப்பட்டது. அப்போது குழந்தையின் தந்தை ராமேஸ்வரம் கோயில் தேவஸ்தானத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக (பேஷ்கர்) இருந்தார். குழந்தை தாய்வழி
மற்றும் தந்தைவழி வைதீகர்களின் அசாதாரண பரம்பரையைச் சேர்ந்தது. தந்தை வழி தாத்தா, திருமக்கோட்டை இச்சம்பாடி கிருஷ்ணமாச்சாரியார் புகழ்பெற்ற ப்ருஹஸ்பதி & பிரயோகங்களில் முன்னணி அதிகாரியாக இருந்தார். தாய்வழி தாத்தா பருத்திச்சேரி வெங்கடாச்சாரியார் 40 மற்றும் 41 ஆம் அழகியசிங்கர் காலத்தில்
#பூரி_ஜெகன்னாதர்_கோவில்_மகாபிரசாதம்
பூரி ஜகன்னாதர் ரத யாத்திரை 7 ஜூலை 2024
ஒடிசாவில் அமைந்துள்ள பூரி ஜெகந்நாதர் கோவிலில் வீற்றிருக்கும் விஷ்ணு பகவான் தினம் காலையில் ராமேஸ்வரம் சென்று மதியம் பூரி திரும்புவதாக ஒரு ஐதீகம் எனவே இங்கு மதிய உணவு மிகவும் தடபுடலான விருந்தாகசமைக்கப்
படும். இங்கு சமைக்கும் முறையே வித்தியாசமானது. பூரி ஜெகநாதர் கோவிலின் சமையலறை உலகிலேயே மிகப்பெரியது. அத்துடன் பாரம்பரியம் மிக்கது. கோயிலின் சமையலறை ஒரு நாளைக்கு ஒரு லட்சம் பக்தர்களுக்கு சமைக்கும் அளவுக்கு திறன் பெற்றது. இங்கு 56 வகையான சைவ உணவுகள் சமைக்கப் படுகின்றன. கங்கா, யமுனா
எனப்படும் சமையலறைக்கு அருகில் உள்ள இரண்டு கிணறுகளிலிருந்து நீர் எடுக்கப்பட்டு அதைக் கொண்டு மண் பானைகளில் சமையல் செய்யப்படுகிறது. இங்கு விறகு அடுப்பில் உணவு சமைக்கப்படுகிறது கோவிலின் சமையலறையில் ஒன்றின் மேல் ஒன்றாக 7 மண் பாத்திரங்கள் அடுக்கப்பட்டு சமைக்கப்படுகிறது. அப்படி
#திருவேட்களம் #பாசுபதேஸ்வரர்
பாரதப் போர் நடைபெற்ற சமயம் அபிமன்யூவை சயந்திரன் எனும் மன்னன் கொன்றான். இதனால் கோபம் கொண்ட அர்ச்சுனன் என் மகனைக் கொன்றவனை நாளை மாலைக்குள் வீழ்த்துவேன் அல்லவெனில் உயிர் மாய்ப்பேன் என சபதம் செய்தான். அப்போது தேரோட்டியும், தோழனுமான கண்ணன் அவனைத் தனியாக
அழைத்துச் சென்று தேற்றினான். பின் அர்ச்சுனன் பசியாற கனிகளைப் பறித்து கொடுத்தான். அவனும் நான் தினமும் சிவபெருமானை பூஜிக்காமல் உண்ண மாட்டேன் என்றான். அர்ச்சுனா இன்று என்னையே சிவனாக எண்ணி பூஜிப்பாயாக என்ற கண்ணன், அர்ச்சுனனும் அவ்வாறே பூஜித்து பசியாறினான். பின் சிறிது கண் அயர்ந்தான்
அவனது கனவில் கண்ணன் வந்தான், வந்து மைத்துனா! சிந்து மன்னனை அழிக்க நாம் கயிலை சென்று சிவனை வணங்கி சூரிய உதயத்திற்கு முன் வந்து விட வேண்டும் என்றான். இருவரும் கயிலை சென்றனர். சிவபெருமான் பார்வதியை வணங்கி தாங்கள் வந்த விவரத்தைக் கூறினர். சிவபெருமான் அருகே அர்ச்சுனன் அர்ச்சித்த
#திருவானைக்காவல்
புகழ் பெற்ற ஜம்புகேஸ்வரர் திருக்கோவில் பஞ்ச பூதத் திருத்தலங்களில், நீருக்குரிய தலமாக போற்றப்படுகிறது. இந்த ஆலயம் அம்பிகை, ஈசனிடம் உபதேசம் பெற்ற இடமாகும். ஜம்பு முனிவர் என்பவர் வழிபட்ட திருத்தலம் என்பதால், இது ஜம்புவனம், ஜம்புகேஸ்வரம், ஜம்புவீச்வரம் போன்ற
பெயர்களால் அழைக்கப்படுகிறது. இறைவனின் பெயரும் #ஜம்புகேஸ்வரர் என்றானது. யானை வழிபட்ட காரணத்தால், திருவானைக்காவல் என்றும் பெயர் பெற்றது. இறைவியின் திருநாமம், #அகிலாண்டேஸ்வரி.
இக்கோவில் 51 சக்தி பீடங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. அம்மனின் சன்னிதி, தண்டநாத பீடம் என்னும் வராஹி பீடமாக
விளங்குகிறது. ஆதிசங்கரர் இத்தல அம்மனுக்கு, சிவ சக்கரம், ஸ்ரீசக்கரம் என்னும் இரண்டு தாடங்கங்களை காதில் குண்டலங்களாக பிரதிஷ்டை செய்துள்ளார். சிவபெருமானின் கட்டளைப்படி, அம்பாள் பூலோகத்தில் மானிடப் பெண்ணாகப் பிறந்தாள். கடும் தவத்தின் மூலமாக மீண்டும் கயிலாயம் செல்லும் வகையில் ஈசனை
#பூரி_ஜகன்னாத் #அனாபஸார_ஜகந்நாதன்
( ஜூலை 7 2024 புரி ரதயாத்திரை)
புரி க்ஷேத்திரத்தில், ஜ்யேஷ்ட பூர்ணிமா (சாந்திர மாஸ ஆனி மாத பௌர்ணமி) அன்று வேப்பமரத்தினால் ஆன ஜகந்நாத், பலராம், சுபத்திரா ஆகியோர்108 குட தங்கக் கிணறு ஜலத்தினால் திருமஞ்சனம் கண்டருளுவர். அதன்பின் அவர்கள் மூவரையும்
குழந்தையாக பாவிப்பதால், அவர்களுக்கு ஜுரம், ஜலதோஷம் ஆகியவை வருவதால், 2வாரங்கள் அவர்களை அனவஸார க்ருஹம் என்று தனியறையில் இருக்கவைத்து கஷாயம், பழச்சாறு போன்றவை நிவேதனம் செய்யப் படும். அந்த சமயத்தில் கோயிலில் பக்தர்களுக்கு தரிசனத்திற்கு அனுமதி இல்லை. நித்யம் செய்ய வேண்டிய பூஜா
முறைகளும் அனவஸார காலத்திற்கு விசேஷ பூஜையாக மாற்றப்படும். இந்த 15நாட்கள் விசேஷ பூஜைக்காகவே அனவஸார பட்டி பகவான் தயாராவார். துணியில் வரையப்படும் தெய்வ உருவங்களை அனபஸார பட்டி பகவான் என்று அழைப்பர். பலராமனை அனந்தவாஸுதேவனாக 4 திருக்கைகளில், சங்கம் சக்கரம், ஏர்கலப்பை, உலக்கையோடும்