Sri Sankara Charitham by Maha Periyava–Sankara Jayanti in Kamakshi temple
“மடத்தோடேயே ஸம்பந்தப்பட்டது காஞ்சி காமாக்ஷி ஆலயம். ஆசார்யாளுடைய சரித்ர ஸம்பந்தமும் விசேஷமாக உள்ள ஆலயம் அது. அதனால் அங்கே ஆசார்யாளுக்கு பிம்பம் இருக்கிறது. உயரமாகத் தனி ஸந்நிதி, சிலா விக்ரஹம், உத்ஸவ விக்ரஹம்
எல்லாம் இருக்கின்றன. சிலா விக்ரஹம் பெரிய மூர்த்தியாக இருக்கிறது. அவ்வளவு பெரிசாக எந்த ஆசார்ய புருஷருக்குமே விக்ரஹம் இருப்பதாகத் தெரியவில்லை. புருஷாக்ருதி என்னும்படி, அதிலும் இந்த நோஞ்சான் காலத்துப் புருஷாக்ருதியாக இல்லாமல் ஆசார்யாள் இருந்த அந்தப் பூர்வகாலத்தின் த்ருடகாத்ரமான
கம்பீர புருஷாக்ருதியில் அந்த விக்ரஹம் இருக்கிறது. அங்கே மாத்ரம் சங்கர ஜயந்தி உத்ஸவமும் நல்லமுறையில் கொண்டாடப்பட்டு வருகிறது. ஜயந்தி உத்ஸவங்களைக் கொண்டாடுவதில் இரண்டு வகை உண்டு. கர்ப்போத்ஸவம் என்பது ஒன்று. ஜன்மோத்ஸவம் என்பது இன்னொன்று. ஜயந்திக்கு முன்னால் உத்ஸவம் ஆரம்பித்து
ஜயந்தியன்று பத்தாம் நாள் உத்ஸவம் பூர்த்தியாகும்படிக் கொண்டாடுவது கர்ப்போத்ஸவம். பத்து மாஸ கர்ப்பத்துக்குப் பதிலாகப் பத்து நாள் உத்ஸவம். ஜயந்தியன்றே ஆரம்பித்து அப்புறம் பத்துநாள் உத்ஸவம் நடத்திப் புண்யாஹவாசன தினத்தில் முடிக்கிற மாதிரிப் பூர்த்தி செய்வது ஜன்மோத்ஸவம் எனப்படும்.
ஆசார்ய ஜயந்தியை கர்ப்போத்ஸவமாகப் பண்ணும் இடங்களில் சுக்ல பஞ்சமியான ஜயந்திக்குப் பத்து நாள் முந்தி என்றால், ‘க்ருஷ்ண பக்ஷத்தில் ஆரம்பிக்க வேண்டியிருக்கிறதே, தேய்ப்பிறை அவ்வளவு ச்லாக்யமில்லையே’ என்று நாலைந்து நாள் தள்ளி அமாவாஸ்யையன்று ஆரம்பித்துப் பஞ்சமியோடு முடிக்கிறார்கள்.
காஞ்சி காமாக்ஷி கோவிலில் ஜன்மோத்ஸவமாகச் கொண்டாடுகிறார்கள். ஜயந்தியன்று ஆரம்பித்துப் பூர்ணிமையன்று பூர்த்தி செய்கிறார்கள். அந்த உத்ஸவம் தேவஸ்தானத் திட்டத்திலேயே நடத்தப்பட்டு வருவது. வேறெங்கேயும் இப்படி தேவஸ்தானக் கட்டளையாக ஆசார்யாளுக்கு உத்ஸவமில்லை; தனிப்பட்ட உபயதார்கள் செய்யும்
உத்ஸவம்தான் நடக்கிறது. மற்ற ஆசார்ய புருஷர்களுக்கும் அடியார்களுக்கும் அநேக ஆலயங்களில் நடக்கிறதுபோல நம் ஆசார்யாளுக்கு நடக்காத குறைக்குக் கொஞ்சம் ஈடு செய்வதாகக் காஞ்சீபுரத்தில் மாத்ரம் விமர்சையோடு உத்ஸவம் நடக்கிறது. ப்ரதி தினமும் பகவத்பாதாளின் உத்ஸவ விக்ரஹத்தைப் புறப்பாடு செய்து
அம்பாள் ஸந்நிதியான காயத்ரி மண்டபத்துக்கு வெளிப்பக்கம் பீடம் போட்டு எழுந்தருளப் பண்ணி அவர் பண்ணிய ஸ்தோத்ரங்களுக்குள் மிகவும் உயர்ந்ததான ‘ஸெளந்தர்ய லஹரி’யிலிருந்து தினம் பத்து ஸ்லோகம் வீதம் அர்ச்சகர்கள் அர்ப்பணம் பண்ணுகிறார்கள். ஒவ்வொரு ஸ்லோகத்துக்கும் ஒரு தீபாராதனை செய்கிறார்கள்.
பத்து நாளில் இப்படி ஸெளந்தர்ய லஹரியின் நூறு ஸ்லோகங்களும் ஒதப்பட்டு அம்பாளுக்கு அர்ப்பணமாகப் பாராயணம் செய்யப்படுகின்றன. கடைசி நாளில் ஒரு வித்யாஸம்: வெளி ப்ராகாரத்தில் சுக்ரவார மண்டபம் என்று இருக்கிறது. விடாயாற்றி உத்ஸவம் முதலானவற்றில் அம்பாளை அங்கேதான் எழுந்தருளச் செய்து தீபாராதனை
நடத்துவார்கள். ஸ்ரீ சங்கர ஜயந்தி உத்ஸவத்தின் பத்தாவது தினத்தில் இந்த மண்டபத்திலேயே உத்ஸவ காமாக்ஷி, உத்ஸவ ஆசார்யாள் இரண்டு பேரையும் எழுந்தருளப் பண்ணிக் கடைசிப் பத்து ஸ்லோகம் சொல்லிப் பூர்த்தி செய்கிறார்கள். ஆசார்யாளுக்கு அம்பாள் ப்ரஸாதமாகப் பரிவட்டம் கட்டி மரியாதைகள் செய்து
உத்ஸவத்தை முடிக்கிறார்கள். இது போல ஊர் உலகம் பூராவும் அவருக்கு நடக்க வேண்டும்.” - காஞ்சி முனிவர் ஶ்ரீ சந்திரசேகர சரஸ்வதி ஸ்வாமிகள் #தெய்வத்தின்குரல்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#நற்சிந்தனை
விதுரர் திருதராஷ்டிரருக்கும், பாண்டுவுக்கும் தம்பி. பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் சித்தப்பா. விதுரரின் தாயார் ஒரு பணிப் பெண்ணாக இருந்தவர். விதுரர் மகா நீதிமான். தருமத்திலிருந்து சிறிதளவும் நழுவாதவர். 100 வயது வரை வாழ விதுரர் சொன்ன நீதி சாஸ்திரம் கீழே!
திருதராஷ்டிரன் விதுரரைப் பார்த்து, மனிதனுக்கு ஆயுள் 100 வருடங்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இருந்தும், முழுமையான ஆயுள் வரை யாரும் வாழ்வதாகத் தெரியவில்லையே இது ஏன் என்று கேட்டார். அதற்கு விதுரர், 6 கூரிய வாள்கள் தான் மனிதனின் ஆயுளை குறைகின்றன என்றார்
அவை:
அதிக கர்வம் கொள்ளுதல்
அதிகம் பேசுதல்
தியாக மனப்பான்மை இல்லாமை
கோபம்
சுய நலம்
நண்பர்களுக்கு துரோகம் இழைப்பது
விதுரர் கூறீய அந்த 6 வாள்கள் எப்படி இருக்கும்? அதைப் போக்க என்ன செய்ய வேண்டும்?
#முதலாவது_வாள் அதிக கர்வம் கொள்ளுதல்- தான் கெட்டிக்காரன், தான் செல்வந்தன், தான் கொடையாளி, தான் நல்லவன், பிறர்
பஞ்ச பாத்திரம்
பஞ்ச பாத்திரத்தை பற்றி 3 விதமான விவரங்கள் உண்டு. முதலில் ஆராதனத்திற்க்கு பயன்படும் அந்த பஞ்ச பாத்திரம் இயற் பெயர்
பஞ்ச பத்ர பாத்திரம் என்பர் பெரியோர். அதாவது அந்த பாத்திரத்தில் ஐவகை
பத்திரங்களை (இலைகள்) அதிலுள்ள நீரில் இட்டு அந்நீரை உத்தரணி என்ற சிறு கரண்டியால்
எடுத்து ஆராதனைகளுக்கு பயன் படுத்துவதால் அப்பெயர்.
பஞ்ச பத்ரம்
அது, துளசி, அருகு, வேம்பு, வில்வம், வன்னி ஆகிய இலைகளே பஞ்ச பத்திரங்கள் என்பர். இந்த பத்திரங்களும் தீர்த்தமும் விடப்படும்
பாத்திரம் பஞ்ச பத்ர பாத்திரம். இதுவே காலப் போக்கில் மருவி பஞ்ச பாத்திரம் என்றானது. இந்த
பத்திரங்கள் மூலிகைகளாகும். இந்த பத்ரங்கள் தெய்வீகமானவை பூஜைகளுக்கு ஏற்றவை. இப்படியாக 5 இலைகளையும் பகவத் கைங்கர்யத்திற்க்கு அர்ப்பணித்து அர்க்யம், பாத்யம், ஆசமனியம் என தீர்த்தம் விடுவதாலேயே அந்த பாத்திரம் பஞ்ச பத்ர பாத்திரம் என்று அழைக்கப்படுகிறது. ஶ்ரீ வைஷ்ணவர்கள் விஷ்ணு பகவான்
முருகன் கோவில்களில் உள்ள சில சிறப்புகள்
அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் திருக்கோவிலில் கொடிமரத்தில் இருந்து வலமாக எல்லாச் சன்னிதிகளுக்கும் நாம் சென்று வந்தால் ஓம் என்ற எழுத்து வடிவில் அப்பாதை அமைந்துள்ளதைக் காணலாம். இங்கு மட்டுமே விபூதியை பன்னீர் இலையில் மடித்து தருவர்.
இந்தப் பன்னீர் இலையை பிரித்தால் 12 நரம்புகள் இலையில் இருப்பதை உணரலாம். இவை முருகனின் 12 திருக் கரங்களைக் குறிக்கின்றன. திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கென்று தங்கக் குடங்கள் இருக்கின்றன. வேள்வி மற்றும் குடமுழுக்கு நாட்களில் இவை பயன்படுத்தப்படுகின்றன. தங்கத் தேங்காய்களும் இங்கு
உண்டு. இவை முக்கியப் பிரமுகர்கள் வருகை, பூரண கும்ப மரியாதை மற்றும் வேள்வியின் போது பயன்படுத்தப் படுகின்றன.
திருக்கழுக்குன்றம் மலை மீதுள்ள வேதகிரீஸ்வரர் ஆலயத்தில், முருகப்பெருமான் 6 திருக்கரங்களுடன் மயில் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். முருகப் பெருமானோடு வள்ளி-தெய்வானை
வானமாமலை கலியன் ஸ்வாமி மிகுந்த புலமை உள்ளவர். தமிழ் ஹிந்தி ஆங்கிலம் தெலுங்கு ஆகிய மொழிகளை பேசவும் எழுதவும் படிக்கவும் தெரியும். நவோதயா பள்ளியில் பலவற்றில் பணியாற்றி அதன் தலைமை பீடத்திலும் அமர்ந்தவர். திருக்குறளை ஹிந்தியில்
மொழி பெயர்த்தவர். அவர்களை ஶ்ரீவைணவ உலகில் இந்திய அளவில் அனைவருக்கும் தெரியும். ஜீயரின் 75வது சம்வஸ்த்ர வைபவம் நடந்த போது அவரை கம்யூனிச சித்தாந்தத்தை கொண்ட பத்திரிகை நிருபர் பேட்டி எடுத்தார். இந்து மதத்தை சிறுமைப்படுத்தியும் கிறிஸ்தவ முஸ்லிம் மார்க்கங்களை உயர்த்தியும் தாங்கிப்
பிடிப்பதிலேயே அவர் ப்பேட்டியின் சாரமாக இருந்தது. ஸ்வாமியிடம் தன்னை அறிமுகபடுத்தி கொண்டு பேட்டியை எடுத்தவர் பேட்டியின் இடையே இஸ்லாத்தை கண்டு பிடித்தவர் யார் ஸ்வாமிஜி என கேட்டார். முகம்மது நபி என்றார் ஸ்வாமி. கிறிஸ்தவ மதத்தை ஸ்தாபித்தவர் ஸ்வாமி என கேட்க
ஏசுகிரிஸ்து என்றார் ஜீயர்.
#அருள்மிகு_கோரக்கநாதர்_ஆலயம்
திருநெல்வேலி மாவட்டம்
ஆழ்வார் குறிச்சியின் அத்ரி மலை அடிவாரத்தில் உள்ள அணையின் மட்டத்தில் இருந்து சுமார் 6 கிமீ உயரத்தில் உள்ளது. மும்மூர்த்திகள் தங்கியிருந்த அத்ரி அனுசுயாதேவி சமேத அத்ரி பரமேஸ்வர் கோவில். உலகம் தோன்றிய காலத்திலேயே அவதரித்த ரிஷிகளில்
ஒருவர் அத்ரி மகரிஷி சிருஷ்டி கர்த்தாவான பிரம்மதேவரின் மானசபுத்திரரான இவரது மனைவியின் பெயர் அனுசுயா. வேத, புராண, இதிகாசங்கள் அனைத்திலும் இந்தத் தம்பதியர் உயர்வாக பேசப்பட்டுள்ளனர். தவசக்தியில் இருவருமே சளைத்தவர்கள் அல்லர். இந்தத் தம்பதியர் ஆசிரமம் அமைத்து தவம் மேற்கொண்டது, பொதிகை
மலை தொடரில் உள்ள திரிகூடமலைப் பகுதியாகும். எனவே இந்தப் பகுதிக்கு அத்ரிமலை என்றும் பெயருண்டு. நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் இருந்து 9 கிமீ தொலைவில் உள்ளது அத்ரிமலை அடிவாரம். மலையடிவாரத்தில் கடனாநதி அணை உள்ளது. இந்த அணையின் மட்டத்தில் இருந்து 6 கிலோமீட்டர் உயரத்தில் அத்ரி
இந்த விநாயகப் பெருமான் அமைதியான சூழலில் ஒரு குளத்தின் அருகில் கோயில் கொண்டு அருள் பாலிக்கிறார். சதுர் ஸஹஸ்ர கணபதி என்று வட மொழியில் வழங்கப்படும் இப்பிள்ளையாருக்கு இப்பெயர் வந்த காரணம் சுவாரஸ்யமானது. இராமாயண காலத்தில்
நடைபெற்ற சம்பவத்தைக் கொண்டு இப்பெயர் காரணப் பெயர் ஆயிற்று.
இவரே க்ஷேத்ர கணபதி. கிஷ்கிந்தையை ஆண்டு வந்த வாலிக்கு யாரிடம் போரிட்டாலும் எதிரியின் பலத்தில் பாதி தனக்கு வர வேண்டும் என்ற வரத்தைப் பிரமதேவனிடம் பெற்றான். பிரமனை நோக்கிக் கடுமையான தவம் செய்ய ஒரு குகைக்குள் இருந்தான்.
நெடும்காலமாகியும் வாலி வெளியில் வராதது கண்டு அஞ்சிய அவனது வீரர்கள் குகையை ஒரு பாறாங் கல்லால் மூடிவிட்டுக் கிஷ்கிந்தைக்குத் திரும்பி விட்டனர். இதற்கிடையில், கடும் தவத்தின் பலனாக வாலிக்குப் பிரமனின் தரிசனம் கிடைத்தது. வாலி வேண்டியவாறே எதிரியின் பலத்தில் பாதி அவனுக்கு வரும்படியாக