My Authors
Read all threads
அண்ணன் கொடுத்ததுதான் எல்லாம் என்றால், அண்ணனுகான வெளிச்சத்தை கொடுத்தது தேசியதலைவர் பிரபாகரன். ஆம், சீமான் எல்லோரும் பிரபாகரன் படத்தை வைத்துக்கொள்ள பயந்த நேரத்தில் அதை முன்னிறுத்தினார். அவர் பிரபாகரனை முன்னிறுத்தியதால்தான் அவரை எல்லோருக்கும் பிடித்தது என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.
இனஅழிப்பு நடந்ததால் வந்த கோபத்தின் விளைவு தான் நாம் தமிழர் கட்சிக்கான ஆதரவு என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும். சீமானுக்காக வந்த கூட்டம் அல்ல. அது ஈழ தமிழருக்காக வந்த கூட்டம், தேசிய தலைவருக்காக தானாக சேர்ந்த கூட்டம். அதிதி புகழ்ச்சி சீமானுக்கு கொடுக்கவேண்டாம். அவர் ஒருங்கிணைத்தார்.
ஒன்னும் தெரியாத சிலருக்கு / பலருக்கு ஈழ புரிதல் ஏற்படுத்தினார். சீமான் புகழ்ச்சிக்கு உரித்தானவர் இல்லை என்பது என் கருத்து அல்ல. அதீத புகழ்ச்சி, சீமானிசம், ரசிகமனப்பான்மை தான் தவறு. ரசிகமனப்பான்மை இல்லாமல் தான் பலர் நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர். மற்ற கட்சிகள் போல் செய்வது தவறு.
அப்படி கொள்கைப்பிடிப்புள்ள கட்சியில் இணைந்த சிலருக்கு வாய்ப்புகள் கொடுத்தார் (கொடுத்தது தான் இருக்கவேண்டும்) என்பதற்காக இடும்பாவனம் போல் ரசிக மனப்பான்மை கொண்டு பேசுவது தவறு. ஆம், சீமான் பலரை வளர்த்துவிட்டார். சீமானை யார் வளர்த்துவிட்டார்? அவரையும் திராவிட மேடை வளர்ந்துவிட்டது.
ராமசாமி நாயக்கனை விமர்ச்சிக்கும் நாங்கள் சீமானை விமர்ச்சிப்பது தவறுஇல்லை. சகதமிழனாய் எல்லோரும் ஒன்றே. தைரியமாக ஒருசில முன்னெடுப்புகளை சீமான் செய்தார். பாராட்டுகிறோம். அதற்கு கொடுக்கப்பட்ட பரிசு தான் தலைமைபொறுப்பு. சீமானை புகழ்ந்து பேசிக்கொண்டே இருக்கவேண்டும் என்று நினைப்பது தவறு.
சீமான் அன்பானவர் என்கிறார் இடும்பை. தவறில்லை. அப்படிப்பட்டவர் தான் வீட்டுக்கு வந்த கல்யாணசுந்தரத்தை சந்திக்காமல் விட்டாரா? வெளித்தோற்றத்தை நம்புகிறோம் என்கிறார். எது வெளித்தோற்றம்? 5 மாதம் கொரோனா காலகட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட நேரத்தில் சந்திக்க முடியுமா? பேச தான் முடியும்.
சீமானை தலைவர் என்று சொல்கிறார்கள் என்று கல்யாணசுந்தரம் எப்போது சொன்னார். அதை ஏன் இடும்பை பேசவேண்டும்? தனிப்பட்ட சீமானை தலைமையேற்காதே தத்துவத்தை தலைமையேர் என்பதை கடைபிடிப்பவர் நீங்களா? சீமானிசம் ரசிகர்மன்ற மனநிலை தான். ரசிகர்மன்றமாகிவிட கூடாது என்பேதே கருத்து.
இடும்பை நாய் எல்லாம் கல்யாணசுந்தரத்தை விமர்சிக்கும் அளவுக்கு தூண்டிவிட்டது யார்? பொது வெளியில் பேச சொன்னவர் யார்? திராவிட தலித்தியதை தூக்கிக்கொண்டு அலையும் அந்த நாயை நாம் தமிழரில் விட்டதே தவறு. சீமான் வீட்டில் பல ஆண்டுகள் தங்கி இருந்தாராம்,அப்படி தங்கி இருப்பவரை தான் நம்புவாரோ?
இடும்பை சொல்கிறான் ரசிகர் மன்றமாக ஆகிவிட்டது என்று கல்யாணசுந்தரம் சொன்னார் என்று. அவர் விகடனில் வந்த செய்தியை மேற்கோள்காட்டி ரசிகர் மன்றமாக ஆகிவிட கூடாது என்கிறார். இதை தான் இடும்பை காணொளி வருவதற்கு முன் சில பொறுப்பாளர்கள் வெளியே சொல்லி மிதிபட்டார்கள். இவன் அதே பொய்யை சொல்கிறான்.
விகடன் சொல்லிய சில கருத்துக்களில் உடன்படுகிறேன் என்று தான் சொன்னார். எல்லா கருத்துக்கும் இல்லை. இடையில் முறைப்பு வேற இந்த நாயிடம் இருந்து. விகடனை கண்டிக்கவில்லை என்கிறார், விகடன் செய்தி வந்ததே நேற்று. இன்று சென்னைக்கு சீமானை சந்திக்கவந்து இருந்தார். உடனுக்குடன் கண்டிக்கவேண்டுமா?
இடும்பைக்கு முன்பு நான் அதை கண்டித்து கீச்சு வெளியிட்டேன். அப்படி என்றால் உனக்கு அந்த எண்ணம் இல்லை என்பதா? நீ வெட்டி பயலாக சுற்றி திரிந்தால், சிலருக்கு பேராசிரியர் பொறுப்பு உள்ளது. என்ன பேச்சு இது? விகடனுக்கு உடன்படுகிறேன் என்று சொன்னாரா? சில கருத்துகளுக்கு என்று தான் சொன்னார்.
சிலர் பெயரை சொல்லி கல்யாணசுந்தரம் அவரிடம் சீமானை பற்றி தவறாக பேசினார் என்கிறார். அதற்கு ஏதேனும் ஆதாரம் உள்ளதா? நாம் தமிழர் வெளிநாட்டில் வசூல் செய்கிறது என்று கல்யாணசுந்தரம் சொன்னாரா? இடும்பை அவர் சொன்னதாக சொல்கிறார். அடேய், தனிப்பட்ட வளையொலியில் கட்சி பற்றி என்ன பேசவேண்டும்?
ஆம், சீமான் எனும் புறம்போக்கு என்கிற காணொளி எல்லோருக்கும் தான் பிடித்திருந்தது. "புறம்போக்கு" எந்தது எதிர்மறையாக போட்டு நேர்மறையாக செய்யும் தந்திரம். அது நாம் தமிழர் எதிர்பவரையும் சென்றடையும் என்பதே எல்லோரது கருத்து. அது உனக்கு தெரியாதா? சீமானுக்கு தெரியாதா? ஏன் அந்த பதற்றம்?
வெளியேற்றப்பட்டவருடன் தொடர்பில் இருக்கக்கூடாது என்பது என்னவித மனநிலை? நம்மை பாராட்டுபவனை விட, விமர்சிப்பவனுக்கு தான் முதலிடம் கொடுக்கவேண்டும். தெலுங்கன் அயன் கார்த்தியை பேசவைத்தது அதன் அடிப்படையில் தான். கிசுகிசு, புரளி, புரணி பேசுபவர்களை தான் உடன் வைத்துக்கொண்டுள்ளாரா சீமான்?
நானும் சீமான் என்று தான் சொல்வேன். அண்ணன் சீமான் என்று ஏன் சொல்லவேண்டும்? அப்படி சொல்வது தான் தனிமனித வழிபாட்டுக்கு பிற்காலத்தில் தள்ளுகிறது. அவர் ஒரு சகதமிழன் அவ்வளவே. மரியாதை மனதுக்குள் இருக்கவேண்டும். உன்னைப்போல வாயில் மட்டும் இருக்க கூடாது. இதை இப்பொது பேசுவதன் நோக்கம் என்ன?
விகடனுக்கு அந்த செய்தியை கொடுத்தவரை யார் என்று தெரியாதா என்று கேட்கிறார் கல்யாணசுந்தரம். அவரே அதை கொடுத்துவிட்டு இவ்வளவு தைரியமாக பேசுவாரா? அண்ணியை பற்றி பேசுகிறார் இடும்பை. இது தான் ரசிகக்குஞ்சு மனப்பான்மை. கயல்விழியை பற்றி பேசவேண்டிய நோக்கம் என்ன? இது குடும்ப அடிமைத்தனம்.
யார் போனாலும் பரவாயில்லை. அது தானடா உங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலை. அதை சரியாக செய்கிறீர்கள். உன் மீது கோபப்பட்டு ஒன்றும் இல்லை. உன்னை இப்படி பேசவைத்தவன் மீது தான் இந்த கோபம். அந்த ரெண்டு பேரிடம் கல்யாணசுந்தரம் என்ன சொன்னார், நீ சொல்லேன். இவ்வளவு பேசிய நீ அதையும் சொல்லேன்.
ஏண்டா சீமானை சந்திக்க வந்து திருப்பி அனுப்பப்பட்ட பிறகு கொடுக்கப்பட்ட பேட்டியில் விகடனில் சொல்லப்பட்ட ரசிகர்மன்றத்தை கேட்கப்பட்டதற்கு தான் விளக்கம் கொடுத்தார். சந்திக்க வந்தபோது பேசியிருந்தால் அந்த பேட்டியே வந்து இருக்காது. அறிவுகெட்டவனே அந்த தொடர் நிகழ்வுகள் உனக்கு தெரியாதா?
ஏண்டா வெண்ணை, அந்த விகடன் செய்தியில் சொல்லப்பட்டது தான் ரசிகர்மன்றம். ஏதோ கல்யாணசுந்தரம் தான் அதை சொன்னார் என்பது போல் பேசுவது எதனால்? ரசிகர்மன்றமே வேண்டாம் என்பது தான் நாம் தமிழரின் நிலை என்று தான் சொன்னார். அதை தான் சீமான் விரும்புவார் என்றும் சொன்னார். அது தெரியாதா?
ஏன் மீடியாவை பார்த்தீர்கள் என்று இந்த அரைகுறை கேட்கிறான். இவனுக்கு அவர் சொன்ன தொடர் நிகழ்வுகளை பொருத்தி பார்க்க தெரியாதா? 5 மாதம் பேச முடியவில்லை, சந்திக்க சென்னை வந்தும் திருப்பி அனுப்பபட்டார் என்பது தான் அவரை மீடியாவை நாட வைத்தது. நீங்களே அவரை புறக்கணித்துவிட்டு இப்போ பேச்சு.
அடேய் அண்ணனுக்காக சேர்ந்த கூட்டம் அல்ல இது. தூக்கி வீசிவிட்டுபோக. அண்ணனுக்கு சேர்ந்த கூட்டமே தேசியத்தலைவர் பிரபாகரனுக்காக சேர்ந்த கூட்டம். ஏதோ சீமானுக்காக கூடிய கூட்டம்போல பேசவேண்டிய நோக்கம் என்ன? இதுதான் ரசிககுஞ்சு மனப்பான்மை. இடும்பை உளறுவாயன் நேர்மை, அறிவு என்று பிதற்றுகிறான்
கட்சியை விட்டு நீக்கும் போது காரணம் சொல்லமாட்டாராம். கேட்டால், அது வெட்ககேடாம், அவமானமாம். யாருக்கு? நீ சொல்லேன், யாருக்கு அவமானம் என்று பார்க்கலாம். வெளிப்படையா பேசமுடியாது என்று சொல்லிவிட்டு தொடர்ந்து கல்யாணசுந்தரத்தின் மீது அவதூறுகளை சொல்லிக்கொண்டு இருக்கிறான் இடும்பை.
அடேய் இடும்பா, உனக்கு இருப்பது தான் சீமான் மயக்கம்(அல்லது இருப்பது போல் நடிக்கிறான், கூடஇருந்து கெடுக்க). எங்களுக்கு இருப்பதல்ல. இப்போ களப்பணியாளர்கள் தான் என்று ஆர்த்திக் உருட்டிய உருட்டை பேசுகிறான். இவர்கள் செய்வதெல்லாம் சிலரை வெளியே பேசி நூல்விட்டு பார்ப்பது. பிறகு அதை பேசுவது
ஆம், களப்பணி மட்டும் செய். கைதட்டி விசிலடிச்சு போஸ்டர் மட்டும் ஒட்டு. மேலே வர நினைக்காதே. அது தானே? அந்த களப்பணி செய்பவருக்கு என்ன செய்தார்? குறைந்தபட்சம், சீமான் வீட்டில் பிறந்தநாளுக்கு கறிசோறு போடுகிறாரா? அப்படி எத்தனை பேருக்கு போட்டார்? ஒரு லட்சம் களப்பணியாளர்களுக்கு போட்டாரா?
கட்சியில் நாலுபேர் இணைவார்கள் இரண்டு பேர் போவார்கள். அந்த இரண்டுபேரில் ஒருவராக கல்யாணசுந்தரம் போகட்டும் என்று சொல்கிறான் இடும்பை.அடேய், வீட்டுக்கு போய்விட்டு தானே மீடியவிடம் சென்றார். திரும்ப முதலில் இருந்தா? கட்சி என்ற குழந்தையை கல்யாணசுந்தரம் கழுத்தருகிறார் என்கிறான்.
கல்யாணசுந்தரம் நாடகம் போடுகிறார் என்கிறான் இடும்பை. இவர் அதை அனுமதிக்க மாட்டாராம். முறைப்பு வேற. ஆம், லட்சம் சீமானை கூட உருவாக்க வலிமை உள்ள பிம்பம் தான் தேசியத்தலைவர் பிரபாகரன். அப்படி உருவாக்கப்பட்டவர் ஒரு சீமானுக்கு தான் நீங்கள் முட்டு கொடுக்கிறீர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.
இரண்டு ஆண்டுகளாக எச்சரிக்கை கொடுத்தார்களாம். இவருக்கு அது தெரியுமாம். உனக்கு எப்படி சீமானுக்கு தெரிந்த எல்லாம் தெரிகிறது? இதை பேச சொல்லி சீமான் உனக்கு சொல்லி அனுப்பினாரா? ஏன் இதை அவரால் பேச முடியாதா? அவர் ரொம்ப பெரிய இடத்துக்கு போய் விட்டாரா? என்னங்கடா உங்க உருட்டு?
ஏதோ ஒரு ரெண்டு பேரிடம் சொல்லிவிட்டாராம், இவர்களுக்கு தெரியுமாம். ஒரு ஆதாரமும் இல்லாமல் அதை அப்படியே நம்புவார்களாம். இடையில் வேறு எவனும் புகுந்து அவர்களின் நோக்கத்துக்காக மடைமாற்றம் செய்திருக்க மாட்டார்களாம். என்ன பேச்சு இது? ஏன் இதை கல்யாணசுந்தரத்தை நேரில் வைத்து பேசி இருக்கலாமே?
நாளைக்கு இதேபோல் உனக்கும் வேறொருவருக்கு நடக்கும். வளர்ந்து வருகிறவர்களை, எவரோ இருவர் சொல்லிவிட்டார் என்று சொல்லி ஒதுக்கிவைப்பதும், புறக்கணிப்பதும். இது தானே அரசியல் 101. யாருக்கும் தெரியாதா இந்த உருட்டு? கண்மூடித்தனமாக அண்ணன் பின் நிற்பார்களாம். அது தானடா உங்களுக்கு வேண்டும்.
ஆமாம், சீமான் மட்டும்தான் இனத்தின் கடைசி நம்பிக்கை. வேறு எவருக்கும் தமிழின உணர்வு இல்லை. அடேய், தமிழின உணர்வு இருந்ததால் தான் நாம் தமிழரில் இணைந்தோம். சீமான் நான் இல்லாவிட்டால் வேறொருவர், அதுவும் இல்லாவிட்டால் நம் கொள்கை ஆளும் என்று சொல்லியது என்ன? இதுதான் ரசிககுஞ்சு மனப்பான்மை.
இவரை யாரும் ஏவி விடவில்லையாம், இவருக்கு பேசவேண்டிய கட்டாயம் நிர்பந்தம் ஏற்பட்டதாம், கூடவே கல்யாணசுந்தரத்தை பற்றிய எல்லா செய்தியும் (சீமானுக்கு மட்டுமே தெரிந்த) இவருக்கு தெரியுமாம். என்னடா உங்க உருட்டு? 11 ஆண்டுகள் உழைத்தவர் துரோகம்செய்ய அங்கீகாரம் கொடுக்க சொன்னாரா கல்யாணசுந்தரம்?
கல்யாணசுந்தரம் தான் ரொம்ப உழைச்சுட்டேன் 11 ஆண்டுகளாக என்று உன்னிடம் சொன்னாரா? அதை அவரின் இனஉணர்விற்கான கடமை என்றே சொல்கிறார். ஆம், சீமானை நம்பி அவரை தொடர்ந்து பணியை சொல்லியுருப்பதால், சீமான் செய்யும் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது. கண்மூடித்தனமாக இருக்க முடியாது.
சாப்பிட்டாயா என்று கேட்பது தமிழரின் பண்பாடு. இதில் என்ன பெருமை, புகழ்ச்சி? அடுத்து படி, தற்புகழ்ச்சிக்கு வருகிறார் இடும்பை, அங்கே நான் எதுவும் கிடையாது, இங்கே பெருசா என்னை பார்க்கிறார்கள்,சிறை சென்றேன் என்று பேசி. உண்மை எது என்று நாளை சீமான் சொல்வாராம். அப்புறம் நீ எதுக்கு பேசுற?
மெய்ப்பொருளை நாளை பார்க்கலாம். என்ன உண்மை ஒருநாள் வெளிவருமா? அதுவரைக்கும் பொறுமையா இருக்கணுமா? அப்போ, நாளைக்கு வராதா? அப்புறம் எதுக்கு இன்னொரு பில்ட்அப்பு? இவர் பொதுவெளியில் பதிவு பண்ணவில்லையாம், ஆனால் பதிவு செய்கிறாராம். அடேய்ய்ய்.
தேசியத்தலைவருக்கு துணையாக இருந்தவர்கள் எல்லாம் துரோகியாக போய் விட்டார்கள் என்று சீமான் சொல்வாராம் (அப்படியா புதுசெய்தியாக உள்ளது). எல்லோரும் அப்படி தானாம். அதனால் சில புரணி, கிசுகிசு பேசுபவர்களை பக்கத்தில் வைத்துக்கொண்டு அவர்கள் சொல்வதை கேட்பாராம். உங்க ஊத்துக்கு நாங்க ஊறுகாயாடா?
யார் விட்டு போனாலும் இவர்களுக்கு ஒன்றும் இல்லையாம். கூப்பிட்டு கூட பேச மாட்டார்களாம், அவரின் பதிலை கேட்க மாட்டார்களாம். பிடித்தால் தஸ்ஸு பிடிக்காட்டி புஸ்ஸு. கட்டம் கட்டி வெளியேற்றுவது போல் தான் உள்ளது. திமுகவின் தந்திரங்களை அப்படியே ஜெராக்ஸ் பிரிண்ட் பண்ணிருப்பானுகப்போல.
சில இழப்புகள் வலிக்குமாம், அப்புறம் பழகிடுமாம். கட்சி பழகிதானே ஆகவேண்டும். இல்லாவிட்டால், இவர்களுக்கு இழப்பு ஏற்பட்டுவிடுமே. சில உண்மை கசக்குமாம். ஆனால் அதை வெளியே சொல்லமாட்டார்களாம். சீரியஸா சிரிப்புகாட்டுறான். எல்லாம் பேசிவிட்டு யாரையும் இவர் காயப்படுதலையாம், நோக்கம் இல்லையாம்.
கடைசியா இவர்கள் திரும்பதிரும்ப வருவது ரசிகர்மன்றம் என்று சொல்லிவிட்டார்கள் என்று. சரி, நடக்காத ஒன்றை நடந்தது என்று நம்பினாலும், அது நேற்று நடந்த ஒன்று. அதுக்கு முன்பு 5 மாதம் என்னசெய்து கொண்டுஇருந்தீர்கள்? வெளியே போகிறாரா என்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தீர்களா? சிறந்த முட்டு.
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Keep Current with இமயவரம்பன் பெருஞ்சேரலாதன்

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!