இதுவரை பல காணொளிகளை பொறுமையாக பார்த்துவிட்டேன். இது தான் எனது சாராம்சம். கல்யாணசுந்தரம் மீது பல *சரியான* குற்றசாட்டுகள் உள்ளன (சில தவறானவை). ஆனால், அவற்றை சீமான் ஏன் கல்யாணசுந்தரத்திடம் பகிர்ந்துகொள்ளவில்லை? 5 மாதம் வரை ஏன் அவரின் அழைப்புகளை எடுக்கவில்லை, வந்தவரை சந்திக்கவில்லை?
இடும்பை காணொளியோ, துரைமுருகன் காணொளியோ, சீமானின் காணொளியோ இந்த பிரச்சனையை சரிவர பேசவில்லை. அதில், பல குறைபாடுகள், முரண்பாடுகள் உள்ளன. நான் பார்த்த செந்தில்நாதனின் காணொளியும், தடம் காணொளியும் இதை சரியாக அணுகி இருந்தனர். கல்யாணசுந்தரத்தின் மீதான குற்றசாட்டை சரியாக சொல்லியிருந்தனர்.
அக்காணொளிகளில், கல்யாணசுந்தரம் கட்சி நிகழ்வுகளை, போராட்டங்களை முகநூலில் பகிரவில்லை என்ற சரியான குற்றசாட்டை சொல்லியுருந்தனர். அவர் பகிராதது மிக பெரிய தவறு. நான் முகநூலில் இல்லை எனவே எனக்கு இது தெரியாது. இதற்கு கட்சி கண்டிப்பாக விளக்கம் கேட்டு இருக்கவேண்டும், கேட்பதில் தவறில்லை.
கல்யாணசுந்தரம் கட்சி பற்றியும், சீமானை பற்றியும் சிலரிடம் அவதூறு பேசியதாக சொல்லப்படுகிறது.அது பற்றியும் கட்சி நிச்சயம் விளக்கம் கேட்டுஇருக்கவேண்டும். நடவடிக்கை எடுத்து இருக்கவேண்டும்.இதையெல்லாம் செய்யாததன் விளைவு தான் இன்றையநிலை. நடவடிக்கை எடுத்துஇருந்தால், இது நிகழ்ந்திருக்காது.
என்னை பொறுத்தவரை, கட்சியில் ஒரு பெரிய பொறுப்பில் உள்ள ஒருவரின் அழைப்பை எடுக்காமல் இருப்பது தவறு. 5 மாதங்கள் புறக்கணிப்பது தவறு. சந்திக்க வந்தவரை சந்திக்காமல் திருப்பி அனுப்பியது தவறு. பிரச்சனையை முளையிலேயே கிள்ளாமல், வளரவிட்டது தவறு. ஏன் இந்த அலட்சியம், அவமரியாதை?
நான் கல்யாணசுந்தரம் தவறு செய்யவில்லை என்று சொல்லவில்லை. ஆனால், அந்த தவறை முன்பே சரியான முறையில் அணுகி சரி செய்திருக்கலாமே என்பது தான் எனது ஆதங்கம். இதை செய்யாததன் விளைவு இப்போது நாம் தமிழர் ஒரு நல்ல பேச்சாளரை இழக்கப்போகிறது, புறந்தள்ளுகிறது. இதுவெல்லாம் சரி செய்யமுடியாத தவறா?
நமது நோக்கம் தமிழ்த்தேசியத்தை என்ற இலக்கை நோக்கி செல்லும் போது, அதில் கவனத்தை வைத்து உள்முரண்களை உடனுக்குடன் களைந்து இருக்கலாமே. செய்திருந்தால் யாரையும் இழக்க நேரிடாதே. இதை கட்சி உடனே மாற்றிக்கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் மேலும் மேலும் இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்க்க முடியாது.
நமக்குள் மனம்விட்டு பேசி புரிதலை ஏற்படுத்தியிருக்கலாம்.பல தவறான குற்றச்சாட்டுகள் உள்ளன, அதில் முக்கியமாக "புறம்போக்கு" என்ற காணொளி. அந்த காணொளியில் ஒரு குறைபாடும் இல்லை. அதை பகிர்வதில் தவறில்லை.கட்சி அதை பகிரவேண்டாம் என்றது தவறு. இக்காணொளி எதிர்மறையாக சொல்லி நேர்மறையாக மாற்றுவது.
மேலும், அந்த தவறான குற்றசாட்டுகளில் ஒன்றான கட்சியில் இருந்து நீக்கப்பட்டவருடன் தொடர்பில் இருப்பது. என்னைப்பொறுத்தவரை அது மிக பெரிய குற்றம் இல்லை. மற்றவர் போட்ட முகநூல் செய்திகளுக்கு எல்லாம் மறுப்பு சொல்ல தேவையில்லை. ஆனால், கட்சி கேட்டு இருந்தால், அதை கண்டிப்பாக செய்யவேண்டும்.
கட்சி கேட்டுக்கொண்டதாக வெற்றிகுமரன் சொல்கிறார்.அப்படி செய்திருந்தால், கல்யாணசுந்தரம் அதை மதிக்காமல் விட்டுஇருந்தால் நிச்சயம் அது தவறு.முரண்பாடுகளில் முக்கியமாக கல்யாணசுந்தரம் கட்சி தொடங்கி 3 ஆண்டுகள் கழித்து சேர்ந்தார் என்பது,இந்த கல்யாணசுந்தரம் பிரச்சனை 4 ஆண்டுகளாக உள்ளது என்பது
என்னைப்பொறுத்தவரை விகடன் சொல்லும் குற்றசாட்டு அனைத்தும் தவறில்லை. ரசிக மனப்பான்மை நாம் தமிழரில் பரவிக்கொண்டு தான் உள்ளது (இதை ஊக்கப்படுத்த கூடாது). சீமானிஸம் பெரிய தவறில்லை (தனிமனித வழிபாடு தவிர்த்து, கருத்துக்களை மட்டும் பேசும் வரை). அண்ணி, கயல்விழி என்பது கட்சிக்கு தேவையில்லை.
எல்லோரையும் அழைக்காது, சிலரை மட்டும் அழைத்து கொண்டாடும் பிறந்தநாள்,கறிசோறு தேவையற்றது. அது உயர்வு,தாழ்வு (சீமானுக்கு நெருக்கம்) என்ற படிநிலையை தான் ஏற்படுத்தும்.இப்போதும் சொல்வேன், யார் தவறு செய்தாலும் ட்விட்டரில் தூக்கிப்போட்டு மிதிப்பேன். அது சீமானாக இருந்தாலும்.தவறு தவறு தான்.
சுந்தரவள்ளி கல்யாணசுந்தரதை முதல்வராக சொல்லிவிட்டார் என்பதற்கு அதீத அக்கறை காட்டி இருக்கவேண்டிய அவசியம் இல்லை. கல்யாணசுந்தரத்தை நாம் தமிழரிலேயே சிலருக்கு தெரியாத நிலை தான் உள்ளது. கல்யாணசுந்தரத்தை முதல்வர் வேட்பாளராக கட்சியினரே ஏற்று இருக்கமாட்டார்கள்.
எல்லோருக்கும் தெரியும் 2021ல் நாம்தமிழர் வென்று ஆட்சியைபிடிப்பது முடியாது என்பது.அவ்வாறு களநிலவரம் இருக்கும்போது முதல்வர் வேட்பாளர் என்பதெற்கெல்லாம் ஆசைப்பட தேவையில்லை.நீ கை காட்டுபவன்தான் முதல்வர் என்பது சீமானுக்கு வலிமையையே கொடுக்கும்.தன்னை தவிர்த்து மற்றவரை முன்னிறுத்தும் போது
மேலும், கட்சி சட்டதிட்டங்களை மாற்றி நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால், ஒருவர் 10 ஆண்டுகளுக்கு மேல் முதல்வராக இருக்க முடியாது, மறுமுறை முதல்வராக வர 10 ஆண்டுகளாவது காத்திருக்கவேண்டும் என்று மாற்றவேண்டும். இது தான் ஜனநாயகத்துக்கு வழிவகுக்கும். இல்லையேல் திமுக போன்று செல்ல வாய்ப்புள்ளது.
சீமானை பெரியதாக போற்றி தனிமனித புகழ் பாட தேவையில்லை. ஆம், சீமான் எல்லோரும் பயந்த நேரத்தில் பிரபாகரனின் படத்தை தைரியமாக தமிழ்நாட்டில் முன்னெடுத்தார். அதற்கு பாராட்டுக்கள். அது நடந்து இருக்காவிட்டாலும், தமிழுணர்வு அக்காலகட்டத்தில் வீறுகொண்டு இருந்தது. அடங்கா பெரு நெருப்பு அது.
சீமான் எல்லோரையும் உருவாக்கினார் என்று அதீதமாக பேசுவது தவறு. யாரையாவது யாரவது உருவாக்க தான் வேண்டும். சீமான் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்து இருக்காவிட்டாலும், வேறொருவர், அதே அல்லது வேறு காலகட்டத்தில் அதை செய்திருப்பர். அது காலத்தின் அவசியம். ஈழ தமிழரின் பாதிப்பு ஏற்படுத்திய காயம்.
தலித், புளித் என்று குருமாவை தூக்கிப்பிடிக்கும் போதும், திராவிடத்துக்கு, ராமசாமி நாயக்கனுக்கு முட்டு கொடுக்கும் போதும் இடும்பைக்கும், ராஜிவ்காந்திக்கும் எனது ஆதரவு எப்போதும் கிடையாது. ராஜிவ்காந்தி இக்கட்சிக்கு அவசியம் இல்லை, அவரை வெளியேற்றுவதே நல்லது.
சாதித்தேசியம் என்று தமிழ்த்தேசியம் பேசுபவர்களையே ஆதாரமில்லாமல் பேசுபவர்களையும் வைத்துக்கொண்டிருப்பது தவறு. தமிழ்த்தேசியம் பேசுபவர்கள் எவரும் சாதித்தேசியம் பேசுவதில்லை. அப்படி சொல்வது திராவிடர்களே. அதை நாம் தமிழரில் பயணிப்பவர்கள் ஆதாரமில்லாமல் சொல்வது தண்டனைக்குரியது.
பாக்கியா, மணிசெந்தில் போன்றவர்களும், உள்ளே ஒரு குழுவாக செயல்பட்டுக்கொண்டு இருப்பவர்களும் இதற்கு தடைக்கல்லாக உள்ளனர். இதை சீமான் நன்கு ஆராய்ந்து வேறு நபர்களை கொண்டுவருவதால், பலர் இவர்கள் மீது சொல்லும் குற்றச்சாட்டுகளை தவிர்க்கலாம். இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டு மாற்றுங்கள்.






• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with இமயவரம்பன் பெருஞ்சேரலாதன்

இமயவரம்பன் பெருஞ்சேரலாதன் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @muthu_nagarajar

7 Sep
அண்ணன் கொடுத்ததுதான் எல்லாம் என்றால், அண்ணனுகான வெளிச்சத்தை கொடுத்தது தேசியதலைவர் பிரபாகரன். ஆம், சீமான் எல்லோரும் பிரபாகரன் படத்தை வைத்துக்கொள்ள பயந்த நேரத்தில் அதை முன்னிறுத்தினார். அவர் பிரபாகரனை முன்னிறுத்தியதால்தான் அவரை எல்லோருக்கும் பிடித்தது என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.
இனஅழிப்பு நடந்ததால் வந்த கோபத்தின் விளைவு தான் நாம் தமிழர் கட்சிக்கான ஆதரவு என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும். சீமானுக்காக வந்த கூட்டம் அல்ல. அது ஈழ தமிழருக்காக வந்த கூட்டம், தேசிய தலைவருக்காக தானாக சேர்ந்த கூட்டம். அதிதி புகழ்ச்சி சீமானுக்கு கொடுக்கவேண்டாம். அவர் ஒருங்கிணைத்தார்.
ஒன்னும் தெரியாத சிலருக்கு / பலருக்கு ஈழ புரிதல் ஏற்படுத்தினார். சீமான் புகழ்ச்சிக்கு உரித்தானவர் இல்லை என்பது என் கருத்து அல்ல. அதீத புகழ்ச்சி, சீமானிசம், ரசிகமனப்பான்மை தான் தவறு. ரசிகமனப்பான்மை இல்லாமல் தான் பலர் நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர். மற்ற கட்சிகள் போல் செய்வது தவறு.
Read 39 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!