3 ஆண்டுகளுக்கு முன்பு நீட் தேர்வை ஆதரித்த நடிகர் சூர்யா, தற்போது உண்மை உணர்ந்து அதை எதிர்க்கிறார். அதை வரவேற்கிறோம், புரட்சியாளர் என்று கொண்டாடுகிறோம். /n #BanNEET_SaveTNStudents
2006 ல் தமிழ்நாட்டில் மருத்துவ நுழைவுத் தேர்வை திமுக தான் ரத்து செய்து சட்டம் இயற்றியது. அந்த சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலும் பெற்றது. அந்த சட்டத்திற்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்ட போது, அதற்கு எதிராக வாதாடி /n #BanNEET_SaveTNStudents
அந்த சட்டம் செல்லும் என்று சென்னை நீதிமன்றத்தில் தீர்ப்பு பெற்றது திமுக.
2011 ல் அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு அறிவித்த போது அதற்கு எதிராக வழக்கு தொடுத்து இடைக்கால தடை பெற்றது திமுக. நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்ட போது, /n #BanNEET_SaveTNStudents
விரும்பாத மாநிலங்களுக்கு விதிவிலக்கு என்று மசோதாவை திருத்தியது திமுக.
காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த நீட் தேர்வை 2013ல் உச்சநீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. மீண்டும் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு நடத்திய பாஜக அரசு 2016ல், /n #BanNEET_SaveTNStudents
நீட் தேர்வு ரத்து செல்லாது என்று தீர்ப்பு பெற்றது. 2016ல் அனைத்து மாநிலங்களுக்கும் கட்டாய நீட் தேர்வு சட்டம் இயற்றியது பாஜக அரசு. அந்த மசோதாவை எதிர்த்து நாடாளுமன்றத்தில் வாக்களித்தது திமுக. எதிர்த்து வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்தது அதிமுக. /n #BanNEET_SaveTNStudents
அதன் மூலம் இந்திய முழுவதற்கும் நீட் கட்டாயம் ஆனது.
தற்போது திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்கிறது. அதை அரசியல் செய்கிறது என்கிறோம். நீட்டை ஆதரித்துவிட்டு தற்போது எதிர்க்கும் சூர்யாவை புரட்சி செய்கிறார் என்கிறோம். n/n #BanNEET_SaveTNStudents
இந்தியாவில் ஊழல் தான் பெரிய பிரச்சனை, ஊழலால் தான் இந்தியா வளர்ச்சி அடையாமல் இருக்கு என்று ஊடகங்கள், நடுநிலையாளர்கள் மூலம் பேசி, எழுதி, போராடி பாஜக ஆட்சிக்கு வந்தது.
8 ஆண்டு பாஜக ஆட்சியில் தான் ஊழலே இல்லை என்று சொல்கிறார்களே.? சரி, அப்ப இந்தியாவில் என்ன வளர்ச்சி ஏற்பட்டுள்ளது? 1/n
45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலை வாய்ப்பின்மை ஏற்பட்டுள்ளது. 8 ஆண்டுகளில் 100 லட்சம் கோடி கடன் வாங்கி வைத்துள்ளார்கள். பொதுத்துறை நிறுவனங்களை எல்லாம் தனியாருக்கு விற்பனை செய்து கொண்டு இருக்கிறார்கள். வளமான ரயில்வே துறையையே தனியாருக்கு தாரை வார்க்க தயாராகவிட்டார்கள். 2/n
அவசர கால பயன்பாட்டிற்காக ரிசர்வ் வங்கியிடம் இருக்கும் உபரி நிதியில் இருந்து 1.76 லட்சம் கோடியையும் வாங்கி செலவு (2019 லேயே கொரோனா வருவதற்கு முன்பே) செய்துவிட்டார்கள். கொரோனா வருவதற்கு முன்பே 2019 லேயே இந்தியாவின் ஜிடிபி 4.5% சரிந்துவிட்டது. 3/n
இரண்டு நாட்களாக தமிழ்நாட்டு அரசியலில் நடக்கும் சம்பவங்கள், கட்சி சாரா பொதுமக்கள் மத்தியில் ஆச்சரியத்தையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பிரச்சார மேடைகளில், திமுக குறித்து எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்கு,
1/n
திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஆகியோர் கொடுத்த கவுண்ட்டர் மக்களை திரும்பிப் பார்க்க வைத்ததுள்ளது.
இன்று ஸ்டாலினின் மகள் வீட்டிலேயே வருமான வரித்துறை சோதனை நடத்திய போதும், ஸ்டாலின் செம கூலாக பிரச்சாரத்தில்,
2/n
"எவ்வளவு வேண்டுமானாலும் ரெய்டு நடத்துங்கள்.. எங்களுக்கு கவலையில்லை" என்றதும்... இதற்கு ஒருபடி மேலே போய், "இது என் வீட்டு முகவரி.. முடிந்தால் என் வீட்டுக்கு ரெய்டு வாங்க" என்று உதயநிதி ஸ்டாலின் சொடுக்கு போட்டு சவால் விட்டதும் தமிழ்நாட்டு மக்களை ஆச்சரியப்பட வைத்ததுள்ளது.
3/n
வாரிசு அரசியல் என்று பேசுகிற அத்தனை கட்சிகளிலும் வாரிசு அரசியல்வாதிகள் உள்ளனர்.
வாரிசுகளுக்கு கட்சியில் வாய்ப்பு வழங்கப்பட்டாலும், மக்கள் அவர்களை தேர்ந்தெடுத்தால் தான் எம்பி, எம்எல்ஏ வாக முடியும்.
1/n
ஒருவரை வேண்டாம் என்று நினைத்தால் மக்களால் நிராகரிக்க முடியும். எத்தனையோ வாரிசுகளை மக்கள் புறக்கணித்துள்ளனர்.
சரி.. வாரிசு அரசியலால் மக்களுக்கு என்ன பிரச்சனை.?
2/n
இப்போது உதாரணமாக திமுகவின் வாரிசு அரசியல் என்று சொல்லப்படும் உதயநிதியையும், அதிமுகவின் வாரிசு அரசியல் இல்லாத நபர் என்று சொல்லிக் கொள்ளும் பழனிசாமி இருவரையும் எடுத்துக் கொள்வோம். யாரால் தமிழ்நாட்டு மக்களுக்கு கெடுதல் ஏற்பட்டுள்ளது..?
3/n