பரட்டைத்தலை என சோஷியல் மீடியாவால் எள்ளி நகையாடப்பட்ட தற்போதைய தெலுங்கானா கவர்னர் திருமதி தமிழிசை சவுந்தர்ராஜன் பற்றிய பதிவு
**********************************
என்னுடைய லாரியில் முன்பு ஓட்டுனராகப் பணி புரிந்த ஒருவர் கடந்த வாரம் கோவில்பட்டியில் இருந்து தெலுங்கானாவிற்கு PPE Kit ஏற்றிச் சென்றிருக்கிறார். லோடி இறக்கிவிட்டு திரும்பும் வழியில் வாகனம் நிர்மல் காட் எனும் இடத்தில் விபத்துக்குள்ளாகி ஓட்டுனர் படுகாயம்.
உடனே அவரின் உறவினர்கள் எவரோ எவரையோ பிடித்து தமிழிசை அவர்களை தொடர்பு கொண்டிருக்கிறார்கள். தகவல் அறிந்ததும் உதவிகளை செய்யச் சொல்லி உத்தரவிட்டு விட்டு தனது கணவர் சவுந்தர் ராஜனை மேலதிக உதவிக்கு நேரடியாக மருத்துவமனைக்கு அனுப்பி பார்க்கச் சொல்லியிருக்கிறார்.
அந்த விபத்தில் ஓட்டுனரின் இடது கால் முற்றிலும் சேதமடைந்ததால் செகந்திராபாத் கிம்ஸ் மருத்துவமனைக்கு பரிந்துரைந்து அனைத்து உதவிகளும் செய்திருக்கிறார்.

இந்த விபத்துச் செய்தி கேட்டு இன்று அந்த ஓட்டுனரை வீடு சென்று பார்த்த போது அவர் கூறிய தகவல்கள் தான் இவை
ஒரு தமிழர் எனும் முறையில் ஒடி வந்து உதவிய இந்த நல்ல உள்ளத்தைத்தான் இந்த சோஷியல் மீடியா புன்னகை பிரபலங்கள் பரட்டை என எள்ளி நகையாடினர்.

பி.கு. அந்த ஓட்டுனர் பாஜகவைச் சேர்ந்தவர் அல்ல. அவர் எந்தக் கட்சியின் அபிமானி என்பதனை இங்கு தெரிவிப்பது நாகரீகமும் அல்ல 🙏

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with குமார கம்பணன்

குமார கம்பணன் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Lorrykaran

Jul 1, 2022
கடந்த ஞாயிற்றுக்கிழமை தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத்தைச் சேர்ந்த 16 பஞ்சாயத்து தலைவர்கள் மாநிலத் தலைவர் @annamalai_k அவர்கள் தலைமையில் தம்மை பாஜகவில் இணைத்துக் கொண்டனர்.

இது பழைய செய்தி தானே.. இதில் என்னவென்பவர்களுக்கு ஒரு சிறிய விளக்கம்..
பாஜகவில் சேர்ந்த 16 பஞ்சாயத்து தலைவர்களில் நான்கு பேரை தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் அழைக்கிறார்கள் என தவறான தகவல் கூறி அரசு அலுவலரான பிடிஓ தூத்துக்குடி கலைஞர் அரங்கம் அழைத்து சென்று கனிமொழி கீதாஜீவன் விளாத்திகுளம் எம் எம் ஏ மார்க்கண்டேயன் முன்னிலையில் நிறுத்தியிருக்கிறார்
அங்கு சென்றபின் தான் தங்களை எதற்காக அழைத்து வந்தார்கள் என அந்த நான்கு பஞ்சாயத்து தலைவர்களுக்கு தெரிய வந்துள்ளது.

ஆனால் அங்கு 100 நாள் வேலை திட்டம் தொடர்பாக அண்ணாமலை அவர்களை சந்தித்து மனு கொடுக்கச் சென்றதாக பேட்டி தரச் சொல்லி நிர்பந்தப் படுத்தியிருக்கிறார்கள்
Read 8 tweets
Jun 2, 2022
சர்க்காரியா விசாரணை ஆணைய அறிக்கையின் முதல் தொகுப்பில், பக்கம் 52 மற்றும் 53லிருந்து ஒரு சில பகுதிகள்..

நெ 9, முதல் குறுக்குத் தெரு, ராசாஅண்ணாமலைபுரம், சென்னை என்ற முகவரியைக் கொண்ட வீட்டினை இ.எல்.விஸ்வாசத்திடமிருந்து 20.1.1969 ல் ரூ 57000 கொடுத்து வாங்குகிறார் ராசாத்தி அம்மையார்
இந்த வீட்டை 21.8.1970 தேதியிட்ட ஆவண எண் 1523/70 மூலம் தன்னுடைய பாதுகாவலர் டி.கே. கபாலிக்கு விற்றுவிட்டார் ராசாத்தி அம்மையார் . இந்த வீட்டை வாங்கிய கபாலி ராசாத்தி அம்மையாருக்கு ரூ 14 ஆயிரத்தைத்தான் தன் முன் கொடுத்தார் என்று பதிவாளர் மேற்படி ஆவணத்தில் குறிப்பினை எழுதியுள்ளார்
அதே நாளன்று கபாலியின் பெயரில் பதிவு செய்யப்படாத குத்தகை ஆவணத்தை தயாரித்து அதன்படி மாதாந்திர வாடகை ரூ. 300 என்கிற அடிப்படையில் அதே வீடு ராசாத்தி அம்மையாருக்கு வாடகைக்கு விடப்படுகிறது.
அதாவது, தான் விற்ற வீட்டிலேயே ராசாத்தி அம்மையார் தொடர்ந்து வாடகைக்கு குடியிருந்து வருகிறார்.
Read 12 tweets
Apr 19, 2020
ராஜ் டிவிய ஒழிச்சுக் கட்டுனது, விஜய் டிவி லைவ் நியூஸ நிப்பாட்ட்டுனது, பிஎஸ்என்எல் ப்ராண்ட்பேண்ட் கேபிள சுமங்கலிக்கு யூஸ் பண்ணுனது. டாட்டாவையே மெரட்டுனது ஏர்செல் மேக்சிஸ். இவ்வளத்துக்கும் சப்போர்ட் பண்ணுன தாத்தன்கிட்டயே ஷேர் ஆட்டையப் போட்டதுன்னு சொல்லீட்டே போகலாம் #கேடிபிரதர்ஸ்
தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் பதவி வாங்கியே ஆகனும்ன்னு தாத்தாவ வீல் சேர்ல வெச்சி டெல்லிக்கு தள்ளீட்டு போயி அந்த தள்ளாத வயசுலயும் மனுஷன இவனுக பண்ணுன கொடுமை இருக்கே !!! #கேடிபிரதர்ஸ்
அப்ப தமிழ்நாடு முழுக்க ஒரு விமர்சனம் வந்துச்சு... விவசாயம் விவசாயம்ன்னு கத்துனீங்களே விவசாய மந்திரி கேட்டு வாங்கீருக்கலாம்ல்லன்னு... என்ன செய்ய பேரனுக டிவி சேனல் தானே வெச்சுருக்கானுக #கேடிபிரதர்ஸ்
Read 9 tweets
Aug 22, 2019
வருஷம் சரியா ஞாபகம் இல்ல... ப.சிதம்பரம் காமர்ஸ் மினிஸ்டர் என நினைவு.

இந்த மொத்த விபரமும் ஜுனியர் விகடனில் வெளி வந்த செய்தி தான்..

மத்திய அமைச்சராக பதவி ஏற்பதற்கு முந்தைய நாள் இரவு வரை ஸ்டெர்லைட் ஆலையின் வேதாந்தா குழுமத்தில் ப.சிதம்பரமும் ஒரு இயக்குனர்.
காமர்ஸ் துறை அமைச்சராகப் பதவி ஏற்ற சில நாட்களிலேயே அதிக இந்திய அன்னியச் செலாவணி ஈட்டித் தந்த இரும்புத்தாது ஏற்றுமதிக்கு வரி விதித்து அந்தத் தொழிலை முடக்குகிறார் ப. சிதம்பரம்.
இந்த இரும்புத்தாது ஏற்றுமதியை செய்து வந்த நிறுவனம் செய்வதறியாது திகைக்கிறது
இனி இந்த நிறுவனத்தை நடத்த இயலாது என முடிவெடுக்கும்போது அதே நிறுவனத்தை ஸ்டெர்லைட் வேதாந்தா குழுமம் விலைக்கு வாங்க முன் வருகிறது.
பங்குச் சந்தை வல்லுனர்கள் வேதாந்தா குழுமத்திற்கு பைத்தியம் பிடித்திருக்கிறதா என வியக்கிறார்கள்.
Read 6 tweets
May 24, 2019
தேர்தல் முடிந்து முடிவுகளும் வந்தாகி விட்டன.
ஊடகங்களில் தலையங்கங்களும் ஆய்வுகளும் படிக்க நேர்ந்தது.

அனைவரும் சொல்லி வைத்தார்ப்போல் ஒரே ஒரு விஷயத்தை முன்னிருத்தி எழுதியிருந்தார்கள்.

எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மை.

மாநிலக் கட்சிகள் காங்கிரஸுடன் சமரசமாகவோ ஒத்தோ போயிருக்கலாம்.
காங்கிரஸ் கட்சியும் யதார்த்தம் அறிந்து விட்டுக் கொடுத்துப் போயிருக்கலாம்.
மக்கள் நலன் மாநில நலன் என ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கையும் ஒவ்வொரு கனவும் உண்டு.
புலிக்கு பயந்தவனெல்லாம் என் மேல படுத்துக்கோ என்பதாகத்தான் காங்கிரஸின் அணுகுமுறை இருந்தது.

மேலும்...
காங்கிரஸ் தான் ஏகோபித்த ரட்சகன் எனும் அர்த்தத்தில் எடுத்துக் கொண்டால் மாநில கட்சிகள் அனைத்தையும் கலைத்துவிட்டு காங்கிரஸில் இணைந்து விடலாமே.

தனித்தன்மையை இழந்து காங்கிரஸுடன் கூட்டுச் சேரும் கட்சிகள் அனைத்தும் காணாமல் போகும் என்பது சாபமல்ல... வரலாறு.
Read 10 tweets
May 29, 2018
ஸ்டெர்லைட்- எனது பார்வை #இந்த ஆலையினால் நச்சுக்காற்றும் புற்று நோயும் இன்னபிற துர்மரணங்களும் நிகழ்வதாகச் சொல்லித்தான் போராட்டம் முதலில் வைகோவால் முன்னெடுக்கப்பட்டு இப்போது குமரெட்டியாபுரம் மக்களால் முடித்து வைக்கப்பட்டுள்ளது.
அவ்வாறெனில் ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்களில் எத்தனை பேர் இதுவரை புற்றுநோயால் , காற்று மாசால் பாதிக்கட்டவர்கள் எனும் புள்ளிவிவரம் ஏதேனும் உள்ளதா ?!! சமீப காலமாக தூத்துக்குடி மக்களிடையே புற்று நோய் அதிகளித்துள்ளதாக வந்த வாட்சாப் செய்திகளின் உண்மை நிலவரம் என்ன ?!
நிற்க. இவையொன்றும் நான் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகப் பதிவிட கேட்கும் கேள்விகள் அல்ல !! இவை உண்மையில்லாத பட்சத்தில் இவ்வாறு கூறிப் போராடும் மக்களிடம் ஆதாரப்பூர்வமாக இந்த அரசு எடுத்துரைத்து பயம் போக்க நடவடிக்கை எடுக்காதது ஏன் ?!!
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(