மொத்த கட்ஆஃப் 295.5/300
வாங்கி வேலூர் அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்ந்தேன்
நிற்க..
நான் சேர்ந்த ஆண்டில் இருந்து எண்ட்ரண்ஸ் எக்சாமை ஒழிக்க வேண்டும்.
இது சமூக நீதிக்கு எதிராக இருக்கிறது என்ற கருத்து எழத்தொடங்கியது
நானும் இப்போது பலரும் நினைக்கும் படி
எண்ட்ரண்ஸ் எக்சாம் தான் தரமானது
மெடிக்கல் கோர்ஸ் படிக்க
மனப்பாடம் செய்து எழுதுவது போதுமா?
கூடவே ரொம்ப சிந்திக்க வேண்டும்
எனவே கட்டாயம் நுழைவுத்தேர்வு தேவை என்ற எண்ணம் எனக்கும் இருந்தது.
(பிறகு மருத்துவக்கல்லூரியில் இணைந்து வெளி வந்து முதுகலைப்படிப்பு படிக்கும் இப்போது வரை
மருத்துவப்படிப்பு என்பது உள்ளதை உள்ளபடி அப்படியே படிப்பது இதற்கு மனப்பாடம் செய்யும் சக்தி தான் தேவை என்றும்.. இதில் தனியாக சிந்தித்து கதை எழுத முடியாது என்று தெரிந்து கொண்டேன் )
அப்போது சமூக நீதி குறித்த போதிய அறிவு எனக்கு இல்லை.
2007 ஆம் ஆண்டு நுழைவுத்தேர்வை தமிழக
அரசு தடை செய்தது.
நான் எனது கல்லூரிப்படிப்பின் இரண்டாம் ஆண்டின் இறுதியில் இருந்தேன்
2007 முதல் 2011 வரை படிக்க சேர்ந்த எனது சகோதர சகோதரிகளைக் கண்டேன்.
திடீரென ஒரு பெரும் மாற்றம் நிகழ்கிறது.
அரசுப் பள்ளியில் படித்தவர்கள் மருத்துவ சீட் பெற்று பனிரெண்டாம் வகுப்பு
முடித்த மாத்திரத்தில் நுழைந்தார்கள்
பொருளாதாரத்தில் மிக நலிந்த நிலையில் இருந்து பல சகோதரர்கள் சகோதரிகள் மருத்துவ சீட் பெற்றனர்
மீனவர் மகள்
கயிறு நெய்பவர் மகன்
ஊர் பேர் கூட தெரியாத கிராமத்தில் இருந்தெல்லாம் மருத்துவ சீட் பெற வந்தார்கள் தம்பி தங்கைகள்
முதல் நாள் மருத்துவ
கல்லூரியில் சேர வந்த பல பேருடைய தந்தைமார்கள்
கசங்கிய வேட்டியும்
கலங்கிய கண்களுமாய்
கையில் மஞ்சள் பையும்
ஆசைகள் தேங்கிய மனப்பையும்
கொண்டு நிற்பதைக்கண்டு
ஆடிப்போனேன்
இத்தனை வருடங்கள் இவர்களெல்லாம் எங்கய்யா இருந்தாங்க...
ஒரு ஏழையின் பசி மற்றொரு ஏழை தான் உணர்வான்
ஒரு ஒடுக்கப்பட்டவனின் வலியை மற்றொரு ஒடுக்கப்பட்டவனே உணர்வான்
அன்று நான் உணர்ந்தேன்
தரம் என்பது மாயை
நிச்சயம் அது ஒரு மாயை
சிலரை சில இடங்களுக்கு வரவிடக்கூடாது என்பதற்காக நாமே இட்ட மாய பிம்பம்
நான் அருதியிட்டுக்கூறுவேன்
2007 முதல் 2017 வரை
ஒரு தசாப்த காலம்
மருத்துவராக
ஆன சகோதர சகோதரிகள் அனைவரும்
நிச்சயம் என்னை விடவும்
தரமான மருத்துவக்கல்வியைக் கற்றவர்கள்
என்னை விடவும் சிறப்பான கடமையாளர்கள்
என்னை விடவும் அதிகம் உழைப்பவர்கள்
என்னை விடவும் அறிவாளிகள்
என்னை விடவும் சமூக நீதியை நாடுபவர்கள்
அவர்கள் தான் தமிழகத்தின்
கிராமங்கள் தோறும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் இப்போது நிறைந்துள்ளனர்
அவர்கள் தான் தமிழகத்தின் மருத்துவக்கல்லூரிகளில் இப்போது முதுகலை பட்ட மேற்படிப்பு மாணவர்களாகவும் துணை பேராசிரியர்களாகவும் கொரோனா முன்கள வீரர்களாக நின்று யுத்தம் புரிகின்றனர்
அரசு மருத்துவமனைகளில்
உங்களுக்கு அறுவை சிகிச்சை செய்யும் கரங்கள் அவர்களது
உங்களுக்கு பரிந்து பேசி வேண்டியதை செய்யும் மனங்கள் அவர்களது
என்னைப்பொறுத்த வரையில்
2007 முதல் 2017 ஆகிய இந்த பத்து ஆண்டுகள் தமிழக மருத்துவ வரலாற்றில் பொற்காலமென்பேன்
எனது நண்பர்களுக்கும் சகோதர சகோதரிகளுக்கும்..
இப்போது
புரிந்திருக்கும் நான் ஏன் நீட்டை எதிர்க்கிறேன் என்று...
சில உணர்வுகள் உள்ளிருந்து எழுபவை
அவற்றுக்கு வடிகாலோ அணையோ இட இயலாது.
Shruthi R writes...
*
Been in NEET UG academic coordination and tutoring for three brief years.. Have trained 200+ students for 2017-19 NEET EXAMS.
நீட் டக்குன்னு படிச்சு டக்குன்னு பாஸ் பண்ண முடியாது.. இதுல சிபிஎஸ்இ, தமிழ் நாட்டு பாடத்திட்டம் ன்னு லாம் இல்ல..
எதைப் படிச்சாலும் நீட் குழந்தைகளுக்கு கஷ்டமா தான் இருக்கும். It's a kinda practice. திரும்பத் திரும்ப படிச்சிகிட்டு பரீட்சை எழுதிக் கொண்டே இருந்தால்தான் வெற்றி பெறமுடியும்.
அதுக்கு குறைந்தபட்சம் 2-3 வருஷம் வீணாக்க நாமளே நம்ம தயார் படுத்திக்கணும்..
2-3 வருஷம் என்பது ஒரு basic degreeக்கு நாம் செலவிடும் காலம்.
காசே இருந்தாலும் அத்தனை காலத்தை
Trainingல தொலைப்பதென்பதே மனச் சோர்வான வேலை. இன்னும் பணத்திற்கு வழி இல்லாத குடும்பங்களை நினைத்து பாருங்கள்..
சரி பிச்சை புகினும் கற்கை நன்றே என்று படித்தாலும்,
Dear Facebook,
You have refused to take down this photo comment by RSS criminals.
Has Facebook identified this image as genuine? Funny!
Criminals have created this image with my photograph. Calling me as a sex worker is not a big deal. But it affects my daily life. @Facebook
I am getting calls and the calls occupy my time and i can't afford wasting time for unwanted and some abusive calls too.
Instead of my rate, i would have been happy if this image had the rate of the books authored by me.
So Facebook! don't protect the criminals and culprits.
I strongly condemn this inaction of FB.
The third image you are seeing is the reply i got from Facebook, after i had asked to review its decision regarding the image posted as a photo comment in my page. (pls refer my previous post).