தமிழச்சி Profile picture
Sep 17, 2020 3 tweets 1 min read Read on X
அது ஒரு இருண்ட காலம்.
ஆர்யத்தின் மாயை, வைதீகத்தின் சாயை,
வடமொழியின் போதை, உயர்சாதியின் காதை,
எனும் வரலாற்றுக் கசடுகளால்
களிம்பேறி,
களப்பிரர் காலமெனத் தமிழகம் மங்கித் தூங்கியிருந்த காலம்!
தமிழன் சற்றே பின்தங்கிச்
சோம்பியிருந்த காலம்.
1/3
முயலின் தூக்கமே ஆமையின் வெற்றி எனில்,
புலியின் தூக்கம் -
தமிழ்ப் புலியின் தூக்கம்
ஆர்யத்தின் வெற்றி அல்லவா?

தூங்கும் புலியைத் தள்ளாடும்
தடியொன்று தட்டி எழுப்பிற்று.

வெண்தாடித் திரி ஒன்று
வெளிச்சம் வர
‘அண்ணா’ எனும்
அற்புத விளக்கொன்றைத் தூண்டிற்று!
2/3
சுயமரியாதை மண் எடுத்து,
தமிழென்னும் நீர் பிசைந்து,
இனமென்னும் அச்சிலே
மானமென்னும் கலயம் வனையும்
பகுத்தறிவுச் சூரியனாம்
‘கலைஞர்’ எனும்
ஓளிவிளக்கை ஏற்றிற்று!

தந்தை பெரியாருக்குப் புகழ் வணக்கம்🙏

#PeriyarForever
#HBDPeriyar142
3/3

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with தமிழச்சி

தமிழச்சி Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @ThamizhachiTh

May 28, 2021
சவுதி அரேபியாவில் ஓட்டுனராக பணி புரியும், சென்னை - நீலாங்கரையைச் சேர்ந்த திரு.பாஷா பாய் கலாம் என்பவர், கடந்த 22-ஆம் தேதி சவுதி அரேபியா - தனுமா என்ற இடத்தில் விபத்தில் சிக்கி, மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்,
1/4
அவரது குடும்பத்தினருக்கு அவர் உடல் நலன் குறித்த தகவல் தெரியாமல் தவிப்பதாகவும், சமூக வலைதளங்களில் செய்தி வந்ததைத் தொடர்ந்து, இன்று (28.05.2021), திரு.@S_AravindRamesh MLA வுடன், சென்னை - நீலாங்கரையிலுள்ள அவரது இல்லம் சென்று, அவரது குடும்பத்தினரை சந்தித்து, ஆறுதல் கூறினேன்.
2/4
பின், உடனடியாக வெளியுறவுத் துறை அமைச்சகத்தைத் தொடர்பு கொண்டு, திரு.பாஷா பாய் கலாமின் உடல்நிலை குறித்து, சவுதி அரேபியா தூதரகம் மூலம் விசாரிக்கக் கோரினேன். வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் துரித நடவடிக்கையால்,
3/4
Read 4 tweets
May 9, 2021
மல்லாங்கிணற்றில் மலரும் மல்லிகைப் பூ போதாதென அருப்புக்கோட்டை அரும்புகளையும்
சேர்த்தெடுத்து
நான் சூட சேமித்து வைப்பாள்.

பசும்பால், தயிர், மஞ்சள், வெண்ணெயென ஊர்ச் சாப்பாட்டை ஒரு வாய் நான் ருசிக்கப்
பல நாள் பக்குவப் படுத்தியிருப்பாள்.
#MothersDay
1/5
சின்ன வெங்காயம், பூண்டுக் குழம்பு,
கருணைக் கிழங்கு மசியலுமான
சோற்றைப் பிசைந்தெனக்கு
ஒரு வாய் ஊட்ட
ஒரு மாதம் காத்திருப்பாள்.

அவளுக்கென தேர்ந்த
வண்ணப் புடவைகளை, கைப்பைகளை, கடிகாரங்களை
கண்கள் விரிய எனக்களிப்பாள்.
2/5
என் துக்கத்தின் ஒரு துளி கண்டால்
மணிக்கொருமுறை
தொலை பேசுவாள்
என் இன்பத்தின் செய்தி கேட்டால் தேன் சிரிப்புடன் மலர்ந்திருப்பாள்.

காடு மேடலைந்து கால் நோக
சம்சாரியாய் நெல் விதைத்துக்
கறவை மாடு, கன்று வளர்த்துப்
பூமி பூக்க எமை வளர்த்தாள்.
3/5
Read 5 tweets
Dec 24, 2020
நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை மேடும், பள்ளமுமாயிருந்த தமிழ்நாட்டின் பட்டி தொட்டிக்கெல்லாம் ஈரோட்டிலிருந்து ஒரு பகுத்தறிவுத் தார் ரோடு போட்டது சுயம்புவாய்த் தோன்றிய ஒரு சுயமரியாதைக் கனல்.

வெண்தாடி நெய்த அத் தார்ச்சாலை - திராவிடத்தின் தமிழ்ப் பாதங்களுக்குத் தரு நிழல்;
1/4
ஆரியத்தின் அதிகாரத் தலைப்பாகைக்கோ கொடுங்கானல்;
வெண்தாடி நெய்த அத் தார்ச்சாலை -
தன் தடிக்கொரு கைப்பிடியாய் ஒரு பகுத்தறிவு நெசவாளரையும், காஞ்சீபுரத்தில் கண்டெடுத்தது!

அதுவரை, பட்டுக் கடலிலும், பஞ்சுப் பொதியிலும் அமிழ்ந்திருந்த தமிழகத்தின் பாமரத்துத் தறியை இடம் பெயர்த்து,
2/4
ஈரோட்டிற்கு எடுத்து வந்த அந்தக் காஞ்சிபுரத்துக் கலைக் கரம்,

இனமான ஆடையொன்றைத் தமிழருக்குத் தனியாகத் தயாரித்துத் தர, அதுவரை ஆட்சி செய்த, மேல்சாதி ஆயத்த ஆடைகள் ஒழிந்து போய், அன்று முதல், தோளிலே நீண்ட துண்டு அணிந்த கம்பீர உடை அமுலுக்கு வந்தது!
3/4
Read 4 tweets
Aug 20, 2020
தலைவர் கலைஞர் மீதும், கழகத்தின் மீதும் மாறாத விசுவாசமும், தீராப் பற்றும் கொண்ட மூத்த முன்னோடி, மேனாள் தமிழக அமைச்சரும்,
கழகத்தின் செய்தி தொடர்பாளர், கழக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினருமான, எங்கள் குடும்பத்தின் அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய,

1/7
அத்தா ஏ.ரகுமான்கான் அவர்களின் மறைவுச் செய்தியைக் கேட்டுச் செயலற்று அமர்ந்திருக்கிறேன்.
என் தந்தையின் மனமொத்த நண்பராக எங்கள் குடும்பத்தில் ஒன்றானவர்.
அரசினர் தோட்டத்தில் எங்களது வீட்டின் பின்புறத்தில் அவரது வீடு என்பதால் சுக, துக்கங்களில் ஒருவருக்கொருவர் பகிர்ந்து,

2/7
இன்று அடுத்த தலைமுறை வரை தொடர்கின்ற அற்புதமான உறவானவர். அவரது அன்பு மனைவி, எனக்கு உடன்பிறவாத ‘நிலவர் அக்கா’.
‘குட்லி’ எனப் பாசத்தோடு அவர் குடும்பத்தார் அழைக்கும் என் மூத்த மகளுக்கு, அன்பான’ பாய் தாத்தா’.

3/7
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(