கரோனா காலகட்டத்தில் இந்தியாவிலேயே சிறப்பாகச் செயல்பட்டதில் 100க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் பங்கேற்றதில் பெரிய மருத்துவமனைப் பிரிவில் முதலிடத்திற்கான விருதை #சென்னை#ஓமந்தூரார் அரசு மருத்துவமனை பெற்றுள்ளது! மிகப்பெரிய மருத்துவமனைப் பிரிவில் வேலுர் #சிஎம்சி முதலிடம்! 💐💐
Congratulations @CMOTamilNadu@Vijayabaskarofl and to all the hard working doctors and health care officials who have made this happen. Special gratitude to those who have given their lives in serving the #covid infected.
நந்தி மூலவராக அருள்பாலிக்கும் கோவில்
பசவனகுடி கர்நாடகா
பொதுவாக மூலவராக இருக்கும் ஈசனின் கருவறைக்கு வெளியே தான் நந்தி வீற்றிருந்து அருள்பாலிப்பார். ஆனால் பெங்களூரு பசவன்குடியில் நந்தியே மூலவராக இருந்து பக்தர்களுக்கு அருள்புரிகிறார். இந்த நந்தி கோவில் ஒரு குன்றின் மீது அமைந்து
இருக்கிறது. இந்தக் குன்றுக்கு ஊதுகுழல் குன்று என்ற பெயர். இங்கு பித்தளையால் செய்யப்பட்ட எக்காளம் போன்ற ஊது குழல் இருக்கிறது. படைப்பிரிவின் அடையாள ஒலியாக அது ஒலிக்கப்பட்டிருக்கலாம் என்றும், அதனால் அந்த குன்றுக்கு இப்பெயர் வந்தது என்றும் சிலர் கூறுகிறார்கள். பெங்களூருவில் உள்ள
மிகவும் பழமையான ஆலயங்களில் இதுவும் ஒன்று. மலையில் ஏறிச் செல்ல படிகள் உள்ளன. படிகளை ஒட்டி சாலையும் உள்ளது. ஆலய கோபுரம் வரை வாகனங்கள் செல்ல முடியும். முன் காலத்தில் இந்தப் பகுதி சுங்கனஹள்ளி என்று அழைக்கப் பட்டது. விவசாய நிலமாக இருந்த இந்தப் பகுதியில் வேர்க் கடலை பயிரிடப்
#சாச்திரப்பாக்கம்_வைத்தீஸ்வரன்_கோவில் சென்னையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது சாஸ்திரம்பாக்கம். இங்கு சிவபெருமான் வைத்தீஸ்வரன் என்ற திருநாமத்துடன். அம்பாளின் திருநாமம் தையல்நாயகி என்ற திருநாமத்துடன்
அருள்பாலித்து வருகின்றார்கள். பல ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம் காலப் போக்கில் சிதிலமடைந்து, மண் மூடி போய் விட்டது. முட்புதர்கள் அதிகமாக வளர்ந்து பாம்புகள் நடமாடும் இடமாக மாறிப் போனது. இந்த நிலையில் அந்தப் பகுதியில் வாழ்ந்த மனநோய் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞர், இறைவனின் சக்தியால்
மனநோய் தீர்ந்து தீர்க்கமான இளைஞனாக மாறினார். இதையடுத்து அந்த வாலிபர், மண் மூடிப் போயிருந்த சிவலிங்கத்தை வெளியே எடுத்து அபிஷேகம், ஆராதனை செய்து வந்தார். இதனைக் கண்ட அந்தப் பகுதி மக்கள், மனநோயால் பாதிக்கப்பட்ட இந்த வாலிபனின் செய்கையைக் கண்டு திகைத்தனர். அவனிடம் இது பற்றி கேட்ட
#நற்சிந்தனை
தாருகாவனம் என்று ஓர் அற்புதமான, மகா அமைதியான வனம்! அங்குப் பல முனிவர்கள் வேள்வி செய்தும் தவமியற்றியபடியும் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அவர்களது சிந்தையில் அணுவளவேனும் பக்தியுணர்வு என்பதே கிடையாது. தங்களது தவத்தின் வலிமையால் முக்தியை அடைந்து விடலாம் என்ற மகா
கர்வத்தில் இருந்தார்கள். அவர்களது பத்தினிமார்களோ அந்த முனிவர்களுக்கும் மேல் இறுமாப்பு படைத்தவர்களாக இருந்தார்கள். தாங்களே அகில உலகிலும் கற்பரசிகள் என்றும் தங்கள் கற்பின் ஆற்றலால் எதையும் சாதித்துவிடும் வல்லமை படைத்தவர்கள் என்பது அவர்கள் எண்ணம். இவர்களின் ஆணவத்தை ஒழிக்கக் கருதிய
சிவபெருமான், விஷ்ணுவுடன் கலந்து ஆலோசித்து ஒரு திட்டம் தீட்டினார். திருமால், பார்த்தவர் மதிமயங்கிக் காலடியில் விழும் அற்புத அழகோடு கூடிய மோகினி வடிவம் தாங்கி வர, சிவன் திகம்பரராய்ப் பிச்சை எடுக்கும் பிட்சாடனர் உருவங்கொண்டு தாருகாவனத்தை அடைந்தனர். மோகினியைக் கண்ட முனிவர்கள் தங்கள்
#அட்சயதிருதியை மே 10 2024
சித்திரை மாதத்தில் வரும் வளர்பிறை திருதியை நாளில் அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரத்தை திரௌபதிக்கு வழங்கி ஆசிர்வதித்தார் சூரிய பகவான். க்ஷயம் என்றால் குறை என்று பொருள். அக்ஷயம் என்றால் என்றும் குறைவில்லாத என்ற அர்த்தத்தில் இந்த நாளிற்கு அக்ஷய திருதியை
என்று வழங்கப் படுகிறது. பாண்டவர்கள் வனவாசம் செய்யும் காலத்தில் உணவிற்கு மிகவும் சிரமப் பட்டார்கள். கானகத்தில் தங்களைக் காணவரும் முனிவர்களுக்கும், ரிஷிகளுக்கும் விருந்தோம்பல் விதியின்படி உணவளிக்க வேண்டும் அல்லவா? உணவு சமைக்க என்ன செய்வது என்று மனம் கலங்கிய திரௌபதி சூரிய பகவானை
நினைத்து வழிபட்டாள். சூரியன் மனமுவந்து அளித்த பாத்திரத்திற்கு அக்ஷய பாத்திரம் என்றும் பெயர் வந்தது. திரௌபதிக்கு சூரிய பகவான் அட்சய பாத்திரத்தை வழங்கியது அவர்கள் சாப்பிடுவதற்காக மட்டும் அல்ல. அரசர்களாக வாழ்ந்த அவர்கள் காட்டில் வசிக்கும்போதும் தங்களால் இயன்ற அன்னதானம் செய்ய
#காசி_காலபைரவர்
காசிக்குத் சென்றவர்கள் இரவு கால பைரவ பூஜை பார்க்காமல் திரும்புவதில்லை. கால பைரவர் காசி நகரத்தின் சேனாதிபதி. காசியில் இறந்தவர்களுக்கு யமபயம் கிடையாது. தண்டனை கொடுக்க யமனுக்கு அதிகாரமும் கிடையாது. காலனின் அதிகாரம் பைரவர்களுக்குக் கிடைத்ததால் கால பைரவர் என்று
அழைக்கப்படுகிறார். பிரம்மாவின் சிரசு கபாலமாக மாறி, பிரமஹத்தி தோஷத்திற்கு பைரவர் சக்தி ஆளாகி முடிவில் காசி மாநகர எல்லையில் கால் வைத்தபோது சிவபெருமான் காட்சி தந்து பிரமஹத்தி தோஷத்தை நீக்கி காசிமாநகர காவல் தெய்வமாக எழுந்தருள அருள்புரிந்தார். இன்றும் காசி மாநகரம் பைரவர் ஆட்சி
செய்யும் இடமாக உள்ளது. காசிமாநகர எல்லையில் எட்டு திக்கிலும் அஷ்ட பைரவர்கள் எழுந்தருளி எல்லையை பாதுகாக்கின்றனர். காசி அனுமன் காட்டில் உருபைரவர் ரிஷப வாகனத்தில் தென்கிழக்கு மூலையிலும், ஸ்ரீதுர்க்கை கோவிலில் சண்ட பைரவர் மயில் வாகனத்தில் தெற்கு மூலையிலும், விருத காலர் கோவிலில் அன்ன
#மதுரை_மீனாக்ஷிஅம்மன் கோவிலில் 48 ஆண்டுகள் பூஜை இல்லாமல் இருந்தது.
பல ஆண்டுகள் முன்னால் #மாலிக்கபூர் மதுரையை நோக்கிப் படையெடுத்தான். வரும் வழியெங்கும் இரத்தம், கொலை, கொள்ளை, பலாத்காரம், பெண்களை சிறைப்படுத்துதல். நிறுத்தாமல் தொடர்ந்து நடந்து கொண்டு இருந்தது. கோவில்களை இடித்தான்.
முடியாதவற்றில் மூர்த்தியை மட்டுமாவது இடிப்பான். பல கோவில்களில் மூர்த்தியை எப்படியாவது காப்பாற்றி விடுவார்கள் நம் மக்கள். இப்படியாக துவங்கியது தான் #கல்திரை. கர்பக்ருஹதிற்கு முன்னால் ஒரு சுவரை எழுப்பி அதற்கு முன் ஒரு மூர்த்தியை பிரதிஷ்டை செய்துவிடுவார்கள். ஆக்கிரமிப்பாளன் வருவான்
இதுதான் மூர்த்தி என்று நினைத்து இடிப்பான். இதை கேள்விப்பட்டனர் மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலை சேர்ந்த 5 சிவாச்சாரியார்கள், எப்படியாவது நமது கோவிலை காப்பாற்ற வேண்டும், சுவாமி மீது ஒரு மிலேச்சன் கை வைக்க விடக்கூடாது என்று தங்களுக்குள் சபதம் செய்து கொண்டார்கள். தாம் செய்யும்