பல்லவர்கள் வடநாட்டினர் என்பதால் பிராகிருதம், சமற்கிருதம் ஆகிய இரு மொழிகளில் கல்வெட்டிலும் செப்பேட்டிலும் தொடக்கத்தில் எழுதிவந்தனர்.
பல்லவர்களின் தோற்றமாகக் கருதப்படும் குண்டூர்ப் பகுதியில் (1/9 )
மிகப் பரவலாக அறியப்படும் ‘பட்டிப்புரோலு’ புத்த தூபக் கல்வெட்டு உள்ளது. அது பிராகிருதமொழியில் ‘அசோகபிராமி அல்லாத எழுத்தில்’ உள்ளதையும் நாம் பின்னர் காண்போம்.
சோழர்களுக்கு முன்னரே பல்லவர்கள் தங்களது கல்வெட்டுகளைத் தமிழ் எழுத்துகளில் பொறிக்கத் தொடங்கிவிட்டனர். (2/9)
தமிழகத்தில் கிடைத்த காலத்தால் முந்திய தமிழ் எழுத்து 'பள்ளன்கோயில் செப்பேடு' எனச் சொல்லப்படுகிறது.
இச் செப்பேடு, பல்லவ அரசன் மூன்றாம் சிம்மவர்மன் தன் 6-ஆம் ஆட்சியாண்டில் (கி.பி. 550) பருத்திக்குன்றில் வாழ்ந்த வஜ்ரநந்திக் குரவர்க்குப் பள்ளிச்சந்தமாக அமண்சேர்க்கை என்னும்
(3/9)
சிற்றூரைத் தந்த செய்தியைக் கூறுகிறது.
செப்பேட்டின் வரிகள்:
1.நத்துவிடுதகவென்று நாட்டார்க்குத் திருமுகம் ...
2 … ந் திருமுகங்கண்டு தொழுது தலைக்கு வைத்து படா
3 கை நட(ந்)து கல்லுங்கள்ளியுநாட்டி நாட்டார் விடுத்த
4 அறையோலைப்படிக் கெல்லை கீழ்ப்(பா)
(4/9)
5 லெல்லை ஏந்தலேரியின் கீழைக்கடற்றி
6 ந் மேற்கு மோமைக் கொல்லை எல்லை இன்னு
7 ம் தென்பாலெல்லை வேள்வடுகன் கேணியி
8 ன் வடக்கும் கடற்றினெல்லை இன்னுந் நீலபாடி …
(தெளிவாக உள்ள இதுவரையிலும் நாமும் படிப்போம்)
6/9
இப்போது நாம் 1,2ஆம் பாடங்களுக்கும் இம் மூன்றாம் பாடத்துக்குமான வேறுபட்ட எழுத்து வடிவங்களை மனதில்கொள்வோம்.
(இணைப்பில் தரப்பட்டுள்ளது).
மேலும், அட்டவணை தயார் செய்தவர்கள் மாற்றத்துக்குரிய எழுத்துகளையும் புதிய எழுத்துகளையும் நிரப்பி வைத்துக் கொள்வோம்.
(7/9)
இதுவரை அறிமுகமான எழுத்துகளைத் திரும்பத் திரும்ப எழுதிப் பார்த்து மனதில் கொள்வோம்.
முதல் இரண்டு பாடங்களை வாசிக்காதவர்கள் , இவ்விணைப்பில் சென்று காணுங்கள் :
தஞ்சைப் பெருவுடையார் கோவிலின் சிறப்புகள் பல. கல்வெட்டுக் குறிப்புகளும் அவற்றுள் ஒன்று. கல்வெட்டுகள் மூலம் கோயிலைப் பற்றிய பல தகவல்களை நாம் அறிந்துகொள்ளமுடிகிறது.
குறிப்பாக, நாம் காணவிருக்கும்
கல்வெட்டானது மண்டபத்தின் வடசுவற்றில் உள்ள பல கல்வெட்டுகளுள் ஒன்று. இவற்றை ‘தளிச்சேரி கல்வெட்டுகள்’ என்பர்.
இக்கோயிலின் மூலவரை ‘ஆடவல்லான்’ என்றே அழைக்கிறது இக் கல்வெட்டு. ஆடவல்லான் திருமுன் ஓயாது நடனம் நடைபெற வேண்டும் என்ற எண்ணத்தில், 400 நடனமங்கையர் இக்கோயிலுக்காக
வரவழைக்கப்பட்டனர் என்று வேறு ஒரு அக்கல்வெட்டு கூறுகிறது.
கோயிலின் அமைப்பு, கட்டுமானப் பணி விவரங்கள், குடமுழுக்கு நடத்தப்பட்ட நாள், பணியில் ஈடுபடுத்தப் பட்டவர்கள் என முழுமையானதொரு ஆவணத்தையே நமக்கு இராசராச சோழன் விட்டுச் சென்றிருக்கிறார் எனக் கூறலாம்.
அறுபது ஆண்டுகள் கொண்ட வட்டத்தை உருவாக்கியவர் யாவர்? எப்போது உருவாக்கப்பட்டது? உருவாக்கியதன் பின்னணி என்ன?
60 ஆண்டு வட்டம் (அ) வியாழ வட்டத்தை உருவாக்கியோர் தமிழர். உருவாக்கிய காலம் கலிகாலத்தின் தொடக்கம் எனக் கொள்ளலாம்.
கலிகாலத்தின் தொடக்கம் கிமு 3102 என்பதை மனதில் கொள்க.
இரவும் பகலும் நாள் ஆகியது. நிலவின் தேய்தலும் பெருகலும் மாதங்கள் ஆயின.
அதனைப் 12ஆல் பெருக்க ஆண்டுக் கணக்கின் நெருங்கிய நாட்கணக்கு தெரிந்தது. அதனைச் சரிசெய்ய பதினொரு நாட்கள் கூட்டி 365 ஆனது. அதிலும் ஒரு குறை, ¼ நாள். அதற்கு ஒரு தாண்டாண்டு (Leap) தேவைப்பட்டது.
இன்னும் மிகச்சரியாக ஆண்டுக் கணக்கைக் கண்டறிய முடியுமா என்ற கேள்விக்கு விடைதான் வியாழவட்டம். தமிழ் வள்ளுவக் கணியர்களின் கண்டுபிடிப்பு!
வியாழ வட்டத்திலும் 1 ஆண்டில் 14 நாழிகை, 53 விநாழிகள் குறைவு உண்டு. அதனால், 4 ஆண்டுக்கு ஒருமுறை சுறவம் (தை) மாதத்தில் ஒரு நாள் சேர்த்தனர். 12