#Farmbill2020#வேளாண்துறை_சட்ட_மசோதா_திருத்தங்கள்
உண்மை என்ன என்று தெரியாமல் எதிர்ப்பது நம் இரத்தத்தில் ஊறிய ஒன்று. ஒரு நல்ல விஷயம் கண் முன்னே நடந்தாலும் அதை வரவேற்றுப் பாராட்டத் தெரியாமல் இருப்பது இரண்டாவது. மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள வேளாண் சட்டத் திருத்த மசோதா முழுக்க
முழுக்க விவசாயிகள் நலனுக்காகக் கொண்டுவரப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு விவசாயத்தில் புதிய சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இப்பொழுது தங்கள் தயாரிப்புகளை விற்க கூடுதல் விருப்பங்களையும் வாய்ப்புகளையும் பெறுகிறார்கள். இடைத்தரகர்களிடமிருந்து விவசாயிகளை பாதுகாக்க, கூடுதல் நன்மை
அவர்களுக்குக் கிடைக்க மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள விவசாய மசோதாக்கள்:
* விவசாயிகள் உற்பத்தி வணிகம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் வசதி) மசோதா 2020
* விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு)மசோதா 2020
* அத்தியாவசிய பொருட்கள் (திருத்தம்) மசோதா 2020
1. இதற்கு முன்னால் விவசாயிகள் எங்கு வேண்டுமானாலும் தங்கள் உற்பத்தியை விற்க முடியாது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட மண்டியில் தான் இவர்கள் ஒரு குழுவாக போய் விற்க முடியும். இதற்குப் பெயர் Agricultural Produce Marketing Committee or APFC. இங்கு தான் விவசாயிகள் லைசன்ஸ் பெற்ற கமிஷன் ஏஜன்ட்
மூலம் விற்க முடியும். அதனால் லஞ்சம் லாவண்யம் பெருகி தலை விரித்தாடியது. மாபியா கைகளில் விவசாயிகள் அகப்பட்டுக் கொண்டு திண்டாடினர். நம் நாட்டின் 50% விவசாயிகள் ஆனால் அவர்கள் உற்பத்தி ஜீடிபியின் பங்கில் வெறும் 17% தான். இந்த சீர்திருத்த மசோதாவினால் நம் நாட்டு ஜீடிபியில் விவசாயிகளின்
உற்பத்திப் பங்கு பெருகும். 2. இச்சட்டம் வேளாண் விளை பொருட்களை வணிகப் பகுதி என அறிவிக்கப்பட்ட எந்த இடத்தில் வேண்டுமானாலும் விற்க அனுமதிக்கிறது. இதனால் விவசாயிகள் விற்பதற்காக முழுக்க சுதந்திரம் வழங்கப்படுகிறது. 3. விவசாயிகள் தங்கள் விருப்பம் போல எவ்வித தடையும் இன்றி ஒழுங்குமுறை
விற்பனை கூடங்களுக்கு வெளியிலும் விளை பொருட்களை விற்கலாம். இதற்காக எந்தக் கட்டணமும் கொடுக்கத் தேவையில்லை. மின்னணு வர்த்தக முறையில் நாட்டில் எந்தப் பகுதியில் உள்ள வணிகர்களும் நல்ல விலைக்கு விற்பனை செய்ய சட்டத்தில் வழி உள்ளது. 4. தானியங்கள், பருப்பு வகைகள், உருளை, வெங்காயம், சமையல்
எண்ணெய் ஆகியவற்றுக்குப் போர், பஞ்சம், பேரிடர் காலங்களில் கட்டுப்பாடு விதிக்கவும் முறைப்படுத்தவும் இந்தத் திருத்தச் சட்டம் வழிவகை செய்கிறது. 5. தோட்டக்கலை விளை பொருட்களின் விலை 100%க்கு மேலும் வேளாண் விளை பொருட்களின் விலை 50%க்கு மேலும் அதிகரிக்கும்போது அவற்றின் இருப்பு அளவை
நெறிபடுத்த முடியும். இதனால் விவசாயிகள் மட்டுமின்றி நுகர்வோரும் பயன் பெறுவர். 6. இந்த புது மசோதாவினால் விவசாயிகளை நசுக்கி வரும் ஊழல் முற்றிலும் அகற்றபடும். 7. விவசாய சீர்திருத்த மசோதாக்கள் நிறைவேற்றப் படுவதால், ஏற்கனவே அமலில் உள்ள குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்திற்கு எந்த
பாதிப்பும் வராது. 8. அதேபோல் மாநிலங்கள் அமல்படுத்தியுள்ள விவசாய உற்பத்தி சந்தை குழு சட்டத்தின் ஷரத்துக்களை நசுக்காது. விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதை இந்த மசோதாக்கள் உறுதி செய்யும். 9. சந்தை கட்டுப்பாடு, விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருட்களை
யாருக்கும் விற்கலாம் என்ற சுதந்திரம் ஆகியவற்றில் இவை தலையிடாது. 10. விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருட்களை விற்பதற்கு அரசுக்கு எந்த வரியும் செலுத்த தேவையில்லை. சந்தை கட்டணமாக இதுவரை 8.5% செலுத்தப்படவேண்டியிருந்தது. அது இனி இருக்காது. இது உற்பத்தியாளருக்கும் வாங்கி விற்பவருக்கும்
பெரும் இலாபத்தை கொடுக்கும். 11. இந்த மசோதா மூலம் விவசாயத் துறையில் தனியார் முதலீடு ஊக்குவிப்பு, சந்தை போட்டி ஆகியவை அதிகரிக்கும். 12. இதனால் விவசயாத் துறையின் உள்கட்டமைப்பு வலுப்படும். வேலைவாய்ப்பு அதிகரிக்கும். இந்த மசோதா காரணமாக இனி விவசாயிகளுக்கு பெரிய வர்த்தக நிறுவனங்களுடன்
நேரடி தொடர்பு கிடைக்கும். 13. முன்பு தரகர்கள் கை ஓங்கி இருந்தது. இந்த மசோதா மாற்றத்தால்
சந்தை சமன் நிலைக்கு வருகிறது. (Level playing field). 14. ஒப்பந்த சாகுபடியை ஊக்குவிக்கும் இச்சட்டத்தில் விவசாயிகளை கட்டாயப்படுத்தும் அல்லது பாதிக்கும் வகையிலான ஷரத்துகள் எதுவும் இல்லை.
விவசாயிகளுக்கு ஒப்பந்த விலை மூலம் உறுதியான விலை கிடைக்கும்.
இந்தச் சட்டத் திருத்த மசோதாவை எதிர்க்கும் எதிர்க்கட்சிகள் தாங்கள் ஆட்சியில் இருந்தபோது விவசாயிகள் நலனுக்காக இதுவரை என்ன செய்திருக்கிறார்கள்? இலவச மின்சாரம், இலவச தண்ணீர் கடன் தள்ளுபடி என்று கொடுத்தும் விவசாயிகள்
இலாபகரமாக தொழில் செய்ய முடியாத நிலையில் தான் வைத்திருந்தார்கள். கொண்டுவரப்பட்டுள்ள மாற்றத்தால் விவசாயத் துறை நவினமயமாக்கப்படும். உலகம் முழுதும் முன்னேறிய நாடுகள் விவசாயத் துறையை எவ்வாறு நவீனப்படுத்தி உற்பத்தியை பெருக்கி விவசாயிகளை செல்வந்தர்களாக மாற்றியுள்ளனவோ அதைத் தான் இந்தியா
இப்போ செயல்படுத்துகிறது. இந்த நல்ல மாற்றத்தை எதிர்க்கின்றது யார் என்று பார்த்தால் இதுவரை விவசாயிகளின் வளத்தைப் பெருக்காமல் வாளாவிருந்த எதிர்க்கட்சிகள் தாம்! மீடியாக்களும் எதிர்க்கட்சிகளும் பொய்யுரைத்து விவசாயிகளை பீதியடையவைத்து தங்கள் பிடிக்குள் மக்களை வைக்கப் பார்க்கின்றனர்.
விவசாயியாக இருந்து தமிழக முதல்வர் ஆகியிருக்கும் திரு @EPSTamilNadu , இன்றும் தான் ஒரு விவசாயி என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படும் ஒருவர், இந்த சட்டத் திருத்த மசோதாக்கள் விவசாயிகள் நலனுக்காகவே என்று ஆதரவு தனது வரவேற்பு அளித்திருப்பது இச்சட்டத்திற்கான அங்கீகாரம். #FarmBill2020
#தண்டபாணி_பைரவர் #காசி_வைபவம்
காசியில் 2 பைரவர் கோயில்கள் உண்டு. ஒன்று கால பைரவர் கோயில், மிகவும் பிரசித்தி பெற்றது. அதே போல காசி விஸ்வநாதர் ஆலய கருவறைக்கு நேர் எதிரில் அமைந்துள்ள சந்நதியில் பைரவர் தண்டபாணி என்னும் பெயரில் எழுந்தருளி உள்ளார். காசியிலேயே பாவம் செய்பவர்களும்
இருக்கிறார்கள். காசியில் சுற்றித்திரியும் போதும், பாவ எண்ணங்களுடன் திரிபவர்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கு எல்லாம் வாழ்வில் முக்தியே கிடைக்காதபடி செய்து விடுவார் இந்த தண்டபாணி பைரவர். தண்டபாணி மந்திரிலிலுள்ள தண்டநாயகர் என்னும் தண்டபாணி பைரவர், காசிக்குப் போகிறவர்களைத் தரம்
பிரித்து பாவ புண்ணியங்களை வழங்குபவராக உள்ளார். குபேரனைத் தலைவராகக் கொண்ட இனத்தவர் யட்சர்கள் எனப்படுவர். பூர்வத்தில் பூர்ணபத்திரன் என்ற யக்ஷன் ஒருவன் மிகவும் புகழ் பெற்றவனாக விளங்கி கந்தமாதன பர்வதம் என்ற மலையில் வசித்து வந்தான். அவனுக்கு ஹரிகேசன் என்ற மகன் ஒருவன் இருந்தான். இவன்
திருவிடைமருதூர் ஆலயத்தில் அருள் பாலிக்கும் அன்னை #அன்பிற்பிரியாள்
காவிரிப்பூம்பட்டினத்தைச் சேர்ந்த பெரும் வணிகரான மருதவாணனுக்குக் குழந்தைப் பேறு இல்லாமல் இருந்தது. அதனை நினைத்து வருந்திய அவர், தனக்குக் குழந்தைப்பேறு அளிக்க வேண்டி அங்கிருந்த சிவபெருமான் கோவிலில் தினமும் வழிபட்டு
வந்ததுடன், அங்கு வருபவர்களுக்கு அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு தானங்களையும் வழங்கி வந்தார். அவரது வழிபாட்டில் மகிழ்ந்த பார்வதி தேவி, இறைவன் சிவபெருமானிடம் அவருக்குக் குழந்தைப்பேறு அளிக்கும்படி வேண்டினாள். ஆனால் இறைவனோ, “இந்தப் பிறவியில் மருதவாணனுக்குக் குழந்தைப்பேறு இல்லை. எனவே,
அவருக்குக் குழந்தைப்பேறு தருவது சாத்தியமில்லை” என்றார். அதனைக் கேட்டு வருத்தமடைந்த பார்வதி, தானே அவருக்குக் குழந்தையாகப் பிறப்பதாகச் சொல்லி, மருதவாணன் மனைவியின் வயிற்றில் கருவாக உருவாகிப் பிறந்தாள். அந்தக் குழந்தை வளர்ந்து பெரியவளாக ஆன நிலையில், நகர்வலம் வந்த சோழநாட்டு மன்னன்
#பாரியூர்_கொண்டத்துக்_காளியம்மன்
#ஆடிமாத_சிறப்புப்_பதிவு
பாரியூர் கொண்டத்துக் காளியம்மன் என்று எல்லோராலும் போற்றிக் கொண்டாடப்படும் அன்னை அற்புதமான சக்தி வாய்ந்தவள். இவ்வூர் புராண காலத்தில் பராபுரி என்று அழைக்கப் பட்டது. பரா என்றால் போற்றுதல், வழிபடுதல் என்றும் புரி என்றால் ஊர்,
என்பதற்கு ஊர், கோட்டை மதில் என்றும் பொருள். கோட்டை மதில்களால் சூழப்பட்ட தலமே பாரியூர் என்பதாக கல்வெட்டுக் குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது. கடையெழு வள்ளல்களில் ஒருவரான பாரியின் குல தெய்வம் கொண்டத்துக் காளியம்மன் என நம்பப்படுகிறது. எனவேதான் பாரியூர் என்று அழைக்கப்படுவதாகவும்
கூறுகின்றனர். வள்ளலின் பெருமைக்கும், செழிப்புக்கும் அன்னையே காரணம் என்று குறிப்பிடப் படுகிறது. இன்றும் பாரியூரைச் சுற்றியுள்ள பகுதிகள் பச்சைப் பசேல் என்று வயல்வெளிகளும், குளுமையான நீர் நிலைகள், அடர்ந்த மரங்களுமாகச் செழித்து காணப்படுகின்றன. கோயில் ராஜகோபுரம் 5 அடுக்குகள் கொண்டது.
#ஸ்ரீகாட்டுவீர_ஆஞ்சநேயர்
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேவ சமுத்திரம் கிராமத்தில் உள்ளது அருள்மிகு ஸ்ரீகாட்டுவீர ஆஞ்சநேயர் திருக்கோயில். அனுமன் சிறுவயது முதலே காடுகளில் வலம் வந்தமையாலும் , இந்த பகுதி பல ஆண்டுகளுக்கு முன்பு வனமாக இருந்தமையாலும், மூலவரானவர் காட்டுவீர ஆஞ்சநேயர் என்ற
என்ற திருநாமம் கொண்டு அழைக்கப் பெறுகிறார். இக்கோவிலில் உள்ள கர்ப்ப கிரகம் 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் விக்கிரகமாக உள்ளது. இப்பகுதி குன்றுகளாக விளை நிலங்களாக இருந்தது. இந்த விளை நிலங்கள் யாவும் வெங்கட்ராம செட்டியாருடையது என்கிறது வரலாறு. அப்போது நிலத்தில் உள்ள பாறையின்
மீது ஆஞ்சநேயர் திருவுருவம் செதுக்கப் பட்டிருந்தது. இதனைப் பார்த்த மக்கள் ஆஞ்சநேயரை பூஜித்து வழிபட்டு வந்தனர். மூலவருக்கு பின்புறம் இருந்த குன்றில் வளர்ந்து கொண்டிருக்கும் நந்தீஸ்வரரும், நாகர்களின் சிலைகளும் காணப்பட்டன. இந்த அதிசயத்தைக் காண நாளுக்கு நாள் பக்தர்களின் வருகை
#ஆற்றுக்கால்_பகவதி_அம்மன்
கேரளம் உருவெடுக்க காரணமாக இருந்த பரசுராமர் 108 சிவாலயங்களையும், 108 பகவதி அம்மன் கோவில்களையும் நிறுவியதாக புராணம் கூறுகிறது. கேரளாவில் உள்ள அம்மன்களுக்கு என்று தனிப் பெயரில்லை. அவர்கள் அனைவருமே பகவதி என்றே அறியப்படுகின்றனர். கேரளாவில் பகவதி அம்மன்
கோவில்கள் அனேகம் இருக்கின்றன. இருப்பினும் அனைத்து பகவதி அம்மன் கோவில்களுக்கும் இல்லா சிறப்பு ஆற்றுக்கால் பகவதி அம்மனுக்கு உண்டு. அதற்கு, இங்கு ஆண்டுதோறும் கொண்டாடப் படும் உலகப் புகழ் பெற்ற பொங்கல் திருவிழாதான் காரணம். இந்த விழாவின்போது லட்சக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு பொங்கல்
வைத்து அம்மனை வழிபடுவது பிரமாண்டமாக இருக்கும். இது கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றது. சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோவடிகள் காலத்தில் இந்த கோவில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. சிலப்பதிகாரத்தின் நாயகி, கற்புக்கரசியான கண்ணகியின் அவதாரம் தான் ஆற்றுக்கால் பகவதி அம்மன் என்று கூறப்
#தீக்ஷை
ஆன்மீக வாழ்க்கையில் ஈடுபட விரும்பும் ஒருவர் குருவிடம் இருந்து தீட்சை பெறுவது வழக்கம். தீட்சை என்பதற்கு ஆரம்பம் என்று அர்த்தம். அதாவது ஒரு மந்திரத்தின் மூலமாக ஆன்மீக வழியில் முன்னேற்றம் அடைய குருவின் மூலம் பெற்ற உபதேசத்தை தொடங்கி செய்வது என்பது அதன் பொருள். தீட்சைக்கு 3
அடிப்படை விஷயங்கள் தேவை. முதலாவது, தீட்சை தருவதற்கான ஆன்மீக குரு. இரண்டாவது தீட்சை பெறுவதற்கான மாணவன். மூன்றாவது தீட்சைக்கு உரிய மந்திரம் அல்லது நெறிமுறை. இந்த 3 விஷயங்களும் மிகச்சரியாக அமைந்தால் தான் ஒருவரது ஆன்மீக வளர்ச்சி என்பது சாத்தியம். ஆன்மீக சான்றோர்கள் அவரவர்களுக்கு
உரிய வழிகளில் பல்வேறு தீட்சைகளை வழங்குகிறார்கள். அவை, ஸ்பரிச தீட்சை, நயன தீட்சை, மானச தீட்சை, வாசக தீட்சை, மந்திர தீட்சை, யோக தீட்சை, ஞான தீட்சை, வித்யா தீட்சை, தந்திர தீட்சை, பிரம்ம தீட்சை உள்ளிட்ட 81 வகையான தீட்சைகள் உள்ளன. சாஸ்திர ரீதியாக 64 முறைகள் வழக்கத்தில் கடைபிடிக்கப்