அன்பெழில் Profile picture
Sep 26, 2020 26 tweets 5 min read Read on X
From Dinamalar dated 26.09.2020
உச்ச நீதிமன்றத்தில் அயோத்தி ராம ஜன்ம பூமி தொடர்பான வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தபோது 'அயோத்தி தான் ராம ஜன்ம பூமி' என தெரிவித்து தன் வாதங்களை மூத்த வழக்கறிஞர் பராசரன் எடுத்து வைத்துக் கொண்டிருந்தார். அப்போது நீதிபதி குறுக்கிட்டு, 'ராமர்
இருந்தார் என்பதற்கு வேதங்களிலிருந்தும், புராணங்களிலிருந்தும் பல்வேறு ஆதாரங்களை கூறுகிறீர்கள். ராமபிரானின் ஜன்ம பூமி பற்றி எந்த வேதத்திலாவது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதா?' என பராசரனிடம் கேட்டார். இதற்கு பராசரனால் உடனடியாக பதில் சொல்ல முடியவில்லை. அப்போது, சாட்சிகள் பகுதியில்
இருந்து முதியவர் ஒருவர் எழுந்தார். அவரை ராம ஜன்ம பூமிக்கு ஆதரவான முக்கியமான சாட்சியாக பராசரன் தெரிவித்திருந்தார். அவருக்குப் பெற்றோர் வைத்த பெயர் கிரிதர். அவர் நீதிபதியைப் பார்த்து கூறியதாவது: மதிப்பிற்குரிய நீதிபதி அவர்களே... ரிக் வேதத்தில், ‘ஜைமினியா சம்ஹிதா' பகுதியில் ராம ஜன்ம
பூமி பற்றி தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் சரயு நதியின் கரையில் ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து ராம ஜன்ம பூமிக்கு செல்வதற்கான வழிகளும் விவரமும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வழிகளை பின்பற்றிச் சென்றால் ஒருவரால் ராம ஜன்மபூமிக்கு நிச்சயம் செல்ல முடியும் என்று அவர் கூறினார். இதை
அவர் எந்த புத்தகத்திலிருந்தும் படித்து காட்டவில்லை எழுதியும் காட்டவில்லை. மடை திறந்த வெள்ளம் போல மனதிலிருந்து கூறினார். கிரிதர் கூறியது சரிதானா என ஆய்வு செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கிரிதர் கூறியது நூற்றுக்கு நூறு சரி என தெரிந்தது. இதை அறிந்த
நீதிபதி, இது ஒரு அபூர்வமான நிகழ்ச்சி; அதை இன்று நான் நேரில் பார்த்தேன்' என ஆச்சரியத்துடன் கூறினார். இதைக் கேட்ட கிரிதர் மிகவும் அமைதியாக, எந்தவித உணர்வையும் வெளிப்படுத்தாமல் இருந்தார். நீதிபதி இப்படி மிகவும் ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் கூறியதற்கு பின்னணியில் முக்கியமான காரணம்
உள்ளது. உத்தர பிரதேசமாநிலம், ஜான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பண்டிட் ராஜ்தேவ் மிஷ்ரா - சசிதேவி தம்பதிக்கு 1950ம் ஆண்டு, ஜனவரி, 14ம் தேதி அழகான ஆரோக்கியமான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு கிரிதர் என பெயர் வைத்தனர். இரண்டு மாதத்துக்குப் பின் கிரிதர் கடும் நோயால் பாதிக்கப்பட்டான்.
அதில் கிரிதருக்கு பார்வை பறிபோனது. குழந்தை வளர வளர தன் மகனால் படிக்கவும், எழுதவும் முடியாது என்பதை கிரிதரின் தந்தை ராஜ்தேவ் புரிந்து கொண்டார். ஆனால் கிரிதரிடம் எளிதில் புரிந்து கொள்ளும் தன்மையும் சொல்லிக் கொடுத்ததை மனப்பாடம் செய்யும் சக்தியும் இருப்பதை அறிந்தார். மேலும்,
கிரிதருக்கு அபார ஞாபக சக்தியும் இருந்தது. இதனால் மகனில் அருகில் அமர்ந்து அவனுக்கு வேதம் சொல்லிக் கொடுத்தார். வேதத்துக்கு அர்த்தமும் சொல்லி கொடுத்தார். கிரிதருக்கு 8 வயதான போது ராமானந்த் வழியைப் பின்பற்றும் மடம் ஒன்றில் சேர்த்தார். மடாதிபதி கிரிதரை தன் சீடனாக ஏற்று அவருக்கு
ராமபத்ரா என்ற புதிய பெயரையும் வைத்தார். ராமபத்ராவுக்கு புதிய வழியை காட்டினார். அவரது நினைவு திறனை அறிந்து வேதங்கள், புராணங்கள், உபநிஷத்கள் என அனைத்தையும் கற்பித்தார். குரு சொல்லச் சொல்ல அதை மனப்பாடம் செய்து நினைவில் வைத்துக் கொண்டார் ராமபத்ரா. கல்வி மீது ராமபத்ராவுக்கு அதிக
ஆர்வம் இருந்தது. படிக்க, எழுத முடியாவிட்டாலும் தன் நினைவுத் திறனால் 22 மொழிகளை கற்றுத் தேர்ந்தார். நான்கு வேதங்கள் உபநிஷத்கள் அனைத்திலும் மாபெரும் புலமை பெற்றார். துளசிதாசர் மீது மிகவும் பக்தி கொண்டிருந்த ராமபத்ரா அவர் ஹிந்தியில் எழுதிய ராமாயணமான, ராமசரிதமானஸ் பற்றி உபன்யாசங்கள்
நிகழ்த்த ஆரம்பித்தார். கற்பனை செய்து பாருங்கள். படிக்கவும், எழுதவும் முடியாத ஒருவர் மற்றவர் படிக்கக் கேட்டு அதை மனப்பாடம் செய்து, நினைவில் வைத்து, உபன்யாசங்கள் செய்துள்ளார். தன் 38வது வயதில் ராமானந்த ஆசிரமத்தில் நான்கு ஜகத்குருக்களில் ஒருவராக ராமபத்ரா பொறுப்பேற்றார். ஜகத்குரு
ராமபத்ராச்சார்யா என அழைக்கப்பட்டார். ராமபத்ராச்சார்யாவின் திறமையும், சாதனைகளும் நம்மை வியக்க வைக்கிறது. பல மொழி வித்தகர், ஆன்மிக தலைவர், கல்வியாளர், சமஸ்கிருத அறிஞர், கவிஞர், எழுத்தாளர், விமர்சகர், தத்துவஞானி, பாடகர், இசையமைப்பாளர். உபன்யாசகர், நாடக எழுத்தாளர் என, அவரை பற்றி
சொல்லிக் கொண்டே போகலாம். அவர் கீதா ராமாயணம், ஸ்ரீ பார்கவ ராகவ விஜயம், அருந்ததி, அஷ்டாவக்ரா, விதுரா உட்பட 100க்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார். 'ஸ்ரீ சீதாராம சுப்ரபாதம்' என்ற சுலோகத்தையும் அவர் எழுதி இசையமைத்து உள்ளார். கவிஞரான ராமபத்ராச்சார்யா, ஹிந்தியிலும், சமஸ்கிருதத்திலும்
பல கவிதைகளை எழுதி உள்ளார். ராமாயணம், மஹாபாரதம் உட்பட பல புராணங்களை கவிதை வடிவில் எழுதியுள்ளார். தானே இசையமைத்து பாடி ஐந்து இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். கல்வி மீது தீராத பற்று கொண்ட ராமபத்ராச்சார்யா, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக, ஜகத்குரு ராமபத்ராச்சார்யா பல்கலைக்கழகத்தை
துவக்கினார். ஹிந்து மதம் பற்றி படித்து ஆய்வு செய்ய, துளசிதாசர்
பெயரில், 'துளசி பீடம்' என்ற குருகுலத்தை துவக்கினார். 2015ம் ஆண்டு மத்திய அரசு, 'பத்மவிபூஷன்' விருது வழங்கி ராமபத்ராச்சார்யாவை கௌரவித்தது. பிறந்து இரண்டே மாதத்தில் பார்வையிழந்தும், மன தைரியத்துடன் போராடி, கல்வியிலும்,
அறிவிலும் உச்சம் பெற்றுள்ளார். அவரது வாழ்க்கை அனைவருக்கும் பெரும் ஊக்க சக்தியாக அமைந்துள்ளது. பார்வையில்லாமல், மாபெரும் சாதனை படைத்த இந்த மாமனிதரை நம் நாட்டில் எத்தனை பேருக்கு தெரியும்? பார்வையற்றவர் படைத்த சாதனை என்றால் நம்மில் பலருக்கு, 'ஹெலன் கெல்லர்' தான் நினனவுக்கு வருவார்.
அவரை பற்றி பள்ளி பாடப் புத்தகங்களில் பாடங்கள் கூட வந்து உள்ளன. ஆனால், நம் கல்வி முறையில், ஜகத்குரு ராமபத்ராச்சார்யாவின் பெயர் சிறிதும் இடம் பெறாதது வேதனை. ஏனெனில் அவரை புகழ்ந்து பேசினால் நம் நாட்டின் மதச்சார்பின்மை மாயமாகிவிடும் என போலி மதச்சார்பின்மைவாதிகள் குற்றம்சாட்டி முதலைக்
கண்ணீர் வடிப்பர். இதுதான் நம் நாட்டின் சாபக்கேடு!

#அறிவோம்_மகான்கள் #ராமபத்ராச்சார்யா #ராம்ஜன்மபூமி
I would like to add a correction to the above post as pointed out by @anjankumaran இருகண் பார்வையும் சிறுவயதிலேயே இழந்த ஜகத்குருசுவாமி ராமபத்ராசாரியார் இறையருள் பெற்ற‌ அதிஅற்புதமான பரமஞானி. அவர் அலஹாபாத் உயர்நீதிமன்றத்தில் ஒரு சாட்சியாக விசாரிக்கப்பட்டபோது பழம்பெரும் இதிஹாச
இலக்கியங்களிலிருந்து ராமஜன்மபூமி அமைந்த இடம் குறித்தத் துல்லியமான தகவல்களைக் கூறினார். அதனை அலஹாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பில் நீதிபதி சுதிர் அகர்வால் பதிவு செய்துள்ளர். இதனைத்தான் உச்ச நீதிமன்றத் தீர்ப்பிலும் நீதிபதிகள் பதிந்திருக்கிறார்கள். உச்ச நீதிமன்றத்தில் பார்வையாளர்
அரங்கிலிருந்து எவரும் பேச அனுமதி இல்லை. அதனால் அச்சமயத்தில் அவர் சொல்லவில்லை. Reference in the Supreme Court Judgment to the witness given by Jagatguru Sri Ramanandacharya Ramabhadracharya.
QUOTE:
DW3/14 Jagat Guru Ramanandacharya Swami Haryacharya. In his examination-in-chief,
he placed reliance on Ayodhya Mahatmya of Skanda Purana. In his examination-in-chief, he states that Lomas Rishi Ashram is in the east of the present Shri Ram Janma
Bhumi. He further states that at place of Lomas Rishi Ashram, now, there is a Ramgulella Mandir and a stone in the
name of Shri Lomasji. In his examination-in-chief, he states that Lomas Rishi Ashram is in the east of the present Shri Ram Janma Bhumi. He further states that at place of Lomas Rishi Ashram, now, there is a Ramgulella Mandir and a stoneBin the name of Shri Lomasji. In paragraph
31 of the examination-in-chief, he states:- “31. Lomas Rishi Ashram is in the east of the present Shri Ramjanm Bhoomi Mandir,about which a case is subjudice. Where there is a Ramgulella Mandir, there is astone in the name of Shri Lomasji. Bighneshwar Bhagwan is in the west side
of Ram Janm Bhoomi Mandir, which is in the west
side of Vasisth Bhawan Mandir. The proof is enclosed at list ‘A’ of an affidavit.”
UNQUOTE:

Please make note of the changes as referred by @anjankumaran Thank you Sir for pointing out the mistake🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Jul 22
#தண்டபாணி_பைரவர் #காசி_வைபவம்
காசியில் 2 பைரவர் கோயில்கள் உண்டு. ஒன்று கால பைரவர் கோயில், மிகவும் பிரசித்தி பெற்றது. அதே போல காசி விஸ்வநாதர் ஆலய கருவறைக்கு நேர் எதிரில் அமைந்துள்ள சந்நதியில் பைரவர் தண்டபாணி என்னும் பெயரில் எழுந்தருளி உள்ளார். காசியிலேயே பாவம் செய்பவர்களும்Image
இருக்கிறார்கள். காசியில் சுற்றித்திரியும் போதும், பாவ எண்ணங்களுடன் திரிபவர்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கு எல்லாம் வாழ்வில் முக்தியே கிடைக்காதபடி செய்து விடுவார் இந்த தண்டபாணி பைரவர். தண்டபாணி மந்திரிலிலுள்ள தண்டநாயகர் என்னும் தண்டபாணி பைரவர், காசிக்குப் போகிறவர்களைத் தரம் Image
பிரித்து பாவ புண்ணியங்களை வழங்குபவராக உள்ளார். குபேரனைத் தலைவராகக் கொண்ட இனத்தவர் யட்சர்கள் எனப்படுவர். பூர்வத்தில் பூர்ணபத்திரன் என்ற யக்ஷன் ஒருவன் மிகவும் புகழ் பெற்றவனாக விளங்கி கந்தமாதன பர்வதம் என்ற மலையில் வசித்து வந்தான். அவனுக்கு ஹரிகேசன் என்ற மகன் ஒருவன் இருந்தான். இவன்
Read 30 tweets
Jul 20
திருவிடைமருதூர் ஆலயத்தில் அருள் பாலிக்கும் அன்னை #அன்பிற்பிரியாள்
காவிரிப்பூம்பட்டினத்தைச் சேர்ந்த பெரும் வணிகரான மருதவாணனுக்குக் குழந்தைப் பேறு இல்லாமல் இருந்தது. அதனை நினைத்து வருந்திய அவர், தனக்குக் குழந்தைப்பேறு அளிக்க வேண்டி அங்கிருந்த சிவபெருமான் கோவிலில் தினமும் வழிபட்டுImage
வந்ததுடன், அங்கு வருபவர்களுக்கு அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு தானங்களையும் வழங்கி வந்தார். அவரது வழிபாட்டில் மகிழ்ந்த பார்வதி தேவி, இறைவன் சிவபெருமானிடம் அவருக்குக் குழந்தைப்பேறு அளிக்கும்படி வேண்டினாள். ஆனால் இறைவனோ, “இந்தப் பிறவியில் மருதவாணனுக்குக் குழந்தைப்பேறு இல்லை. எனவே, Image
அவருக்குக் குழந்தைப்பேறு தருவது சாத்தியமில்லை” என்றார். அதனைக் கேட்டு வருத்தமடைந்த பார்வதி, தானே அவருக்குக் குழந்தையாகப் பிறப்பதாகச் சொல்லி, மருதவாணன் மனைவியின் வயிற்றில் கருவாக உருவாகிப் பிறந்தாள். அந்தக் குழந்தை வளர்ந்து பெரியவளாக ஆன நிலையில், நகர்வலம் வந்த சோழநாட்டு மன்னன்
Read 25 tweets
Jul 20
#பாரியூர்_கொண்டத்துக்_காளியம்மன்
#ஆடிமாத_சிறப்புப்_பதிவு
பாரியூர் கொண்டத்துக் காளியம்மன் என்று எல்லோராலும் போற்றிக் கொண்டாடப்படும் அன்னை அற்புதமான சக்தி வாய்ந்தவள். இவ்வூர் புராண காலத்தில் பராபுரி என்று அழைக்கப் பட்டது. பரா என்றால் போற்றுதல், வழிபடுதல் என்றும் புரி என்றால் ஊர், Image
என்பதற்கு ஊர், கோட்டை மதில் என்றும் பொருள். கோட்டை மதில்களால் சூழப்பட்ட தலமே பாரியூர் என்பதாக கல்வெட்டுக் குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது. கடையெழு வள்ளல்களில் ஒருவரான பாரியின் குல தெய்வம் கொண்டத்துக் காளியம்மன் என நம்பப்படுகிறது. எனவேதான் பாரியூர் என்று அழைக்கப்படுவதாகவும்Image
கூறுகின்றனர். வள்ளலின் பெருமைக்கும், செழிப்புக்கும் அன்னையே காரணம் என்று குறிப்பிடப் படுகிறது. இன்றும் பாரியூரைச் சுற்றியுள்ள பகுதிகள் பச்சைப் பசேல் என்று வயல்வெளிகளும், குளுமையான நீர் நிலைகள், அடர்ந்த மரங்களுமாகச் செழித்து காணப்படுகின்றன. கோயில் ராஜகோபுரம் 5 அடுக்குகள் கொண்டது. Image
Read 18 tweets
Jul 19
#ஸ்ரீகாட்டுவீர_ஆஞ்சநேயர்
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேவ சமுத்திரம் கிராமத்தில் உள்ளது அருள்மிகு ஸ்ரீகாட்டுவீர ஆஞ்சநேயர் திருக்கோயில். அனுமன் சிறுவயது முதலே காடுகளில் வலம் வந்தமையாலும் , இந்த பகுதி பல ஆண்டுகளுக்கு முன்பு வனமாக இருந்தமையாலும், மூலவரானவர் காட்டுவீர ஆஞ்சநேயர் என்றImage
என்ற திருநாமம் கொண்டு அழைக்கப் பெறுகிறார். இக்கோவிலில் உள்ள கர்ப்ப கிரகம் 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் விக்கிரகமாக உள்ளது. இப்பகுதி குன்றுகளாக விளை நிலங்களாக இருந்தது. இந்த விளை நிலங்கள் யாவும் வெங்கட்ராம செட்டியாருடையது என்கிறது வரலாறு. அப்போது நிலத்தில் உள்ள பாறையின் Image
மீது ஆஞ்சநேயர் திருவுருவம் செதுக்கப் பட்டிருந்தது. இதனைப் பார்த்த மக்கள் ஆஞ்சநேயரை பூஜித்து வழிபட்டு வந்தனர். மூலவருக்கு பின்புறம் இருந்த குன்றில் வளர்ந்து கொண்டிருக்கும் நந்தீஸ்வரரும், நாகர்களின் சிலைகளும் காணப்பட்டன. இந்த அதிசயத்தைக் காண நாளுக்கு நாள் பக்தர்களின் வருகை Image
Read 16 tweets
Jul 19
#ஆற்றுக்கால்_பகவதி_அம்மன்
கேரளம் உருவெடுக்க காரணமாக இருந்த பரசுராமர் 108 சிவாலயங்களையும், 108 பகவதி அம்மன் கோவில்களையும் நிறுவியதாக புராணம் கூறுகிறது. கேரளாவில் உள்ள அம்மன்களுக்கு என்று தனிப் பெயரில்லை. அவர்கள் அனைவருமே பகவதி என்றே அறியப்படுகின்றனர். கேரளாவில் பகவதி அம்மன் Image
கோவில்கள் அனேகம் இருக்கின்றன. இருப்பினும் அனைத்து பகவதி அம்மன் கோவில்களுக்கும் இல்லா சிறப்பு ஆற்றுக்கால் பகவதி அம்மனுக்கு உண்டு. அதற்கு, இங்கு ஆண்டுதோறும் கொண்டாடப் படும் உலகப் புகழ் பெற்ற பொங்கல் திருவிழாதான் காரணம். இந்த விழாவின்போது லட்சக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு பொங்கல் Image
வைத்து அம்மனை வழிபடுவது பிரமாண்டமாக இருக்கும். இது கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றது. சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோவடிகள் காலத்தில் இந்த கோவில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. சிலப்பதிகாரத்தின் நாயகி, கற்புக்கரசியான கண்ணகியின் அவதாரம் தான் ஆற்றுக்கால் பகவதி அம்மன் என்று கூறப் Image
Read 21 tweets
Jul 18
#தீக்ஷை
ஆன்மீக வாழ்க்கையில் ஈடுபட விரும்பும் ஒருவர் குருவிடம் இருந்து தீட்சை பெறுவது வழக்கம். தீட்சை என்பதற்கு ஆரம்பம் என்று அர்த்தம். அதாவது ஒரு மந்திரத்தின் மூலமாக ஆன்மீக வழியில் முன்னேற்றம் அடைய குருவின் மூலம் பெற்ற உபதேசத்தை தொடங்கி செய்வது என்பது அதன் பொருள். தீட்சைக்கு 3 Image
அடிப்படை விஷயங்கள் தேவை. முதலாவது, தீட்சை தருவதற்கான ஆன்மீக குரு. இரண்டாவது தீட்சை பெறுவதற்கான மாணவன். மூன்றாவது தீட்சைக்கு உரிய மந்திரம் அல்லது நெறிமுறை. இந்த 3 விஷயங்களும் மிகச்சரியாக அமைந்தால் தான் ஒருவரது ஆன்மீக வளர்ச்சி என்பது சாத்தியம். ஆன்மீக சான்றோர்கள் அவரவர்களுக்கு
உரிய வழிகளில் பல்வேறு தீட்சைகளை வழங்குகிறார்கள். அவை, ஸ்பரிச தீட்சை, நயன தீட்சை, மானச தீட்சை, வாசக தீட்சை, மந்திர தீட்சை, யோக தீட்சை, ஞான தீட்சை, வித்யா தீட்சை, தந்திர தீட்சை, பிரம்ம தீட்சை உள்ளிட்ட 81 வகையான தீட்சைகள் உள்ளன. சாஸ்திர ரீதியாக 64 முறைகள் வழக்கத்தில் கடைபிடிக்கப்
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(