அதிக மாதம் அல்லது புருஷோத்தம மாதம் (17-09-2020 முதல் 16-10-2020 வரை). இவ்வாறான அதிக மாதத்தில் சுப காரியங்கள் செய்யும் வழக்கம் கிடையாது. புருஷோத்தமன் என்றால் ஒருவரே, அவரே நம் கிருஷ்ணன். அதிக மாதம் என்றால் என்ன? நம் பஞ்சாங்கம் சந்திரனின் கதியை அடிப்படையாகக் கொண்டது. வருடத்தில் ஒரு
மாதம் #அதிகமாதம் என்று பஞ்சாங்கம் கணிப்பவர்கள் தீர்மானித்து அதை அதிக மாதம், பீடை மாதம் என்று சொன்னார்கள். ஏன் இவ்வாறு இந்த மாதத்தை ஒதுக்கி வைக்கிறார்கள், நாம் அதை எடுத்து அதற்கு தனிப்பெருமை கொடுப்போம் என்று எற்றுக் கொண்டுவிட்டார் கிருஷ்ணன். பூமியை சுற்ற சந்திரன் 27.3 நாள் எடுத்து
கொள்கிறது. சூரியனைச் சுற்ற 365.2422 days (பூமியின் சுற்று வேகம் 29.79 km ஒரு வினாடிக்கு). எனவே பூமியும் சந்திரனும் 27.3 நாள் நகர்வதால் சூரியனை சுற்றுவதில் 1/12 மாசம் என்று ஆகிறது. அதாவது ஒரு பௌர்ணமியிலிருந்து மற்றொரு பௌர்ணமி வரை.சந்திரன் இன்னும் 2. 2 நாள் சுற்றினால் தான் அது
முழுமை பெரும். இது பூமி சூரியனை கொஞ்சம் வளைந்து சுற்றுவதால் ஏற்படும் வித்யாசம். சந்திரனோ தனது சுற்றை 27.3 நாளில் முடிக்கிறது. ஆனால் பூமி சூரிய கதியை சார்ந்து பௌர்ணமியாக சந்திரனுக்கு 29.531 நாள் தேவை. ஒரு சந்திர வருஷ கணக்கில் 29.531 நாள் சந்திர மாதங்கள் = 354.372 நாட்கள் ஒரு
சந்திர வருஷத்தில். நமது கணக்கில் (365.2422 - 354.372) =10.87 நாள் வித்தியாசம் வருகிறது. வசிஷ்ட சித்தாந்தம் ஒவ்வொரு 32 மாதம் 16நாள் 8 கடிக்கும் (1 கடி: 24 நிமிஷம்) ஒருமுறை அதிக மாசம் இவ்வாறு ஏற்படுகிறது. எளிமையாக சொன்னால் நமது சந்திரமான வருஷத்தில் ஒரு பிரதமை முதல் அடுத்த
அமாவாசை வரை ஒரு சந்திரமான மாதம். ஒரு சூரிய வருடத்தில் 13 அமாவாசை வந்தால் சந்திரமான மாசங்கள் 13 ஆகிவிடாதா? எந்த மாசத்தில் 2 அமாவாசை வருகிறதோ அந்த முதல் அமாவாசை வரும் மாதத்திற்கு அடுத்த மாதம் ''அதிக'' மாதம்! இந்த வருடம் ஆனி மாதத்தில் 2 அமாவாசை. முதலாவது அமாவாசைக்கு அப்புறம்
பிரதமையிலிருந்து ஆரம்பிக்கும் மாதம் ஆஷாட அதிக மாதம். இந்த மாதத்தில் கிருஷ்ணன் தனது கருணையை, அனுக்ரகத்தை அதிகரித்து அளிக்கிறார் என்று நம்பிக்கை. எப்படி அஷ்டமி, நவமி போன்றவை லௌகீகத்தில் ஏற்றவை அல்ல என்று புறக்கணிக்கப்பட்டாலும் இராமனும் கிருஷ்ணனும் அவற்றை ஏற்று புனித நாளாகச்
செய்தார்களோ அதுபோல் ஒரு மாதத்தை பீடை மாதம் என்று வைக்கப்பட்டது. அதை கிருஷ்ணன் தனதாக ஏற்றுக்கொண்டு அதை மிகச்சிறந்த மாதமாக செய்துவிட்டான். புருஷோத்தம மாதத்திற்கு ஒரு முன்னோடி மார்கழியே. பத்மா புராணமும் ஸ்கந்த புராணமும் இந்த புருஷோத்தம மாதத்தைப் பற்றி என்ன சொல்கிறது?
1) இந்த மாதத்தில் என் ஆசிர்வாதம் பூரண சக்தியோடு இதை அனுஷ்டிக்கிற பக்தனுக்கு உண்டு என்கிறார் ஸ்ரீகிருஷ்ணன். விரதமிருப்பவனின் சகல பாபங்களும் தீரும். பரிசுத்த பக்திக்கு இந்த மாதத்தில் அனுஷ்டிக்கும் விரதமே மூலம். வேதத்தில் சொன்ன சத் காரியங்களின் பலனை விட புருஷோத்தம மாத அனுஷ்டானம்
மேன்மையானது . அனுஷ்டிப்பவனுக்கு என் கோ லோகத்தில் ஒரு இடம் நிச்சயம். 2) துர்வாசர், புருஷோத்தம மாதத்தில் எங்காவது பெரு புனித நதியில் நீராடு. கிருஷ்ண நாமாவளி தெரிந்ததை சொல்லி ஏதேனும் ஒரு சிறிய தானம் செய். பிறகு பார் உன் பாபங்கள் மறைவதை என்கிறார். 3) ஒருபுருஷோத்தம மாத விரதம் 1000
கார்த்திகை விரதத்தைவிட மேலானது.
4)வால்மீகி: புருஷோத்தம மாத விரதம் மேற்கோள். 100 அஸ்வமேத யாகம் செய்த பலன் கைமேல் பெறுவாய். கோலோக ப்ரிந்தாவனம் அடைவாய். புருஷோத்தம விரதம் இருப்பவனின் உடலில் தான் சகல புண்ய க்ஷேத்ரங்களும் குடி கொண்டுள்ளது என்கிறார். 5) நைமிசாரண்யம் ரிஷிகள்:
''புருஷோத்தம மாதம் ஒரு கற்பக வ்ருட்சம். இந்த மாதத்தில் பக்தன் கேட்டதெல்லாம் பெருகிறான்!'' 6) ஆன்மீகத்தில் ஒருவன் முன்னேற இந்த மாதம் உகந்தது. கிருஷ்ணன் எல்லா அபராதங்களையும் புறக்கணித்துவிட்டார்.
இந்த புருஷோத்தம விரதம் எப்படி செய்வது? 1) சாத்வீகமாக இருக்கவேண்டும். பிரம்மச்சர்யம்
அனுஷ்டிக்க வேண்டும். தரையில் படுக்க முடிந்தால் படுக்கலாம். 2) சூர்யோதயத்துக்கு முன் குளிக்வேண்டும். முடிந்தால் எங்காவது ஒரு புனித க்ஷேத்ரத்தில், குறைந்தது இந்த மாதத்தில் 3 நாளாவது தங்குதல். 3) கிருஷ்ணனை நினைத்து அவன் சேஷ்டிதங்களை மனதில் அனுபவிகக்கவேண்டும், கேட்கவேண்டும். அவன்
நாமங்களை சொல்லி, ஹரே கிருஷ்ணா மூல மந்திரமும் சொல்ல வேண்டும். (24, 32, 64 என்ற எண்ணிக்கையில்). 4) ராதா கிருஷ்ணா படத்துக்கு சிறிய நெய் தீபம். ரோஜா, தாமரை மலர், துளசி மாலை சூட்டலாம். 5) தினமும் ஸ்ரீமத் பாகவதம் சிறிது பாராயணம், படிக்கலாம். (10வது காண்டம், 14வது அத்தியாயம்,
பிரம்மா கிருஷ்ணனை பிரார்த்திப்பது விசேஷமானது). பகவத் கீதையில் 15வது அத்தியாயம்.
6) பூஜை அறையில் இருக்கும் புத்தகங்களில் ஸ்ரீ ஜகன்னாதாஷ்டகம், ஸ்ரீ நந்தனந்தனாஷ்டகம், கண்ணில் தென்பட்டால் நீங்கள் பாக்ய சாலிகள். அவற்றை படிக்கலாம். ராதாகிருஷ்ண பஜனையோ பிரார்த்தனையோ மிக விசேஷம்.
7) ரொம்ப பெரிய விஷயம் என்னவென்றால் இந்த மாதம் எல்லோரிடமும் அமைதியாக இருப்பேன். பொய் பேசமாட்டேன் என்று உறுதி ஏற்றுக்கொள்ள வேண்டும்.
8) எவர் சில்வர் தட்டு இல்லாமல் இந்த ஒரு மாதம் மட்டும் வாழை இலையில் சாப்பிடுவோம். (முடிந்தால் தரையில் அமர்ந்து).
9) பசுவுக்கு கீரையாவது தானம்
கொடுப்போம். முடிந்தால் பிராமணர்களுக்கு கொஞ்சம் தக்ஷிணை.
10) இந்த ஒரு மாதம் முடி திருத்தும் நிலையம் அணுகாமல் வேறுபக்கம் திரும்பி நடப்போம். நகத்தை வெட்டக்கூடாது.
11) கடுகு எண்ணெய் வேண்டாம்.
12) ஒரு வேளை ஆகாரம். மதியமோ சூரியன் மறைந்த பிறகோ பால் பழங்கள், சாதுர்மாச்யத்தில்
உபயோகிக்கும் காய் கறிகள் மட்டும் உபயோகிக்கலாம்.
13) கௌண்டின்ய முனி ஒரு மந்திரம் சொல்லிக்கொடுக்கிறார். அதைச் சொல்வோமே:
கோவர்தன தரம் வந்தே,
கோபாலம் கோப ரூபினம்
கோகுலோத்சவம் ஈசானம்
கோவிந்தம் கோபிகா ப்ரியம்
கிருஷ்ணனை நினைக்க இதை பயன்படுத்திக் கொள்வோம் .
தகவல் நன்றி
sreekrishnarpanamsevasociety
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#ரிஷிகள்_மாகாத்மியம்
ரிஷிகள் மனிதர்கள் அல்ல, தேவர்களும் அல்ல. தேவர்களுக்கும் மேலானவர்கள். ரிஷிகள் தேவர்களையும், அசுரர்களையும், ராட்சஷர்களையும், மனிதர்களையும் படைத்தவர்கள். பரப்ரம்மான வாசுதேவனே ரிஷி தான். அவரே மும்மூர்த்திகளாக வ்யூஹ அவதாரம் செய்தார். மும்மூர்த்திகளும் ரிஷிகள்
தான். பரவாசுதேவன் மனித அவதாரம் செய்த போது கூட, தன்னை ரிஷியின் பரம்பரையை சேர்ந்தவன் என்று சொல்லிக் கொள்ள பெருமைப்பட்டார். ஸ்ரீ ராமர் வசிஷ்ட கோத்திரம் (பரம்பரை). சீதை அவதரித்தது கௌதம கோத்திரம், ஸ்ரீ ராமரை மணம் செய்து கொண்ட பின், வசிஷ்ட கோத்திரம்.
ஸ்ரீ கிருஷ்ணர் கர்க கோத்திரம்.
தர்மபுத்திரர் வியாக்ரபாதர் கோத்திரம்.
கௌதம கோத்திரம் கௌதம ரிஷியால் உருவானது.
ஜாபாலி என்ற சிறுவன் தன் கோத்திரம்/பரம்பரை தெரியாமல் இருந்தான். கௌதம ரிஷி அவனை ஏற்றுக் கொண்டு, தனது கோத்திரத்தை கொடுத்து, உபநயனம் செய்து, ஸத்யகாம ஜாபாலி என்று பெயர் கொடுத்தார். கௌதம ரிஷியின் ஆசியால்,
#வடநாகேஸ்வரம்_நாகேஸ்வரர்_கோயில்
குன்றத்தூர் காஞ்சிபுரம் மாவட்டம்.
பாம்பு என்றாலே தீய சக்தி விலங்காக கருதும் பல மதங்களுக்கு முன்பே பாம்பிற்கு இருக்கும் தெய்வீக குணத்தை கண்டுகொண்டவர்கள் நம் சித்தர்கள், ஞானிகள் ஆவர். ஜோதிடத்தில் நிழல் கிரகங்களான ராகு – கேது பாம்பின் அம்சமாக
கருதப்படுகின்றன. ராகு – கேது கிரகங்களின் தோஷங்களை போக்கும் வடநாகேஸ்வரம் நாகேஸ்வரர் கோயில் 500 முதல் 1000 ஆண்டுகள் பழமையானது.
மூலவர் நாகேஸ்வரர்
உற்சவர் சோமாஸ்கந்தர்
தாயார் காமாட்சி அம்மன்
தீர்த்தம்: சகல பாவங்களையும் போக்கும் சூரிய புஷ்கரணி தீர்த்தம்.
தல விருட்சம் செண்பக மரம்.
கோயில் வரலாற்றின் படி இப்பகுதியை ஆட்சி புரிந்து வந்த அனபாயன் என்கிற சோழ மன்னன் அரசவையில் இப்பகுதியை சார்ந்த அருண்மொழி ராமதேவர் என்பவர் பணியாற்றினார். இவர் தான் பிறந்த குலத்தின் பெயரால் #சேக்கிழார் என அழைக்கப்பட்டார். இவர் தான் புகழ் பெற்ற தமிழ் இலக்கியங்கள் ஆன #பெரியபுராணம்
#தண்டபாணி_பைரவர் #காசி_வைபவம்
காசியில் 2 பைரவர் கோயில்கள் உண்டு. ஒன்று கால பைரவர் கோயில், மிகவும் பிரசித்தி பெற்றது. அதே போல காசி விஸ்வநாதர் ஆலய கருவறைக்கு நேர் எதிரில் அமைந்துள்ள சந்நதியில் பைரவர் தண்டபாணி என்னும் பெயரில் எழுந்தருளி உள்ளார். காசியிலேயே பாவம் செய்பவர்களும்
இருக்கிறார்கள். காசியில் சுற்றித்திரியும் போதும், பாவ எண்ணங்களுடன் திரிபவர்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கு எல்லாம் வாழ்வில் முக்தியே கிடைக்காதபடி செய்து விடுவார் இந்த தண்டபாணி பைரவர். தண்டபாணி மந்திரிலிலுள்ள தண்டநாயகர் என்னும் தண்டபாணி பைரவர், காசிக்குப் போகிறவர்களைத் தரம்
பிரித்து பாவ புண்ணியங்களை வழங்குபவராக உள்ளார். குபேரனைத் தலைவராகக் கொண்ட இனத்தவர் யட்சர்கள் எனப்படுவர். பூர்வத்தில் பூர்ணபத்திரன் என்ற யக்ஷன் ஒருவன் மிகவும் புகழ் பெற்றவனாக விளங்கி கந்தமாதன பர்வதம் என்ற மலையில் வசித்து வந்தான். அவனுக்கு ஹரிகேசன் என்ற மகன் ஒருவன் இருந்தான். இவன்
திருவிடைமருதூர் ஆலயத்தில் அருள் பாலிக்கும் அன்னை #அன்பிற்பிரியாள்
காவிரிப்பூம்பட்டினத்தைச் சேர்ந்த பெரும் வணிகரான மருதவாணனுக்குக் குழந்தைப் பேறு இல்லாமல் இருந்தது. அதனை நினைத்து வருந்திய அவர், தனக்குக் குழந்தைப்பேறு அளிக்க வேண்டி அங்கிருந்த சிவபெருமான் கோவிலில் தினமும் வழிபட்டு
வந்ததுடன், அங்கு வருபவர்களுக்கு அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு தானங்களையும் வழங்கி வந்தார். அவரது வழிபாட்டில் மகிழ்ந்த பார்வதி தேவி, இறைவன் சிவபெருமானிடம் அவருக்குக் குழந்தைப்பேறு அளிக்கும்படி வேண்டினாள். ஆனால் இறைவனோ, “இந்தப் பிறவியில் மருதவாணனுக்குக் குழந்தைப்பேறு இல்லை. எனவே,
அவருக்குக் குழந்தைப்பேறு தருவது சாத்தியமில்லை” என்றார். அதனைக் கேட்டு வருத்தமடைந்த பார்வதி, தானே அவருக்குக் குழந்தையாகப் பிறப்பதாகச் சொல்லி, மருதவாணன் மனைவியின் வயிற்றில் கருவாக உருவாகிப் பிறந்தாள். அந்தக் குழந்தை வளர்ந்து பெரியவளாக ஆன நிலையில், நகர்வலம் வந்த சோழநாட்டு மன்னன்
#பாரியூர்_கொண்டத்துக்_காளியம்மன்
#ஆடிமாத_சிறப்புப்_பதிவு
பாரியூர் கொண்டத்துக் காளியம்மன் என்று எல்லோராலும் போற்றிக் கொண்டாடப்படும் அன்னை அற்புதமான சக்தி வாய்ந்தவள். இவ்வூர் புராண காலத்தில் பராபுரி என்று அழைக்கப் பட்டது. பரா என்றால் போற்றுதல், வழிபடுதல் என்றும் புரி என்றால் ஊர்,
என்பதற்கு ஊர், கோட்டை மதில் என்றும் பொருள். கோட்டை மதில்களால் சூழப்பட்ட தலமே பாரியூர் என்பதாக கல்வெட்டுக் குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது. கடையெழு வள்ளல்களில் ஒருவரான பாரியின் குல தெய்வம் கொண்டத்துக் காளியம்மன் என நம்பப்படுகிறது. எனவேதான் பாரியூர் என்று அழைக்கப்படுவதாகவும்
கூறுகின்றனர். வள்ளலின் பெருமைக்கும், செழிப்புக்கும் அன்னையே காரணம் என்று குறிப்பிடப் படுகிறது. இன்றும் பாரியூரைச் சுற்றியுள்ள பகுதிகள் பச்சைப் பசேல் என்று வயல்வெளிகளும், குளுமையான நீர் நிலைகள், அடர்ந்த மரங்களுமாகச் செழித்து காணப்படுகின்றன. கோயில் ராஜகோபுரம் 5 அடுக்குகள் கொண்டது.
#ஸ்ரீகாட்டுவீர_ஆஞ்சநேயர்
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேவ சமுத்திரம் கிராமத்தில் உள்ளது அருள்மிகு ஸ்ரீகாட்டுவீர ஆஞ்சநேயர் திருக்கோயில். அனுமன் சிறுவயது முதலே காடுகளில் வலம் வந்தமையாலும் , இந்த பகுதி பல ஆண்டுகளுக்கு முன்பு வனமாக இருந்தமையாலும், மூலவரானவர் காட்டுவீர ஆஞ்சநேயர் என்ற
என்ற திருநாமம் கொண்டு அழைக்கப் பெறுகிறார். இக்கோவிலில் உள்ள கர்ப்ப கிரகம் 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் விக்கிரகமாக உள்ளது. இப்பகுதி குன்றுகளாக விளை நிலங்களாக இருந்தது. இந்த விளை நிலங்கள் யாவும் வெங்கட்ராம செட்டியாருடையது என்கிறது வரலாறு. அப்போது நிலத்தில் உள்ள பாறையின்
மீது ஆஞ்சநேயர் திருவுருவம் செதுக்கப் பட்டிருந்தது. இதனைப் பார்த்த மக்கள் ஆஞ்சநேயரை பூஜித்து வழிபட்டு வந்தனர். மூலவருக்கு பின்புறம் இருந்த குன்றில் வளர்ந்து கொண்டிருக்கும் நந்தீஸ்வரரும், நாகர்களின் சிலைகளும் காணப்பட்டன. இந்த அதிசயத்தைக் காண நாளுக்கு நாள் பக்தர்களின் வருகை