அதிக மாதம் அல்லது புருஷோத்தம மாதம் (17-09-2020 முதல் 16-10-2020 வரை). இவ்வாறான அதிக மாதத்தில் சுப காரியங்கள் செய்யும் வழக்கம் கிடையாது. புருஷோத்தமன் என்றால் ஒருவரே, அவரே நம் கிருஷ்ணன். அதிக மாதம் என்றால் என்ன? நம் பஞ்சாங்கம் சந்திரனின் கதியை அடிப்படையாகக் கொண்டது. வருடத்தில் ஒரு
மாதம் #அதிகமாதம் என்று பஞ்சாங்கம் கணிப்பவர்கள் தீர்மானித்து அதை அதிக மாதம், பீடை மாதம் என்று சொன்னார்கள். ஏன் இவ்வாறு இந்த மாதத்தை ஒதுக்கி வைக்கிறார்கள், நாம் அதை எடுத்து அதற்கு தனிப்பெருமை கொடுப்போம் என்று எற்றுக் கொண்டுவிட்டார் கிருஷ்ணன். பூமியை சுற்ற சந்திரன் 27.3 நாள் எடுத்து
கொள்கிறது. சூரியனைச் சுற்ற 365.2422 days (பூமியின் சுற்று வேகம் 29.79 km ஒரு வினாடிக்கு). எனவே பூமியும் சந்திரனும் 27.3 நாள் நகர்வதால் சூரியனை சுற்றுவதில் 1/12 மாசம் என்று ஆகிறது. அதாவது ஒரு பௌர்ணமியிலிருந்து மற்றொரு பௌர்ணமி வரை.சந்திரன் இன்னும் 2. 2 நாள் சுற்றினால் தான் அது
முழுமை பெரும். இது பூமி சூரியனை கொஞ்சம் வளைந்து சுற்றுவதால் ஏற்படும் வித்யாசம். சந்திரனோ தனது சுற்றை 27.3 நாளில் முடிக்கிறது. ஆனால் பூமி சூரிய கதியை சார்ந்து பௌர்ணமியாக சந்திரனுக்கு 29.531 நாள் தேவை. ஒரு சந்திர வருஷ கணக்கில் 29.531 நாள் சந்திர மாதங்கள் = 354.372 நாட்கள் ஒரு
சந்திர வருஷத்தில். நமது கணக்கில் (365.2422 - 354.372) =10.87 நாள் வித்தியாசம் வருகிறது. வசிஷ்ட சித்தாந்தம் ஒவ்வொரு 32 மாதம் 16நாள் 8 கடிக்கும் (1 கடி: 24 நிமிஷம்) ஒருமுறை அதிக மாசம் இவ்வாறு ஏற்படுகிறது. எளிமையாக சொன்னால் நமது சந்திரமான வருஷத்தில் ஒரு பிரதமை முதல் அடுத்த
அமாவாசை வரை ஒரு சந்திரமான மாதம். ஒரு சூரிய வருடத்தில் 13 அமாவாசை வந்தால் சந்திரமான மாசங்கள் 13 ஆகிவிடாதா? எந்த மாசத்தில் 2 அமாவாசை வருகிறதோ அந்த முதல் அமாவாசை வரும் மாதத்திற்கு அடுத்த மாதம் ''அதிக'' மாதம்! இந்த வருடம் ஆனி மாதத்தில் 2 அமாவாசை. முதலாவது அமாவாசைக்கு அப்புறம்
பிரதமையிலிருந்து ஆரம்பிக்கும் மாதம் ஆஷாட அதிக மாதம். இந்த மாதத்தில் கிருஷ்ணன் தனது கருணையை, அனுக்ரகத்தை அதிகரித்து அளிக்கிறார் என்று நம்பிக்கை. எப்படி அஷ்டமி, நவமி போன்றவை லௌகீகத்தில் ஏற்றவை அல்ல என்று புறக்கணிக்கப்பட்டாலும் இராமனும் கிருஷ்ணனும் அவற்றை ஏற்று புனித நாளாகச்
செய்தார்களோ அதுபோல் ஒரு மாதத்தை பீடை மாதம் என்று வைக்கப்பட்டது. அதை கிருஷ்ணன் தனதாக ஏற்றுக்கொண்டு அதை மிகச்சிறந்த மாதமாக செய்துவிட்டான். புருஷோத்தம மாதத்திற்கு ஒரு முன்னோடி மார்கழியே. பத்மா புராணமும் ஸ்கந்த புராணமும் இந்த புருஷோத்தம மாதத்தைப் பற்றி என்ன சொல்கிறது?
1) இந்த மாதத்தில் என் ஆசிர்வாதம் பூரண சக்தியோடு இதை அனுஷ்டிக்கிற பக்தனுக்கு உண்டு என்கிறார் ஸ்ரீகிருஷ்ணன். விரதமிருப்பவனின் சகல பாபங்களும் தீரும். பரிசுத்த பக்திக்கு இந்த மாதத்தில் அனுஷ்டிக்கும் விரதமே மூலம். வேதத்தில் சொன்ன சத் காரியங்களின் பலனை விட புருஷோத்தம மாத அனுஷ்டானம்
மேன்மையானது . அனுஷ்டிப்பவனுக்கு என் கோ லோகத்தில் ஒரு இடம் நிச்சயம். 2) துர்வாசர், புருஷோத்தம மாதத்தில் எங்காவது பெரு புனித நதியில் நீராடு. கிருஷ்ண நாமாவளி தெரிந்ததை சொல்லி ஏதேனும் ஒரு சிறிய தானம் செய். பிறகு பார் உன் பாபங்கள் மறைவதை என்கிறார். 3) ஒருபுருஷோத்தம மாத விரதம் 1000
கார்த்திகை விரதத்தைவிட மேலானது.
4)வால்மீகி: புருஷோத்தம மாத விரதம் மேற்கோள். 100 அஸ்வமேத யாகம் செய்த பலன் கைமேல் பெறுவாய். கோலோக ப்ரிந்தாவனம் அடைவாய். புருஷோத்தம விரதம் இருப்பவனின் உடலில் தான் சகல புண்ய க்ஷேத்ரங்களும் குடி கொண்டுள்ளது என்கிறார். 5) நைமிசாரண்யம் ரிஷிகள்:
''புருஷோத்தம மாதம் ஒரு கற்பக வ்ருட்சம். இந்த மாதத்தில் பக்தன் கேட்டதெல்லாம் பெருகிறான்!'' 6) ஆன்மீகத்தில் ஒருவன் முன்னேற இந்த மாதம் உகந்தது. கிருஷ்ணன் எல்லா அபராதங்களையும் புறக்கணித்துவிட்டார்.
இந்த புருஷோத்தம விரதம் எப்படி செய்வது? 1) சாத்வீகமாக இருக்கவேண்டும். பிரம்மச்சர்யம்
அனுஷ்டிக்க வேண்டும். தரையில் படுக்க முடிந்தால் படுக்கலாம். 2) சூர்யோதயத்துக்கு முன் குளிக்வேண்டும். முடிந்தால் எங்காவது ஒரு புனித க்ஷேத்ரத்தில், குறைந்தது இந்த மாதத்தில் 3 நாளாவது தங்குதல். 3) கிருஷ்ணனை நினைத்து அவன் சேஷ்டிதங்களை மனதில் அனுபவிகக்கவேண்டும், கேட்கவேண்டும். அவன்
நாமங்களை சொல்லி, ஹரே கிருஷ்ணா மூல மந்திரமும் சொல்ல வேண்டும். (24, 32, 64 என்ற எண்ணிக்கையில்). 4) ராதா கிருஷ்ணா படத்துக்கு சிறிய நெய் தீபம். ரோஜா, தாமரை மலர், துளசி மாலை சூட்டலாம். 5) தினமும் ஸ்ரீமத் பாகவதம் சிறிது பாராயணம், படிக்கலாம். (10வது காண்டம், 14வது அத்தியாயம்,
பிரம்மா கிருஷ்ணனை பிரார்த்திப்பது விசேஷமானது). பகவத் கீதையில் 15வது அத்தியாயம்.
6) பூஜை அறையில் இருக்கும் புத்தகங்களில் ஸ்ரீ ஜகன்னாதாஷ்டகம், ஸ்ரீ நந்தனந்தனாஷ்டகம், கண்ணில் தென்பட்டால் நீங்கள் பாக்ய சாலிகள். அவற்றை படிக்கலாம். ராதாகிருஷ்ண பஜனையோ பிரார்த்தனையோ மிக விசேஷம்.
7) ரொம்ப பெரிய விஷயம் என்னவென்றால் இந்த மாதம் எல்லோரிடமும் அமைதியாக இருப்பேன். பொய் பேசமாட்டேன் என்று உறுதி ஏற்றுக்கொள்ள வேண்டும்.
8) எவர் சில்வர் தட்டு இல்லாமல் இந்த ஒரு மாதம் மட்டும் வாழை இலையில் சாப்பிடுவோம். (முடிந்தால் தரையில் அமர்ந்து).
9) பசுவுக்கு கீரையாவது தானம்
கொடுப்போம். முடிந்தால் பிராமணர்களுக்கு கொஞ்சம் தக்ஷிணை.
10) இந்த ஒரு மாதம் முடி திருத்தும் நிலையம் அணுகாமல் வேறுபக்கம் திரும்பி நடப்போம். நகத்தை வெட்டக்கூடாது.
11) கடுகு எண்ணெய் வேண்டாம்.
12) ஒரு வேளை ஆகாரம். மதியமோ சூரியன் மறைந்த பிறகோ பால் பழங்கள், சாதுர்மாச்யத்தில்
உபயோகிக்கும் காய் கறிகள் மட்டும் உபயோகிக்கலாம்.
13) கௌண்டின்ய முனி ஒரு மந்திரம் சொல்லிக்கொடுக்கிறார். அதைச் சொல்வோமே:
கோவர்தன தரம் வந்தே,
கோபாலம் கோப ரூபினம்
கோகுலோத்சவம் ஈசானம்
கோவிந்தம் கோபிகா ப்ரியம்
கிருஷ்ணனை நினைக்க இதை பயன்படுத்திக் கொள்வோம் .
தகவல் நன்றி
sreekrishnarpanamsevasociety
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#நற்சிந்தனை
விதுரர் திருதராஷ்டிரருக்கும், பாண்டுவுக்கும் தம்பி. பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் சித்தப்பா. விதுரரின் தாயார் ஒரு பணிப் பெண்ணாக இருந்தவர். விதுரர் மகா நீதிமான். தருமத்திலிருந்து சிறிதளவும் நழுவாதவர். 100 வயது வரை வாழ விதுரர் சொன்ன நீதி சாஸ்திரம் கீழே!
திருதராஷ்டிரன் விதுரரைப் பார்த்து, மனிதனுக்கு ஆயுள் 100 வருடங்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இருந்தும், முழுமையான ஆயுள் வரை யாரும் வாழ்வதாகத் தெரியவில்லையே இது ஏன் என்று கேட்டார். அதற்கு விதுரர், 6 கூரிய வாள்கள் தான் மனிதனின் ஆயுளை குறைகின்றன என்றார்
அவை:
அதிக கர்வம் கொள்ளுதல்
அதிகம் பேசுதல்
தியாக மனப்பான்மை இல்லாமை
கோபம்
சுய நலம்
நண்பர்களுக்கு துரோகம் இழைப்பது
விதுரர் கூறீய அந்த 6 வாள்கள் எப்படி இருக்கும்? அதைப் போக்க என்ன செய்ய வேண்டும்?
#முதலாவது_வாள் அதிக கர்வம் கொள்ளுதல்- தான் கெட்டிக்காரன், தான் செல்வந்தன், தான் கொடையாளி, தான் நல்லவன், பிறர்
பஞ்ச பாத்திரம்
பஞ்ச பாத்திரத்தை பற்றி 3 விதமான விவரங்கள் உண்டு. முதலில் ஆராதனத்திற்க்கு பயன்படும் அந்த பஞ்ச பாத்திரம் இயற் பெயர்
பஞ்ச பத்ர பாத்திரம் என்பர் பெரியோர். அதாவது அந்த பாத்திரத்தில் ஐவகை
பத்திரங்களை (இலைகள்) அதிலுள்ள நீரில் இட்டு அந்நீரை உத்தரணி என்ற சிறு கரண்டியால்
எடுத்து ஆராதனைகளுக்கு பயன் படுத்துவதால் அப்பெயர்.
பஞ்ச பத்ரம்
அது, துளசி, அருகு, வேம்பு, வில்வம், வன்னி ஆகிய இலைகளே பஞ்ச பத்திரங்கள் என்பர். இந்த பத்திரங்களும் தீர்த்தமும் விடப்படும்
பாத்திரம் பஞ்ச பத்ர பாத்திரம். இதுவே காலப் போக்கில் மருவி பஞ்ச பாத்திரம் என்றானது. இந்த
பத்திரங்கள் மூலிகைகளாகும். இந்த பத்ரங்கள் தெய்வீகமானவை பூஜைகளுக்கு ஏற்றவை. இப்படியாக 5 இலைகளையும் பகவத் கைங்கர்யத்திற்க்கு அர்ப்பணித்து அர்க்யம், பாத்யம், ஆசமனியம் என தீர்த்தம் விடுவதாலேயே அந்த பாத்திரம் பஞ்ச பத்ர பாத்திரம் என்று அழைக்கப்படுகிறது. ஶ்ரீ வைஷ்ணவர்கள் விஷ்ணு பகவான்
முருகன் கோவில்களில் உள்ள சில சிறப்புகள்
அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் திருக்கோவிலில் கொடிமரத்தில் இருந்து வலமாக எல்லாச் சன்னிதிகளுக்கும் நாம் சென்று வந்தால் ஓம் என்ற எழுத்து வடிவில் அப்பாதை அமைந்துள்ளதைக் காணலாம். இங்கு மட்டுமே விபூதியை பன்னீர் இலையில் மடித்து தருவர்.
இந்தப் பன்னீர் இலையை பிரித்தால் 12 நரம்புகள் இலையில் இருப்பதை உணரலாம். இவை முருகனின் 12 திருக் கரங்களைக் குறிக்கின்றன. திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கென்று தங்கக் குடங்கள் இருக்கின்றன. வேள்வி மற்றும் குடமுழுக்கு நாட்களில் இவை பயன்படுத்தப்படுகின்றன. தங்கத் தேங்காய்களும் இங்கு
உண்டு. இவை முக்கியப் பிரமுகர்கள் வருகை, பூரண கும்ப மரியாதை மற்றும் வேள்வியின் போது பயன்படுத்தப் படுகின்றன.
திருக்கழுக்குன்றம் மலை மீதுள்ள வேதகிரீஸ்வரர் ஆலயத்தில், முருகப்பெருமான் 6 திருக்கரங்களுடன் மயில் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். முருகப் பெருமானோடு வள்ளி-தெய்வானை
வானமாமலை கலியன் ஸ்வாமி மிகுந்த புலமை உள்ளவர். தமிழ் ஹிந்தி ஆங்கிலம் தெலுங்கு ஆகிய மொழிகளை பேசவும் எழுதவும் படிக்கவும் தெரியும். நவோதயா பள்ளியில் பலவற்றில் பணியாற்றி அதன் தலைமை பீடத்திலும் அமர்ந்தவர். திருக்குறளை ஹிந்தியில்
மொழி பெயர்த்தவர். அவர்களை ஶ்ரீவைணவ உலகில் இந்திய அளவில் அனைவருக்கும் தெரியும். ஜீயரின் 75வது சம்வஸ்த்ர வைபவம் நடந்த போது அவரை கம்யூனிச சித்தாந்தத்தை கொண்ட பத்திரிகை நிருபர் பேட்டி எடுத்தார். இந்து மதத்தை சிறுமைப்படுத்தியும் கிறிஸ்தவ முஸ்லிம் மார்க்கங்களை உயர்த்தியும் தாங்கிப்
பிடிப்பதிலேயே அவர் ப்பேட்டியின் சாரமாக இருந்தது. ஸ்வாமியிடம் தன்னை அறிமுகபடுத்தி கொண்டு பேட்டியை எடுத்தவர் பேட்டியின் இடையே இஸ்லாத்தை கண்டு பிடித்தவர் யார் ஸ்வாமிஜி என கேட்டார். முகம்மது நபி என்றார் ஸ்வாமி. கிறிஸ்தவ மதத்தை ஸ்தாபித்தவர் ஸ்வாமி என கேட்க
ஏசுகிரிஸ்து என்றார் ஜீயர்.
#அருள்மிகு_கோரக்கநாதர்_ஆலயம்
திருநெல்வேலி மாவட்டம்
ஆழ்வார் குறிச்சியின் அத்ரி மலை அடிவாரத்தில் உள்ள அணையின் மட்டத்தில் இருந்து சுமார் 6 கிமீ உயரத்தில் உள்ளது. மும்மூர்த்திகள் தங்கியிருந்த அத்ரி அனுசுயாதேவி சமேத அத்ரி பரமேஸ்வர் கோவில். உலகம் தோன்றிய காலத்திலேயே அவதரித்த ரிஷிகளில்
ஒருவர் அத்ரி மகரிஷி சிருஷ்டி கர்த்தாவான பிரம்மதேவரின் மானசபுத்திரரான இவரது மனைவியின் பெயர் அனுசுயா. வேத, புராண, இதிகாசங்கள் அனைத்திலும் இந்தத் தம்பதியர் உயர்வாக பேசப்பட்டுள்ளனர். தவசக்தியில் இருவருமே சளைத்தவர்கள் அல்லர். இந்தத் தம்பதியர் ஆசிரமம் அமைத்து தவம் மேற்கொண்டது, பொதிகை
மலை தொடரில் உள்ள திரிகூடமலைப் பகுதியாகும். எனவே இந்தப் பகுதிக்கு அத்ரிமலை என்றும் பெயருண்டு. நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் இருந்து 9 கிமீ தொலைவில் உள்ளது அத்ரிமலை அடிவாரம். மலையடிவாரத்தில் கடனாநதி அணை உள்ளது. இந்த அணையின் மட்டத்தில் இருந்து 6 கிலோமீட்டர் உயரத்தில் அத்ரி
இந்த விநாயகப் பெருமான் அமைதியான சூழலில் ஒரு குளத்தின் அருகில் கோயில் கொண்டு அருள் பாலிக்கிறார். சதுர் ஸஹஸ்ர கணபதி என்று வட மொழியில் வழங்கப்படும் இப்பிள்ளையாருக்கு இப்பெயர் வந்த காரணம் சுவாரஸ்யமானது. இராமாயண காலத்தில்
நடைபெற்ற சம்பவத்தைக் கொண்டு இப்பெயர் காரணப் பெயர் ஆயிற்று.
இவரே க்ஷேத்ர கணபதி. கிஷ்கிந்தையை ஆண்டு வந்த வாலிக்கு யாரிடம் போரிட்டாலும் எதிரியின் பலத்தில் பாதி தனக்கு வர வேண்டும் என்ற வரத்தைப் பிரமதேவனிடம் பெற்றான். பிரமனை நோக்கிக் கடுமையான தவம் செய்ய ஒரு குகைக்குள் இருந்தான்.
நெடும்காலமாகியும் வாலி வெளியில் வராதது கண்டு அஞ்சிய அவனது வீரர்கள் குகையை ஒரு பாறாங் கல்லால் மூடிவிட்டுக் கிஷ்கிந்தைக்குத் திரும்பி விட்டனர். இதற்கிடையில், கடும் தவத்தின் பலனாக வாலிக்குப் பிரமனின் தரிசனம் கிடைத்தது. வாலி வேண்டியவாறே எதிரியின் பலத்தில் பாதி அவனுக்கு வரும்படியாக