இன்று காலை நடை பயிற்சி முடித்து வீடு தரும்பும் போது , எங்கள் பின்னால் என் அம்மா வயதுடைய பெண்மணி வேகமாக கூப்பிட்டு கொண்டே வந்தார்.. நாங்கள் தமிழ் என்று தெரிந்தவுடன் தமிழிலேயே பேச ஆரம்பித்தார் ..தம்பி வீட்ல வேலை ஏதாச்சும் இருந்தா கொடுங்கப்பா என்றார்..1/n
என்ன ஏது என்று விசாரித்ததில் அவர் எங்கள் ஏரியாவில் பூவிற்கும் பூக்காரம்மா.. நெறைய வீட்டிற்கு காலையில பூ போடுவேன் தம்பி..சாயங்காலம் பக்கத்துல உள்ள ஹாஸ்பிடல் ல cleaning வேலை செய்வேன். மாசம் 12 ஆயிரம் கொடுத்துகிட்டு இருந்தாங்க..இப்போ ஆறு மாசம் ஆச்சு அந்த வேலைக்கு போயி என்றார்..2/n
ரொம்ப கஷ்டமா இருக்கு தம்பி..எல்லா வேலையும் செய்வேன்..வீட்ல வேலை இருந்தா சொல்லுங்க என்று மன்றடினார்..எங்கள் வீட்டில் வேலைக்கு யாரும் தேவை இல்லை என்று சொன்னபோது சாப்பிட ஏதாவது காசு கொடுங்க தம்பி ..சாப்பிட்டு ஒரு நாள் ஆச்சு என்றார்..தூக்கி வாறி போட்டது எனக்கு...3/n
மாதம் 12000 சம்பளம் வாங்கியவர். அது இல்லாமல் பூ விற்று சாம்பதிதவர் இன்று சாப்பிட்டு ஒரு நாள் ஆகிறது. எளிய மக்கள் வாழ்வை கொரோனோ மிக கொடூர நிலைக்கு தள்ளி விட்டது. கையில் இருந்த 200 ரூபாயை கொடுத்து விட்டு வீட்டை நோக்கி நடந்தோம் 4/n
ஆனால் இந்த நிகழ்வு காலையில் இருந்து என்னை மிகுந்த மன உளைச்சளுக்கு ஆளாக்கி விட்டது. எளிய மக்கள் வாழ்வை ஒரு பெரும் புயல் போல் இந்த கொரோனோ அழித்து விட்டது. உங்களால் முடிந்த வரை எளிய மக்களுக்கு உதவுங்கள் 5/n
Super Market இல் காய்கறி வாங்காமல் தள்ளு வண்டி கடையில் வாங்குங்கள்.
Online இல் ஆர்டர் செய்யாமல் உங்கள் பக்கத்து கடையில் வாங்குங்கள்.
ஏழை எளியோரிடம் பேரம் பேசாமல் சொன்ன விலக்கு வாங்கி கொள்ளுங்கள்.
முடிந்தால் வேலை வாங்கி கொடுங்கள் 6/N
கொரோனோ ஏற்படுத்திய பொருளாதார தாக்கம் மத்திய தர மக்களை விட விளிம்பு நிலை மனிதர்களை பெரிய அளவில் பாதித்து விட்டது என்பதை உணர்வோம். உங்களால் முடிந்த சின்ன சின்ன உதவிகளை அவர்களுக்கு செய்யுங்கள். கொஞ்சம் பெருந்தமையோடு இருங்கள் . அனைவரும் ஒன்றாக கொரோனோ வை எதிர் கொள்வோம் .மீள்வோம் 8/8
இன்று தேசிய பங்கு சந்தையில் பங்குங்கள் பெரும் வீழிச்சியை கண்டுள்ளன.
நம்ம கிட்டதான் எந்த trading account உம் இல்லையே..நாம பங்கு சந்தை பக்கம் போனதே இல்லையே என்று நீங்கள் நினைத்தால் அது மாபெரும் தவறு.எப்படி எல்லாம் அது உங்களை பாதிக்கும் என்று இந்த இழையில் சொல்ல விரும்புகிறேன் ..1/n
1. இன்சூரன்ஸ் : நம்மில் பெரும்பாலானோர் காப்பீடு எடுத்து உள்ளோம். காப்பீடு நிறுவனங்கள் நேரடியாகவோ , மறைமுகமாகவோ சந்தையில் முதலீடு செய்துள்ளது. காப்பீட்டு நிறுவனங்களின் இழப்பு வாடிக்கையாளர் தலையிலேயே கட்டப்படும். நீங்கள் அதிக பிரிமியம் செலுத்த நேரிடும். சில பாலிசிகள் திவாலாகலாம்2/n
2.பிரவிடெண்ட் பண்ட்: உங்கள் ப்ரோவிடெண்ட் பண்ட் ,NPS , போன்றவை கூட பங்கு சந்தையில் முதலீடு செய்கிறது. சிலர் வரி சலுகை காக , mutual fund இல் முதலீடு செய்கின்றனர். அவர்களுக்கும் இது கடும் பாதிப்பு..3/N