புதுடில்லி: ஜே.இ.இ., முதல்நிலை தேர்வுகள் இனி மாநில மொழிகளில் நடத்தப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
தேசிய அளவில் உள்ள ஐஐடி(இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர்வதற்காக ஜே.இ.இ., தேர்வுகள் நடத்தப்படும். இவை ஜே.இ.இ., முதல்நிலை தேர்வு, ஜே.இ.இ., அட்வான்ஸ்ட் தேர்வு எஜ இரு கட்டங்களாக நடத்தப்படும்.
இதில் முதல்நிலை தேர்வு, ஹிந்தி, ஆங்கிலம், குஜராத்தி மொழிகளில் மட்டும் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், ஜே.இ.இ., முதல்நிலை தேர்வுகள், பிற மாநில மொழிகளில் நடத்தப்படும் என கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் பதிவிட்டதாவது: தேசிய கல்வி கொள்கையின்படி, ஜே.இ.இ., முதல் நிலை தேர்வுகளை அதிக அளவிலான மாநில மொழிகளில் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதனால், மாணவர்கள், கேள்விகளை சரியாக புரிந்து கொள்வதுடன், தேர்வில் அதிக மதிப்பெண் பெறவும் வழிவகுக்கும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
தினமலர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஒருவருக்கு தேதி குறித்துவிட்டால், அந்த தேதியில் உயிரை எமன் எடுத்துவிடுவார் என்று சொல்லுவார்கள். அப்படி ஒரு சிற்பிக்கு தேதி குறித்துவிட்டார் எமன். அந்த தேதி பற்றி சிற்பிக்கும் எப்படியோ தெரியவந்துவிட்டது. சிற்பிக்கு இறக்க விருப்பமில்லை.
எமன் ஒருமுறைதான் பாசக்கயிற்றை வீசுவார். அதில் தவறிவிட்டால், மீண்டும் வீசி உயிரைப் பறிக்கும் அதிகாரம் எமனுக்கு இல்லை என்பதும் சிற்பிக்கு தெரியும்.
அதனைப் பயன்படுத்திக்கொள்ள ஒரு யுக்தி செய்தார்.
தன் திறமை எல்லாம் காட்டி தன்னைப்போலவே அச்சு அசலாக இரண்டு சிலைகள் செய்தார். எமன் வரும் நேரம் அவற்றை தரையில் சாய்த்து படுக்கவைத்துவிட்டு, நடுவில் தானும் படுத்து கண்ணை மூடிக்கொண்டுவிட்டார்.
‛காங்., ஆளும் மாநிலங்களில் நடக்கும் குற்றங்களை கவனிங்க ராகுல்
புதுடில்லி: ராகுல், சோனியா, பிரியங்கா ஆகியோர் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் நடக்கும் குற்றங்களை கவனிக்கத் தவறுவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் பகுதியில் புலம்பெயர்ந்த பட்டியலினத்தை தொழிலாளியின் 6 வயது மகளை அதேப்பகுதியைச் சேர்ந்த குர்பிரீத் சிங் என்பவர் தமது தாத்தாவுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்றனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இது குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாவது:
பெண்கள் எங்கே மதிக்கப்படுகிறார்களோ, அங்கே இறைவன் குடியிருந்து அருள்புரிவான். பெண்கள் எங்கே அவமதிக்கப்படுகிறார்களோ, அங்கே செய்யும் அத்தனை நற்செயல்களும் வீண் போகும்.
திராவிட நம்பிக்கை, கொள்கைகள் என்பதை எப்படி எடுத்து கொள்ளவேண்டும்
ByMaridhas
கேள்வி: திராவிட நம்பிக்கை, கொள்கைகள் என்பதை நான் எப்படி எடுத்து கொள்ளவேண்டும்.
இதை நான் ஒரு இன அடையாளமாக எடுத்து கொள்ளவேண்டுமா இல்லை வெறும் கலாச்சார பிரிவு என்று ஏற்றுகொள்ள வேண்டுமா? எனக்கு இந்த “திராவிடம்” குழப்பமாக இருக்கு. – கார்த்திக்
இங்கே கடந்த 300வருட ஆட்சி, மக்கள் வாழ்வு, அதன் நகர்வை நீங்கள் பொறுமையாக எந்த சார்பும் இல்லாமல் தேடி படிக்கவேண்டும்.அப்போதான் உங்களால் தெளிவான அரசியல் எப்படி நடந்தது எப்படி மாறி நிற்கிறது என்று உணர முடியும்.