ஆங்கிலேயர்களின் இந்தியாவைவிட, ஹிந்து இந்தியா மிகச்சிறந்ததாக இருக்கும். அஷ்பகுல்லா கான்
இந்திய விடுதலைப் போராட்டம் என்றது ஒரு சில பெயர்களே காலம் காலமாய் நம் நினைவிற்கு வரும். காரணம், அவை திரும்ப திரும்ப சொல்லப்பட்டு வருவதால்.
ஆனால், நாம் அறிந்து கொள்ளாத, ஆனால் அறிந்து கொள்ள வேண்டிய மாவீரர்கள் எந்தனையோ பேர் இருக்கின்றனர். அவர்களில் ஒருவர்தான் அஷ்ஃபகுல்லா கான்.
அக்டோபர் 1900ல் உத்திரபிரதேச மாநில சாசகான்பூரில் ஷபிகுல்லா கான் மற்றும் மஜ்ஹூருன் நிசா ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார் அந்த தேசபக்தன்.
இறப்பு என்பது ஒருமுறைதான் வரும்
அதைக்கண்டு ஏன் அஞ்சுகிறாய்?
என்று முழங்கிய மாவீரர் அவர்.
சிறையில் இருந்தபோதுகூட விடாமல் ஐந்து வேளையும் தொழுகையை அவன் நிறைவேற்றினான். நோன்புகாலத்தில் நோன்பு பிடித்தான். தினமும் குர்’ஆன் ஓதும் பழக்கமும் அவனிடம் இருந்தது.
தன் மதக் கடமைகளை தவறாது நிறைவேற்றிய அந்த இளைஞன் தன் தேசத்திற்காக இன்னுயிரை நீத்தான் என்பது வரலாறு. மதத்திற்காக தேசத்தை வெறுக்கும் தற்போது இருக்கும் சிலரைப் போல் அல்ல அவன் சரித்திரம்.
சிறை அதிகாரிகள் அந்த மாவீரனை தூக்கு மேடைக்கு அழைக்க அவரது அறைக்கு சென்றனர். அப்போது அஷ்பகுல்லா கான் அவர்களைப் பார்த்து கேட்ட வாசகம், அவர்களை சற்று நிலைகுலைய வைத்தது என்றே சொல்லலாம்.
"எல்லாம் தயாராக உள்ளதா", தீர்க்கமான குரலில் தெரிந்தது அவர் தன் மரணத்தை ஏற்க எத்தனை தயாராக இருந்தார் என்று.
கொஞ்சம் சிரமத்துடன் அதிகாரி, ‘ஆமாம், எல்லாம் தயாராக உள்ளது’ என்றார்! தான் ஓதிக்கொண்டிருந்த குர்’ஆனை மூடி தன் கைகளில் வைத்துக்கொண்டார். எழுந்து நின்று, ‘போகலாம்’ என்றார்.
ஆறடி உயரம். அகலமான மார்பு. இரும்பு உடல். சிங்க நெஞ்சம்.உதடுகளில் ஒரு புன்னகை எப்போதுமே இருக்கும். அப்போதும் அது இருந்தது. கைகளில் விலங்குடன் அந்த இளைஞன், ராணுவ வீரர்களுக்கு மத்தியில் மிடுக்காக நடந்துசென்று, தனக்காக தயாராக இருந்த தூக்குமேடைக்குச் சென்றார்.
கையை நீட்டி தூக்குக் கயிற்றை தன்னை நோக்கி இழுத்து முத்தமிட்டார்.
இறவாத இந்திய நாயகர்களின் வரிசையில் அவரும் சேர்ந்துகொண்டார். ஏன் அவரைக் கொன்றது ஆங்கிலேய அரசாங்கம்?அவர் ஒரு கவிஞர். ஒரு புரட்சியாளர்.
இந்தியாவின் விடுதலைக்காகப் போரிட்டவர். தூக்கு தண்டனை விதிக்குமளவு அப்படி என்ன செய்தார்?
எப்படியாவது இந்தியா, ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற வேண்டும் என்ற ஆசை. எனவே, அதே ஊரில் பிரபலமான விடுதலைப் போராளியாக இருந்த ராம்பிரசாத் பிஸ்மில் உடன் சேர்ந்து நாட்டுக்காக ரகசியமாகப் பணியாற்றினார். ராம்பிரசாத், ஒரு மூத்த சகோதரனைப்போல் அவனோடு பழகினார்.
ஷாஜஹான்பூரில் இருந்து லக்னோவிற்க்கு ரயிலில் சென்றுகொண்டிருந்தபோது ராம்பிரசாத் அரசுப் பணம் பெருமளவில் கொண்டு செல்லப்படுவதை கவனித்தார். பணத்தைக் கொள்ளையடிக்கத் திட்டம் தீட்டப்பட்டது. எல்லோரும் அதை வரவேற்றனர்.
ஆனால் அஷ்பகுல்லா கான் மட்டும் எழுந்து நின்று, ‘நண்பர்களே, இது அவசர முடிவு. நம்முடைய பலம், அரசின் பலம் இரண்டையும் நாம் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். சாதாரணக் கொள்ளையில் இவ்வளவு பணம் கிடைப்பதில்லை. எனவே, கொஞ்சமாக பணம் காணாமல் போனால் அதை அரசு பெரிதாக எடுத்துக்கொள்ளாது.
காவல் துறை பார்த்துக்கொள்ளட்டும் என்று இருந்துவிடும். ஆனால் அரசுக்குச் சொந்தமான பெரும் பணத்தை நாம் எடுக்கும்போது, அரசு இயந்திரம் முழுவதும் முடுக்கிவிடப்பட்டு நாம் தேடப்படுவோம். எப்படியும் பிடிபட்டுவிடுவோம். தண்டனையில் இருந்தும் தப்பிக்க முடியாது.
நம் அமைப்பு அவ்வளவு உறுதியானதாக இன்னும் மாறவில்லை. எனவே இந்தத் திட்டம் வேண்டாம் என்று நினைக்கிறேன்’ என்று கூறினான்.
ஆனால் புரட்சியாளர்கள், உணர்ச்சியின் பிடியில் இருந்தனர். அவர் சொன்னதன் பின்னால் இருந்த உண்மையை உணர அவர்களுக்கு அப்போது அவகாசமில்லை.
நீண்ட விவாதத்துக்குப் பிறகு, திட்டத்தைச் செயல்படுத்தலாம் என்ற முடிவுக்கே அவர்கள் வந்தனர். மாற்றுக் கருத்து சொன்னாலும் அமைப்பின் முடிவுக்கு அவன் கட்டுப்பட்டார்.
ரயில், ககோரி என்ற ஊரில் வந்து நின்றது. அதுவாக நிற்கவில்லை. போராளிகள் சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினார்கள். ஏன் ரயில் நின்றது, யார் நிறுத்தினார்கள் என்று விசாரிப்பதற்குள், தங்கள் காரியத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டார்கள்.
ஆனால், பணம் இருந்த இரும்புப்பெட்டியை மற்ற போராளிகளால் உடைக்கவே முடியவில்லை. கடைசியில், அஷ்பகுல்லா கான்தான் சம்மட்டி கொண்டு அடிமேல் அடிகொடுத்து அதை உடைத்து பணத்தை எடுக்க வழிகோலினார். அபரிமிதமான பணம் கிடைத்துவிட்டது.
ஆனால் ஒரு மாதம் கழித்து, அரசாங்கம் ஸ்காட்லாந்து யார்டு காவல் துறையின் உதவியுடன், ராம்பிரசாத்தையும் மற்றவர்களையும் கைது செய்தது. அஷ்பகுல்லா கான் மட்டும் பிடிபடவில்லை. பிஹாரிலும் டெல்லியிலும் பல இடங்களில் பணிபுரிந்து வந்தார். அப்போது தன் பள்ளிப்பருவ நண்பன் ஒருவனை சந்தித்தார்.
அந்த நண்பன் இவருக்கு சாப்பாடெல்லாம் வாங்கிக்கொடுத்து உபசரித்தான். இரவு 11 மணிக்கு மேல் தன் அறைக்குத் திரும்பிய இவரை போலீஸ் வந்து கைது செய்தது. விலைபோய்விட்ட பள்ளி நண்பனின் துரோகம்!
காவல் துறை அவரைத் தன் பக்கம் இழுக்க முயன்றது. வழக்கம்போல பிரித்தாளும் சூழ்ச்சிதான். தசத்துர் கான் என்ற ராணுவ அதிகாரியை பேச அனுப்பியது. ‘ராம்பிரசாத் ஒரு ஹிந்து. ஹிந்துக்கள் அவர்களுடைய ராஜ்ஜியத்துக்காக போராடுகிறார்கள்.
நாம் எதற்காக அதில் கலந்துகொள்ள வேண்டும்?’ என்ற ரீதியில் அவனை மூளைச்சலவை செய்ய கான் முயன்றார்.
ஆனால், ‘கான் சாஹிப், ஆங்கிலேயர்களின் இந்தியாவைவிட, ஹிந்து இந்தியா மிகச்சிறந்ததாக இருக்கும்’ என்று கூறி அவர் வாயை அடைத்தார் அஷ்பகுல்லா கான்.
தண்டனைராம்பிரசாத், ராஜேந்திர லஹரி, ரோஷன் சிங், அஷ்பகுல்லா கான் நால்வருக்கும் தூக்கு தண்டனையும், மற்றவர்களுக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது. ராம்பிரசாத்தும், அஷ்பகுல்லா கானும் , ஒரே நாளில் வேறு வேறு சிறைகளில் தூக்கிலிடப்பட்டனர்.
மதத்திற்காக தேசத்தை துச்சமென பேசும் சில அமைப்புகளும் சில நபர்களும் தெரிந்து கொள்ளவேண்டிய வரலாறு அஷ்பகுல்லா கான் எனும் தேசபக்தனின் வரலாறு.
தாமரை மீடியா
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஒருவருக்கு தேதி குறித்துவிட்டால், அந்த தேதியில் உயிரை எமன் எடுத்துவிடுவார் என்று சொல்லுவார்கள். அப்படி ஒரு சிற்பிக்கு தேதி குறித்துவிட்டார் எமன். அந்த தேதி பற்றி சிற்பிக்கும் எப்படியோ தெரியவந்துவிட்டது. சிற்பிக்கு இறக்க விருப்பமில்லை.
எமன் ஒருமுறைதான் பாசக்கயிற்றை வீசுவார். அதில் தவறிவிட்டால், மீண்டும் வீசி உயிரைப் பறிக்கும் அதிகாரம் எமனுக்கு இல்லை என்பதும் சிற்பிக்கு தெரியும்.
அதனைப் பயன்படுத்திக்கொள்ள ஒரு யுக்தி செய்தார்.
தன் திறமை எல்லாம் காட்டி தன்னைப்போலவே அச்சு அசலாக இரண்டு சிலைகள் செய்தார். எமன் வரும் நேரம் அவற்றை தரையில் சாய்த்து படுக்கவைத்துவிட்டு, நடுவில் தானும் படுத்து கண்ணை மூடிக்கொண்டுவிட்டார்.
‛காங்., ஆளும் மாநிலங்களில் நடக்கும் குற்றங்களை கவனிங்க ராகுல்
புதுடில்லி: ராகுல், சோனியா, பிரியங்கா ஆகியோர் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் நடக்கும் குற்றங்களை கவனிக்கத் தவறுவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் பகுதியில் புலம்பெயர்ந்த பட்டியலினத்தை தொழிலாளியின் 6 வயது மகளை அதேப்பகுதியைச் சேர்ந்த குர்பிரீத் சிங் என்பவர் தமது தாத்தாவுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்றனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இது குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாவது:
பெண்கள் எங்கே மதிக்கப்படுகிறார்களோ, அங்கே இறைவன் குடியிருந்து அருள்புரிவான். பெண்கள் எங்கே அவமதிக்கப்படுகிறார்களோ, அங்கே செய்யும் அத்தனை நற்செயல்களும் வீண் போகும்.
திராவிட நம்பிக்கை, கொள்கைகள் என்பதை எப்படி எடுத்து கொள்ளவேண்டும்
ByMaridhas
கேள்வி: திராவிட நம்பிக்கை, கொள்கைகள் என்பதை நான் எப்படி எடுத்து கொள்ளவேண்டும்.
இதை நான் ஒரு இன அடையாளமாக எடுத்து கொள்ளவேண்டுமா இல்லை வெறும் கலாச்சார பிரிவு என்று ஏற்றுகொள்ள வேண்டுமா? எனக்கு இந்த “திராவிடம்” குழப்பமாக இருக்கு. – கார்த்திக்
இங்கே கடந்த 300வருட ஆட்சி, மக்கள் வாழ்வு, அதன் நகர்வை நீங்கள் பொறுமையாக எந்த சார்பும் இல்லாமல் தேடி படிக்கவேண்டும்.அப்போதான் உங்களால் தெளிவான அரசியல் எப்படி நடந்தது எப்படி மாறி நிற்கிறது என்று உணர முடியும்.