பெருங்காய சாகுபடியில் முதல் முதலாக களம் காணும் இந்தியா
இந்திய சமையலறையில் மிக முக்கியமான பங்கை வகிப்பது ஹிங் எனப்படும் பெருங்காயம் ( Asafoetida) ஆகும். இதுவரையில் இறக்குமதி செய்து கொண்டிருந்த நமது நாடு முதல் முறையாக பெருங்காய செடிகளை இந்தியாவில் சாகுபடி செய்யத் தொடங்கியுள்ளது.
பல இந்திய உணவுகளில் அத்தியாவசிய இடுபொருளான ஹிங் அல்லது பெருங்காய மரம் நேற்று இந்தியாவில் முதன்முறையாக நடப்பட்டது. இமாச்சலப் பிரதேசத்தின் கடல் மட்டத்திலிருந்து 11 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள லஹௌல் மற்றும் ஸ்பிட்டி மாவட்டத்தில் நாட்டின் முதல் பெருங்காய சாகுபடி தொடங்கியது. .
CSIR IHBT இயக்குனர் டாக்டர் சஞ்சய் குமார், பெருங்காயத்தின் முதல் மரக்கன்றுகளை நட்டு சாகுபடியை தொடங்கி வைத்தார். .
இந்திய உணவு வகைகளில் பரவலாகப் பயன்படுத்தப்படும் மசாலாப் பொருட்களில் ஹீங் எனப்படும் பெருங்காயம் ஒன்றாகும்.
உலகின் மொத்த பெருங்காய உற்பத்தியில் சரிபாதியை நமது நாடு பயன்படுத்துகிறது. எனினும், பெருங்காய மரங்கள் இந்தியாவில் வளர்க்கப்படவில்லை. இதுவரை நாட்டின் முழுத் தேவையும் இறக்குமதியிலிருந்தே பூர்த்தி செய்யப்பட்டது.
நமது நாட்டுக்குத் தேவையான பெருங்காயம் பெரும்பாலும் ஆப்கானிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்பட மூலப் பொருட்களில் இருந்து நமது நாட்டில் இது பதப்படுத்தப்படுகிறது.
சி.எஸ்.ஐ.ஆர். வெளிநாட்டிலிருந்து அஸ்ஃபோடிடா விதைகளை நமது நாட்டுக்குக் கொண்டு வருவதன் மூலம், அதிலிருந்து தாவரத்தை வளர்ப்பதற்கான ஒரு தொழில் நுட்பத்தை உருவாக்கியுள்ளது. இதனை நிறைவேற்றுவதற்காக CSIR-IHBT, நமது நாட்டில் முதன்முறையாக லஹௌல்-ஸ்பிட்டி மாவட்டத்தை தேர்வுசெய்தது.
சோதனையின் ஒரு பகுதியாக, பள்ளத்தாக்கில் உள்ள 7 விவசாயிகளுக்கு முதலில் அஸ்ஃபோடிடா தாவரங்கள் சாகுபடிக்கு வழங்கப்பட்டுள்ளன.
தற்போது, ஆப்கானிஸ்தான், ஈரான் மற்றும் உஸ்பெகிஸ்தானில் இருந்து ஆண்டுதோறும் சுமார் 600 கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் 1200 டன் மூல பெருங்காயம் இறக்குமதி செய்யப்படுகிறது.
உள்நாட்டு உற்பத்தி தொடங்கியுள்ள நிலையில், வரும் ஆண்டுகளில் அசாஃபோடிடாவின் இறக்குமதி குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா இறக்குமதி செய்யும் பெருங்காயத்தில் 90% ஆப்கானிஸ்தானிலிருந்து வருகிறது.
பெருங்காயம் ஒரு அழியாத தாவரமாகும். சாகுபடி செய்த ஐந்து வருடத்திற்குப் பிறகு இதன் வேர்களில் இருந்து ஓலியோ-கம்-பிசின் (oleo-gum resin) உற்பத்தி ஆகிறது. குளிர்ந்த பாலைவனப் பகுதிகளின் பயன்படுத்தப்படாத சேறும் சகதியுமான நிலத்தில் இதை வளர்க்கலாம்.
தாவரத்தின் தண்டு மற்றும் குழாய் வேரிலிருந்து பெருங்காயப் பிசின் எடுக்கப்படுகிறது. இந்த பெருங்காய பிசின் உற்பத்தி ஆலை ஈரானின் பாலைவனங்களுக்கும் ஆப்கானிஸ்தானின் மலைகளுக்கும் சொந்தமானது, அங்கு தான் பெருங்காய மரங்கள் கணிசமான அளவில் வளர்க்கப்படுகின்றன.
நமக்குத் தேவையானவற்றை நாமே உற்பத்தி செய்வது ஆத்ம நிர்பர் பாரத் திட்டத்தின் முக்கிய குறிக்கோளாகும். உலக உற்பத்தியில் பாதியை நமது தேவைக்கு இதுநாள் வரை இறக்குமதி செய்துகொண்டிருந்தோம்.
இனி இறக்குமதி பெருமளவில் குறையும். பிரதமரின் கனவு திட்டம் நிறைவேருவதின் மற்றொரு வடிவமே இந்த உள்நாட்டு பெருங்காய உற்பத்திக்கான சாகுபடியின் துவக்கம்
சஞ்சிகை
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஒருவருக்கு தேதி குறித்துவிட்டால், அந்த தேதியில் உயிரை எமன் எடுத்துவிடுவார் என்று சொல்லுவார்கள். அப்படி ஒரு சிற்பிக்கு தேதி குறித்துவிட்டார் எமன். அந்த தேதி பற்றி சிற்பிக்கும் எப்படியோ தெரியவந்துவிட்டது. சிற்பிக்கு இறக்க விருப்பமில்லை.
எமன் ஒருமுறைதான் பாசக்கயிற்றை வீசுவார். அதில் தவறிவிட்டால், மீண்டும் வீசி உயிரைப் பறிக்கும் அதிகாரம் எமனுக்கு இல்லை என்பதும் சிற்பிக்கு தெரியும்.
அதனைப் பயன்படுத்திக்கொள்ள ஒரு யுக்தி செய்தார்.
தன் திறமை எல்லாம் காட்டி தன்னைப்போலவே அச்சு அசலாக இரண்டு சிலைகள் செய்தார். எமன் வரும் நேரம் அவற்றை தரையில் சாய்த்து படுக்கவைத்துவிட்டு, நடுவில் தானும் படுத்து கண்ணை மூடிக்கொண்டுவிட்டார்.
‛காங்., ஆளும் மாநிலங்களில் நடக்கும் குற்றங்களை கவனிங்க ராகுல்
புதுடில்லி: ராகுல், சோனியா, பிரியங்கா ஆகியோர் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் நடக்கும் குற்றங்களை கவனிக்கத் தவறுவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் பகுதியில் புலம்பெயர்ந்த பட்டியலினத்தை தொழிலாளியின் 6 வயது மகளை அதேப்பகுதியைச் சேர்ந்த குர்பிரீத் சிங் என்பவர் தமது தாத்தாவுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்றனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இது குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாவது:
பெண்கள் எங்கே மதிக்கப்படுகிறார்களோ, அங்கே இறைவன் குடியிருந்து அருள்புரிவான். பெண்கள் எங்கே அவமதிக்கப்படுகிறார்களோ, அங்கே செய்யும் அத்தனை நற்செயல்களும் வீண் போகும்.
திராவிட நம்பிக்கை, கொள்கைகள் என்பதை எப்படி எடுத்து கொள்ளவேண்டும்
ByMaridhas
கேள்வி: திராவிட நம்பிக்கை, கொள்கைகள் என்பதை நான் எப்படி எடுத்து கொள்ளவேண்டும்.
இதை நான் ஒரு இன அடையாளமாக எடுத்து கொள்ளவேண்டுமா இல்லை வெறும் கலாச்சார பிரிவு என்று ஏற்றுகொள்ள வேண்டுமா? எனக்கு இந்த “திராவிடம்” குழப்பமாக இருக்கு. – கார்த்திக்
இங்கே கடந்த 300வருட ஆட்சி, மக்கள் வாழ்வு, அதன் நகர்வை நீங்கள் பொறுமையாக எந்த சார்பும் இல்லாமல் தேடி படிக்கவேண்டும்.அப்போதான் உங்களால் தெளிவான அரசியல் எப்படி நடந்தது எப்படி மாறி நிற்கிறது என்று உணர முடியும்.