பீஹார் முன்னேற்றத்திற்கு உழைத்தோம்: பிரதமர் மோடி பிரசாரம்
சசராம்: பீஹாரின் வளர்ச்சிக்கு முந்தைய காங்., கூட்டணி அரசு இடையூறு ஏற்படுத்தியதாகவும், ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மாநிலம் முன்னேற பாடுபட்டதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பீஹாரில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சசாராம் என்ற இடத்தில் நடந்த பிரசாரத்தில் பிரதமர்மோடியும், முதல்வர் நிதிஷ்குமாரும் பங்கேற்றனர்.இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
ராம்விலாஸ் பாஸ்வானுக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.
கொரோனா தடுப்பு நடவடிக்ககளை பீஹார் அரசு சிறப்பாக கையாண்டது. நாட்டுடன் இணைந்து கொரோனா அச்சுறுத்தலை மக்கள் தைரியத்துடன் எதிர் கொண்டனர். பீஹாரின் வளர்ச்சிக்கு நிதிஷ்குமார் கடுமையாக உழைத்தார்.
பீஹாரில், மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஓட்டுப்போட முடிவு செய்துவிட்டனர். இதனால், எந்த வதந்திகளும் வெற்றியை பாதிக்காது. அனைத்து கருத்து கணிப்புகளும் தேஜ கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் என தெரிவிக்கின்றன. அரசு வேலையை விற்றவர்கள் நிராகரிக்கப்பட வேண்டும்.
தொழில்கள் எளிதாக நடக்க வங்கிக்கடன் எளிதில் வழங்கப்படுகிறது.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது வரலாற்று சிறப்பு மிக்க நடவடிக்கை. எதிர்க்கட்சிகள் இடைத்தரகர்கள் போல் செயல்படுகின்றன. இடைத்தரகர்களிடம் இருந்து நாட்டை தேஜ அரசு பாதுகாத்துள்ளது.
ஆனால், இந்தியாவை பலவீனப்படுத்த எதிர்க்கட்சிகள் விரும்புகின்றன. தே.ஜ., கூட்டணி ஆட்சியில் பீஹார் இரட்டை என்ஜீன் கொண்டதாக திகழ்கிறது. மாநிலத்தில் மின்சார நுகர்வு 3 மடங்கு அதிகரித்துள்ளது.
மின்சாரம் மற்றும் மருத்துவ வசதி அனைத்து மக்களையும் சென்றடைந்துள்ளது. புது சாலைகள், மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
15 ஆண்டுகளாக மாநிலத்தை எதிர்க்கட்சிகள் கொள்ளையடித்தன. பீஹாரில் காட்டாட்சிக்கான காலம் முடிந்துவிட்டது.
கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில்,நிதிஷ்குமார் ஆட்சியை வீணடித்ததுடன், மாநிலத்தின் வளர்ச்சிக்கு பல தடைகளை ஏற்படுத்தியது. எந்த உதவியும் செய்யவில்லை. ஆனால், மாநிலம் முன்னேற்றத்திற்கு தேசிய ஜனநாயக கூட்டணி கடுமையாக உழைத்தது.
தேஜ ஆட்சியில் தான் ஏழைகளுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டன. மின்சார திட்டங்கள் விரைவில் துவங்க உள்ளன. இணைப்பு திட்டங்களுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஒருவருக்கு தேதி குறித்துவிட்டால், அந்த தேதியில் உயிரை எமன் எடுத்துவிடுவார் என்று சொல்லுவார்கள். அப்படி ஒரு சிற்பிக்கு தேதி குறித்துவிட்டார் எமன். அந்த தேதி பற்றி சிற்பிக்கும் எப்படியோ தெரியவந்துவிட்டது. சிற்பிக்கு இறக்க விருப்பமில்லை.
எமன் ஒருமுறைதான் பாசக்கயிற்றை வீசுவார். அதில் தவறிவிட்டால், மீண்டும் வீசி உயிரைப் பறிக்கும் அதிகாரம் எமனுக்கு இல்லை என்பதும் சிற்பிக்கு தெரியும்.
அதனைப் பயன்படுத்திக்கொள்ள ஒரு யுக்தி செய்தார்.
தன் திறமை எல்லாம் காட்டி தன்னைப்போலவே அச்சு அசலாக இரண்டு சிலைகள் செய்தார். எமன் வரும் நேரம் அவற்றை தரையில் சாய்த்து படுக்கவைத்துவிட்டு, நடுவில் தானும் படுத்து கண்ணை மூடிக்கொண்டுவிட்டார்.
‛காங்., ஆளும் மாநிலங்களில் நடக்கும் குற்றங்களை கவனிங்க ராகுல்
புதுடில்லி: ராகுல், சோனியா, பிரியங்கா ஆகியோர் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் நடக்கும் குற்றங்களை கவனிக்கத் தவறுவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் பகுதியில் புலம்பெயர்ந்த பட்டியலினத்தை தொழிலாளியின் 6 வயது மகளை அதேப்பகுதியைச் சேர்ந்த குர்பிரீத் சிங் என்பவர் தமது தாத்தாவுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்றனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இது குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாவது:
பெண்கள் எங்கே மதிக்கப்படுகிறார்களோ, அங்கே இறைவன் குடியிருந்து அருள்புரிவான். பெண்கள் எங்கே அவமதிக்கப்படுகிறார்களோ, அங்கே செய்யும் அத்தனை நற்செயல்களும் வீண் போகும்.
திராவிட நம்பிக்கை, கொள்கைகள் என்பதை எப்படி எடுத்து கொள்ளவேண்டும்
ByMaridhas
கேள்வி: திராவிட நம்பிக்கை, கொள்கைகள் என்பதை நான் எப்படி எடுத்து கொள்ளவேண்டும்.
இதை நான் ஒரு இன அடையாளமாக எடுத்து கொள்ளவேண்டுமா இல்லை வெறும் கலாச்சார பிரிவு என்று ஏற்றுகொள்ள வேண்டுமா? எனக்கு இந்த “திராவிடம்” குழப்பமாக இருக்கு. – கார்த்திக்
இங்கே கடந்த 300வருட ஆட்சி, மக்கள் வாழ்வு, அதன் நகர்வை நீங்கள் பொறுமையாக எந்த சார்பும் இல்லாமல் தேடி படிக்கவேண்டும்.அப்போதான் உங்களால் தெளிவான அரசியல் எப்படி நடந்தது எப்படி மாறி நிற்கிறது என்று உணர முடியும்.