சேவலின் தலை, மயிலின் கழுத்து, எருதின் திமில், சிங்கத்தின் இடை, பாம்பின் வால்,
யானை, புலி, மானின் கால்கள், மனிதனின் கையுடன் கூடிய விலங்கு எப்படி இருக்கும்?
அதுதான் நவகுஞ்சரம்.
‘நவ’ என்றால் ஒன்பதைக் குறிக்கிறது. ஒன்பது விலங்குகளின் கலவை என்பதால் நவகுஞ்சரம் என்று பெயர்.
🇮🇳🙏2
ஒரிய மொழிக் கவிஞரான சரளதாசர் எழுதிய மகாபாரதக் கதையில் நவகுஞ்சரம் சித்தரிக்கப்பட்டுள்ளது.
அர்ஜுனன் மலை மீது தவம் செய்துகொண்டிருந் தார்.
அப்போது நவகுஞ்சர உருவெடுத்து கிருஷ்ணர், அர்ஜுனன் முன் தோன்றியதாக வருகிறது.
🇮🇳🙏3
தவத்திலிருந்து கண் விழித்த அர்ஜூனன், முதலில் நவகுஞ்சரத்தைப் பார்த்து ஆச்சரியமடைந்து திகைத்தார்.
பின்னர் அதன் கையில் தாமரைப் பூவைப் பார்த்தார்.
வெவ்வேறு விலங்குகளின் உடல் உறுப்புகள் சேர்ந்த அதன் உடலமைப்பைப் பார்த்து, ஒரு விஷயத்தைப் புரிந்துகொண்டார்.
🇮🇳🙏4
அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் சொன்ன வார்த்தைகள் ஞாபகத்துக்கு வந்தன.
'மனிதர்களின் எண்ணங்கள் ஒரு வரையறைக்கு உட்பட்டவை. உலகமோ எல்லையற்றது' என்பதை உணர்ந்தார் அர்ஜுனன்.
இதுவரை பார்த்திராத ஓர் உயிர் இந்த உலகில் இருக்கலாம் என்றும் நினைத்தார்.
🇮🇳🙏5
தன்னைச் சோதிப்பதற்காக இந்த உருவத்தில் வந்திருப்பது கிருஷ்ணன்தான் என்று தெரிந்துகொண்டு, எடுத்த வில்லை கீழே போட்டுவிட்டு வணங்கினார்.
ஒடிஷாவில் விளையாடப்படும் கஞ்சிபா சீட்டுக்கட்டு விளையாட்டில் நவகுஞ்சரம் ராஜாவாகவும், அர்ஜுனன் மந்திரியாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளனர்.
🇮🇳🙏6
ஒடிஷாவில் வரையப்படும் ஓவியங்களில் நவகுஞ்சரம் பல வகைகளில் வரையப்படுகிறது.
🇮🇳🙏7
நவகுஞ்சரத்தின் உருவம் பூரி கோவிலின் வடக்குப்புரத்தில் செதுக்கப்பட்டுள்ளது.
அதன் கையில் இருக்கும் நீலச் சக்கிரம் பூரி கோவில் கோபுர கலசத்தின் உச்சாணியில் கம்பீரமாக வீற்றிருக்கிறது.
🇮🇳
வாழ்க பாரதம்
வளர்க பாரதம் 🇮🇳🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஒருவருக்கு தேதி குறித்துவிட்டால், அந்த தேதியில் உயிரை எமன் எடுத்துவிடுவார் என்று சொல்லுவார்கள். அப்படி ஒரு சிற்பிக்கு தேதி குறித்துவிட்டார் எமன். அந்த தேதி பற்றி சிற்பிக்கும் எப்படியோ தெரியவந்துவிட்டது. சிற்பிக்கு இறக்க விருப்பமில்லை.
எமன் ஒருமுறைதான் பாசக்கயிற்றை வீசுவார். அதில் தவறிவிட்டால், மீண்டும் வீசி உயிரைப் பறிக்கும் அதிகாரம் எமனுக்கு இல்லை என்பதும் சிற்பிக்கு தெரியும்.
அதனைப் பயன்படுத்திக்கொள்ள ஒரு யுக்தி செய்தார்.
தன் திறமை எல்லாம் காட்டி தன்னைப்போலவே அச்சு அசலாக இரண்டு சிலைகள் செய்தார். எமன் வரும் நேரம் அவற்றை தரையில் சாய்த்து படுக்கவைத்துவிட்டு, நடுவில் தானும் படுத்து கண்ணை மூடிக்கொண்டுவிட்டார்.
‛காங்., ஆளும் மாநிலங்களில் நடக்கும் குற்றங்களை கவனிங்க ராகுல்
புதுடில்லி: ராகுல், சோனியா, பிரியங்கா ஆகியோர் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் நடக்கும் குற்றங்களை கவனிக்கத் தவறுவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் பகுதியில் புலம்பெயர்ந்த பட்டியலினத்தை தொழிலாளியின் 6 வயது மகளை அதேப்பகுதியைச் சேர்ந்த குர்பிரீத் சிங் என்பவர் தமது தாத்தாவுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்றனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இது குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாவது:
பெண்கள் எங்கே மதிக்கப்படுகிறார்களோ, அங்கே இறைவன் குடியிருந்து அருள்புரிவான். பெண்கள் எங்கே அவமதிக்கப்படுகிறார்களோ, அங்கே செய்யும் அத்தனை நற்செயல்களும் வீண் போகும்.
திராவிட நம்பிக்கை, கொள்கைகள் என்பதை எப்படி எடுத்து கொள்ளவேண்டும்
ByMaridhas
கேள்வி: திராவிட நம்பிக்கை, கொள்கைகள் என்பதை நான் எப்படி எடுத்து கொள்ளவேண்டும்.
இதை நான் ஒரு இன அடையாளமாக எடுத்து கொள்ளவேண்டுமா இல்லை வெறும் கலாச்சார பிரிவு என்று ஏற்றுகொள்ள வேண்டுமா? எனக்கு இந்த “திராவிடம்” குழப்பமாக இருக்கு. – கார்த்திக்
இங்கே கடந்த 300வருட ஆட்சி, மக்கள் வாழ்வு, அதன் நகர்வை நீங்கள் பொறுமையாக எந்த சார்பும் இல்லாமல் தேடி படிக்கவேண்டும்.அப்போதான் உங்களால் தெளிவான அரசியல் எப்படி நடந்தது எப்படி மாறி நிற்கிறது என்று உணர முடியும்.