இலவச தடுப்பூசி வாக்குறுதி சட்டத்துக்கு புறம்பானது அல்ல: முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர்கள்
புதுடில்லி: 'பீஹார் மக்களுக்கு, இலவச கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்ற, பா.ஜ.,வின் தேர்தல்அறிக்கையில், சட்டப்படி தவறு இல்லை' என, முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநில சட்டசபை தேர்தல், வரும், 28ல் துவங்கி, மூன்று கட்டங்களாக நடக்கிறது. இதையொட்டி, தே.ஜ., கூட்டணியின் தேர்தல் அறிக்கையை, பா.ஜ., நேற்று முன்தினம் வெளியிட்டது.
அதில், 'தேர்தலில் வெற்றி பெற்றால், பீஹார் மக்களுக்கு, கொரோனா தடுப்பூசி இலவசமாக அளிக்கப்படும்' என, வாக்குறுதி அளிக்கப்பட்டது.கண்டனம்இதற்கு, காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம், சமாஜ்வாதி உள்ளிட்ட, பல்வேறு எதிர்க்கட்சியினரும் கண்டனம் தெரிவித்தனர்.
'நோய் தொற்றின் மீதான மக்களின் அச்சத்தை, பா.ஜ., அரசியல் ஆக்குகிறது' என்ற குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது.
இந்நிலையில், முன்னாள் தேர்தல் கமிஷனர்கள் ஓ.பி.ராவத், குரேஷி உள்ளிட்ட மூவர், இது குறித்து கருத்து தெரிவித்தனர்.அவர்கள் கூறியதாவது:
தேர்தல் அறிக்கை வெளியிடும் ஒரு கட்சி, எந்த மாதிரியான வாக்குறுதியையும் அளிக்கலாம், ஆனால், அதை நிறைவேற்ற தேவையான நிதி ஆதாரம் குறித்தும், அது எப்படி செயல்படுத்தப்படும் என்பது குறித்தும், அக்கட்சி விளக்கம் அளிக்க வேண்டும் என, உச்ச நீதிமன்ற உத்தரவு தெரிவிக்கிறது.
தேர்தல் அறிக்கையில், சட்டப்படி எவ்வித வாக்குறுதிகளையும் அளிக்கலாம். ஆனால், அவை நியாயமற்றதாக இருக்கக் கூடாது என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.நெறிமுறைகள்தேர்தல் நடத்தை விதிமுறை என்பது, வெறும் சட்டம் மட்டும் அல்ல; அது, நெறிமுறைகள் சம்பந்தப்பட்டது.
எனவே, நெறிமுறைகள் தொடர்பான கேள்விகள் எழுவது இயல்பு. பீஹார் சட்டசபை தேர்தல் அறிக்கையில், பா.ஜ., அளித்து உள்ள வாக்குறுதி, சட்டத்துக்கு புறப்பானது அல்ல.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஒருவருக்கு தேதி குறித்துவிட்டால், அந்த தேதியில் உயிரை எமன் எடுத்துவிடுவார் என்று சொல்லுவார்கள். அப்படி ஒரு சிற்பிக்கு தேதி குறித்துவிட்டார் எமன். அந்த தேதி பற்றி சிற்பிக்கும் எப்படியோ தெரியவந்துவிட்டது. சிற்பிக்கு இறக்க விருப்பமில்லை.
எமன் ஒருமுறைதான் பாசக்கயிற்றை வீசுவார். அதில் தவறிவிட்டால், மீண்டும் வீசி உயிரைப் பறிக்கும் அதிகாரம் எமனுக்கு இல்லை என்பதும் சிற்பிக்கு தெரியும்.
அதனைப் பயன்படுத்திக்கொள்ள ஒரு யுக்தி செய்தார்.
தன் திறமை எல்லாம் காட்டி தன்னைப்போலவே அச்சு அசலாக இரண்டு சிலைகள் செய்தார். எமன் வரும் நேரம் அவற்றை தரையில் சாய்த்து படுக்கவைத்துவிட்டு, நடுவில் தானும் படுத்து கண்ணை மூடிக்கொண்டுவிட்டார்.
‛காங்., ஆளும் மாநிலங்களில் நடக்கும் குற்றங்களை கவனிங்க ராகுல்
புதுடில்லி: ராகுல், சோனியா, பிரியங்கா ஆகியோர் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் நடக்கும் குற்றங்களை கவனிக்கத் தவறுவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் பகுதியில் புலம்பெயர்ந்த பட்டியலினத்தை தொழிலாளியின் 6 வயது மகளை அதேப்பகுதியைச் சேர்ந்த குர்பிரீத் சிங் என்பவர் தமது தாத்தாவுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்றனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இது குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாவது:
பெண்கள் எங்கே மதிக்கப்படுகிறார்களோ, அங்கே இறைவன் குடியிருந்து அருள்புரிவான். பெண்கள் எங்கே அவமதிக்கப்படுகிறார்களோ, அங்கே செய்யும் அத்தனை நற்செயல்களும் வீண் போகும்.
திராவிட நம்பிக்கை, கொள்கைகள் என்பதை எப்படி எடுத்து கொள்ளவேண்டும்
ByMaridhas
கேள்வி: திராவிட நம்பிக்கை, கொள்கைகள் என்பதை நான் எப்படி எடுத்து கொள்ளவேண்டும்.
இதை நான் ஒரு இன அடையாளமாக எடுத்து கொள்ளவேண்டுமா இல்லை வெறும் கலாச்சார பிரிவு என்று ஏற்றுகொள்ள வேண்டுமா? எனக்கு இந்த “திராவிடம்” குழப்பமாக இருக்கு. – கார்த்திக்
இங்கே கடந்த 300வருட ஆட்சி, மக்கள் வாழ்வு, அதன் நகர்வை நீங்கள் பொறுமையாக எந்த சார்பும் இல்லாமல் தேடி படிக்கவேண்டும்.அப்போதான் உங்களால் தெளிவான அரசியல் எப்படி நடந்தது எப்படி மாறி நிற்கிறது என்று உணர முடியும்.