ஒரு நபர் இரண்டு உயரமான கோபுரங்களுக்கு இடையில் கட்டப்பட்ட கயிற்றில் நடக்க ஆரம்பித்தார்.
அவர் கைகளில் ஒரு நீண்ட குச்சியை சமன் செய்து கொண்டு மெதுவாக நடந்து கொண்டிருந்தார்.
அவர் தனது மகனை தோள்களில் அமர்த்தியிருந்தார்.
தரையில் உள்ள ஒவ்வொருவரும் அவரை மூச்சுமுட்டப் பார்த்துக் கொண்டிருந்தார்கள், மிகவும் பதட்டமாக இருந்தார்கள்.
அவர் மெதுவாக இரண்டாவது கோபுரத்தை அடைந்ததும், ஒவ்வொருவரும் கைதட்டி, விசில் அடித்துப் பாராட்டினர்.
அவர்கள் அவருடன் கைகுலுக்கி செல்ஃபி எடுத்தார்கள்.
அவர் கூட்டத்தினரிடம் கேட்டார்,"இந்தப் பக்கத்திலிருந்து அந்தப் பக்கத்திற்கு இப்போது அதே கயிற்றில் நான் திரும்பி நடக்க முடியும் என்று நீங்கள் அனைவரும் நினைக்கிறீர்களா?" என்று...
அனைவரும் ஒரே குரலில் “ஆம், ஆம், உங்களால் முடியும் ..” என்று கத்தினார்கள்.
"நீங்கள் என்னை நம்புகிறீர்களா", என்று அவர் கேட்டார். அவர்கள் ஆம், ஆம், நாங்கள் உங்களை வைத்துப் பந்தயம் கட்டத் தயாராக இருக்கிறோம் என்று சொன்னார்கள்.
அவர் சொன்னார்."சரி, உங்களில் யாராவது உங்கள் குழந்தையை என் தோளில் உட்கார வைக்க முடியுமா?"என்று
"நான் குழந்தையை மறுபுறம் பாதுகாப்பாக அழைத்துச் செல்வேன்"
திகைப்பான மௌனம் நிலவியது.
ஒவ்வொருவரும் அமைதியாகி விட்டார்கள்.
நம்பிக்கை வேறு.
சரணாகதி வேறு.
சரணாகதி என்றால் நீங்கள் முற்றிலும் சரணடைய வேண்டும்.
இன்றைய உலகில் கடவுளிடம் சரணடைய மறுக்கிறோம்.
நாம் கடவுளை நம்புகிறோம்.
ஆனால் நாம் அவரை சரணடைகிறோமா?
மிக அழகான செய்தி, மீண்டும் மீண்டும் சிந்திக்கத் தகுந்தது!
சிந்தியுங்கள் செயல்படுங்கள்.
🇮🇳🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஒருவருக்கு தேதி குறித்துவிட்டால், அந்த தேதியில் உயிரை எமன் எடுத்துவிடுவார் என்று சொல்லுவார்கள். அப்படி ஒரு சிற்பிக்கு தேதி குறித்துவிட்டார் எமன். அந்த தேதி பற்றி சிற்பிக்கும் எப்படியோ தெரியவந்துவிட்டது. சிற்பிக்கு இறக்க விருப்பமில்லை.
எமன் ஒருமுறைதான் பாசக்கயிற்றை வீசுவார். அதில் தவறிவிட்டால், மீண்டும் வீசி உயிரைப் பறிக்கும் அதிகாரம் எமனுக்கு இல்லை என்பதும் சிற்பிக்கு தெரியும்.
அதனைப் பயன்படுத்திக்கொள்ள ஒரு யுக்தி செய்தார்.
தன் திறமை எல்லாம் காட்டி தன்னைப்போலவே அச்சு அசலாக இரண்டு சிலைகள் செய்தார். எமன் வரும் நேரம் அவற்றை தரையில் சாய்த்து படுக்கவைத்துவிட்டு, நடுவில் தானும் படுத்து கண்ணை மூடிக்கொண்டுவிட்டார்.
‛காங்., ஆளும் மாநிலங்களில் நடக்கும் குற்றங்களை கவனிங்க ராகுல்
புதுடில்லி: ராகுல், சோனியா, பிரியங்கா ஆகியோர் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் நடக்கும் குற்றங்களை கவனிக்கத் தவறுவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் பகுதியில் புலம்பெயர்ந்த பட்டியலினத்தை தொழிலாளியின் 6 வயது மகளை அதேப்பகுதியைச் சேர்ந்த குர்பிரீத் சிங் என்பவர் தமது தாத்தாவுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்றனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இது குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாவது:
பெண்கள் எங்கே மதிக்கப்படுகிறார்களோ, அங்கே இறைவன் குடியிருந்து அருள்புரிவான். பெண்கள் எங்கே அவமதிக்கப்படுகிறார்களோ, அங்கே செய்யும் அத்தனை நற்செயல்களும் வீண் போகும்.
திராவிட நம்பிக்கை, கொள்கைகள் என்பதை எப்படி எடுத்து கொள்ளவேண்டும்
ByMaridhas
கேள்வி: திராவிட நம்பிக்கை, கொள்கைகள் என்பதை நான் எப்படி எடுத்து கொள்ளவேண்டும்.
இதை நான் ஒரு இன அடையாளமாக எடுத்து கொள்ளவேண்டுமா இல்லை வெறும் கலாச்சார பிரிவு என்று ஏற்றுகொள்ள வேண்டுமா? எனக்கு இந்த “திராவிடம்” குழப்பமாக இருக்கு. – கார்த்திக்
இங்கே கடந்த 300வருட ஆட்சி, மக்கள் வாழ்வு, அதன் நகர்வை நீங்கள் பொறுமையாக எந்த சார்பும் இல்லாமல் தேடி படிக்கவேண்டும்.அப்போதான் உங்களால் தெளிவான அரசியல் எப்படி நடந்தது எப்படி மாறி நிற்கிறது என்று உணர முடியும்.