தெறிந்து(தெளிந்து)
முட்டு கொடுங்கடா😏
வேளாண் மசோதா 2020-வின் நன்மை தீமைகள் என்ன? இதனால் என்னை போன்ற வேளாண் பெருமக்களுக்கு நலம் உண்டாகுமா?
வேளாண் மசோதா 2020
மத்திய அரசு 14 செப்டம்பர் 2020 அன்று மூன்று புதிய வேளாண் மசோதாக்களை மக்களவையில் தாக்கல் செய்து, 17 செப்டம்பர் 2020 அன்று
நிறைவேற்றியது.மாநிலங்களவையில்,20 செப்டம்பர் 2020 அன்று நிறைவேற்றியது.

26 செப்டம்பர் 2020அன்று குடியரசுத்தலைவர் ஒப்புதலுடன் சட்டம் அமலுக்கு வந்தது.

விவசாய விளை பொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம்
இச்சட்டத்தின் மூலம் விவசாயிகள் மற்றும்
PAN எண் (Permanent Account Number) உள்ள வியாபாரிகள் விவசாய விளை பொருட்களை எந்த வித கட்டணமும் செலுத்தாமல்,மாநிலத்துக்கு உள்ளே மற்றும் வெளி மாநிலத்துக்கு எடுத்துச் செல்ல சுதந்திரம் வழங்கப்படுகிறது

விவசாயிகளிடம்,விளை பொருட்களை கொள்முதல் செய்யும் வியாபாரிகள் அதற்கான தொகையை,அதே
நாளிலோ அல்லது அடுத்த மூன்று வேலை நாட்களுக்குள்ளோ விவசாயிக்குச் செலுத்த வேண்டியது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது

மின்னணு வர்த்தகத்தின் மூலம் விவசாய விளை பொருட்களை விற்கவும்,வாங்கவும், இச்சட்டம் அனுமதி அளிக்கிறது.ஆனால் ஒவ்வொரு விளை பொருளையும் வாங்குபவர் டெலிவரி (physical delivery)
எடுத்துக் கொள்ள வேண்டும்

மாநில அரசு APMC சட்டம் அல்லது வேறு எந்த சட்டத்தின் மூலமும் விவசாய விளை பொருட்களை எடுத்துச் செல்லும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளிடம் எந்தவிதமான கட்டணமும் வசூலிப்பதை இச்சட்டம் தடை செய்கிறது.

விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை
உத்தரவாதம் மற்றும் விவசாய சேவைகள் ஒப்பந்த சட்டம்
இந்தச் சட்டத்தின்படி விவசாயிகளும் கொள்முதல் செய்பவரும் பயிர் செய்ய ஆரம்பிக்கும் முன்பாகவே எழுத்துப்பூர்வமான ஒப்பந்தம் செய்து கொள்ளலாம்..இந்த ஒப்பந்தத்தில் விலை பொருளுக்கான கொள்முதல் விலை, தரம், கால அளவு, பண்ணை சேவைகள்(விதை உரம்
பூச்சி மருந்துகள் இயந்திரங்கள் தொழில்நுட்பங்கள் ஆலோசனை வழங்குதல்) ஆகியவை இடம்பெற வேண்டும்.

அறுவடை நேரத்தில், சந்தை விலை குறைந்தாலும், ஒப்பந்தத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலை, விவசாயிகளுக்கு கிடைக்கும்

.சந்தையில் விலை அதிகரிக்கும்போது கொள்முதல் செய்பவர் அளிக்க வேண்டிய கூடுதல் தொகை
மற்றும் ஊக்கத்தொகை குறித்தும் ஒப்பந்தம் செய்யும்போதே முடிவு செய்யலாம்

எழுத்து பூர்வமான ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு விவசாயிகளுக்கு மத்திய அரசு தேவையான வழிகாட்டுதலை வழங்கும்.

விவசாயிகளிடம் விளைபொருட்களைப் பெற்றுக் கொள்வதற்கு முன் அதன் தரத்தை ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி
சோதித்துக் கொள்ள வேண்டும் எக்காரணத்தை முன்னிட்டும் பொருட்களைப் பெற்றுக் கொள்ளும் போதோ அதற்குப் பின்னரோ பின்வாங்க முடியாது

பண்ணை ஒப்பந்த சட்டத்தை,விவசாயிகளின் நிலத்தை மாற்றுவதற்கோ,விற்பனைக்கோ,குத்தகைக்கோ அல்லது அடமானம் வைப்பதற்கோ பயன்படுத்த முடியாது.

மேலும் விவசாயிகளின்
நிலத்தில் நிரந்தரமான கட்டுமானங்களோ அல்லது நிலத்தில் எந்த மாற்றமோ செய்யக்கூடாது

.அவ்வாறு கட்டுமானம் செய்திருப்பின் ஒப்பந்த காலம் முடியும்போது அது அகற்றப்பட்டு நிலத்தை சரிசெய்து ஒப்படைத்தல் வேண்டும் தவறும் பட்சத்தில் அந்த கட்டுமானம் விவசாயிக்கு உரிமையாகும்

ஒப்பந்தம் செய்து கொண்ட
பின் நியாயமான காரணங்கள் இருக்கும் பட்சத்தில் இரு தரப்பினரின் சம்மதத்தின் பேரில் ஒப்பந்தத்தில் மாற்றம் செய்யவோ,ஒப்பந்தத்தை ரத்து செய்யவோ முடியும்

பண்ணை ஒப்பந்தம் காப்பீட்டுடனோ(Insurance),மத்திய அல்லது மாநில அரசின் திட்டத்தின் மூலம் கடன் உதவி பெறும் நிறுவனத்திடமோ அல்லது வேறு கடன்
உதவி வழங்கும் நிறுவனத்திடமோ இணைக்கப்பட வேண்டும்

அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம்
போர், பஞ்சம், அசாதாரணமான விலையேற்றம், இயற்கைப் பேரழிவு ஆகிய காலங்களில் மட்டும்தான் மத்திய அரசு, தானியங்கள், பருப்பு,வகைகள், உருளைக்கிழங்கு, வெங்காயம், சமையல் எண்ணெய் வித்துக்கள் மற்றும்
எண்ணெய் வகைகள் உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கலைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் அரசாணை வெளியிட வேண்டும்

விவசாய விளைபொருட்களின் இருப்பு வரம்பை நிர்ணயிக்க இச்சட்டத்தின் மூலம் எடுக்கப்படும் எந்த நடவடிக்கையும் விலையேற்றத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட வேண்டும்

விலையேற்றத்தைக்
கணக்கிடும் பொழுது 100% சதம் தோட்டக்கலைப் (Horticultural) பொருட்களான காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட, எளிதில் அழுகும் வேளாண் பொருட்களின் விலை ஏறும்போதும் 50% அழுகாதா (Non –perishable) பொருட்களான, தானியங்கள், பருப்பு,வகைகள், சமையல் எண்ணெய் வித்துக்கள் ஆகிய விவசாய விளை பொருட்கள் விலை
ஏறும் பொழுது மட்டும் முந்தைய 12 மாதங்களின் அல்லது கடந்த ஐந்து ஆண்டுகளின் சராசரி விலையில் எது குறைவோ அதனைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்

இச்சட்டம் விவசாயிகளுக்கு நன்மையா? தீமையா? சாதகமா? பாதகமா?
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று சட்டங்களுக்கான இணைப்பை மேலே கொடுத்துள்ளேன்.
நான் புரிந்து கொண்ட வகையில் விவசாயி ஆகிய எனது பார்வையில்,இச்சட்டம் விவசாயிகளுக்கு நன்மை அளிப்பதாகவே கருதுகிறேன்.

தமிழகத்தில், ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஒழுங்கு முறை விற்பனைக் கூடம்,

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், இந்திய உணவுக்கழகம்,மற்றும் வெளி மார்க்கெட் மூலம் விவசாயிகள்
விற்பனை செய்வதை இந்த சட்டம் தடை செய்யவில்லை

மேலும் இந்தச் சட்டம் விவசாயிகள் ஒப்பந்த பண்ணையம் தான் செய்ய வேண்டுமென்று எந்த இடத்திலும் கட்டாயப் படுத்தவில்லை மாறாக விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை எங்கு வேண்டுமானாலும் விற்றுக் கொள்வதற்கு சுதந்திரம் அளிக்கிறது.

கார்பரேட் கம்பெனிகள்
உணவுப் பொருள்களை பதுக்கி வைத்துக்கொண்டு செயற்கை விலையேற்றம் செய்ய முடிமா?
முடியாது,காரணம் இச்சட்டத்தில்,

தோட்டக்கலைப் (Horticultural) பொருட்களான, காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட, எளிதில் அழுகும் பொருட்கள் 100% சதமும்,அழுகாதா (Non –perishable) பொருட்களான,தானியங்கள், பருப்பு,வகைகள்,
சமையல் எண்ணெய் வித்துக்கள் ஆகிய விவசாய விளை பொருட்கள் 50% சதமும் விலை ஏறும் பொழுது,முந்தைய 12 மாதங்களின் அல்லது கடந்த ஐந்து ஆண்டுகளின் சராசரிவிலையில் எது குறைவோ அதனைக் கணக்கில் எடுத்துக் கொண்டு,விலை ஏற்றத்தைத் தடுக்கவும், கட்டுப்பாடுகளை விதிக்கவும், சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டு
உள்ளது

இதனால், 'கார்ப்பரேட்' நிறுவனங்கள், அத்தியாவசிய பொருட்களை பதுக்குவதற்கு வாய்ப்பு கிடைக்காது.சந்தையில் ஆரோக்கியமான போட்டி ஏற்படுவதுடன், விளைபொருட்கள் வீணாவது தடுக்கப்படும்.

இச்சட்டத்தின் மூலம்,விவசாயிகளின் நிலங்கள் கார்பரேட் கம்பெனிகளின் கைகளுக்குச் செல்ல வாய்ப்பு உள்ளதா?
வாய்ப்பில்லை.காரணம்

இச்சட்டத்தை,விவசாயிகளின் நிலத்தை மாற்றுவதற்கோ, விற்பனைக்கோ, குத்தகைக்கோ அல்லது அடமானம் வைப்பதற்கோ,பயன்படுத்த முடியாது.

பஞ்சாப் மாநிலத்தில் ஏன் அரசாங்கம் இச்சட்டத்தை மிகக் கடுமையாக எதிர்க்கிறது?
பஞ்சாப் போன்ற வடமாநிலங்களில்,தனியாக பொருட்களை, விவசாயிகளால்
விற்பனை செய்ய முடியாது விவசாயிகள் விளைபொருட்களை, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மட்டுமே விற்க முடியும்.பஞ்சாப் மாநிலத்தில்.நெல்,கோதுமை உள்ளிட்டவற்றை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விற்பனை செய்வதற்கு, 3 சதவீதம் சந்தை கட்டணமாக செலுத்த வேண்டும். ஊரக உள்ளாட்சி மேம்பாட்டு வரி யாக,
3 சதவீதம் செலுத்த வேண்டும். கமிஷன் ஏஜன்டுகளுக்கு, 2.50 சதவீதம் கட்டணம் செலுத்த வேண்டும். இவ்வாறு விற்பனை கட்டணமாக, 8.50 சதவீதம் பெறப்படுகிறது

.பஞ்சாப் மாநிலத்தில், கோதுமை வாயிலாக மட்டும்,விற்பனை கட்டணமாக ஆண்டுதோறும், 3,500 கோடி ரூபாய் கிடைக்கிறது. இதில், 30 சதவீதம், அரசுக்கு
சந்தை கட்டண வருவாயாகக் கிடைக்கிறது..

இச்சட்டத்தின்படி விவசாயிகள் வெளிமார்க்கெட்டில் விற்றால் அரசுக்கு வரிவருவாய் இழப்பு ஏற்ப்படும்.

மேலும் வியாபாரிகள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு வெளியில் வாங்கும் விவசாய விளைபொருளுக்கு எந்த வரியும் செலுத்த வேண்டியதில்லை என்பதால் அங்கு
வாங்குவதையே விரும்புவார்கள்.எனவே மாநில அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்ப்படும்.அதனால் பஞ்சாப் அரசு இச் சட்டத்தை கடுமையாக எதிர்க்கிறது.

ஆனால் தமிழகத்தில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகளிடம் எந்த கட்டணமும் வசூலிப்பதில்லை

இந்த சட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்தால், விளை
பொருட்களுக்கு அறிவிப்பது நிறுத்தப்படுமா?
இல்லை.நிறுத்தப்படாது.

இந்த குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும் என, பிரதமரும், மத்திய அரசும், விவசாயிகளுக்கு உறுதி அளித்துள்ளனர்

ராபி பருவ பயிர்களான நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது

முடிவாக என்னுடைய பார்வையில் இந்த மூன்று வேளாண் சட்டங்களிலும்
விவசாயிகளுக்கான பாதுகாப்பு அம்சங்கள் மிகச்சிறப்பாக உள்ளது.இச்சட்டத்தை நடைமுறைப் படுத்தும் போது ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களை சரி செய்தால் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாகவே அமையும்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with .P.BALASUBRAMANIAM🚗 (😜)Professional Ethics

.P.BALASUBRAMANIAM🚗 (😜)Professional Ethics Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @balup13248255

6 Dec
உலகத்தையே ஜெயிக்க நினைத்த *பிரான்ஸ் மாவீரன் நெப்போலியன் கடைசி காலத்தில் பிரிட்டனிடம் தோல்வி அடைந்தார்.* தோல்வி அடைந்த நெப்போலியனை பிரிட்டிஷ் ராணுவம் அவரை சிறை பிடித்து *ஆப்பிரிக்க தனிச்சிறையில் தனிமையில் வைத்தது. சிறையில் மன உளைச்சலில் அவரின் கடைசி காலம் கழிந்தது.* அவரை பார்க்க
வந்த அவரின் *நண்பர் ஒருவர் அவரிடம் ஒரு சதுரங்க அட்டையை கொடுத்து “இது உங்களின் சிந்தனையை செயல்பட வைக்கும் தனிமையை போக்கும்” என்று கூறி அவரிடம் கொடுத்தார்.* ஆனால் சிறை படுத்தி விட்டார்களே என்ற மன உளைச்சலில் இருந்த மாவீரனுக்கு சிந்தனை செயல்படாமல் *அதன் மீது கவணம் போகவில்லை. சிறிது
காலத்தில் இறந்தும் போனார்.* பிற்காலத்தில் பிரான்ஸ் அருங்காட்சியகம் *மாவீரன் நெப்போலியனிடம் இருந்த சதுரங்க அட்டையை ஏலம் விட அதை ஆய்வு செய்த போது அந்த அட்டையின் நடு பக்கத்தில் சிறிய அளவில் ஒரு குறிப்பு இருந்தது. அதில் அந்த சிறைச்சாலையில் இருந்து தப்பிப்பதற்க்கான வழியை அந்த குறிப்பு
Read 6 tweets
6 Dec
*ஆழமான, அழுத்தமான பதிவு. மறக்க வேண்டாம் (படிக்க)*

யாரெல்லாம் நம்மோடு இருப்பார்கள், விலகுவார்கள் என்று காலம் முடிவு செய்வதில்லை.
*அவரவர்களின் வார்த்தையும், நடத்தையும் தான் முடிவு செய்கிறது.*

வாய் தவறி விழும் பேச்சுக்கள். கை தவறி விழும் கண்ணாடியை விட கூர்மையானது.
*யாரிடம்
பேசுகிறோம் என்பதை விட என்ன பேசுகிறோம் என்பதை அறிந்து கொண்டு பேசுங்கள்.*

நிம்மதியுடன் வாழ்கிறேன் என யாராலும் எளிதில் சொல்லப்படுவதில்லை.
*வாழ்க்கை அவ்வளவு எளிதில் நிம்மதியை யாருக்கும் தந்து விடுவதில்லை.*

மற்றவர் தவறைக் கவனித்துக்கொண்டே இருப்பவர்கள்.
*தன் தவறுகளை வளர்த்துக் கொண்டே
இருக்கிறார்கள்.*

பணம் இருந்தால் நீ உயர்ந்தவன்
குணம் இருந்தால் நீ *குப்பை.*
நடித்தால் நீ *நல்லவன்.*
உண்மை பேசினால் *பைத்தியக்காரன்.*
அன்பு காட்டினால் *ஏமாளி.*
எடுத்துச் சொன்னால் *கோமாளி.*

இறைவன் தனக்குப் பிடித்தவர்களுக்கே அதிகப் பொறுப்புகளை கொடுத்து.
அதன் பொருட்டு சோதனைகளை
Read 7 tweets
5 Dec
நவீன தீண்டாமை

பாரதீய ஜனதாக் கட்சியில் ஜோதிடர் ஒருவருக்கு அறிவுசார் பிரிவுக்கு மாநில தலைவரா என கேலி கிண்டல் செய்பவர்களுக்கு..

நீங்கள் பேசுவது நவீன தீண்டாமையாக இருக்கிறது...
இந்த தொழில் செய்பவர்கள் தான் இந்த பதவிக்கு வர வேண்டும் என ஏதும் உள்ளதா என்ன..

வழக்கறிஞராக தனது படிப்பை
முடித்து ஜோதிட கலையை தனது விருப்பமாக கொண்டவர் அறிவுசார் பிரிவு மாநில தலைவராக நியமிக்கப்ட்டுள்ளார்...

ஏன் ஜோதிட கலையை கை கொண்டவர்கள் உயர்பதவிக்கு வரக்கூடாதா என்ன...

தமிழகத்தில் இந்த துறையில் உள்ளவர்களுக்கு எந்த அங்கீகாரமும் எந்த கட்சியும் தராத போது “பாரதிய ஜனதா” அங்கிகாரம்
அளித்துள்ளது என்பது பெருமையான ஒன்று..

மேளம் வாசித்த குடும்பத்திலிருந்து ஒருவர் முதல்வராக வரலாம் வரவேற்ப்பிங்க..

கள்ளதனமாக பிறந்த குழந்தை எம்பியாக கூட வரலாம் கொண்டாடுவிங்க..

நடனமங்கை நேரடியாக நாட்டை ஆளலாம்..பார்ல ஊத்தி குடுத்தவ மறைமுகமாக நாட்டை ஆளலாம்...

அப்போதெல்லாம் அவங்க
Read 4 tweets
5 Dec
தமிழ் எண்கள். ஒன்று முதல் இருநூறு வரையில் எப்படி என்பதை இங்கே காண.

1 - க, 2 - உ, 3 - ங, 4 - ச, 5 - ரு, 6 - சு, 7 - எ, 8 - அ, 9 - கூ, 10 - கo,
11 - கக, 12 - கஉ, 13 - கங, 14 - கச, 15 - கரு, 16 - கசு, 17 - கஎ, 18 - கஅ, 19 - ககூ, 20 - உo
21 - உக, 22 - உஉ,
23 - உங, 24 - உச, 25 - உரு, 26 - உசு, 27 - உஎ, 28 - உஅ, 29 - உகூ, 30 - ஙo
31 - ஙக, 32 - ஙஉ, 33 - ஙங, 34 - ஙச, 35 - ஙரு, 36 - ஙசு, 37 - ஙஎ, 38 - ஙஅ, 39 - ஙகூ, 40 - சo,
41 - சக, 42 - சஉ, 43 - சங, 44 - சச, 45 - சரு, 46 - சசு, 47 - சஎ, 48 - சஅ, 49 - சகூ, ய
50 - ருo
51 - ருக, 52 - ருஉ, 53 - ருங, 54 - ருச, 55 - ருரு, 56 - ருஎ, 57 - ருஎ, 58 - ருஎ, 59 - ருகூ, 60 - சுo
61 - சுக, 62 - சுஉ, 63 - சுங, 64 - சுச, 65 - சுரு, 66 - சுசு, 67 - சுஎ, 68 - சுஅ, 69 - சுகூ, 70 - எo
71 - எக, 72 - எஉ, 73 - எங, 74 - ஏசு, 75 - எரு
Read 9 tweets
4 Dec
😢😭😢😭😢😭😢😭😭
நினைவிருக்கிறதா..?
1984-டிசம்பர் 3-ம் தேதி...!!!

போபால் ரயில்வே ஸ்டேஷனில் 'துருவே' என்ற ஸ்டேஷன் மாஸ்டருக்கு இரவு நேரப் பணி.

போபால் ஸ்டேஷன் வழியாக லக்னோ வில் இருந்து மும்பை செல்லும் ரயிலுக்கு சிக்னல்
கிளியரன்ஸ் கொடுத்துவிட்டு
வெளியே வந்தார்.
அவரால் காற்றில்
ஏதோ
வித்தியாசத்தை உணர முடிந்தது. அவசர அவசரமாக சிக்னல்
அறைக்கு ஓடினார்.

எப்படியாவது லக்னோ டு
மும்பை ரயிலைத் தடுத்து விடுவதுதான் அவரது
நோக்கம்.

ஆனால், அந்த ரயில்
ஏற்கெனவே கிளம்பிவிட்டது. துருவேயால் ஒன்றும் செய்ய முடியவில்லை. லக்னோ-மும்பை
ரயில் வந்தது.

அதில் இருந்து இறங்கிய
பயணிகள் எல்லாம் விஷ வாயுவைத் தாங்க முடியாமல் சுருண்டு விழுந்தார்கள்.
ஓடியவர்கள் இன்னும் சீக்கிரம்
இறந்தார்கள்.

கொஞ்ச நேரத்தில் போபால் ரயில்
நிலையத்தில் 191 பிணங்கள் கிடந்தன. அந்தக்
காட்சி துருவேயை நிலை குலைய வைத்தது.

பதற்றத்தோடு சிக்னல் அறைக்கு
ஓடினார். அங்கு அவருக்குக்
கீழ்
Read 7 tweets
1 Dec
1.பெரியாரை செருப்பால் தைரியமாக அடித்த விபூதி வீரமுத்து தேவர்..! என்ன நடந்தது…?

பெரியாரை செருப்பால் அடித்த விபூதி வீரமுத்து தேவரை பற்றி எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை.

முதலில் இந்த விபூதி வீரமுத்து யார் என்பது இன்றைய இளைய தலைமுறைக்கு சத்தியமாக தெரியாது.

விபூதி
வீரமுத்து கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் பகுதியில் இருந்தவர். தேவர் சமூகத்தினை சேர்ந்தவர். ஈவேரா தமது காலத்தில் ராமர் படத்தினை சேர்ப்பால் அடித்து ஹிந்து வெறுப்பை காட்டியபோது. எதிர்த்து கேள்வி கேட்ட ஆண் மகன்.

ஈவேரா கும்பல் தங்களுக்கே உள்ள பகுத்தறிவுடன், என் பணத்தில் நான்
காசுகொடுத்து வரைந்த படத்தினை எனது செருப்பால் நான் அடிப்பதில் என்ன தவறு? இதை கேட்க நீயார் ? என விபூதியை கேட்டனர்.

மறுதினம், அதே இடத்தில் ஈவேராவின் படத்தினை வரைந்து அதை செருப்பால் அடித்தார் வீபூதி வீரமுத்து. கேள்விகேட்டு கோபத்துடன் வந்த ஈவேரா அண்ட் கோ வுக்கு அவர்கள் பாணியிலேயே
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!