அன்றைய தினம் பற்றி பஞ்சாங்கம் படிப்பதையும் கேட்பதையும் பார்த்திருக்கிறேன். இதை தினமும் படிப்பதனாலோ கேட்பதனாலோ என்ன பயன் என்று யோசித்ததுண்டு. #TIL யார் தினமும் பஞ்சாங்கம் படிக்கின்றனரோ அல்லது கேட்டறிய ஆசைக்கொண்டு கேட்டு அறிகின்றனரோ அவர்களுக்கு அக்னிஷ்டோம யாகம் செய்தபலன் மற்றும்
தினமும் கங்கையில் குளித்த பலன் கிடைக்கும். தானே பஞ்சாங்கம் பார்த்துக்கொள்ள வேண்டும். அல்லது உரியவர்கள் மூலமாக கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும்.
திதியை அறிவதனால் ஐஶ்வர்யங்கள் கிடைக்கும், கிழமையை அறிவதனால் ஆயுசு அதிகரிக்கும், நட்சத்திரத்தை அறிவதனால் பாவம் விலகும், யோகத்தை அறிவதனால்
நோய் நீங்கும், கரணத்தை அறிவதனால் செயல்கள் வெற்றிபெறும். பஞ்சாங்கத்தை தினமும் படிப்பதனால் இந்த பலன்கள் கிடைக்கும் என்று சொல்லப்படுகின்றது. #பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்களை அதாவது, வானியல் தொடர்பான 5 விஷயங்களை, நமக்கு அளிக்கும் ஒரு தகவல் தொகுப்பாகும். அவை
1.வாரம் 2.நட்சத்திரம்
3.திதி 4.யோகம் 5.கரணம்
1.வாரம்-ஞாயிறு முதல் சனி வரையான ஏழு கிழமைகள்.
2.நட்சத்திரம்-அஸ்வினி முதல் ரேவதி வரை உள்ள 27 நட்சத்திரங்கள்.
3.திதி-ஒரு வானியல் கணக்கீடாகும். அதாவது, வானில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் உள்ள தொலைவாகும்.
4.யோகம்-வானில் ஒரு குறித்த இடத்திலிருந்து சூரியனும்,
சந்திரனும் செல்லுகிற மொத்த தொலைவாகும்.
5.கரணம்-திதியில் பாதியாகும்.
நமது முன்னோர்கள் ஜோதிட சாஸ்திரத்திலும் வான சாஸ்திரத்திலும் வல்லுநர்களாகத் திகழ்ந்தார்கள். அவர்களால் கணித்துக்
காட்டப்பட்டுள்ள முறைப்படி துல்லியமாகக் கணிக்கப்பட்டுள்ளதே பஞ்சாங்கமாகும்.
#அர்த்தமுள்ளஇந்துமதம்
உத்திரம், உத்திராடம், ரோகிணி, பூசம், திருவாதிரை, அவிட்டம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி ஆகிய 9நட்சத்திரங்களும் மேல் நட்சத்திரங்களாகும். இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களே மேல் நோக்கு நாட்கள் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த நாட்களில் மேல்நோக்கி செய்யும் வேலைகளை தொடங்க சிறந்த நாள்
உதாரணத்திற்கு கட்டிடம் எழுப்புவது, மரங்களை நடுவது, மேல்நோக்கி வளரக்கூடிய விதைகளை விதைப்பது போன்றவற்றை செய்யலாம்.
கிருத்திகை, பரணி, பூரம் ஆயில்யம், விசாகம், மகம், மூலம், பூராடம், பூரட்டாதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்களும் கீழ்நோக்கு நட்சத்திரங்கள் ஆகும். இந்த நட்சத்திரங்களை கொண்ட
நாட்களே கீழ்நோக்கு நாட்கள் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த நாட்களில் கீழ்நோக்கி செய்யும் வேலைகளை தொடங்குவது சிறந்தது. (உம்) கிணறு தோண்ட ஆரம்பிப்பது, வீட்டில் போர்வெல் போடுவது, சுரங்கம் தோண்டுவது, மண்ணிற்கு கீழ் வளரக் கூடிய காய்கறிகள் கிழங்குகளை பயிரிடுவது போன்றவற்றை செய்யலாம்.
ராசியை போல #கரணம் முக்கியம். சந்திரனின் 16 நாட்கள் வளர்பிறை நிலை, 16 நாட்கள் தேய்பிறை நிலைக் கால சுழற்சியே ஒரு மாதம் என்று கணக்கிடப்படுகிறது. சந்திரனின் வளர்பிறை, தேய்பிறைக் காலங்களிலில் வருவது தான் கரணங்கள். இக்கரணங்கள் என்பது ஒரு மாதத்தில் வரும் திதிகளின் அரைப் பகுதியாகும்.
மொத்தம் 11 வகையான கரணங்கள் இருக்கின்றன. இதில் 7 கரணங்கள் “ஸ்திர” கரணங்கள் அதாவது நிலையான கரணங்கள், இது ஒரு மாதத்தில் 8 முறை வரும். மீதமுள்ள 4 கரணங்கள் “சர” கரணங்கள். அதாவது நகரும் கரணங்கள் இது மாதத்தில் ஒரு முறை மட்டுமே வரும். அக்கரணங்களுக்குக்கான உருவமாக சில விலங்குகள் குறியீடு.
திதி இரண்டு கர்ணங்களைக் கொண்டது. விஷ்டி கர்ணன் இருப்பது பத்ரா என்று அழைக்கப்படுகிறது. பத்ரா ஒரு மாதத்தில் ஒரு பக்ஷத்தில் நான்கு முறை ஏற்படுகிறது. பத்ரா பூர்ணிமாவின் கிழக்குப் பாதியிலும், சுக்ல பக்ஷத்தில் அஷ்டமியிலும் ஏற்படுகிறது. அதே போல சதுர்த்தி மற்றும் ஏகாதசியின் வடபாதியில்
நிகழ்கிறது.எந்த நல்ல காரியத்தைத் தொடங்கவும் முகூர்த்த நேரத்தை கணிக்க பத்ரா மிக முக்கியம். பத்ரா பூலோகம், பாதாள லோகம், சுவர்க்க லோகம் மூன்றிலும் முக்கியமானது. பத்ர மாதா என்பவள் சூரிய பகவான் மகள், சனி பகவான் சகோதரி, அவர் உதித்த போது உலகையே தன் உணவாகக் கொள்ள இருந்தார். அதனால் சுப
காரியங்கள் தடைபட ஆரம்பித்தன. அதனால் பிரம்மா அவளுக்கு என்று ஓர் இடத்தை 11 காரணங்களில் 7வது கரணத்தை அளித்தார். கால பத்ரா மூவுலகங்களிலும் உலவி வருபவள். சந்திரன் மேஷம், ரிஷபம், மிதுனம், விருச்சிகம் இவற்றில் இருக்கையில் பத்ரா சுவர்கலோகத்தில் இருக்கிறார். சந்திரன் கன்னி, துலாம், தனுஷு,
மகர ராசிகளில் இருந்தால் பத்ரா பாதாள லோகத்தில் சஞ்சரிக்கிறாள். சந்திரன் கடகம், சிம்மம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளில் இருக்கும்போது பூலோகத்தில் இருக்கிறாள். பத்ரா சுவர்கலோகத்தில் சஞ்சரிக்கும்போது அவர் பார்வை மேல் நோக்கி இருக்கும். பாதாள லோகத்தில் இருக்கும்போது கீழ் நோக்கி இருக்கும
.பூலோகத்தில் பார்வையை செலுத்தும் போது பத்ரா பத்ராகால் என்று அழைக்கப்படுகிறார். இந்த சமயத்தில் எந்த சுப காரியங்களும் செய்யப்படுவதில்லை. ஜோதிஷ சாஸ்த்திரப்படி பத்ராவின் வாய், தொண்டை, இதயம், ஆகியவை பூமியில் இருக்கும்போது திருமணம், கிரஹப்பிரவேசம், காத்து குத்து போன்ற சுபகாரியங்கள்
நிச்சயம் செய்யக் கூடாது. தவறி செய்து விட்டால் சிவபெருமானை வழிபட்டு தோஷம் நீங்கப் பெறலாம். பத்ரகால் சமயத்தில் போர், நெருப்பு வைத்து செய்யும் யாகம், கத்தி வைத்து செய்யும் அறுவை சிகிச்சைகள் போன்றவை தொடங்கலாம். பத்ராவின் அருளைப் பெற அவரின் 12 நாமங்களை உச்சரித்து ஆசி பெறலாம். அவை தன்ய
ததிமுகி, பத்ரா, மகாமாரி, கரன்னா, கல்ராத்ரி, மகாருத்ரா, விஸ்தி, கல்பத்ரிகா, பைரவி, மகாகாளி, அசுரஷகாரி ஆகியவை.
#பத்ரயோகம் - நம் ஜாதகத்தில் புதனின் இருப்பைப பொருத்து இந்த யோகம் அமைகிறது. பஞ்ச மகாபுருஷ யோகங்கள் எனப்படும் 5 மிகவும் மங்களகரமான யோகங்களில் ஒன்றாகும்.
ஹரே கிருஷ்ணா!
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
12th may 2024 panjami Sri Adi Shankara 2532 jayanthi Mahotsavam
18th may 2024 ekadasi Sri Adisankara Aaradanai
ஒரு நாள் சங்கரரும் அவரது சீடர்களும் கங்கையில் நீராடி விட்டு, விஸ்வநாதர் ஆலயத்திற்கு சென்று கொண்டு இருந்தனர். அப்பொழுது 4 நாய்களுடன் எதிர் திசையில் வந்து கொண்டு இருந்த
ஒருவன், அவர்களை நெருங்கினான். அவன் எங்கே தங்களை தொட்டு, தங்களது ஆசாரத்தை கெடுத்து விடுவானோ என்று பயந்த சீடர்கள் அவனை "விலகிப் போ" என்றனர். இதைக் கேட்ட அவன், விலகிப் போகிறேன் ஆனால் நீங்கள் விலகிப் போக சொன்னது என்னுள் வியாபித்து இருக்கும் எனது ஆத்மாவையா? அல்லது ரத்தத்தாலும்,
சதையாலும் ஆன இந்த உடலையா என்று மட்டும் சொல்லி விடுங்கள்!" என்றான் அமைதியாக. இதை கேட்ட சங்கரரின் உடல் சிலிர்த்தது. 4 வேதங்களையும் நாய் உருவில் மாற்றி, சிவபெருமானே தாழ்ந்த குலத்தவனாக வந்து இருக்கிறார் என்று உணர்ந்து கொண்டார். சிவ பெருமானின் பாதங்களில் விழுந்து, மணிஷ பஞ்சகம் என்ற 5
#போரூர்_சிதம்பர_ஸ்வாமிகள்
இவர் ஒரு தவ முனிவர். வெறும் பனங்காடாக இருந்த திருப்போரூரில் அருள்மிகு கந்தசுவாமி கோவிலையும், அருகில் உள்ள ஒரு ஓடையை ஒரு பெரிய திருக் குளமாகவும் உருவாக்கியவர் சிதம்பர சுவாமிகள். அது மட்டுமல்ல. சாலையின் மறு புறமுள்ள பிரணவ மலை என்றும் சிவன் மலை என்றும்
அழைக்கப்படும் சிறு குன்றின் மேல் அருள்மிகு கைலாசநாதர் பாலாம்பிகை கோவிலை வடிவமைத்தும் இவர் தான். அந்த கோவிலின் பிரகாரத்தில் பாதாளத்தில் சுரங்க பாதை அமைத்து அதில் சமாதி அடைந்ததாக சொல்லப்படுகிறது. திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் முதல் ஆதீனமாக விளங்கியவர் ஸ்ரீமத் சிதம்பர சுவாமிகள்
இவர் வைகாசி விசாக நாளில் சுவாமிக்கு பூஜை செய்யும் போது ஜோதி வடிவில் மறைந்தார். இதை அடுத்து ஆண்டுதோறும், கண்ணகப்பட்டில் உள்ள அவரது மடத்தில் குருபூஜை விழா நடத்தப் படுகிறது. இவரின் பூர்வீகம் எதுவெனத் திட்டமாய்த் தெரியவில்லை. பெரிய மகான்களைப் போல் ரிஷிமூலம் அறிய முடியாதவர் இவர்.
நந்தி மூலவராக அருள்பாலிக்கும் கோவில்
பசவனகுடி கர்நாடகா
பொதுவாக மூலவராக இருக்கும் ஈசனின் கருவறைக்கு வெளியே தான் நந்தி வீற்றிருந்து அருள்பாலிப்பார். ஆனால் பெங்களூரு பசவன்குடியில் நந்தியே மூலவராக இருந்து பக்தர்களுக்கு அருள்புரிகிறார். இந்த நந்தி கோவில் ஒரு குன்றின் மீது அமைந்து
இருக்கிறது. இந்தக் குன்றுக்கு ஊதுகுழல் குன்று என்ற பெயர். இங்கு பித்தளையால் செய்யப்பட்ட எக்காளம் போன்ற ஊது குழல் இருக்கிறது. படைப்பிரிவின் அடையாள ஒலியாக அது ஒலிக்கப்பட்டிருக்கலாம் என்றும், அதனால் அந்த குன்றுக்கு இப்பெயர் வந்தது என்றும் சிலர் கூறுகிறார்கள். பெங்களூருவில் உள்ள
மிகவும் பழமையான ஆலயங்களில் இதுவும் ஒன்று. மலையில் ஏறிச் செல்ல படிகள் உள்ளன. படிகளை ஒட்டி சாலையும் உள்ளது. ஆலய கோபுரம் வரை வாகனங்கள் செல்ல முடியும். முன் காலத்தில் இந்தப் பகுதி சுங்கனஹள்ளி என்று அழைக்கப் பட்டது. விவசாய நிலமாக இருந்த இந்தப் பகுதியில் வேர்க் கடலை பயிரிடப்
#சாச்திரப்பாக்கம்_வைத்தீஸ்வரன்_கோவில் சென்னையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது சாஸ்திரம்பாக்கம். இங்கு சிவபெருமான் வைத்தீஸ்வரன் என்ற திருநாமத்துடன். அம்பாளின் திருநாமம் தையல்நாயகி என்ற திருநாமத்துடன்
அருள்பாலித்து வருகின்றார்கள். பல ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம் காலப் போக்கில் சிதிலமடைந்து, மண் மூடி போய் விட்டது. முட்புதர்கள் அதிகமாக வளர்ந்து பாம்புகள் நடமாடும் இடமாக மாறிப் போனது. இந்த நிலையில் அந்தப் பகுதியில் வாழ்ந்த மனநோய் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞர், இறைவனின் சக்தியால்
மனநோய் தீர்ந்து தீர்க்கமான இளைஞனாக மாறினார். இதையடுத்து அந்த வாலிபர், மண் மூடிப் போயிருந்த சிவலிங்கத்தை வெளியே எடுத்து அபிஷேகம், ஆராதனை செய்து வந்தார். இதனைக் கண்ட அந்தப் பகுதி மக்கள், மனநோயால் பாதிக்கப்பட்ட இந்த வாலிபனின் செய்கையைக் கண்டு திகைத்தனர். அவனிடம் இது பற்றி கேட்ட
#நற்சிந்தனை
தாருகாவனம் என்று ஓர் அற்புதமான, மகா அமைதியான வனம்! அங்குப் பல முனிவர்கள் வேள்வி செய்தும் தவமியற்றியபடியும் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அவர்களது சிந்தையில் அணுவளவேனும் பக்தியுணர்வு என்பதே கிடையாது. தங்களது தவத்தின் வலிமையால் முக்தியை அடைந்து விடலாம் என்ற மகா
கர்வத்தில் இருந்தார்கள். அவர்களது பத்தினிமார்களோ அந்த முனிவர்களுக்கும் மேல் இறுமாப்பு படைத்தவர்களாக இருந்தார்கள். தாங்களே அகில உலகிலும் கற்பரசிகள் என்றும் தங்கள் கற்பின் ஆற்றலால் எதையும் சாதித்துவிடும் வல்லமை படைத்தவர்கள் என்பது அவர்கள் எண்ணம். இவர்களின் ஆணவத்தை ஒழிக்கக் கருதிய
சிவபெருமான், விஷ்ணுவுடன் கலந்து ஆலோசித்து ஒரு திட்டம் தீட்டினார். திருமால், பார்த்தவர் மதிமயங்கிக் காலடியில் விழும் அற்புத அழகோடு கூடிய மோகினி வடிவம் தாங்கி வர, சிவன் திகம்பரராய்ப் பிச்சை எடுக்கும் பிட்சாடனர் உருவங்கொண்டு தாருகாவனத்தை அடைந்தனர். மோகினியைக் கண்ட முனிவர்கள் தங்கள்
#அட்சயதிருதியை மே 10 2024
சித்திரை மாதத்தில் வரும் வளர்பிறை திருதியை நாளில் அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரத்தை திரௌபதிக்கு வழங்கி ஆசிர்வதித்தார் சூரிய பகவான். க்ஷயம் என்றால் குறை என்று பொருள். அக்ஷயம் என்றால் என்றும் குறைவில்லாத என்ற அர்த்தத்தில் இந்த நாளிற்கு அக்ஷய திருதியை
என்று வழங்கப் படுகிறது. பாண்டவர்கள் வனவாசம் செய்யும் காலத்தில் உணவிற்கு மிகவும் சிரமப் பட்டார்கள். கானகத்தில் தங்களைக் காணவரும் முனிவர்களுக்கும், ரிஷிகளுக்கும் விருந்தோம்பல் விதியின்படி உணவளிக்க வேண்டும் அல்லவா? உணவு சமைக்க என்ன செய்வது என்று மனம் கலங்கிய திரௌபதி சூரிய பகவானை
நினைத்து வழிபட்டாள். சூரியன் மனமுவந்து அளித்த பாத்திரத்திற்கு அக்ஷய பாத்திரம் என்றும் பெயர் வந்தது. திரௌபதிக்கு சூரிய பகவான் அட்சய பாத்திரத்தை வழங்கியது அவர்கள் சாப்பிடுவதற்காக மட்டும் அல்ல. அரசர்களாக வாழ்ந்த அவர்கள் காட்டில் வசிக்கும்போதும் தங்களால் இயன்ற அன்னதானம் செய்ய