D Elangovan Profile picture
25 Feb, 17 tweets, 9 min read
@g4gunaa @ikamalhaasan ஜெயலலிதா சொன்னது போல கமலஹாசனுக்கு 65 வயதாகிறது இந்த வயதில் பொறுப்பில்லையா ? பணத்தை தொழிலில் எப்படி முதலீடு செய்வது என்று தெரியாதா என்ற ஜெயலலிதா மீது கடும் கோபம் வந்தது. நாட்டை விட்டு ஓடுகிறேன் என்றார் கமலஹாசன். ஆரியர் கமலுக்காக தமிழனாக தம்பி உசேனுடன் பேச்சுரிமை பற்றி வாக்குவாதம்
@g4gunaa @ikamalhaasan தோழர் தம்பி உசேன் விஸ்வரூபம் குறித்து விமர்சனம் செய்தபோது அவரோடு கோபப்பட்டேன். ஆனால் ஒருமுறை கோவையில் இருந்து சென்னை வரை காரில் செல்லும்போது, தேநீரகத்தில், என்னை போலவே காரில் சென்னை வந்த, ஒரு பெரியவரும் அவர்கள் அவர்களுடன் மூன்று பேரக் குழந்தைகளும் நன்கு பழகிக் கொண்டோம்...
@g4gunaa @ikamalhaasan நான் பிறந்த ஊருக்கு அருகில் உள்ள ஒரு ஊரில் அவர்களுக்கும் உறவினர்கள் இருக்க போக நண்பர்களாகி விட்டோம். மேலும் அவர் பார்ப்பதற்கு அப்பச்சியின் (அம்மாவின் அப்பா) ஆருயிர் நண்பர் காசிம் பாய் போல் இருந்தார். அவர் சென்னைக்கு அடிக்கடி பயணம் செய்ததில்லை, இரு கார்களும் ஒன்றாக பயணிப்பது என..
@g4gunaa @ikamalhaasan முடிவு செய்துகொண்டு அவரை முன்னால் போகச் சொல்லிவிட்டு நான் பின்னால் வண்டி ஓட்டி வந்து கொண்டிருந்தேன். இடையில் காவல்துறையால் ஒரு சாவடியில் அனைவரும் விசாரிக்கப்பட்டனர். அவரிடம் சான்றிதழ்களை வாங்கிக்கொண்டு சரி பார்க்கிறேன் என்று நிறுத்தி வைத்திருந்தார்கள். அவருக்குப் பிறகு வந்த 10..
@g4gunaa @ikamalhaasan பிறகு சென்ற என்னை விசாரித்துவிட்டு சான்றிதழை சரிபார்த்து விட்டு நீங்கள் போகலாம் என்று சொல்லிவிட்டார்கள். நான் அதற்கு அவர்களிடம் நாங்கள் இருவரும் ஒன்றாக பயணிக்கிறோம் ஆகவே அவர் வந்தால்தான் போவோம் என்று சொல்ல, அவரை முழுமையாக விசாரித்து அனுப்ப அரை மணி நேரம், ஒரு மணி நேரம் ஆகலாம்..
@g4gunaa @ikamalhaasan என்று சொன்னார்கள். ஏன் என்று கேட்டதற்கு பெரிய அதிகாரி வந்து விசாரித்த பின்பு அனுப்ப முடியும் என்றார்கள். அப்படியானால் நானும் என் காரை நிறுத்திவிட்டு எங்கு தான் இருப்பேன் என்று சொல்லிவிட்டேன். பெரியவர் ஒரு மிகப்பெரும் புன்சிரிப்போடு அமைதியாக காத்துக் கொண்டிருந்தார்...
@g4gunaa @ikamalhaasan இரவாகி போனால் அவர் வண்டி ஓட்ட கடினம் என்று எனக்கு புரிகிறது, ஆனால் அவர் அமைதியாக இருக்கிறார்கள். எனக்கு கடும் கோபம். நீங்கள் நிறுத்தி வைப்பதற்கு சரியான காரணத்தைச் சொல்ல வேண்டும் சொல்லாவிட்டால் இதற்காகவே நான் வழக்குத் தொடுப்பேன் என்று சொல்ல, உங்களுக்கும் அவருக்கும் என்ன தொடர்பு
@g4gunaa @ikamalhaasan இதற்காக நீங்கள் ஏன் சண்டையிட வேண்டும் என்று என்னையே மீண்டும் கேள்வி கேட்டார்கள். அவரிடம் சொன்னது இதுதான் நீங்கள் எந்த ஊர் என்று தெரியாது. அவர் எங்கள் பகுதியை சேர்ந்தவர் அவரை எந்தக் காலத்திலும் பாதியில் விட்டு விட்டு நான் செல்ல மாட்டேன் என்று சொல்லிவிட்டேன்.
@g4gunaa @ikamalhaasan இந்தச் சிக்கலை காவலர் பெரிய அதிகாரியிடம் சொல்ல பெரிய அதிகாரி 10 கிலோ மீட்டருக்கு அந்தப் பக்கம் இருந்து உடனடியாக வந்து பெரியவரை பார்த்தபின் நீங்கள் போகலாம் என்று சொல்லிவிட்டார். அவரின் வயது 65 இருக்கும், குழந்தைகள் 4, 7, 8 வயது சிறுமிகள்.
@g4gunaa @ikamalhaasan ஒரு 65 வயது பழுத்த பழமாக தெரிந்த முதியவரும் மூன்று சிறு குழந்தைகளும் இந்த நாட்டுக்கு என்ன தீங்கு விளைவித்து விடமுடியும்? விஸ்வரூபம் போன்ற பல படங்கள் பொதுப்புத்தியில் ஒரு அச்சத்தை ஏற்படுத்துவதில் பெரும் பங்காற்றுகிறது என்பதை முழுமையாக உணர்ந்தேன்.
@g4gunaa @ikamalhaasan அந்த வலியை என்னால் நன்றாக உணர முடிவதற்கு எனக்கு நேர்ந்த இதற்கு முன் நடந்த ஒரு நிகழ்வும் காரணம். ஈழச்சிக்கல் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில், பழனி மலையில் இருந்து ( நண்பன், உறவு தம்பியும் பக்தர்கள் - மொட்டை ) திரும்பிக்கொண்டிருந்த போது இதே போல் காவல்துறை வாகனச் சோதனை, விசாரணை..
@g4gunaa @ikamalhaasan அது ஒரு சிறு விசாரணை தான், பெயர் என்ன எந்த ஊர் எங்கு செல்கிறாய் அவ்வளவுதான் சரி போ என்று சொல்லி விடுவார்கள். முதலில் பெயர் கேட்டார்கள் சரி முதல் பெயர் இளங்கோ, அடுத்து மன்னர்மன்னன், செந்தமிழன், தமிழரசன்.. வண்டியை ஓரமாக நிறுத்தி உங்களை விசாரிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள்..
@g4gunaa @ikamalhaasan தமிழ் பற்றின் காரணமாக எங்கள் நண்பர்கள் உறவினர்களின் பெரும்பாலான பெயர்கள் தூய தமிழ்ப் பெயர்களாகவே இருக்கும். தமிழில் பெயர் வைத்த ஒரே காரணத்திற்காக 2 hrs தடுக்கப்பட்டோம், விசாரிக்கப்பட்டோம். தமிழர்களாக தமிழ்ப் பெயரோடு தமிழ்நாட்டில் வாழ்வது குற்றமா என்று ஆய்வாளரிடம் கோபப்பட்டேன்.
@g4gunaa @ikamalhaasan நாமே நேரடியாக நெருக்கடிக்கு, பாதிப்புக்கு உள்ளாகாத வரை நமக்கு, மற்றொருவர் சந்திக்கும் பிரச்சினை அவர்களின் வலிகள் நமக்குப் புரியாது. கமலஹாசன் மற்ற பார்ப்பனர்கள் நிலை கூட இதுதான். நல்ல உள்ளம் கொண்ட பார்ப்பனர் கூட நாம் ஏதோ அதிகமாக சொல்கிறோம் என்று நினைத்துக் கொள்கிறார்கள்.
@g4gunaa @ikamalhaasan நான் அடிக்கடி சொல்வது தான் மனித நீதி என்று ஒன்று, மிருக நீதி என்று ஒன்று உண்டு. மனிதர்கள் ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டு அதனால் நன்மை அடைந்து கொண்டு நல்ல நோக்கிலேயே நியாயமாக நடந்து கொள்வார்கள். மிருகங்களைப் பொறுத்தவரை அது வாழ வேண்டும் என்ற ஒரு நோக்கம் மட்டுமே அதற்கு இருக்கும்.
@g4gunaa @ikamalhaasan கொடூர மிருகங்கள் பலவற்றிற்கு மற்றவர்களின் வலி புரியாது. ஓநாய் ஒன்று ஆட்டுக் குட்டியின் கழுத்தைக் கடித்து ரத்தத்தை குடிக்கும் ஆனால் அதற்கு ஆட்டுக்குட்டியின் வழி புரியாது. ஒரு கல்லை எடுத்து ஓங்கி அடித்தால் மிகப்பெரும் தடிகொண்டு தாக்கினால் ஓநாய் ஓடிவிடும். ஓநாய்க்கு தன்வலி மட்டுமே..
@g4gunaa @ikamalhaasan புரியும். ஓநாய்கள், ஒரு காலத்திலும் ஆட்டுக்குட்டியின் வழிகளை புரிந்து கொள்ளாது. தமிழரின் வலி ஆதிக்க ஆரியனுக்கோ இந்திக்காரனுக்கோ என்றும் புரியாது. மிருகங்களிடம் மிருகங்களுக்கு புரிந்த வழியில் பேசவேண்டும். அவைகளுக்கு தன் வலி மட்டுமே புரியும். சங்கியும் ஓநாயும் ஒன்றுதான்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with D Elangovan

D Elangovan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!