பூதம் Profile picture
Mar 26, 2021 6 tweets 3 min read Read on X
கோவில் நிதியை அரசு எடுத்து வேறு திட்டங்களுக்கு பயன்படுத்துகிறதா?

இல்லை. அரசுதான் மக்கள் வரிப்பணத்தில் இருந்து ஆண்டுக்கு 6 கோடி ரூபாய் கோவில் புனரமைப்புக்காக வழங்குகிறது!

(Page 119)

இந்து சமய அறநிலையத்துறை நிதி எப்படி இயங்குகிறது என்று பார்ப்போம். cms.tn.gov.in/sites/default/…
Image
இந்து சமய அறக்கட்டளைகள் நிர்வாக நிதி என்ற பெயரில் ஒரு fund உருவாக்கப்பட்டு அதில் கோவில்களின் வருமானத்துக்கு ஏற்ப, அதன் வருமானத்தில் இருந்து கீழே குறிப்பிட்ட படி ஒரு பகுதி அந்த நிதியில் வரவு வைக்கப்படும்.

tnhrce.gov.in/resources/docs…
அந்த நிதியில் இருந்துதான் இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்களுக்கு தமிழக அரசு அளித்த சம்பளம், ஓய்வூதியம் போன்றவற்றை அறநிலையத்துறை அரசுக்கு திருப்பி அளிக்கிறது.

அதை தவிர கோவில் வருமானத்தில் இருந்து ஒரு பைசா கூட அரசிடம் செல்லாது!

tnhrce.gov.in/resources/docs…
இது போக, பொது நல நிதி ஒன்று உருவாக்கப்பட்டு, உபரி நிதி உடைய கோவில்களின் அறங்காவலர் குழு தாமாக முன்வந்து அளிக்கும் நிதி அதில் செலுத்தப்படும்.

இந்த நிதி நலிந்த கோவில்களை புனரமைக்க பயன்படுத்தப்படும்

tnhrce.gov.in/resources/docs…
மிகை நிதி கொண்ட கோவில்கள் அளிக்கும் உபரி நிதியை ஏழை இந்துக்களின் திருமண உதவிக்காகவோ, ஏழைகளுக்கு உணவளிப்பதற்கோ பயன்படுத்தலாம்.

வேறு எதற்கும் பயன் படுத்த முடியாது

tnhrce.gov.in/resources/docs…
இப்படியாக, கோவில்களின் வருமானத்தை எதற்கு பயன்படுத்தலாம் என்ற விதிகள் தெளிவாக வரையறை செய்யப்பட்டிருக்கிறது.

ஆகவே, கோவில்களின் வருமானத்தை வேறு எந்த திட்டங்களுக்கும் அரசு பயன்படுத்துவதில்லை. சட்டம் அதை அனுமதிப்பதில்லை.

மாறாக அரசின் வருவாய்தான் கோவில்களுக்கு செலவு செய்யப்படுகிறது.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with பூதம்

பூதம் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @angry_birdu

Dec 11
இதுதான் கோவில் நிர்வாகத்துக்கு இராம ரவிக்குமார் அனுப்பிய கோரிக்கை மனு. இதுல "தீபத்தூண்"ங்கிற வார்த்தையே இல்ல

வழக்கமான பாரம்பரியத்தின் படி தனக்கு திருப்பரங்குன்றம் மலையில் விளக்கேற்ற அனுமதி வேண்டும்னு கேட்டுருக்காரு. மலை உச்சியில இருக்கிற தூண்ல ஏத்தணும்னு கோரிக்கையே வைக்கல Image
Image
இது கோவில் நிர்வாகம் அளித்த பதில்

வழக்கமான பாரம்பரியத்தின் படி உச்சிப்பிள்ளையார் கோவில் தீபமண்டபத்துலதான் ஏத்துறோம்... பக்தர்கள் பங்கேற்கலாம்னு பதில் அனுப்பிட்டாங்க.

ஆனா இராம ரவிக்குமார் கோர்ட்டுக்கு போயி, நான் சொன்ன தூண்ல விளக்கேத்த மாட்டேங்குறாங்கன்னு வழக்கு போட்டுட்டாரு Image
வழக்கு விசாரணைல கோவில் தரப்பு இராம ரவிக்குமார் அனுப்பிய மனுவை எடுத்து காட்டி, இதுல அவர் மலை உச்சியில இருக்கிற தூண்ல விளக்கேத்தணும்னு கோரிக்கையே வைக்கலையேன்னு வாதாடினாங்க.

உடனே சங்கிகள் செஞ்ச திருட்டுத்தனம் என்னன்னா...
Read 6 tweets
Dec 7
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருக்கும் தூண்கள் பிரிட்டிஷ் காலத்தில் நடப்பட்ட சர்வே கற்கள் என்பதற்கான அதிகாரபூர்வ ஆவணம் சிக்கியது!

தர்காவுக்கு வட மேற்கில் 50 யார்டு தொலைவில் ஒரு சர்வே கல், அந்த சர்வே கல்லுக்கு தென் கிழக்கில் 53 யார்டு தொலைவில், அதாவது தர்காவுக்கு மிக அருகில்.. Image
...மற்றொரு சர்வே கல் என இரண்டு சர்வே ஸ்டேஷன் கற்கள் இருப்பதாக இந்த ஆவணம் கூறுகிறது.

இதில் இருக்கும் lat long புள்ளிகளை அப்படியே பயன் படுத்த முடியாது. அதில் மைனஸ் 2'30" திருத்தம் செய்ய வேண்டும். மேலும் இவை Everest datum புள்ளிகள். அவற்றை WGS-84 க்கு மாற்ற வேண்டும். Image
அப்படி மாற்றம் செய்த பிறகு கிடைக்கும் lat long புள்ளிகள் 9°52'38.3"N 78°04'07.7"E

இதை அப்படி கூகிள் மேப்பில் போட்டால், தற்போது சங்கிகள் குறிப்பிடும் அந்த தூண் இருக்கும் இடத்தை காட்டும் Image
Read 4 tweets
Dec 6
சட்டத்துக்கு புறம்பான நீதிமன்ற உத்தரவுகளை மதிக்க வேண்டிய தேவை இல்ல

2014-லயே திருப்பரங்குன்றம் மலை உச்சியில தீபம் ஏற்றணும்னு ஒருத்தர் வழக்கு போட்டாரு. அந்த கோரிக்கையை வைக்க மனுதாரருக்கு எந்த சட்டபூர்வ உரிமையும் இல்லைன்னு சொல்லி சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி பண்ணிடுச்சு Image
Image
அதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கையும் 2017-ல இரண்டு நீதிபதிகள் கொண்ட சென்னை உயர்நீதிமன்ற அமர்வு தள்ளுபடி பண்ணிடுச்சு. Image
Image
இதுக்கு எல்லாத்துக்கும் முன்னாடி 1996-ல இது தொடர்பான ஒரு வழக்குலயும், வழக்கத்தை மாற்ற முடியாதுன்னு நீதிபதி சொல்லிட்டாரு.

ஒரு வேளை எதிர்காலத்தில் கோவில் நிர்வாகம் விருப்பப்பட்டால் அதிகாரிகளின் அனுமதியோடு வேறு இடங்களில் தீபம் ஏற்றலாம்னு நீதிபதி சொன்னாரு Image
Image
Read 12 tweets
Nov 17
அசாம்ல Special Revision நடத்த போவதாக தேர்தல் ஆணையம் அறிவிச்சிருக்கு. மத்த மாநிலங்கள்ல நடக்கிறதுக்கு பேரு Special "Intensive" Revision

அசாம்ல enumeration படிவம் நிரப்ப வேண்டாம். முந்தைய SIR பட்டியல்ல பெயர் இருக்கான்னு தேட வேண்டாம்

காரணத்தை புரிஞ்சிக்க தொடர்ந்து படிங்க Image
அசாம்ல NRC நடந்தாச்சு. அதனால அங்க குடியுரிமையை சோதிக்க வேண்டாம். மத்த மாநிலங்கள்ல SIR-ங்கிற பேர்ல நடப்பது குடியுரிமை சோதனை.

சரி. சோதிச்சா என்ன தப்பு?

பிரச்சனை என்னன்னா, எந்த ஆவணங்கள் குடியுரிமைக்கான சான்றாக ஏற்றுக் கொள்ளப்படும்னு தேர்தல் ஆணையம் இதுவரை தெளிவுபடுத்தல.
SIR அறிவிப்புல, ஆதார் அட்டையை குடியுரிமை சான்றாக ஏற்றுக்கொள்ள மாட்டோம்னு தேர்தல் ஆணையம் சொல்லியிருக்கு. அப்ப, வேற ஏதோ ஒரு குடியுரிமை சான்றை நாம காட்டணும்கிறதை தேர்தல் ஆணையம் சொல்லாம சொல்லியிருக்கு. Image
Read 11 tweets
Sep 30
தவெக நிர்வாகிகள் ஏன் இந்த சம்பவம் பத்தி எந்த செய்தியாளர் சந்திப்பும் நடத்தலைன்னு நிறைய பேர் கேக்குறாங்க

காரணம் ரொம்ப சிம்பிள். செய்தியாளர் சந்திப்புல எல்லா உண்மைகளையும் சொல்லிட்டா, அதுக்கு அப்புறம் ஊடக புரோக்கர்களையும், இன்புளூயன்சர்களையும் வெச்சி conspiracy தியரி பரப்ப முடியாது
எடுத்துக்காட்டாக, அந்த ஆம்புலன்ஸ் பத்தி கேள்வி கேப்பாங்க. அது தவெக ஏற்பாடு செஞ்ச ஆம்புலன்ஸ்தாங்கிற உண்மையை ஒத்துக்கிட்டாகணும். அப்படி செஞ்சிட்டா அதுக்கு அப்புறம், அந்த ஆம்புலன்சை திமுக அரசுதான் வேணும்னே அனுப்பினாங்கன்னு பொய்யை பரப்ப முடியாது
மத்த நேரங்கள்ல வேணா செய்தியாளர் சந்திப்புல பொய்யான தகவலை கொடுக்கலாம். ஆனா இப்ப இந்த சம்பவம் விசாரணைல இருக்கு. இந்த நேரத்துல அவனுங்க செய்தியாளர்கள் முன்னாடி பொய் பேசினா, நாளைக்கு நீதிமன்றத்துல மாட்டிக்குவானுங்க.
Read 4 tweets
Apr 9
எடப்பாடி தமிழ்நாட்டுக்கு எதிராக செய்த வேலை இதுல அம்பலமாகி இருக்கு. என்ன நடந்ததுன்னு வரிசையா பார்ப்போம்

ஒரு மசோதாவை சட்டமன்றம் ஆளுநருக்கு அனுப்பினா ஆளுநர் 3 விதமான முடிவுகளை எடுக்கலாம்

1. ஒப்புதல் அளிப்பது
2. திருப்பி அனுப்புவது
3. குடியரசு தலைவருக்கு அனுப்புவது

(Contd....) Image
ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை சட்டமன்றம் மீண்டும் இயற்றி ஆளுநருக்கு அனுப்பினால், ஆளுநர் ஒப்புதல் கொடுத்தே ஆக வேண்டும் என்று அரசமைப்பு சட்டம் கூறுகிறது. Image
2020ல அதிமுக ஆட்சி காலத்துலயும், 2022ல திமுக ஆட்சி காலத்துலயும் ஆளுநருக்கு அனுப்பப்பட்ட பல மசோதாக்களுக்கு ஆளுநர் இந்த 3 முடிவுகளில் எந்த முடிவையும் எடுக்காம காலம் தாழ்த்தி வந்தார். அதனால 30.10.2023 அன்னிக்கு தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்துல வழக்கு தொடுக்குது. Image
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(