இறைபணிக்கு மத்தியிலும் தமிழ்த் தேசியத்துக்காகவும் அயராது உழைத்த, மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் அதி வண. இராயப்பு ஜோசப் ஆண்டகை (80) காலமானார்.
நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட அவர், யாழ்.சம்பத்தரிசியார்
2.கல்லூரியின் பழைய மாணவர்.
கத்தோலிக்கச் சமூகத்துக்கு மட்டுமல்லாது, முழு ஈழத்தமிழருக்குமே ஆயரின் மறைவு பேரிழப்பு.
மன்னார் மறைமாவட்ட ஆயராக அருட்பணியாற்றிய காலப்பகுதியில், போர் என்ற போர்வையில் அரச எந்திரம் நடத்திய இனப்படுகொலையை உலகுக்குப் பறை சாற்றியவர் அவர்.மன்னார் மறைமாவட்டத்தின்
3.ஆயராக இருந்த போதும், வடக்கு, கிழக்கில் இடம் பெயர்ந்த மக்களின் துரித மீள் குடியேற்றத்துக்காகவும் தன்னை அர்ப்பணித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
போர்ச் சூழலில் பல்வேறு நிலைகளில் துன்பங்களைச் சுமந்துநின்ற மக்களின் துயரங்களைத் துடைக்க அவர் அரும்பாடுபட்டார்.
சிறைகளில்
4.வாடும் கைதிகளை அவர் அடிக்கடி சென்று பார்வையிட்டு அவர்களின் விடுதலைக்காகக் குரல் கொடுத்தார். அவர்களோடு தனிப்பட்ட தொடர்பாடல்களை வைத்திருந்தார்.
காணாமலாக்கப்பட்டவர்கள் சார்பாக நின்று அவர்களைக் கண்டுபிடிக்க அல்லது அவர்களின் கதியை வெளிக்கொணர ஓயாது உழைத்தார்
5. 2013 ஆம் ஆண்டு திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப்புதைகுழி தொடர்பான இலங்கை அரசின் விசாரணையில் நம்பிக்கையில்லை என்றும், எனவே அது குறித்து சர்வதேச விசாரணை தேவை என்றும் ஆயர் உறுதியாக இருந்தார்.'திடீரென' ஏற்பட்ட உடனலக் குறைவினால், பணிகளைச் செவ்வனே நிறைவேற்றமுடியாத
6/6 சூழ்நிலையில் 2016 ஜனவரியில், தனது 75ஆவது வயதில் ஆயர் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.
01.04.2021 வியாழக்கிழமை அவர் யாழ்ப்பாணத்தில் காலமானார்.
தங்களுக்கு எம் கண்ணீர் வணக்கம் ஆண்டகையே.
நிலைத்த வாழ்வைத் தங்களுக்கு ஆண்டவர் அருளட்டும் ஆண்டகையே.
அதுவரை, அமைதியில் உறங்குங்கள்.
GANGA
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
முல்லை மாவட்டம் ஆனந்தபுரம் பகுதியில் வல்லாதிக்க அரசுகளின் உதவியுடன் சிங்கள படைகள் வீசிய இரசாயன நச்சுக்குண்டுத் தாக்குதலில் 04.04.2009 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகள் பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் மணிவண்ணன்,
2. பிரிகேடியர் ஆதவன், பிரிகேடியர் விதுசா, பிரிகேடியர் துர்க்கா, கேணல் நாகேஸ், கேணல் தமிழ்ச்செல்வி, கேணல் அமுதா உட்பட ஆனந்தபுரத்தில் உயிர்நீத்த ஏனைய மாவீரர்களின் 12 ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
முப்பதாண்டு கால ஆயுத விடுதலைப் போராட்டத்தின் அசைவியக்கத்தை உலுப்பிவிட்ட நிகழ்வாக –
3. 2009 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் – முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஆனந்தபுரம் கிராமத்தில் நிகழ்ந்த சமர் கணிக்கப்படுகின்றது.
விடுதலைப்புலிகள் எதிர்பார்த்தற்கு மாறாக – பாரிய ஆள் இழப்புக்களுக்கு பின்னரும் – தொடர்ச்சியாக ஆயிரக்கணக்கான சிங்கள தேசத்தின் படைவீரர்கள்
1.தாய்குருவிமேவிதிராயர்
லெப்.கேணல் அமுதாப் அவர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்
சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின்தளபதி லெப்.கேணல் அமுதாப் அவர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்
சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் 17 ஆண்டு காலச் சாதனைகள்…!
“சிறப்பு தளபதி லெப் கேணல் அமுதாப்.!
18 ஆம் ஆண்டில்
2. காலடி வைக்கும் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் கடந்த காலச் சாதனைகளை அப்படையணியின் துணைத் தளபதி அமுதாப் விபரித்துள்ளார்.
சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி, 18 ஆம் ஆண்டில் கால் பதிப்பதனையிட்டு கடந்த வியாழக்கிழமை (10.04.08) நடைபெற்ற நிகழ்வில் அவர் பேசியதாவது:
இன்று நெருக்கடியான
3.கால கட்டத்தில், நெருக்கமான களங்களில் நின்று கொண்டு நெருக்கடிகளைச் சந்தித்து சாதனைகளை படைத்துக் கொண்டிருக்கின்ற சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் 18 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் இந்நாளில் சில விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நான் நினைக்கின்றேன்.தமிழீழ விடுதலைப