தோழர் திருமுருகன் காந்தி என்பவர் கதை சொல்லி சீமான் அல்ல. எனவே ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தி, அரசின் மீது குற்றச்சாட்டுகளை வைக்கும் முன், குறைந்தபட்சம் தரவுகளை சரிபார்த்து இருக்க வேண்டும்.
ஒருவேளை குடந்தையரசன் மேல் உள்ள நம்பிக்கையில் தெரிவித்து விட்டார் போல.!
1 தனி பட்ஜெட் கோரிக்கை வரவேற்க வேண்டிய ஒன்று தான். அதில் மாற்று கருத்து இல்லை.
ஆனால் தெலுங்கானா தனிபட்ஜெட் வைத்து அள்ளி கொடுப்பது போலவும், தமிழ்நாடு வஞ்சிப்பது போலவும் சொல்வது தவறு.
தெலுங்கானா அரசின் ஆதிதிராவிட பங்குடியினர் நலத்துறை நிதி ஒதுக்கீடு 21,306 கோடி
திமுக அரசு பொறுப்பேற்ற பின் இந்த நிதியாண்டில் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகை மட்டும் 16,000 கோடி ரூபாய்
இது தவிர தாட்கோ மூலம் 4,140 கோடி ரூபாய் அவர்களின் பொருளாதார மேம்பாட்டு தொழில் முனைவோருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
தாட்கோ குறித்து பேசும் அவர், திமுக அரசு ஒதுக்கியுள்ள தொகை குறித்து எதுவும் சொல்லவில்லை.
கடந்த அதிமுக ஆட்சியில் 2020-21 ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறைக்கு ஒதுக்கப்பட்ட தொகை 4,100 கோடி மட்டுமே என்பதையும், தாட்கோ நிதி ஒதுக்கவில்லை என்றும் தெரிந்து கொள்ளவும்
2 Backlog Vacancies குறித்து 2007ஆம் ஆண்டு ஆய்வுக்குழு வைத்து 2010ஆம் ஆண்டு அறிக்கை பெற்றது திமுக தான். 2011ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்கு பின் 10ஆண்டுகள் அதிமுக அதை நிரப்ப நடவடிக்கை எடுக்கவில்லை
ஆட்சிக்கு வந்ததும் ஜூன் மாதம் இதற்கான நடவடிக்கை தொடங்கிவிட்டது தெரியாமல் பேசுகிறார்.
3 EWS இட ஒதுக்கீடு பெற வைத்துள்ள வருமான உச்ச வரம்பையும், SC/ST உதவித்தொகை பெற நிர்ணயித்துள்ள வருமான உச்ச வரம்பையும் குழப்பி தமிழ்நாடு அரசு வஞ்சிப்பதாக சொல்கிறார்
2.5 லட்சம் வருமானம் என்ற அளவில் SC/ST இட ஒதுக்கீடு கிடையாது. அவர்களுக்கான Scholarships பெறவே என்று புரிந்து கொள்ளவும்
4 தெலுங்கானா 200 பேரை வெளிநாடு அனுப்பி படிக்க வைத்ததாகவும், இங்கு 4 மாணவர்களுக்கு மட்டுமே வழங்கி உள்ளதாக சொல்கிறார். 4 பேர் என்ற தகவலை சொன்னதே இந்த ஆண்டு பட்ஜெட்டில் தான்.
தெலுங்கானா நிதி ஒதுக்கீடு 7 கோடி, தமிழ்நாடு அரசு 5 கோடி ஒதுக்கி உள்ளது.
இதை எல்லாம் தெரிந்து கொண்டும், அரசின் துறை சார் அமைச்சரிடம் எந்தவித கோரிக்கையும் வைக்காமல், அரசின் மேல் குறை சொல்ல விரும்பும் குடந்தையரசன் போன்றோரின் குரலாய் மட்டுமே பத்திரிக்கையாளர் சந்திப்பில், திருமுருகன் காந்தி எடுத்து வைத்து இருக்கிறாரோ என்ற சந்தேகம் வருகிறது. நன்றி.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
இந்த CBSE உள்ளிட்ட பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் பயிற்சியை தமிழ்நாடு அரசு தான் கொடுக்கிறது
மொத்தம் 4,951 தமிழ் ஆசிரியர்கள் உள்ளார்கள்.
இங்கே குறிப்பிட வேண்டிய ஒன்று, தமிழ்நாட்டில் இருக்கும் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் ஒரு தமிழ் ஆசிரியர்கள் கூட ஒன்றிய அரசு நியமிக்கவில்லை.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 76.29 லட்சம். அனைவருக்கும் Texr & Note book, School Bag இலவசமாக வழங்குகிறது
CBSE உள்ளிட்ட பள்ளிகளில் பயிலும் 12.63 லட்ச மாணவர்களுக்கும் தமிழ் Text Book தமிழ்நாடு அரசே கொடுக்கிறது.
2. Chief Secretary எழுதிய கடிதம் தெளிவாக PM Shri பள்ளி பற்றி ஆராய உயர்நிலைக் குழு அமைத்துள்ளது அதன் அறிக்கையின் பின்பே 2024-25 MoU Sign செய்ய முடியும். 2023-24 கடைசி 2 தவணைகளை விடுவிக்க சொல்லி உள்ளது
அது MoE அனுப்பிய PM Shri Sub பதிலில் பணம் கேட்டதே தவிர, MoU Sign பண்ண அல்ல
2023-24 3rd & 4th கொடுத்தது. 2024-25 Fund Mr @dmk_raja MP கேள்விக்கு PM Shri School TN Gov ஏற்றுக் கொள்ளவில்லை என்றே பதில் சொல்லி இருக்கிறார்.
அரசு NEP & PM Shri கூடாது என்ற முடிவில் தான் உள்ளது.
@actorvijay தான் BJP-யை தனியாக எதிர்ப்பதை தவிர்த்து DMK-வை சேர்த்துக் கொள்கிறார்
திமுக ஆட்சியில் G.O. Ms No 324 (School Education C2 Department), dated 19.11.1999 படி, முதலில் 1 முதல் 5 வரை உள்ள Nursary and Primary School Education ல் தமிழ் கட்டாயம் என்று கொண்டு வரப்பட்டது
மாநில பாடத்திட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் அமலானது.
Tamil in Secondary Education:
2006ல் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்ததும் Tamilnadu Act No 13 of 2006 மூலம் தமிழை 10ஆம் வகுப்பு வரை கட்டாய பயிற்று மொழியாக கொண்டு வந்தது.
நீதிமன்ற வழக்குகள் காரணமாக, இதுவும் மாநில பாடத்திட்ட பள்ளிகளில் மட்டுமே அமலானது.
கடந்த சில வாரங்களாக இஸ்லாமியர் என்பதால் அவர்களை விடுதலை செய்ய மறுக்கிறது திமுக என்று போகிற இடமெல்லாம் பொய் பேசி வருகிறீர்கள்.
திமுக 2006 முதல் 2011 வரை ஆட்சி காலத்தில் மட்டும் சுமார் 130 இஸ்லாமியர்களை விடுதலை செய்துள்ளது.
முதன் முதலில் சிறை தண்டனை பெற்ற கைதிகள் முன்விடுதலை 1994 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது.
அப்போது 20 ஆண்டுகள் நிறைவு செய்தவர்கள் முன்விடுதலை செய்ய பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் (Letter (FS) No.1358 Home, Dated 10.11.94) வெளியிடப்பட்டது.
அதன் அடிப்படையில் தன்னையும் விடுதலை செய்ய வேண்டும் என்று ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற திருமதி நளினி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அதை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது தனி விவாதம்.
2. ஆந்திரா - இங்கும் கலைஞர் காப்பீடு திட்டம் போன்ற மருத்துவ காப்பீடு உண்டு. ஆனால் அதற்கான பிரீமியம் பயனாளர்கள் (மக்கள்) செலுத்த வேண்டும்.
தமிழ்நாடு அரசு ஆண்டு ஒன்றுக்கு சுமார் 500 கோடி மருத்துவ காப்பீடு பிரீமியம் செலுத்தி வருகிறது.
2011 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்கு பின், முதல்வர் செல்வி. ஜெயலலிதா அவர்கள், கலைஞர் காப்பீடு திட்டம் என்பதை முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் என்று பெயர் மாற்றி செயல்படுத்தினார்.
இதன் மூலம் பயன்பெறும் மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை 1.5 கோடி.