#unsolvedmysteries #PCMreview "விடை தெரியா மர்மங்கள் : பாகம் 3".இன்று நாம் பார்க்க போவது 62 ஆண்டுகளாகியும் இன்னும் மர்மமாக நீடிக்கும் 9 பேர் மரணம் அடைந்த "டயட்லோவ் பாஸ்"நிகழ்வு பற்றி தான்.ஜனவரி 23,1959 அன்று Ural Polytechnic Institute கல்லூரியை சேர்ந்த 10 பேர் ரஷ்ய நாட்டில் Image
இருக்கும் Sverdlovsk Oblast பகுதியில் வடக்கு Ural மலை தொடர்ச்சியில் இருக்கும் kholat Syakhl என்ற மலைக்கு செல்ல முடிவெடுக்கிறார்கள்.இவர்கள் அனைவரும் மலையேறுதலில் கிரேடு 2 சான்றிதழ் பெற்றவர்கள்.கிரேடு 3 சான்றிதல் பெற 300 கிலோமீட்டர் பயணம் செய்திருக்க வேண்டும்.எனவே அச்சான்றிதலை Image
பெற Sverdlovsk பகுதி அதிகாரிகளிடம் அனுமதி வாங்கி மிகவும் கடினமான 10 கிலோமீட்டர் நீளமுள்ள பாதையாக இருக்கும் Oterten என்ற இடத்திற்கு செல்ல முடிவு செய்கிறார்கள். இக்குழுவிற்கு இகோர் டயட்லோவ் (23) என்ற மாணவர் தலைமை தாங்குகிறார்.ஜனவரி 25 ஆம் தேதி ரயில் மூலம் இவ்டேல் என்ற இடத்தை ImageImageImageImage
அடைகிறார்கள்.அடுத்து லாரி மூலம் விசாய் என்ற இடத்தை அடைகிறார்கள்.பின்பு ஜனவரி 27ஆம் தேதி கோரா ஒட்டர்டன் என்ற இடத்திற்கு பயணத்தை ஆரம்பிக்கிறார்கள்.அடுத்த நாள் குழுவில் ஒருவரான யூரி யுடின் என்ற நபர் மூட்டு வலி காரணமாக திரும்பி செல்கிறார்.மீதமுள்ள 9 பேரும் இரண்டு நாள் பயணம் செய்து ImageImage
மலையேறும் பகுதியின் விளிம்பை அடைகிறார்கள்.மோசமான வானிலை காரணமாக மேற்கு திசைக்கு திசைமாறி செல்கிறார்கள்.இன்னும் 1.5கிலோமீட்டர் பயணம் செய்தால் அடர்ந்த காட்டில் சென்று இரவு தங்கலாம்.ஆனால் அவ்வளவு தூரம் செல்ல வேண்டுமே என்று அங்கேயே டென்ட் அடித்து தங்குகிறார்கள்.உடனே தந்தி மூலம் ImageImageImageImage
இவர்களின் குடும்பத்தினருக்கு பிப்ரவரி 12 ஆம் தேதிக்குள் தகவல் தெரிவிப்போம் என்று முன்கூட்டியே கூறுகிறார்கள்.மலையேறுதலில் தாமதம் தவிர்க்க இயலாது என்பதால் சிறிது தாமதம் ஆகலாம் என்றும் கூறுகிறார்கள்.அன்றைய இரவு உணவு சமைத்து சாப்பிட ஆரம்பிக்கிறார்கள்.நேரம் நடு இரவை நெருங்குகிறது. ImageImage
பனிமலையில் இரவு நேரம் எங்கும் இருட்டு மட்டும் தான்.கடுமையான குளிர் காற்று வீசும் நேரம்.அந்த நேரத்தில் பக்கத்தில் யாராவது வந்தாலோ தெரியாது அல்லது பேசினாலோ கூட கேட்காது.திடீரென அனைவரும் டென்ட்டில் இருந்து வெளியே அவசர அவசரமாக வெளியேறுகிறார்கள்.இருட்டில் எந்த பக்கம் என்று தெரியாமல் Image
தோராயமாக ஒரு பக்கத்தை தேர்வு செய்து இந்த பயணம் இன்றோடு முடிவடைகிறது என்று தெரியாமல் செல்கிறார்கள்.இருட்டு மற்றும் மோசமான வானிலை காரணமாக இரண்டு பேர் ஒரு பக்கமும் 3 பேர் சிறிது இடைவேளையில் வேறொரு பக்கமும் மீதம் 4 நான்கு பேர் இன்னொரு பக்கமும் வழிதவறி செல்கிறார்கள்.இரவு முடிகிறது.
இவர்களின் வாழ்கையும் முடிகிறது.குறிப்பிட்ட 12ஆம் தேதி செய்தி வந்து சேராததால்,சில நாட்கள் பொறுத்திருந்து 20 ஆம் தேதி இவர்களின் பெற்றோர் கல்லூரியை அணுகி தேட சொல்கிறார்கள்.ஆசிரியர்கள்,மாணவர்கள் குழுவினர் முதலில் செல்கிறார்கள்.பிறகு போலீஸ் மற்றும் ராணுவம் செல்கிறது.சில நாட்கள் Image
பயணத்திற்கு பிறகு பிப்ரவரி 26ஆம் தேதி இவர்கள் தங்கிய டென்ட் யாருமில்லாமல் கிழிந்த நிலையில் இருப்பதை காண்கிறார்கள்.பயணம் செய்தவர்களின் உடமைகளும் அங்கே இருக்கிறது.சிறிது நேரம் கழித்து இவர்கள் பயணம் செய்த காலடி தடத்தை தேடுதல் குழுவினர் கண்டறிகிறார்கள்.1.5 கிலோமீட்டர் தூரம் வெறும்
காலில் இவர்கள் நடந்து சென்றது தெரிய வருகிறது.500 மீட்டருக்கு பின் காலடி தடம் பனியினால் மூடப்பட அந்த பாதையை பின்பற்றி தோராயமாக செல்கிறார்கள்.சில தூரம் கழித்து ஒரு பைன் மரத்திற்கு கீழ் நெருப்பு முட்டி குளிர் காய்ந்தது போல் விறகுகள் காணப்படுகிறது.பக்கத்தில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் Image
வெறும் உள்ளாடை மட்டும் அணிந்த நிலையில் பனியில் உறைந்த நிலையில் கிடக்கிறார்கள்.அந்த மரம் 5 மீட்டர் அளவிற்கு கிளைகள் முறிக்கபட்ட நிலையில் காணப்படுகிறது.எதையாவது பார்க்க யாரோ ஒருவர் மேலே எற முயற்சி செய்திருக்கலாம் என்று எண்ணுகிறார்கள்.மரத்தில் இருந்து டென்ட் நோக்கி செல்லும் வழியில் ImageImageImage
300,480 மற்றும் 680 மீட்டர் தொலைவில் மூன்று சடலங்கள் கிடைக்கிறது.இருவர் முழு ஆடையை அணிந்திருக்க,ஒருவர் அரை நிர்வாணமாக கிடக்கிறார்.மற்ற நான்கு பேரையும் எவ்வளவு தேடியும் கிடைப்பதில்லை.முடிவாக இரண்டு மாதங்கள் கழித்து மே 4ஆம் தேதி மலையின் கீழ் செல்லும் ஒரு ஆற்றில் நால்வரும் பனிக்கு ImageImageImage
4 மீட்டர் கீழே உறைந்த நிலையில் கிடக்கிறார்கள்.அனைவரின் உடலும் உடற்கூறாய்விற்கு உட்படுத்தபடுகிறது.ஆய்வில் பல அதிர்ச்சிகரமான முடிவுகள் கிடைக்கிறது.இவர்கள் அனைவரும் உணவு உண்டு 6 முதல் 8 மணி நேரம் கழித்து இறந்திருக்கிறார்கள்.சிலர் கிழிந்த ஆடையையும்,சிலர் அரை நிர்வாணமாகவும் டென்ட்டில் Image
இருந்து வெளியேறியிருக்கிறார்கள்.6 பேர் உடல் வெப்பக்குறைவு காரணமாகவும்,2 பேர் நெஞ்சுவலி காரணமாகவும்,ஒருவர் மண்டை எலும்புகள் நொறுங்கி இறந்திருக்கிரார்கள்.இது மட்டும் தான் வெளிஉலகிற்கு அரசாங்கம் கூறிய தகவல்கள்.சில மாதங்கள் கழித்து ஒரு பத்திரிக்கை நிருபருக்கு உடற்கூறாய்வு முடிவுகளின் Image
அறிக்கை மருத்துவர் ஒருவர் மூலம் கிடைக்கிறது.அதை அப்படியே வெளிஉலகிற்கு தெரியப்படுத்துகிறார்.இறந்ததற்கான காரணமாக அரசாங்கம் கூறியது பனிப்புயல் மற்றும் பனிச்சரிவு இவர்களை தாக்கி அதன் மூலம் உடல்சுகவீனம் அடைந்து இறந்தார்கள் என்று.ஆனால் இறந்தவர்களில் ஒருவரின் நாக்கு அறுபட்டது,இருவரின் ImageImage
கண்கள் நொண்டி எடுக்கப்பட்டது,ஒருவரின் கண் இமை அகற்றப்பட்டது என்பதை அரசாங்கம் மறைத்தது.இன்னொரு அதிர்ச்சிகரமான தகவல் என்னவென்றால்,ஒருவரின் மண்டை ஓடு உடைந்து,நெஞ்சு நொறுங்கி இறந்தார் என்பது தான்.இரண்டு பேரின் உடமைகளில் கதிர்வீச்சு இருந்தது என்பது தான் இன்னொரு அதிர்ச்சிகரமான தகவல். Image
இந்த தகவல்கள் எல்லாம் ஏன் அரசாங்கம் மறைத்தது என்று தெரியவில்லை.தேடுதல் குழுவினர் கூறிய தகவல்கள் பின்வருமாறு:பனிப்புயல் வந்ததற்கான தடம் எதுவும் இல்லை.அனைவரும் டென்ட் விட்டு வெளியே பொறுமையாக நடந்து சென்றிருக்கிறார்கள்.இவர்களை தவிர அங்கு யாரும் வரவில்லை.உடமைகள் எடுத்து செல்லவில்லை. ImageImage
இவர்களுடன் 11வது நபர் செல்ல நினைத்து பிறகு இன்னொரு குழுவினருடன் அவர் சென்றிருக்கிறார்.அந்த குழுவினர் கூறிய சில தகவல்கள்:மலையேறும் பொது ஆரஞ்சு நிறத்தில் வானில் இரவு 2 மாதங்களுக்கு ஒரு ஒளி தெரிந்தது.மர்மமான ஒன்று வானில் அசைந்து கொண்டே இருந்தது.பனிப்புயலை நாங்கள் பார்க்கவில்லை. ImageImage
தூரத்தில் ஒரு பெரிய சத்தம் கேட்டது.குளிரின் அளவு -25 முதல் -30°c வரை இருந்தது.இதற்கு ஆதாரமாக இறந்த ஒருவர் தன்னுடன் எடுத்த சென்ற கேமராவில் தூரத்தில் ஒரு பெரிய மற்றும் ஒரு சிறிய ஒளி தெரிந்ததை புகைப்படம் எடுத்திருக்கிறார்.9 பேர் இறந்ததற்கு தேடுதல் குழுவினர் எந்த காரணமும் உறுதியாக ImageImageImage
கூறாமல் இருக்க,அரசாங்கம் பனிப்புயல் தான் காரணம் என்று கூறுகிறது.கண்கள் காணாமல் போனது, நாக்கு அறுப்பட்டது, கண் இமை காணாமல் போனது போன்றவற்றுக்கு விடையில்லை.சாதாரண ஒரு மனிதரால் ஒருவரை நெஞ்சு எலும்பு நொறுங்கி போகும் அளவிற்கு கொல்ல முடியாத போது 9 பேரில் ஒரு மண்டை ஓடு உடைந்து நெஞ்சு ImageImage
எலும்பு உடைந்து இறந்தது எப்படி என்ற கேள்விக்கும் பதிலில்லை.சில ஆடைகள் கிழிந்து,சில ஆடைகளின் மீது கதிர்வீச்சு வந்தது எப்படி என்று தெரியவில்லை.இறந்தவர்களின் நினைவாக டென்ட்டில் இருந்து 500 மீட்டர் தொலைவில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.இறந்த இகோர் டயட்லோவ் பெயர் தான் இந்த பாதைக்கு ImageImageImageImage
வைக்கப்பட்டுள்ளது.இகோர் டயட்லோவ் எடுத்து சென்ற டைரியில் கடைசியாக எழுதிய வாசகம்"இந்த மலை நமக்கு என்ன ஆச்சர்யத்தை அளிக்க காத்திருக்கிறதோ?".இன்னொரு கூடுதல் தகவல்.இவர்கள் சென்ற மலையின் இன்னொரு பெயர்" The Dead Mountain".விரைவில் அடுத்த விடை தெரியா மர்மம் பற்றிய தொடரில் சந்திப்போம்!👽 ImageImage

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with மதுசூதனன் பி சா

மதுசூதனன் பி சா Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Satan_Slaves_13

Sep 24, 2021
#unsolvedmysteries #PCMreview "விடை தெரியா மர்மங்கள் : பாகம் 5".இந்த பாகத்தில் 93 வருடங்கள் கடந்தும் பல கேள்விகளை எழுப்பிக்கொண்டே இருக்கும் ஒரு நபரின் மர்மமான மரணம் பற்றிய நிகழ்வை தான் பார்க்க போகிறோம்".ஜூலை 4,1928 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் இருக்கும் கிராய்டான் விமான
நிலையத்தில் இருந்து அப்போதைய உலகின் மூன்றாவது பணக்காரராக இருந்த ஆல்பிரட் லோவன்ஸ்டீன் தன்னுடைய சொந்த நாடான பெல்ஜியத்திற்கு செல்ல தன்னுடைய உதவியாளர்கள் மற்றும் ஒரு பைலட் ஒரு மெக்கானிக் என மொத்தம் 6 பேருடன் செல்கிறார்.விமானம் கிளம்பிய அந்த நேரம் மேகம் தெளிவாக,காற்று விமானம் பரக்க
சாதகமாகவும்,விமானம் எந்த கோளாறும் இல்லாமல் பறக்கிறது.விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில் ஆல்பிரட் ஒரு புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பிக்கிறார்.உதவியாளர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டு வருகிறார்கள்.மெக்கானிக் மற்றும் பைலட் விமானம் செலுத்துவதில் கவனம் கொள்கிறார்கள்.இந்த விமானம் மூன்று
Read 25 tweets
Sep 21, 2021
#Notearsforthedead2014 #PCMreview Action Thriller.தமிழ் டப்பிங் இல்லை.சில இரத்தம் தெறிக்கும் காட்சிகள் உள்ளது.OTT - தெரியவில்லை. டெலிகிராம் - பயோ/DM. ஹீரோ வில்லனின் கூலிபடையில் இருக்கிறார்.ஒரு நாள் ஒருவனை கொலைசெய்ய அனுப்புகிறார்.அவன் ஒரு பாருக்குள் இருப்பதை தெரிந்துகொண்டு அங்கு Image
செல்கிறார்.அங்கு பல பேர் இருக்க,அனைவரையும் சுட்டு கொல்கிறார்.தவறுதலாக கொலைசெய்யப்பட வேண்டிய நபரின் சிறுவயது மகளையும் கொன்றுவிடுகிறார்.இன்னும் கொலைசெய்யப்பட்டவரின் மனைவி உயிரோடு இருக்க,அவளையும் கொல்ல சொல்கிறார் வில்லன்.ஹீரோவும் கொல்ல செல்கிறார்.ஆனால்,சில காரணங்களால் வில்லனுக்கு
எதிராக திரும்புகிறார் ஹீரோ.இதற்கு பின் நடக்கும் அதகளமான சண்டை காட்சிகள் நிறைந்த திரைக்கதையுடன் படம் நகர்கிறது. "The Man From Nowhere" படத்தை இயக்கியவர் தான் இப்படத்தின் இயக்குனரும்.அந்த படம் முழுவதும் சுவாரஸ்யமாக மற்றும் அருமையான சண்டை காட்சிகள் நிறைந்த படமாக இருக்கும்.இவரின்
Read 8 tweets
Sep 18, 2021
#unsolvedmysteries #PCMreview "விடை தெரியா மர்மங்கள்:பாகம் 4".இன்று நாம் பார்க்க போவது 86 ஆண்டுகளாகியும் தீர்க்கப்படாத ஒரு கொலை வழக்கு பற்றி தான்."ஜனவரி 2,1935ஆம் ஆண்டு மதியம் 1:20 மணியளவில் அமெரிக்க நாட்டின் கான்சாஸ் நகரத்தில் இருக்கும் பிரஸிடென்ட் ஹோட்டலுக்கு ரோலண்ட்.டி.ஓவன்
என்ற நபர் நுழைகிறார்.10ஆவது மாடியில் தனக்கு ஒரு அறை வேண்டும் என்று கேட்டு வாங்கி மேலே செல்கிறார்.உடன் பெல்பாய்(ரூம்பாய்) ரேன்டால்ப் பிராப்ஸ்ட் செல்கிறார்.அறையை காட்டிவிட்டு வந்துவிடுகிறார்.பணிப்பெண் மேரி சோப்டிக் அறையை சுத்தம் செய்ய செல்லும் போது,ஓவன்"அறையை சுத்தம் செய்துவிட்டு
கதவை அப்படியே விட்டுவிடுங்கள்.எனது நண்பர் வர போகிறார்"என்று கூறுகிறார்.பணிப்பெண் வேலையை முடித்து அறையில் இருக்கும் துண்டை எடுத்து செல்கையில் அறை மிகவும் இருட்டாக டேபிள் லாம்ப் ஒளி மட்டும் இருந்ததை கவனிக்கிறார்.மேரி மாலை 4 மணிக்கு புது துண்டை அறைக்குள் வைக்க வருகையில் கதவு பூட்ட
Read 25 tweets
Sep 17, 2021
#KodiyilOruvan #PCMreview ஆபாச காட்சிகள் இல்லை.லிங்க் - தியேட்டர்.கதை சுருக்கம்:ஹீரோ விஜய் ஆண்டனியின் அம்மா ஒரு அரசியல்வாதியின் வீட்டில் வேலை செய்கிறார்.அவர் சார்ந்த பஞ்சாயத்து தேர்தல் பெண்களுக்கு ஒதுக்கப்படுகிறது.இதனால் அந்த அரசியல்வாதி ஹீரோவின் அம்மாவை தேர்தலில் நிற்க Image
சொல்கிறார். தன் ஊருக்கு நல்லது நடக்கும் என்று நம்பி அவரும் நின்று வெற்றி பெறுகிறார்.ஆனால் ஊழல் செய்ய அரசியல்வாதி ஹீரோவின் அம்மாவை கட்டயாப்படுத்துவதால் மறுக்கிறார்.இதனால் ஆத்திரமடையும் அரசியல்வாதி ஹீரோவின் அம்மாவை பெட்ரோல் ஊத்தி கொழுத்துகிறார்.எப்படியோ உயிர் பிழைக்கும் ஹீரோவின்
அம்மா ஹீரோவை பெற்றெடுக்கிறார். தன் அம்மாவிற்கு தான் மாவட்ட ஆட்சியர் ஆக வேண்டும் என்று ஆசை கொள்வதால் எப்படியாக ஐ ஏ எஸ் ஆகவேண்டும் என்று சென்னைக்கு கிளம்பி வருகிறார் ஹீரோ.அங்கு சேரியில் இருக்கும் மாணவர்களுக்கு டியூஷன் எடுக்கிறார்.இது அங்கு இருக்கும் ரவுடிகளுக்கு பிடிக்காமல் போக
Read 13 tweets
Sep 15, 2021
#vivonetflix #PCMreview "குழந்தைகளுடன் பார்க்கக்கூடிய அருமையான படம்".தமிழ் டப்பிங் இல்லை.ஆபாச காட்சிகள் இல்லை.OTT - Netflix. டெலிகிராம் - பயோ/DM.இசையில் வல்லுவரான ஒரு தாத்தா மற்றும் அவருடன் இருக்கும் ஒரு குட்டி குரங்கு இருவரும் தெருவில் பாடி பணம் சம்பாதிக்கிறார்கள்.சில நிமிடங்கள்
கழித்து தாத்தாவுக்கு ஒரு கடிதம் வருகிறது.அதில் அவரது பழைய கால தோழி இவரை அவர் நடத்தும் இசை நிகழ்ச்சிக்கு வருமாறு அழைப்பு விடுக்கிறார்.இவரும் செல்லலாம் என்று நினைக்கிறார்.ஆனால் அந்த குட்டி குரங்கிற்கு இது பிடிப்பதில்லை.திடீரென தாத்தா இறந்து போக,இசை நிகழ்ச்சிக்கு சென்று பாட வேண்டிய
பாடல் வரிகள் அடங்கிய காகிதம் மற்றும் பழைய புகைப்படங்கள் ஆகியவை அங்கு இருப்பதை குரங்கு பார்க்கிறது.தாத்தாவின் கனவை நிறைவேற்ற குரங்கு பயணம் மேற்கொள்கிறது.அங்கு சென்றதா?பாடலை பாடியதா?என்பதே மீதிக்கதை.கிகான்ஜோ என்ற குட்டி குரங்குடன் ஒரு சிறுமியும் பயணம் செய்வாள்.இருவரின் உரையாடல்
Read 7 tweets
Sep 12, 2021
#unsolvedmysteries #PCMreview "விடை தெரியாத மர்மங்கள் பகுதியில் இரண்டாவதாக நாம் இன்று பார்க்கப்போவது 7 வருடங்களுக்கு முன் காணாமல் போன மலேசிய விமானம் பற்றிய மர்மம் தான்".மார்ச் 8,2014 ஆம் ஆண்டு இரவு 12.42 மணிக்கு போயிங் 777 ER 200 ரக விமானமான MH370 விமானம் மலேசியாவின் கோலாலம்பூர்
விமான நிலையத்தில் இருந்து சீனாவின் பீஜிங் விமான நிலையத்திற்கு புறப்படுகிறது. விமானத்தில் 227 பயணிகள்,10 கேபின் குழுவினர்,2 பைலட்டுகள் என மொத்தம் 239 நபர்கள் பயணிக்கிறார்கள்.பயணம் தூரம் 5.30 மணி நேரம்.விமானத்தை 53 வயதான ஜஹாரி அகமத் என்ற முதல் பைலட்டும் 27 வயதான ஃபரிக் ஹமீத் என்ற
இரண்டாம் பைலட்டும் ஓட்டுகிறார்கள்.சரியாக இரவு 1:08 மணிக்கு விமானம் தெற்கு சீன கடல் பகுதியில் 35,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருக்கிறது என்று விமானி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கிறார்.மலேசிய கட்டுப்பாட்டு அறை விமானியை தொடர்பு கொண்டு "நீங்கள் இன்னும் ஒரு நிமிடத்தில்
Read 25 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(