#அம்பேத்கர்_இன்றும்_என்றும்
#தீண்டாமையை_ஒழிக்கும்_அம்பேத்கர்
நேற்றைய தினம் தலித் பௌத்த இயக்கம் பற்றி கண்டோம் அதை தொடர்ந்து இன்று...

"எப்போதோ சொன்ன ஒரே கருத்தை சிந்தனையுள்ள எந்த மனிதனும் பிடித்துக் கொண்டிருக்கமாட்டான்."
_அம்பேத்கர்.
•19வது, 20ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவில் ஏற்பட்ட பௌத்த சமய புத்துணர்வு இயக்கமாகும். •இந்து சமயம் அவர்களை சமூகத்தின் அடிமட்டத்தில் வைத்திருப்பதற்கு எதிராக தலித்கள் பௌத்த சமயத்திற்கு மாற வேண்டும் என்று பாபாசாகேப் அம்பேத்கர் விடுத்த அறைகூவலை அடுத்து இந்த இயக்கம் ஊக்கம் பெற்றது.
•துவக்கங்கள்.

•இந்தியாவில் ஆதிக்கமான சமயமாக இருந்த பௌத்தம் 12ஆம் நூற்றாண்டு முதல் முசுலிம் படையெடுப்புகளாலும் கட்டாய மத மாற்றங்களாலும் படிப்படியாக தனது ஆதிக்கத்தை இழந்தது.
•1891இல் இலங்கையின் பௌத்தத் தலைவர் அனகாரிக தர்மபால
மகா போதி சமூகம் உருவாக்கி இந்தியாவில் மீண்டும் பௌத்த சமயத்திற்கு உயிரூட்டினார்.
•மகாபோதி சமூகம் பெரும்பாலும் உயர்சாதி இந்துக்களையே ஈர்த்தது.

•தென்னிந்தியாவில்.

1890இல், பண்டிதர் அயோத்தி தாசர் (1845–1914), சாக்கிய பௌத்த சமூகம்
அல்லது இந்திய பௌத்தர்களின் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினார்.
•இதன் முதல் தலைவராக செருமனியில் பிறந்த அமெரிக்கரான பால் காருசு இருந்தார்.
•சித்த மருத்துவராக இருந்த அயோத்தி தாசர் தமிழ் தலித்துக்கள் துவக்கத்தில் பௌத்த சமயத்தைச் சேர்ந்தவர்கள் என்ற கருத்தை முன்வைத்தார்.
•சில முதன்மை பெற்ற தலித் மக்களுடன் ஹென்றி ஸ்டீல் ஆல்காட்டை அணுகி "தமிழ் பௌத்தத்தை" புதுப்பிக்க உதவி வேண்டினார்.
•ஆல்காட் அயோத்தி தாசர் இலங்கை சென்று புத்தபிக்கு சுமங்கல நாயகெயிடம் தீட்சை பெற உதவினார்.
•இந்தியா திரும்பிய பின்னர் தாசர் சாக்கிய,
பௌத்த சமூகத்தை சென்னையில் நிறுவினார்.
•பல கிளைகளையும் நிறுவி அனைத்தையும் இணைக்கும் செய்திமடலாக ஒரு பைசா தமிழன் என்ற வார இதழை சென்னையிலிருந்து 1907இல் வெளியிட்டார்.
•இந்த இதழில் தமிழ் பௌத்தத்தின் வரலாறு, மரபுகள் மற்றும் செயல்முறைகளை விளக்கினார்.
•பௌத்த உலகில் நிகழும் புதிய நிகழ்வுகள், பௌத்த சமயத்தின் பார்வையில் இந்தியத் துணைக்கண்ட வரலாறு ஆகியவற்றையும் எடுத்துரைத்தார்.
•இவரை அடுத்து ஆந்திரப் பிரதேசத்திலும் பாக்கிய ரெட்டி வர்மா (மாதாரி பாகையா) என்ற தலித் தலைவரும் புத்த சமயத்தால்,
ஈர்க்கப்பட்டு தலித்கள் புத்த சமயத்திற்கு மாறுவதை ஆதரித்தார்.

•அம்பேத்கரும் பௌத்த
இயக்கமும்.

•நாக்பூரின் தீக்சாபூமியில் அக்டோபர் 14, 1956இல் அம்பேத்கர் புத்த சமயத்திற்கு மாறினார்.
•தான் மதம் மாறிய பின்னர் தனது தொண்டர்களுக்கு,
அம்பேத்கர் தம்மா தீட்சை வழங்கினார்.
•இந்த சடங்கில் 22 உறுதிமொழிகள் (சபதங்கள்) மேற்கோள்ளப்பட்டன.
•அக்டோபர் 16, 1956இல் சந்திராபூரில் மற்றுமொரு கூட்டமான மதமாற்ற விழாவை அம்பேத்கர் நடத்தினார்.

•பௌத்த சமயத்திற்கு
மாறுவதற்கு காரணம்.
•அம்பேத்கர் பழங்கால இந்தியாவைப்பற்றியும் மானிடவியலைப்பற்றியும் செய்த ஆராய்ச்சியின் மூலம் மகர் மக்கள் பௌத்த சமயத்தை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் பௌத்த பழக்கங்களை விட மறுத்ததால் கிராமத்தை விட்டு வெளியே தீண்டத்தகாதவர்கள் போல் வாழ வற்புறுத்தப்பட்டார்கள் என்றும் கருதினார்.
•இதனாலயே அவர்கள் தீண்டத்தகாதவர்களாக ஆனார்கள் என்று கருதினார்.
• இதைப்பற்றி யார் சூத்திரர்கள்? (Who were the Shudras?) என்ற புத்தகத்தை எழுதினார்.
•பௌத்த சமயத்தை பற்றி நன்கு படித்த அம்பேத்கர் 1950 முதல் பௌத்த சமயத்தின் மீது தன் கவனத்தை முழுவதுமாக திருப்பினார்.
•இலங்கையில் நடைபெற்ற பௌத்த துறவிகள் மற்றும் அறிஞர்களின் கருத்தரங்கில் கலந்து கொண்டார்.
•புனேக்கு அருகில் புதிய பௌத்த விகாரை அர்பணித்த பின் தான் பௌத்தத்தை
பற்றி புத்தகம் எழுதிக்கொண்டுள்ளதாகவும் விரைவில் அது
நிறைவடையும் என்று
கூறினார்.
•அதிகாரபூர்வமாக பௌத்த சமயத்திற்கு திரும்புவது பற்றி திட்டமிட்டுக் கொண்டிருந்தார்.
•1954ம் ஆண்டு இரு முறை பர்மாவிற்கு பயணம் மேற்கொண்டார்.
•இரண்டாவது முறை மூன்றாவது உலக பௌத்த சமய மாநாடு ரங்கூனில் நடைபெற்றதில் கலந்து கொள்ள சென்றார்.
•1955ம் ஆண்டு பாரதீய பௌத்த மகாசபாவை தோற்றுவித்தார்.
• 1956ம் ஆண்டு புத்தரும் அவரின் தம்மமும் (The Buddha and His Dhamma) என்ற புத்தகத்தை எழுதினார்.
•இவரின் மறைவுக்கு பின் அப்புத்தகம் வெளியிடப்பட்டது.
•இலங்கை பௌத்த துறவி ஹம்மல்வா சதாடிஷ்சாவை,
கலந்த பின் 1956 அக்டோபர் 14 அன்று நாக்பூரில் உள்ள தீக்சாபூமியில் அதிகாரபூர்வமாக விழா எடுத்து பௌத்த சமயத்திற்கு மாறினார்.
•இவருடன் இவரது ஆதரவாளர்கள் 500,000 பேரும் பௌத்த சமயத்திற்கு மாறினார்கள்.
•அதன் பின் இவர் காட்மாண்டுவில் நடைபெற்ற நான்காவது,
உலக பௌத்த கருத்தரங்கத்திற்கு சென்றார்.
•இவரின் புத்தர் அல்லது கார்ல் மார்க்சு என்ற புத்தகம் நிறைவுபெறாமலேயே உள்ளது.
இதன் தொடர்ச்சியை நாளை காணலாம்.....

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with கோல்ட்ஃபிஷ்_official 🐠

கோல்ட்ஃபிஷ்_official 🐠 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @goldfish_officl

27 Oct
#அம்பேத்கர்_இன்றும்_என்றும்
#தீண்டாமையை_ஒழிக்கும்_அம்பேத்கர்
#bheemji _6

•இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தலைமைச் சிற்பி ஆகவும் செயல்பட்டார்.
•இவரது தலைமையில் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது, Image
அதன் ஒரு பகுதியான 'இந்து சட்டத் தொகுப்பு மசோதா'விற்கு பாராளுமன்றத்தில் சட்டமாக்க ஆதரவு கிடைக்காததை எதிர்த்து தனது சட்ட அமைச்சர் பதவியைத் துறந்தார்.

•(1952 பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னான காங்கிரஸ் அதிக இடங்கள் பெற்றமையினால் 1952-ல் அந்த சட்டம் நிறைவேறியது)
சமூக நீதிப் போராளி முனைவர் அம்பேத்கர் 1956 - திசம்பர் 6 அன்று காலமானார்.

•அம்பேத்கரின் மரணம்.

•1948ல் இருந்து அம்பேத்கர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
•இதற்காக உட்கொண்ட மருந்துகளாலும் கண்பார்வை குறைந்ததாலும், Image
Read 17 tweets
26 Oct
#அம்பேத்கர்_இன்றும்_என்றும்
#தீண்டாமையை_ஒழிக்கும்_அம்பேத்கர்
#bheemji _5
•தீக்சாபூமி
தீக்சாபூமி அக்டோபர் 14, 1956 அன்று பல்லாயிரக்கணக்கான தொண்டர்களுடன் முனைவர் பாபாசாகேப் அம்பேத்கர் பௌத்த சமயத்தைத் தழுவிய இடத்தில் எழுப்பப் பட்டுள்ள ஓர் வழிபாட்டுத்தலமாகும். Image
•இங்குள்ள தூபி மற்றும் நுழைவாயில்கள் மத்தியப்பிரதேசத்தில் உள்ள சாஞ்சி ஸ்தூபத்தை ஒட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது.
•வர்ணாசிரம தருமத்திலிருந்து தோன்றிய சாதிய அமைப்பையும், தீண்டாமைக் கொடுமைகளையும் எதிர்த்து அவர் எடுத்த இந்த முடிவு ஒடுக்கப்படும்,
இந்திய இளைஞர்களுக்கு இன்றும் வழிகாட்டுதலாக அமைந்துள்ளது.

•தீக்சாபூமி மகாராடிர மாநிலம் நாக்பூரில் அமைந்துள்ளது. இந்தியாவிலுள்ள பௌத்த சமயத்தினருக்கு ஓர் முக்கிய வழிபாட்டுத்தலமாக விளங்குகிறது.
•தீக்சா என்ற பௌத்தர்களின் சொல் அவர்களின் சமயத்தை ஏற்றுக்கொள்வதைக்,
Read 18 tweets
24 Oct
#அம்பேத்கர்_இன்றும்_என்றும்
#தீண்டாமையை_ஒழிக்கும்_அம்பேத்கர்
நேற்றைய தினம் அம்பேத்கரின் பள்ளி வாழ்க்கை பற்றி கண்டோம் அதை தொடர்ந்து இன்று...

"அறிவு நன்னடத்தை சுயமரியாதை இவையே நான் வணங்கும் தெய்வங்கள் இவற்றை தவிர வேறு தெய்வங்கள் எனக்கு இல்லை."_அம்பேத்கர்.
•1913ஆம் ஆண்டு சூன் 4 ஆம் நாள் அம்பேத்கர் அமெரிக்கா சென்றார்.
•உயர்கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.
•கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பொருளாதாரம், அரசியல், தத்துவம் மற்றும் சமூகவியல் ஆகிய பாடங்களைப் படித்தார்.
•அங்கு அவர் 1915-ல் 'பண்டைய இந்தியாவின் வாணிகம்’ என்ற ஆய்வுக்கு முதுகலைப் பட்டம் பெற்றார்.

•இந்தியாவின் சாதிகள் என்ற தலைப்பில் கருத்தாழமிக்க ஒரு கட்டுரையை எழுதினார்.
Read 16 tweets
23 Oct
#அம்பேத்கர்_இன்றும்_என்றும்
#தீண்டாமையை_ஒழிக்கும்_அம்பேத்கர்
நேற்றைய தினம் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு பற்றி கண்டோம் அதை தொடர்ந்து இன்று....

"எவனொருவன் தானே சரணடையாமல் மற்றவர்களின் விருப்பபடி செயல்படாமல். Image
அனைத்தையும் சோதனைக்கு உட்படுத்தி அறிவு வெளிச்சத்தில் அலசி ஏற்கிறானோ அவனே சுதந்திர மனிதன்."_அம்பேத்கர்.

•கல்வி

•1900 ஆண்டில் சாத்தாராவில் உள்ள ஒரு பள்ளியில் தனது தொடக்கக் கல்வியைத் முடித்த அம்பேத்கர் உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்து பயின்றார்.
•அங்கு தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தனியே அமர்த்தப்பட்டனர்.
•மற்ற மாணவர்களுடன் பேசவோ விளையாடவோ முடியாது.
•அவர்களின் குறிப்பேடுகளையும் புத்தகங்களையும் தொடமாட்டார்கள்.
•கேள்விகள் கேட்பதும் கிடையாது.
•தண்ணீர் வேண்டுமென்றாலும் பிறர் ஊற்ற கையால் பருகவேண்டும்.
Read 15 tweets
22 Oct
#அம்பேத்கர்_இன்றும்_என்றும்
#தீண்டாமையை_ஒழிக்கும்_அம்பேத்கர்
•அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு....

"இந்தியாவை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. இது பல இனக்குழுக்களின் தேசம்.
@pksrseetha5277 @Ajmeer_Khan_ @srinithin3310 @terminator_2525 @NakkeeranJ2 @kailasakingoff
அப்படி சொந்தம் கொண்டாட வேண்டிய நிலை வந்தால் இந்தியாவின் பூர்வ குடியான தமிழர்களே கொண்டாட முடியும்"_அம்பேத்கர்.

பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் 14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956
எனும் பாபாசாகேப் அம்பேத்கர் (பொருள்: தந்தை) என்றும் அழைக்கப்படுபவர்.
@Carthick2017 @Aquaa_man1
•இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர் ஆவார்.
•உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார்.
•பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர்.
•பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழியப் போராடியவர்.
Read 11 tweets
19 Oct
Odiyanga elam solitu ponga papom
😜😜

✉️💬💌
Send Secret Message to *Goldfish*
🤩 I will never know who sent me which message 🤔
It's fun, Try here 👉 quizprank.xyz/message.php?id… #secretmessage #quizprank via @QuizPrank
Thanks for the love comrade ❤️❤️😍
Yarunu therila but seriously this makes me more happy and happier thanks for being with me 🙏❤️❤️ Image
Unmaiya akkarai ullavangala na 🤔
I think irukanga s some people are there even ony bad time they are with me epavaum nan ethir pakrathu atham athu nadakathapa than nan I feel low
But some people are there for me 🙃 Image
Read 45 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(