அழகான இளம்பெண்ணுக்கு முகேஷ்_அம்பானி சொன்ன பதில்!

பூஜா என்ற ஒரு அழகான இளம்பெண், ‘பணக்கார ஆண்மகனை திருமணம் செய்து கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று இணையதளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், இது குறித்து பூஜா கூறியதாவது, ‘என் வயது 25 நான் பார்க்க மிகவும் அழகாக இருப்பேன். ஸ்டைல் மற்றும் நல்ல ரசனை உள்ள பெண். நான் வருடத்திற்கு நூறு கோடிக்கு மேல் சம்பாதிக்கும் ஆண் மகனை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். அதற்கு என்ன செய்ய வேண்டும்?’ என்றார்.
இந்த பதிவை பார்த்த முகேஷ் அம்பானி அப்பெண்ணிற்கு பதில் அளித்து கூறியதாவது,

‘உங்களை போல பல பெண்கள் இந்த சந்தேகத்துடன் உலாவி வருகிறார்கள். ஒரு முதலீட்டாளராக உங்கள் இந்த சந்தேகத்திற்கு, ஒரு நல்ல தீர்வை தர நான் விரும்பிகிறேன். எனது வருட சம்பாத்தியமும் நூறு கோடிக்கு மேலானது தான்.
ஆனால், உங்களை போன்ற ஒரு பெண்ணை தேர்வு செய்வது என் பார்வையில் தவறு என்று தான் நான் கருதுவேன். காரணம், அழகு என்பதை பெண்ணாகவும், பணம் என்பதை ஆணாகவும் வைத்துக் கொண்டால், இங்கு ஒரு பெரிய பிரச்சனை எழும். அழகு வருடத்திற்கு வருடம் குறைந்து கொண்டே போகும் ஒன்று.
மறுபுறம் பணம் என்பது வருடத்திற்கு, வருடம் உயர்ந்து கொண்டே போகும் ஒன்று. பொருளாதார பார்வையில் இதனைக் கண்டால், பணம் எனும் ஆண் (நான்) அதிகரிக்கும் சொத்து, அழகு எனும் பெண் (பூஜா) தேய்மானம் அடையும் சொத்து.
ஒரு பத்து வருடம் கழித்து பார்க்கும் போது உங்களுக்கான மதிப்பு மிகவும் குறைந்திருக்கும். செழிப்படையும் ஒரு சொத்தை, தேய்மானம் அடையும் சொத்துடன் சேர்க்க எந்த முதலீட்டாளரும் முனைய மாட்டார். வர்த்தக நிலையில் பார்க்கையில் நூறு கோடிக்கு மேல்
சம்பாதிக்கும் எந்த ஒரு நபரும் உங்களுடன் டேட்டிங் செய்வாரே தவிர, திருமணம் செய்து கொள்ள மாட்டார். எனவே, உங்கள் அழகு தோற்றத்தையும், நூறு கோடி சம்பாதிக்கும் ஆண்மகன் தான் வேண்டும் என்பதையும் மறந்து விட்டு, நீங்கள் நூறு கோடி சம்பாதிக்கும் பெண்ணாக வளருங்கள்’ என்றார்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அகண்ட பாரதம் Akhand Bharath अखंड भारत 🇮🇳

அகண்ட பாரதம் Akhand Bharath अखंड भारत 🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @santhastwitz

20 Sep
#தோற்று_போகலாம்.

தஞ்சையில் இருந்து,
சென்னைக்கு பத்திரிகை
பணிக்கு வந்த போது
நல்ல சம்பளம்தான்.
ஆனாலும் ஊதாரி.
வீட்டுக்கு போன் போட்டு,
ஏதாவது பொய் சொல்லி,
“ ரெண்டாயிரம்
மணியார்டரில்
அனுப்புங்கப்பா” என்பேன்.
(அப்போது நெட் பேங்க்கிங்
கிடையாது)
அப்பாவும் உடனடியாக
அனுப்பி விடுவார்.
(சம்பளத்தைவிட
அதிகமாக அப்பாவிடம்
வாங்கியிருக்கிறேன்.)

மணியார்டரில் பணம்
அனுப்பும் போது, அந்த
ஃபாரத்தில் சில வரிகள்
ஆங்கிலத்தில் எழுதி
அனுப்புவார் அப்பா.
(ஆங்கிலத்திலும் மிகப்
புலமை பெற்றவர்)
அதைக் கையால்
எழுதாமல், யாரிடமாவது
தட்டச்சு செய்து அனுப்புவார்.
அது அவரது வழக்கம்.
ஒவ்வொரு முறையும்,
“மை டியர் சன்.. (my dear son)”
என்று ஆரம்பிக்கும் அந்த
குறுங் கடிதம்....

ஒரு முறை மணிஆர்டர்
வந்த போது , அதில்
தட்டச்சியிருந்த
வார்த்தையைப் பார்த்து
அதிர்ந்தேன்.
Read 17 tweets
19 Sep
உறவுகள் மேம்பட A to Z

மனிதன் தன் அறிவியல் ஆற்றல் மூலம் வாழ்க்கையை வசதியாக்கிக் கொண்டான். ஆனால் இனிமையாக்கிக் கொள்ள தவறிவிட்டான். இனிய வாழ்க்கைக்கு சுமுகமான உறவு அவசியம் அது மேம்பட வழிகாட்டுகிறது இந்த 26 வார்த்தைகள்!
*A - Appreciation*

மற்றவர்களின் நிறைகளை மனதாரப் பாராட்டுங்கள்.

*B - Behaviour*

புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரம் இல்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.
C - Compromise*
அற்ப விஷயங்களைப் பெரிது படுத்தாதீர்கள். மனம் திறந்து பேசி சுமூகமாக தீர்த்துக் கொள்ளுங்கள்.

*D - Depression*

மற்றவர்கள் புரிந்து கொள்ளவில்லையே என்று சோர்வடையாதீர்கள்.

*E - Ego*

மற்றவர்களை விட உங்களை உயர்வாக நினைத்துக் கொண்டு கர்வப்படாதீர்கள்.
Read 13 tweets
17 Sep
இயற்கையும் விவசாயியும்

ஒரு விவசாயி இடத்தை வாங்கும் முன், முதல் நாள் இரவு ஒரு சேவலோடு போய் தங்குவார்.

விடியற்காலையில் சேவல் வழக்கம் போல் கூவினால் மண்ணில் ‘உயிர்’ இருக்கிறது என்று கூறிக்கொள்வார்களாம்.
கூவாவிட்டால் ‘மண்ணில் சத்து இல்லைன்னு அர்த்தம்’ என்று தனக்கு உள்ளேயே சொல்லிக் கொள்வாராம்.

மொத்தத்தில் சேவல் நன்றாக கூவினால் மட்டுமே அந்த இடத்தை வாங்குவார். இதிலுள்ள முக்கியமான உண்மை என்னவென்றால் சேவல் மண்ணைக் கிண்டும் போது அதனுள் உள்ள புழுக்களை தின்று மறுநாள் தெம்பாகக் கூவும்.
மண்ணை தோண்டி புழு கிடைக்கவில்லை என்றால் அந்த கூவலின் ஆற்றலில் அது தெரிந்துவிடும். புழு அதிகம் இருக்கும் மண் விவசாயத்திற்கு ஏற்றது என்பது அனுபவசாலிகள் வாக்கு.
Read 6 tweets
13 Sep
#தனது எட்டாவது வயதில் துறவறம் மேற்கொண்டு, அத்வைத சித்தாந்தத்தை இவ்வுலகுக்கு அளித்த ஆதி சங்கரர் #வாழ்ந்தது #வெறும் 32 #வருடங்கள் மட்டுமே.
எட்டு வயது பாலகனுக்கு என்ன தெரியும் ?
ஆனால், அவன் அந்த வயதில் துறவறம் மேற்கொள்ளவிருக்கும் செய்தியை அறிந்து அதிர்ந்துபோன அவனது தாய் ஆர்யாம்பாளுக்கு, தான் சந்நியாசம் மேற்கொள்ள கலங்கிய மனதோடு சம்மதித்த அந்த தாய்க்கு, ஆறுதலாய் ஒரு வாக்களிக்கிறான், சங்கரன்
“ அம்மா, நீ என்னை எப்போது அழைத்தாலும், நான் இந்த உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும், அக்கணமே உன் முன் இருப்பேன்”.
இன்புற்ற தாய், தன் பிள்ளையைப் பிரியச் சம்மதிக்கிறாள்.
தாயின் இறுதிக்காலம் நெருங்குகிறது. தன் பிள்ளை இந்த உலகை உய்விக்கப் பிறந்தவன் என்று அறிந்துகொண்ட அந்தத் தாய்
Read 19 tweets
11 Sep
இது வரை சொல்லாத கதை!

தனது மாணவர்களுக்கு ஆசிரியை ஒருவர் கூறிய ஒரு கதை:

"ஒரு கப்பலில் ஒரு தம்பதி பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்போது கப்பல் கவிழும் அபாயமான கட்டத்தில், ஒரேயொருவர் தப்பிக்க வசதியான படகு ஒன்று மாத்திரமே இருக்கிறது.
மனைவியை பின்னே தள்ளி விட்டு கணவன் மட்டும் அந்தப் படகில் தப்பிச்செல்கிறார். கவிழும் கப்பலின் அந்தரத்தில் இருந்தவாறு தப்பிச் செல்லும் கணவனை நோக்கி மனைவி சத்தமாக.

இந்த இடத்தில் என்ன சொல்லியிருப்பார்???" என்று மாணவர்களை நோக்கி ஆசிரியை கேட்டார்.
எல்லா மாணவர்களும் பல வகையான பதில் தரும் போது ஒரு மாணவன் மட்டும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான்.

"ஏம்பா நீ சைலண்டா இருக்க"

'நம்ம கொழந்தைய பத்திரமா பாத்துக்கங்கன்னு சொல்லிருப்பா டீச்சர்'

"எப்பிடிப்பா மிகச் சரியாக சொல்ற, ஒனக்கு முன்னாடியே இந்த கதை தெரியுமா?"
Read 10 tweets
8 Jul
*கர்ம வினை !*

உலகில் கோடிக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள். நாம் பழக்கம் வைத்துக் கொண்டிருப்பவர்கள் ஆயிரக்கணக்கு.ஆனால் எதோ ஒரு *குறிப்பிட்ட* நபர் நமக்கு *துணைவராக* அல்லது *துணைவியாக* *அமைவது* ஏன் ?
நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விலும் ஒரு கர்மாவை நாம் ஏற்படுத்துகிறோம்.
நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விலும் ஒரு கர்மாவை நாம் ஏற்படுத்துகிறோம்.

அதாவது அந்தக் கர்மாக்களின் மூலம் ஒன்று நாம் ஏதாவது பெற்றுக் கொள்கிறோம், அல்லது அடுத்தவருக்கு ஏதேனும் ஒரு உபகாரம் செய்கிறோம்.

சில சமயங்களில் ஏமாற்றப்படுகிறோம். பல சமயங்களில் ஏமாற்றுகிறோம்.
சிலருக்கு நல்லது செய்கிறோம்.
பலரிடமிருந்து அளவுக்கு அதிகமாக
நன்மைகளைப்பெற்றுக் கொள்கிறோம்.
இந்த கொடுக்கல் வாங்கலே *"ருண பந்தம்"*
எனப்படுகிறது.
*சிலருடைய* உறவுகள் *ஆனந்தத்தைக்* கொடுக்கிறது.
சிலருடைய வருகை மட்டற்ற *மகிழ்ச்சியை* ஏற்படுத்துகிறது.
Read 24 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(