🚩Visakan Pandu🚩 Profile picture
Nov 9, 2021 13 tweets 7 min read Read on X
#முருகனின்_திருவுருவங்கள்:
1.சக்திதரர்
2. கந்த சுவாமி
3. தேவசேனாதிபதி
4. சுப்பிரமணியர்
5. கஜவாகனர்
6. சரவணபவர்
7. கார்த்திகேயர்
8. குமாரசுவாமி
9. சண்முகர்
10.தாரகாரி
11. சேனாபதி
12. பிரமசாத்தர்
13. வள்ளி கல்யாண சுந்தரர்
14. பாலசுவாமி
15. கிரவுஞ்ச பேதனர்
16. சிகிவாகனர் எனப்படும்.
முருகன் அழித்த ஆறு பகைவர்கள்ஆணவம்,
கன்மம், குரோதம், லோபம், மதம், மாற்சர்யம்.
மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள திருவிடைக்கழி. இங்கு முருகக்குப்பின்புறம் லிங்கம் உள்ளது.(குராமரத்தடியில் முருகன் பூஜித்தது) அது போல் திருவேற்காட்டில் வேலமரத்தடியில் முருகனுக்கு முன்புறமாக லிங்கம் உள்ளது.
முருகப்பெருமான் போர் புரிந்து அசுரர்களை
அழித்த இடம் மூன்றாகும்.

சூரபத்மனை வதம் செய்தது-திருச்செந்தூர்,

தாரகாசுரனை வதம் செய்தது-
திருப்பரங்குன்றம்,

இந்த இருவரின் சகோதரனான சிங்க
முகாசுரனை வதம் செய்தது போரூர் ஆகும்.
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில்
மூலவரின் நெஞ்சில் சிறிய பள்ளம்
இருக்கின்றது. சூரனை வதம் செய்யும் போது
அவனோடு மோதியதால் ஏற்பட்டது.
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள்
அதிகாலையில் குளித்து முடித்துத்
தூய்மையுடன் ஸ்ரீஸ்ரீசுப்பிரமண்ய அஷ்டகம்
ஓத வேண்டும். இதனால் தோஷம் விலகி
நன்மை உண்டாகும்
முருகப்பெருமானின் வலப்புறம் உள்ள ஆறு
கரங்களில் அபயகரம், கோழிக்கொடி, வச்சிரம்,
அங்குசம், அம்பு, வேல் என்ற ஆறு
ஆயுதங்களும், இடப்புறம் உள்ள ஆறு
கரங்களில் வரமளிக்கும் கை, தாமரை, மணி,
மழு, தண்டாயுதம், வில் போன்றவையும்
இருக்கும்.
ஈரோடு அருகே வெண்ணைமலை உள்ளது.
அங்கு முருகன் யார் துணையும் இல்லாமல்
தன்னந்தனியாகத் தண்டாயுதபாணியாகக்
காட்சியளிக்கிறார். வெண்ணெய் மலையை
வலம் வருபவர்கள் கயிலையை வலம் வந்த
பலனைப் பெறுவார்கள்.
முருகன் இறைபணிச் செல்வர்கள்:
அகத்தியர்,
அருணகிரி நாதர்,
ஒளவையார்,
பாம்பன் சுவாமிகள்,
அப்பர் அடிகளார்,
நக்கீரர்,
முசுகுந்தர்,
சிகண்டி முனிவர்,
குணசீலர்,
முருகம்மையார்,
திருமுருககிருபானந்த வாரியார்,
வள்ளிமலைச் சுவாமிகள்,
ஆகியோர் ஆவார்கள்.
பிரமசரிய-கிருகஸ்த-சந்நியாசக்
கோலங்களில் முருகனை மட்டுமே காண
முடியும். பிற கடவுள்களுக்கு இல்லாத
சிறப்பு இது.

தமிழகத்தில் முருகனுக்குக்குடவரைக்
கோயில்கள் உள்ள இடங்கள் கழுகுமலை,
திருக்கழுக்குன்றம், குன்றக்குடி,
குடுமியான்மலை, சித்தன்னவாசல், வள்ளிக்
கோயில், மாமல்லபுரம்.
முருகப் பெருமானுக்கு உகந்த மலர்கள்
முல்லை, சாமந்தி, ரோஜா, காந்தன்
முதலியவை ஆகும்.
முருகனை ஒரு முறையே வலம் வருதல்
வேண்டும்.
முருகனைப் போன்று கருப்பை வாசம்
செய்யாத வேறு தெய்வம் வீரபத்திரர்.
தமிழ்நாட்டில் முதல் தங்கத்தேர் பழனி
முருகன் கோவிலில் 1957-ல் இழுக்கப்பட்டது.
முருகனுக்கு உருவமில்லாத கோவில்
விருத்தா சலத்தில் உள்ளது. பெயர்
கொளஞ்சியப்பர். அருவுருவ தலம் என்று கூறுவார்கள்.
கந்த சஷ்டி கவசத்தை எழுதியவர்
தேவராயன் ஆவார்.
முருக வழிபாடு என்பது ஷண்மம் என்று
சொல்லப்படுகின்றது.
கோபுரத்து இளையனார் என்கிற முருகன்
சந்நிதி திருவண்ணாமலையில் உள்ளது
முருகன் வீற்றிருக்கும் மிக நீண்ட மலை
திருத்தணி பள்ளிப்பட்டு நெடியமலை ஆகும்.

முருகன் சிறிது காலம் நான்முகனுக்குப்
பதில் படைப்புத் தொழிலையும்
செய்திருக்கிறார். இதனை உணர்த்தும்
வகையில் திண்டுக்கல் சின்னாளப்பட்டியில்
நான்கு தலையுள்ள முருகன் ஆலயம்
அமைந்துள்ளது.
கந்தனுக்குரிய விரதங்கள்:
1. வார விரதம்,
2. நட்சத்திர விரதம்,
3. திதி விரதம்.

முருகனின் மூலமந்திரம் ஓம் சரவணபவாய
நம என்பதாகும்.

வேலும் மயிலும் இல்லாத வேலவன்
ஆண்டார் குப்பத்தில் உள்ளார்.

முருகப் பெருமான் தோன்றிய இடம்
சரவணப் பொய்கை.

#சரவணபவ #சிவயநம

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with 🚩Visakan Pandu🚩

🚩Visakan Pandu🚩 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @VisakanPandu

Mar 29, 2022
உலகெல்லாம் ரஷ்யாவுக்கு தடை விதிக்கும் நிலையில் அதன் கலாச்சார நடனங்களும் இதர கலாச்சார மேடைகளும் தடைசெய்யபடுகின்றன‌

இதனை மிக உருக்கமாக கூறிய புட்டீன், "1000ஆண்டுகள் பழமையான ரஷ்ய கலாச்சாரத்தை ஒழிக்க உலகில் இருந்தே அகற்ற சதி செய்கின்றார்கள்" என வேதனையுடன் குறிப்பிட்டார்.👇👇
#அமக
ரஷ்ய புட்டீனின் வேதனை, தமிழ் திரைத்துறையை பார்க்கும் பொழுது நமக்கு தோன்றிற்று.

இன்று தமிழ் திரைத்துறை அடையாளத்தை இழந்துவிட்டது, பழைய காலம் போல தேசபக்தி படமோ இந்து புராண படங்களோ ஏன் தமிழ் அரசர்கள் படம் கூட வருவதில்லை

அன்றிலிருந்தே திட்டமிட்டு தமிழக மன்னர்கள் வேடம்👇👇
இங்கு ரோம, கிரேக்க மன்னர்கள் போல் தான் காண்பிக்கபட்டது, திரைத்துறையில் திராவிட பிடி திராவிட நடிகர்களின் பிடி அப்படி இறுக்கி இருந்தது. தமிழ் மன்னன் உடை உடுத்தினால் திருநீறு பூசவேண்டும் சிவலிங்கத்தை வணங்கவேண்டும் என்பதால் மேல்நாட்டு குட்டை பாவாடைகள் அணியபட்டன‌.👇👇
Read 9 tweets
Mar 7, 2022
பதினெட்டு புராணங்கள்...,
1. பிரம்ம புராணம்
பிரம்மாவை அவருடைய படைப்புகளை பற்றி கூறுவது.
2. பத்ம புராணம்
காயத்ரி சிறப்புகளையும், கற்பின் சிறப்பும் இதில் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
3. பிரம்ம வைவர்த்த புராணம்
கிருஷ்ணரை பிரம்மாவாக, பரப்பிரம்ம ஸ்வரூபமாகப் போற்றி கூறுவது.👇👇
4. இலிங்கப் புராணம்
பரமசிவனுடைய வரலாறுகள், திருநீறு முதலான சிறப்புகளையும் இது எடுத்து கூறுவது.
5. விஷ்ணுப் புராணம்
விஷ்ணு பெருமைகளை கூறுவது.
6. கருட புராணம்
கருடன் கஷ்யப மகரிஷிக்குச் சொல்லியது. பிராணன் உடலை விட்டு நீங்கிய பின், அனுபவிக்கின்ற பலவிதமான நிலைகளைக் கூறுகிறது.👇👇
7. அக்கினி புராணம்
அக்கினியைப் பற்றிய புராணம், அக்னி வசிஷ்டருக்கு உபதேசித்தது.
8. மத்ஸ்ய(மச்ச புராணம்)
பலவகை விரதங்களின் பெருமைகள், தானங்கள் செய்வது பற்றியும் கூறுவது.
9. நாரத புராணம்
நாராதருடைய வரலாறும், மனித வாழ்க்கைக்குத் தேவையான நீதிகளும் விரிவாக கூறுவது.👇👇
Read 6 tweets
Dec 30, 2021
#முதலில் அவர்கள் பார்ப்பானை விரட்டியடி என்றார்கள். நான் பாடல் கேட்டுக் கொண்டிருந்தேன்.
#நான்தான் பார்ப்பான் இல்லையே.
#பின் அவர்கள் நீங்கள் உயர்வகுப்பு உங்களுக்கு இட ஒதுக்கீடு எதற்கு ஓடிப்போ என்றார்கள். நான் அமைதியாய் இருந்தேன்.
#நான்தான் உயர்வகுப்பு அல்லவே..👇👇
#பின்னர் நீங்கள் வந்தேறி என்றார்கள்.வேடிக்கை பார்த்தேதேன்.
#நான்தான் தமிழனாயிற்றே
#இந்தியை அழித்தார்கள். நான் சிரித்துக் கொண்டிருந்தேன்.
#நான்தான் இந்திக்காரன் இல்லையே.
#என் கோவில்கள் ஆபாசக்கூடம் என்றார்கள். நான் வேடிக்கை பார்தேன்
#நான்தான் கோவிலுக்கு செல்வதில்லையே.👇👇
#வேதமந்திரங்கள் சமஸ்கிருதத்தில் ஓதக் கூடாது என்றார்கள். டிக்டாக்கில் மூழ்கிப்போனேன். அதனாலென்ன நான்தான் வேதங்கள் குறித்து யாதும் அறியாதவனாயிற்றே.

#கடைசியில் என்னிடம் வந்தார்கள்

உன் நாடு என்ன என்றார்கள்.

#சொன்னேன்.

நீ தமிழனில்லை என்றார்கள்.

உன் மதம் என்ன என்றார்கள்.👇👇
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(