SSR 🐘 Profile picture
Nov 12, 2021 19 tweets 7 min read Read on X
தஞ்சை பெரிய கோவில் (Thread)

பெரியகோவிலை கட்ட இராஜராஜசோழன் இடம் தேர்வு செய்த விதமே சற்று வியப்பானது.

மலை குன்றுகள் இல்லாத மணல் பகுதிகள் நிறைந்த சம தளத்தில், கற்கலை கொண்டு கோவில் அமைத்துள்ளார்.

இக்கோவிலை ராஜராஜசோழன் கட்ட தனிப்பட்ட வரலாறு உண்டு.

#ஐப்பசி_சதயம்
#இராஜராஜசோழன்
1/1
அதாவது, காஞ்சிபுரத்தில் ஒரு முறை ராஜராஜசோழன் சென்ற போது, அங்கு ராஜசிம்மனால் கட்டப்பட்ட கைலாசநாதர் கோவில் ராஜராஜனை மிகவும் கவர்ந்தது.

அதே போல் ஒரு கோவிலை கட்ட விரும்பினார், அதுவும் கோவில் யாரும் காட்டாத அளவுக்கு மிகவும் பிரமாண்டமாக கட்டவேண்டும் என்று நினைத்தார்.

1/2
அப்படி கட்டப்பட்ட கோவில்தான் தஞ்சை பெரியகோவில்.

வீரசோழன் குஞ்சரமல்லன் என்ற பெருந்தச்சன் முன்னிலையில், மதுராந்தகனாகன நித்த வினோத பெருந்தச்சன் உதவியாலும் 6 ஆண்டுகளில் கோவில் கட்டப்பட்டது.

கோவிலை சுற்றி மதிலரண், நீரரண் என இரு அரண்களையும் அகழியையும், அமைத்தார்.

1/3
இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில் கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில்
15 தளங்கள் கொண்ட 60 மீ உயரமான கற்கோயிலை எழுப்பினார்.

கருவறைக்கு மேலே உள்ள விமானம் 13 தளங்களையும் 216 அடி உயரமும் கொண்டு கம்பீரமாகக் காட்சியளிக்கிறது.

1/4
உயர்ந்து காணப்படும் விமானம், "தட்சிணமேரு எனச் சிறப்பித்து அழைக்கப்படுகிறது.

இராஜராஜசோழன் காலத்தில் திருச்சுற்று மாளிகை அருகே, பிரதான நுழைவு கோபுரத்திற்கு எதிரே அமைந்துள்ளது.

இராஜராஜன் நுழைவு வாயிலையும்,

சோழ ஒற்றனை சிறை வைத்த, சேர மன்னன் ராஜராஜ பாஸ்கர ரவிவர்மனை,

1/5
கேரளாவில் உள்ள காந்தளூர்ச்சாலை என்னும் பகுதியில் போரில் வென்றதன் நினைவாக கேரளாந்தகன் நுழைவு வாயில் எழுப்பட்டது.

அதன் பிறகு, கருவறை வடக்கில் சண்டீகேஸ்வர் கோவிலையும், நடராஜர் மண்படபத்தையும், நந்தியம் பெருமானையும் அமைந்தார். அந்த நந்தி தற்போது திருச்சுற்று மாளிகையில்,

1/6
வராகியம்மன் சன்னதி அருகே, வடக்கு நோக்கி அமைந்துள்ளது.

கோவில் கருவறையில் உள்ள சிவலிங்கம் உலகிலேயே மிகப் பெரியதாகும்.

ஆறடி உயரமும், 54அடி சுற்றளவும் கொண்ட ஆவுடையார், 13அடி உயரம், 23 1/2 அடி சுற்றளவும் உள்ள லிங்கம் என தனித்தனி கருங்கற்களினால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது.
1/7
சிவலிங்கத்தைச் சுற்றி வர இடமும் உள்ளது. நமது பார்வையில் தென்படுவது சிவலிங்கத்தின் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே. அபிஷேகம், ஆராதனை நடத்த இருபுறங்களிலும் படிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தஞ்சைக் கோயிலின் சிவலிங்க வழிபாடு மகுடாகம அடிப்படையில் நடக்கிறது.

1/8
தினமும் காலை சந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம் என நான்கு கால பூஜைகள் நடக்கின்றன.

பெரியகோயில் விமானத்தை மூடியுள்ள பிரம்மராந்திரக்கல்:

தஞ்சைப் பெரியகோயில் விமானத்தில் நான்கு தளங்கள் உள்ளன அவற்றிற்கு மேல் பார்வதியும்,சிவபெருமானும், தேவர்களும்,கணங்களும் சூழ்ந்துள்ளனர்.
1/9
கயிலாயத்தில் அவர்கள் இருப்பது போல் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.

உட்கூடாக உள்ள விமானத்தை மூடியுள்ள ‘பிரம்மராந்திரக்கல்’ 26.75 சதுர அடி சதுரம் கொண்டது.

இதன் 4 மூலைகளிலும் 1.34 மீ உயரமும், 1.40மீ நீளமும் உடைய நான்கு நந்திகள் உள்ளன.

வடமேற்குத் திசையில் பூதஉருவம் ஒன்று உள்ளது.
1/10
கிரீவம் எனப்படும் கழுத்துப்பகுதியும், அதற்கு மேல் அரைக்கோளமாக அமைந்துள்ள சிகரம் எனப்படும் தலைப்பகுதியும் எட்டுப்பட்டை வடிவில் அமைந்துள்ளன.

தட்சிணமேரு என்பது ‘தெற்கே இருக்கும் மலை’ என்று பொருள் தமிழர்களின் கட்டடக்கலைத்திறனுக்கு சான்றாக உயர்ந்து நிற்கிறது தஞ்சை பெரியகோயில்.

1/11
ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து, நம் கண் முன்னே நிற்கும் பிரம்மாண்டம்’ என தஞ்சை பெரிய கோயில் கட்டுமானத்தைப் பற்றி வரலாற்று வல்லுநர்கள் அதிசயிக்கின்றனர்.

கோமுகத்தை தாங்கும் பூதகணம்:-

கருவறையில் அபிஷேகம் தீர்த்தம் வெளிவரும் நிர்மால்யத் தொட்டி இங்கு வித்தியாசமானதாகும்.

1/12
விமானத்திற்கு வடக்குப்புற அடிபாகத்தில் உள்ள கோமுகத்தை பூதகணம் ஒன்று தாங்குகிறது. எதையும் பிரம்மாண்டமாகவும், வித்தியாசமாகவும் செயல்படுத்துபவர் இராஜராஜன் என்பதற்கு இது எடுத்துக்காட்டு.

நந்தி மண்டபம்:-

தஞ்சைப் பெரியகோவிலில் உள்ள பெரிய நந்தி ஒரே கல்லால் செய்யப்பட்டது.

1/13
இதன் உயரம் 14 மீ, நீளம் 7 மீ, அகலம் 3 மீ ஆகும். நந்தி மண்டபம் தஞ்சை நாயக்க மன்னர் செவ்வப்ப நாயக்கரால் கட்டப்பட்டது.

நந்திமண்டபத்திற்கு தெற்கே உள்ள திருச்சுற்று மாளிகையில் வடதிசையை நோக்கியபடி உள்ள நந்தியே இராஜராஜனால் பெருவுடையாருக்கு எதிரே அமைக்கப்பட்டதாகும்.

1/14
பின் தஞ்சை நாயக்கர்கள் சிவலிங்கத்துக்கு இணையான பெரிய நந்தியை நிறுவினர்.

முதலில் அமைக்கப்பட்ட நந்தி கேரளாந்தகன், இராஜராஜன் வாயில்களுக்கு இடைப்பட்ட பகுதிக்கும் பின்னர் திருச்சுற்று மாளிகைக்கும் மாற்றப்பட்டது.

சந்நிதிகள் பற்றிய பார்க்கலாம்:-

1/15
சிவலிங்கம் பிரதிட்டை செய்யப்பட்டுள்ள, முக்கியமான கோயிலையும், அதனோடு கூடிய மண்டபங்களையும் தவிர, சண்டிகேஸ்வரர், அம்மன், நடராசர், வராகி, முருகர், விநாயகர் மற்றும் கருவூர்த்தேவர் கோயில்களும் இவ்வளாகத்துள் அமைந்துள்ளன.

பெருவுடையார் என்று அழைக்கப்படும் மூலவர் லிங்கவடிவில் உள்ளார்
1/16
இந்த மூலவரை இராஜராஜ சோழன் ராஜராஜீஸ்வரமுடையார் என்ற பெயரில் வழிபட்டுள்ளார்.

இக்கோவிலில் தனிச்சன்னதியில் உள்ள வராகி அம்மன் சோழர் கால கட்டுமானமாக இருக்க வேண்டும் என்றே கருதப்படுகிறது வேறெங்கிலும் இல்லாத வகையில் இந்த திருவுருவிற்கு இரண்டு கரங்கள் மட்டுமே இருப்பது வியக்கத்தக்கது
1/17
கோயிலில் அன்றாட பணிகளை ஒழுங்காகச் செயல்படுத்துவதற்கு எம்பெருமானார் இராஜராஜ சோழன் அவர்கள் பூசகர்களும், சிற்பிகளும் தேவார ஓதுவார்களும், இசைவாணர்களும், நடனமாதர்களும் மேலும் இன்னோரன்ன பணியாட்களும் தேவைகளுக்கேற்ப நியமிக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது.

1/18
50 ஓதுவார்களும், 400 நடன மாதர்களும் கோயிலிலிருந்ததாகக் கல்வெட்டுச் சான்றுகள் நமக்கு பகிர்கின்றன.

1010 ஆம் ஆண்டு முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010 ஆவது ஆண்டோடு 1000 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

நன்றி வணக்கம் 🙏
#ஐப்பசி_சதயம்
#இராஐராஜசோழன்
#SSRThreads

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with SSR 🐘

SSR 🐘 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @SSR_Sivaraj

Feb 15
சைவத்தை மீட்ட நெல்லை - (Thread)

நெல்லுக்கு இறைவன் வேலியிட்டு காத்ததாலும்,

மூங்கில் நெல்லால் பசியைப் போக்கிய ஊர் என்பதாலும் நெல்வேலி என்கிற பெயர் பெற்றது.

பின்னர் திரு என்ற அடைமொழி சேர்க்கப்பட்டு திருநெல்வேலியாக பெயர் மாற்றம் பெற்றது என்பது வரலாறு.

#சைவஉணவு
#SSRThreads

1/25 Image
திருநெல்வேலி என்றாலும் உள்ளூர்க்காரர்களுக்கு என்றும் நெல்லை தான்.

தாமிரசபையின் தலைவன் திருநெல்வேலி உடைய நயினார் வீற்றிருக்கும் திருநெல்வேலியை
பாண்டிய அரசர்கள், இராஜேந்திரசோழன், விசயநகர மன்னர்கள், பாளையக்காரர்கள்,
சந்தா சாகிப்,
ஆற்காடு நவாப், மருதநாயகம், போர்த்துக்கீசியர்,

2/25 Image
ஒல்லாந்தர்கள், பிரிட்டிசார் என பல்வேறு ஆட்சி மாற்ற வரலாறு நெடுகிலும் கண்டது.

ஆதிச்சநல்லூரிலும், கொற்கையிலும் மேற்கொண்ட புதைபொருள் ஆய்வுகளில் தமிழர்களின் பழங்கால நாகரீகங்கள் குறித்த மிகத்துள்ளியமான சித்திரம் கிடைத்தது. தமிழர்கள் வேளாண்மை, தொழில்திறமை,பழக்க வழக்கங்கள் பற்றிய

3/25 Image
Read 25 tweets
Dec 15, 2023
சைவத்தை இழந்த மதுரை - (Thread)

கொஞ்சம் நாட்களாய் மதுரைக்கு அடிக்கடி பயணபடுகிறேன்.

தனியாகவும், நண்பர்களுடன் சேர்ந்து எப்பொழுது சென்றாலும் அசைவ உணவுக்கடைகளே கண்களில் அதிகம் தென்படும்,

உணவுகளைப் பற்றி நான் நிறைய திரேட் போட்டு இருந்தும் இது கொஞ்சம் Special,

1/25 Image
சாப்பாடுன்னா மதுரை தான்யா,

மதுரையை அடிச்சிக்க தமிழ்நாட்டில் ஒரு ஊரே இல்லன்னு பல பேர் சொல்லுவாங்க,

அது வெள்ளையா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான் என்பது போல,

விதவிதமான அசைவ உணவுகளும் புரோட்டா கடைகளும், தள்ளுவண்டிகளும், நடைபாதை இட்லி கடைகளுக்கும் மதுரை இன்று புகழ் பெற்றுள்ளது.

2/25
கறி தோசை,
நண்டு ஆம்லெட்,
அயிரைமீன் குழம்பு, வெங்காயக் குடல், விரால்மீன் ரோஸ்ட்னு வித விதமா அசைவத்தில் பட்டையை கிளப்பும் மதுரையில் இப்போ சைவ உணவுகளுக்கு ஏன் அந்தளவு முக்கியத்துவம் தரவில்லை ?

சைவத்தில் அந்தளவு வெரைட்டி இல்லையா இல்ல மக்கள் எல்லாம் அசைவத்துக்கு மாறிட்டாங்களா ?

3/25
Read 25 tweets
Jul 12, 2023
#அரிக்கொம்பன்🐘 கன்னியாகுமரி மாவட்டத்தில் அப்பர்கோதையார் முதல் முத்துகுழிவயல் வரையுள்ள இடத்திலே சுற்றி கொண்டு இருக்கிறான்.

அரசி,கரும்பு,சர்க்கரையை உண்டவன் கன்னியாகுமரி அப்பர்கோதையார் வந்த பிறகு இயற்கை உணவுக்கு தன்னை பக்குவப்படுத்தி கொண்டான் என நம்புவோம்,

#யானைக்காதலன்_SSR

1/13
அப்பர்கோதையார் முதல் முத்துகுழிவயல் வரை (கன்னியாகுமரி மாவட்டம்) இந்த இடம் மேற்கு தொடர்ச்சி மலையின் அடர்ந்த மழை காடுகள் நிறைந்த பகுதி அதே நேரத்தில் சோலை காடுகள் என்னும் கரும் பச்சை பசுமையான புல்வெளிகளும் உண்டு,

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாயும் கோதையாறு ஒரு வற்றாத ஆறு,

2/13
வருடம் முழுக்க தண்ணீர் பாயும் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் மட்டத்தில் இருந்து 5500 அடி உயரத்தில் உள்ளது,தினசரி மழை பொழிந்து கொண்டே இருக்கும் கடும் குளிர் வாட்டும்,

இந்த கோதையாறு அப்பர்கோதையார் மலையில் உற்பத்தி ஆகி அப்பர்கோதையார் அணையில் நீர் சேமிக்கப்பட்டு வருகிறது,

3/13
Read 13 tweets
Jun 26, 2023
#அரிக்கொம்பன் Part - 3

கேரளா மாநிலம், இடுக்கி மலையில் வசித்தவனை அவன் அட்டகாசம் தாங்காமல், கேரள வனத்துறை அரிசிக்கொம்பனை பிடித்து அவன் உடலில் ஜி.பி.எஸ் கருவியைப் பொறுத்தி, பெரியாறு அணையை ஒட்டிய மேதகானம் பகுதியில் விட்டுவிட்டு தீவீரமாக கண்காணித்தனர்.

#யானைக்காதலன்_SSR

1/26
அவனே கண்ணகி கோயில் வழியாய் தேனிக்குள் புகுந்து குறிப்பாக கம்பம் ஊருக்குள் இருந்தவனை,

தமிழக வனத்துறையினர் மயக்க ஊசி போட்டு 2 கும்கி யானைகள் உதவியுடன் லாரியில் ஏற்றி நெல்லை மாவட்டம், மணிமுத்தாறு மலையில் 35 கி.மீட்டர் தூரத்தில் உள்ள முத்துக்குளி வயல் என்கிற இடத்தில் விட்டனர்

2/26
காரணம் என்ன ?

களக்காடு - முண்டந்துறை புலிகள் காப்பகத்திலுள்ள முத்துக்குளி வயல்தான் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள வளமான இடம். புலிகளும், ராஜநாகங்களும் அதிகமாக வசிக்கும் பகுதி.

சூரிய ஒளியே புகமுடியாத அடர்ந்த காடு என்பதால் உணவு மற்றும் தண்ணீருக்குப் பஞ்சம் இருக்காது,

3/26
Read 26 tweets
Jun 9, 2023
#அரிக்கொம்பன் - பகுதி 2

பகுதி 1 க்கு நீங்கள் கொடுத்த வரவேற்ப்பு என்னை மெய்சிலிர்க்க வைத்தது

யானையை எல்லாருக்கும் பிடிக்கும் என்று தெரியும் இவ்வளவு பிடிக்கும் என ஆச்சரியப்பட்டேன்.

முதலில் உங்களுக்கு எல்லாம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏

#யானைக்காதலன்_SSR
#SSRThreads

1/25
காடுகளை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து கட்டிடங்களை எழுப்பி யானைகளின் இடத்தை அபகரித்துக் கொண்ட ஆறறிவு மனிதர்களால் வந்த வினை இது,

முதல் பகுதியில் கொம்பன்கள் எப்படி உருவாகிறது உருவாக்கப்படுகிறது என்பதை தெரிந்து கொண்டோம்,

இனி திரேட்டின் ஹீரோவான #அரிக்கொம்பன் கதைக்கு வருவோம்,

2/25
மூணாரை சுற்றியுள்ள காட்டுப்பகுதிகளில் சுதந்திரமாக சுற்றித்திரிந்தவன் இந்த #அரிக்கொம்பன் 🐘

அரிக்கொம்பன் யானை 1985 ஆம் ஆண்டு கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் மூணாறில் உள்ள சின்னக்கானல் காப்புக்காடுகளில் பிறந்தவன்,

கணக்குப்படி பார்த்தால் தற்போது அரிக்கொம்பனுக்கு வயது 38.

3/25
Read 25 tweets
Jun 7, 2023
#அரிக்கொம்பன் - பகுதி 1

கேரள - தமிழகத்தை கலக்கி கொண்டிருக்கும் ஒரு யானை பற்றிய திரேட்,

முன்பே யானை பற்றிய 2, 3 திரேட் போட்டிருக்கேன், அப்பேல்லாம் இந்த மாதிரி ஒரு உணர்வு வந்ததில்லை,

இந்த திரேட் மிகவும் கடினமான மனநிலையில் தான் எழுதுகிறேன்.

#யானைக்காதலன்_SSR
#SSRThreads

1/25 Image
பொதுவாக காட்டு யானைகள் மிகவும் அறிவுத்திறன் கொண்டவை,

வளர்ப்பு யானைகளுக்கு சொல்புத்தி மட்டுமே இருக்கும். பாகன்கள் சொல்றத மட்டுமே செய்யும் சில நேரம் மீறும்,

ஆனால், காட்டு யானைகள் தானே சிந்தித்து முடிவெடுக்கும் அறிவு கொண்டது.

அவைகளது புத்திசாலி தனத்துக்கு ஒரு சின்ன உதாரணம்

2/25
வனப்பகுதிகளை ஒட்டிய விளைநிலங்களைச் சுற்றி,

'மெக்கர்' ன்னு சொல்லப்படும் மின்சாரவேலி போட்டிருப்பாங்க,
சூரியஒளி மின்சார பேட்டரியில் இணைப்பு கொடுத்திருப்பார்கள்,
'கட் அவுட்' வெச்சு, சுழற்சி முறைல, மூனு நொடிக்கு Current Supply இருக்கும், அடுத்த ஐந்து நொடிக்கு சப்ளை வராது.
3/25
Read 25 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(