🇮🇳🙏நமுசி என்னும் அசுரன் சிவபெருமான் நோக்கி கடும் தவம் புரிந்து, எந்த ஆயுதத்தாலும் தனக்கு மரணம் ஏற்படக்கூடாது என்ற வரத்தைப் பெற்றான்.
அதன் விளைவாக தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் தொந்தரவு செய்து வந்தான். இம்சை தாங்காத தேவர்கள் இந்திரன் தலைமையில் சிவபெருமானை சரண் அடைந்து முறையிட்டனர். தவத்தின் பயனால் பெற்ற வரத்தினைத் தவறாக பயன்படுத்திய ஆசுரனை கொல்ல முடிவெடுத்தார் சிவபெருமான்.
"ஆயுதத்தால் தானே அசுரனுக்கு அழிவு இல்லை, கடல் நுரையை வீசினால் அவன் அழிந்து போவான்" எனக்கூறி தன் சக்தியை கடல் நுரை மீது செலுத்தினார். அதனைப் பெற்ற இந்திரன் கடல்நுரையை அசுரன் மீது வீசி அசுரனைக் கொன்றான்.
பகை தீர வழிகாட்டிய சிவபெருமானுக்கு நன்றி செலுத்த எண்ணம் கொண்ட இந்திரன் சிவலிங்கம் ஒன்றை ஸ்தாபித்து வழிபட்டான்.
இத்தலம் தற்போது *பரங்கிப் பேட்டை* என்று அழைக்கப்படுகிறது. *விஸ்வநாதர்* என்னும் திருநாமத்தில் மூலவரும், *விசாலாட்சி* என்னும் திருநாமத்தில் அம்பாளும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
பதவி பொருள் இழந்தவர்கள் அவற்றை திரும்பப் பெற விஸ்வநாதருக்கு சம்பா சாதம் படைத்து வழிபடுகின்றனர். இங்குள்ள *முத்துக்குமார சுவாமி* க்கு ஆறு முகங்களுக்கும் தனித்தனியே பூஜை நடப்பது சிறப்பு. செவ்வாய் கிழமையன்று முருகனுக்கு செவ்வரளி மாலை சாற்றி *சத்ரு சம்ஹார திரிசதி*
என்னும் எதிரி பயம் போக்கும் அர்ச்சனை நடத்துகின்றனர். வள்ளி தெய்வானையுடன் காட்சி தரும் இவருக்கு தேனும் தினைமாவும் படைத்து வழிபடுகின்றனர். பரங்கிப் பேட்டை என்னும் இத்தலம் சிதம்பரத்தில் இருந்து 22.0கி.மீல் உள்ளது.🇮🇳🙏🇮🇳
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஆர். ரவி, வடக்கூர், துாத்துக்குடியிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நாட்டின் பாதுகாப்பு மற்றும் மக்கள் நலம் ஆகிய இரு முக்கிய காரணங்களால்,
மத்திய பா.ஜ., அரசு கடந்த ஆண்டு அறிமுகப்படுத்திய மூன்று வேளாண் சட்டங்களையும், 'வாபஸ்' வாங்கி இருக்கிறது.
காரணம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் போராட்டம் நடத்தும் மனோபாவம் உடைய கம்யூனிஸ்ட்களால், மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் வாங்கியதை ஜீரணிக்க முடியவில்லை.
டில்லியில் ஓராண்டுக்கும் மேலாக நீடித்த விவசாய, 'ஏஜென்டு'களின் போராட்டம் முடிவுக்கு வந்ததை, அவர்களால் தாங்கி கொள்ள இயலவில்லை.'
கோவில் சொத்துக்களில் அனுமதியின்றி குத்தகைதாரர்கள்; சென்னை உயர் நீதிமன்றம் கடும் அதிருப்தி
சென்னை : 'கோவில் சொத்துக்களில் அனுமதியின்றி குத்தகைதாரர்கள் உள்ளனர்; அவர்களுக்கு எதிரான அதிகாரிகளின் நடவடிக்கையில் முழு திருப்தியில்லை' என, சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
கோவையில் உள்ள மாகாளி அம்மன் கோவில் சொத்தில், ஸ்ரீதரன் என்பவர் குத்தகைதாரராக உள்ளார். வாடகை பாக்கி தொகை 1.44 லட்சம் ரூபாய் செலுத்தும்படி, அவருக்கு 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது.
வாடகை பாக்கி
இதையடுத்து, வாடகை உயர்த்தப்பட்டதற்கான உத்தரவை வழங்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவு:
காளிகாம்பாள் கோவில்:
சென்னை மாநரகத்தின் பரபரப்பு மிகுந்த பகுதியான பாரீஸ் கார்னரில், தம்புசெட்டி தெருவில் இந்த ஆலயம் உள்ளது. கி.பி.17-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சென்னை கடற்கரையை ஒட்டிய பகுதியில் இருந்த இந்தக் கோவில், 🙏🇮🇳1
பல்வேறு கால மாற்றங் களின் காரணமாக, தற்போதைய இடத்தில் எழுப்பப்பட்டிருக்கிறது. போர்ச்சுகீசியர்களின் ஆதிக்க காலத்தில் இந்த மாற்றம் நிகழ்ந்திருக்கலாம் என்கிறார்கள். இந்தக் கோவிலில் ‘காளி’ என்றும், ‘காமாட்சி’ என்றும் அழைக்கப்படும் பெண் தெய்வம் பிரதான மூலவராக அருளாட்சி செய்கிறார்.🙏🇮🇳2
முன்காலத்தில் உக்கிர காளியாக காட்சியளித்த இத்தல மூலவர், தற்போது சாந்தமான கோலத்தில் காமாட்சி வடிவில் அருள்வதாக ஐதீகம்.
மத்திய அரசின் சூரிய மித்ரா பயிற்சி வகுப்புகள்(Solar technical Training) துவங்க உள்ளது. தற்போது சேர்க்கை நடைபெறுகிறது.
கடைசி நாள்: 25.12.2021. Age:18 to 30
பயிற்சி காலம்:3 மாதம்
பயிற்சி நேரம்: கானல 9 மணி முதல் மானல:5மணி வரை
கல்வி தகுதி:
Diploma in
1.EEE
2.ECE
3.Mech
4.Civil
ITI:
Electrician
Fitter
Wireman
Welder
சலுகைகள்: 1. தங்குமிடம் 2. உணவு
3 . சீருடை
பயிற்சி உள்பட இவை அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.
பயிற்சி முடிந்ததும் 100% வேலை வாய்ப்பு.
இந்த பயிற்சி வகுப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
சேர்க்கைக்கு வரும்போது
இன்று (நவ. 26) மும்பை தாக்குதல் 13 ம் ஆண்டு நினைவு தினம் :
மும்பை: மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் 13ம் ஆண்டு நினைவு தினம் இன்று (நவ.26) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி மும்பையில் பல்வேறு இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
2008 நவ., 26ம் தேதி பாகிஸ்தானில் இருந்து படகில் வந்த 10 பயங்கரவாதிகள் தனித்தனி குழுவாக சென்று,
இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையின் சத்ரபதி சிவாஜி ரயில்வே ஸ்டேஷன், தாஜ் ஓட்டல், நாரிமன் ஹவுஸ், காமா மருத்துவமனை, ஒபராய் டிரிடென்ட் ஓட்டல், லியோபோல்டு கபே ஆகிய இடங்களில் தங்களது பயங்கரவாத செயல்களை அரங்கேற்றினர்.