ஆர். ரவி, வடக்கூர், துாத்துக்குடியிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நாட்டின் பாதுகாப்பு மற்றும் மக்கள் நலம் ஆகிய இரு முக்கிய காரணங்களால்,
மத்திய பா.ஜ., அரசு கடந்த ஆண்டு அறிமுகப்படுத்திய மூன்று வேளாண் சட்டங்களையும், 'வாபஸ்' வாங்கி இருக்கிறது.
காரணம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் போராட்டம் நடத்தும் மனோபாவம் உடைய கம்யூனிஸ்ட்களால், மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் வாங்கியதை ஜீரணிக்க முடியவில்லை.
டில்லியில் ஓராண்டுக்கும் மேலாக நீடித்த விவசாய, 'ஏஜென்டு'களின் போராட்டம் முடிவுக்கு வந்ததை, அவர்களால் தாங்கி கொள்ள இயலவில்லை.'
பார்லிமென்ட் நோக்கி, 500 டிராக்டர்களில் விவசாயிகள் ஊர்வலம்' என்று அறிவித்து, 'ஆறு கோரிக்கைகளை, மத்திய அரசு நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும்' என்று அறிவித்திருக்கிறார், பாரதிய கிஸான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத்.
'விட்டு கொடுப்போர் கெட்டுப் போவதில்லை' என்பது ஆன்றோர் வாக்கு. நாட்டின் பாதுகாப்பு மற்றும் மக்கள் நலன் கருதி, மூன்று வேளாண் சட்டங்களையும் வாபஸ் வாங்கி இருக்கிறது, மத்திய அரசு. அதாவது, விட்டுக் கொடுத்து இருக்கிறது.
ஆனால், தங்கள் ஆறு அம்ச கோரிக்கை நிறைவேறுவது வரை போராட்டம் தொடரும் என்று அறிவிக்கிறார், ராகேஷ் ராகேஷ் திகாயத்.அதாவது போராட்டம் முடிவுக்கு வந்ததை திகாயத்தால் ஏற்று கொள்ளவும், ஜீரணிக்கவும் இயலவில்லை. 'போராட்டம் தொடரும்' என்கிறார்.
அதாவது, 'கெட்டுப் போகிறவர் விட்டுக் கொடுப்பதில்லை' என்ற ஆன்றோர் வாக்கை நிரூபிக்க முயற்சிக்கிறார்.
இதற்கிடையே, ஏ.ஐ.எம்.ஐ.எம்., தலைவர் அசாதுதீன் ஓவைசி, 'தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக, மத்திய அரசு சட்டம் இயற்றினால், நாட்டில் மீண்டும் போராட்டம் வெடிக்கும்' என்று, 'படம்' காட்டுகிறார்.
மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு வாபஸ் வாங்கி இருப்பது, எதிர் கட்சிகளுக்கு ஏளனமாக போய் விட்டது. மத்திய அரசை மிரட்டி, பணிய வைக்க முயற்சிக்கின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி பொறுமையாக இருக்கிறார் என்றால், அடக்குமுறையால் குடிமக்கள் ஒருவருக்கும் பாதிப்பு ஏற்பட்டு விடக் கூடாது என்ற ஒரே ஒரு நோக்கம் தான்.அந்த பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு!
அளவுக்கு மீறி ஆட்டம் போடத் துவங்கினால், மறைந்த பிரதமர் இந்திரா அறிவித்தது மாதிரி, 'எமெர்ஜென்சி'யை அறிவித்தால், இவர்களால் என்ன செய்ய முடியும்?
தினமலர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
உலகில் வாழும் உயிர்கள் அனைத்தும் சமம்; இதில் ஏற்றத்தாழ்வு எதுவும் கிடையாது.அந்த உயிர் போவதும் ஒரு முறை தான்.
அது, இயற்கையாக, நோயால், விபத்தால், இயற்கை பேரிடரால், கொலையால், தற்கொலையால் நிகழலாம்.ஆக, அனைத்தும் மரணங்கள் தான்.இயற்கை பேரிடர், விபத்து, கொலை ஆகியவற்றால் ஏற்படும் மரணங்களுக்கு, மாண்டவர் குடும்பத்தினருக்கு நிவாரணமும், வேலை வாய்ப்பும் வழங்குவதை அரசு வாடிக்கையாக்கி வைத்துள்ளது.
சமீபத்தில், திருச்சி எஸ்.எஸ்.ஐ., பூமிநாதன் என்பவர், ஆடு திருடும் கும்பலால் படுகொலை செய்யப்பட்டார்.
முருகப்பெருமானுக்கு சிறப்பு சேர்க்கும் திருத்தலங்கள் அவரது ஆறுபடை.
இதில் முதலாவது படை வீடாகத் திகழ்வது திருப்பரங்குன்றம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.
🙏🇮🇳1
மதுரைக்கு தென்மேற்கில் சுமார் எட்டு கி.மீ தொலைவில் உள்ள இங்குதான் முருகன் தெய்வானையை திருமணம் செய்து கொண்ட நிகழ்வு நடந்ததாகப் புராணங்கல் தெரிவிக்கின்றன.
இக்கோவிலில் முருகன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார்.
🙏🇮🇳2
*தல வரலாறு*
கயிலாயத்தில் சிவபெருமான், பார்வதி தேவி க்கு ஒம் எனும் பிரணவ(பரம்பொருளே எனும் பொருளுடைய) மந்திரத்தின் உட்பொருளை உபதேசிக்கும் போது, தன் தாயாரின் மடிமீது முருகப் பெருமான் அமர்ந்திருந்தார்.
பக்திநிலையில் அரும்பு, பூ, காய், கனி என்னும் நான்கு நிலைகள் உண்டு. இதில் மாணிக்கவாசகரை கனிந்தபக்திக்கு எடுத்துக் காட்டாகச் சொல்வர். இவர் பாடிய திருவாசகத்தின் பெருமையை திருவாசகத்திற்கு உருகார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்று குறிப்பிடுவர்.
திருவாசகத்தையும் சிவனையும் வேறுவேறாக பிரித்துப் பார்ப்பதில்லை. திருவாசகத்தின் ஒவ்வொருபாடலிலும் சிவனருள் நிறைந்திருக்கிறது. ஆங்கிலத்தில் திருவாசகத்தை மொழி பெயர்த்தவர் ஜி.யு.போப் என்ற வெளிநாட்டவர். இதை மொழிபெயர்த்த போது, பக்தியால் அவருக்கு கண்ணீர் பெருகியது.
அவர் குறிப்பெடுத்த காகிதகங்கள் அதனால் நனைத்து ஈரமானது. அம்மையப்பனாக விளங்கும் சிவனைத் தனது தாயாக பல இடங்களில் மாணிக்கவாசகர் போற்றுகிறார்.