உலகில் வாழும் உயிர்கள் அனைத்தும் சமம்; இதில் ஏற்றத்தாழ்வு எதுவும் கிடையாது.அந்த உயிர் போவதும் ஒரு முறை தான்.
அது, இயற்கையாக, நோயால், விபத்தால், இயற்கை பேரிடரால், கொலையால், தற்கொலையால் நிகழலாம்.ஆக, அனைத்தும் மரணங்கள் தான்.இயற்கை பேரிடர், விபத்து, கொலை ஆகியவற்றால் ஏற்படும் மரணங்களுக்கு, மாண்டவர் குடும்பத்தினருக்கு நிவாரணமும், வேலை வாய்ப்பும் வழங்குவதை அரசு வாடிக்கையாக்கி வைத்துள்ளது.
சமீபத்தில், திருச்சி எஸ்.எஸ்.ஐ., பூமிநாதன் என்பவர், ஆடு திருடும் கும்பலால் படுகொலை செய்யப்பட்டார்.
இவரது மரணத்திற்கு ஈடு செய்யும் வகையில், பூமிநாதன் குடும்பத்திற்கு முதல்வர் நிவாரண நிதியில் இருந்து, 1 கோடி ரூபாய் நிதியுதவியும், பூமிநாதன் மகனுக்கு வாரிசு வேலையும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்து சேலத்தில், காஸ் சிலிண்டர் வெடித்து ஆறு வீடுகள் தரைமட்டமானதோடு, தீயணைப்பு நிலைய அதிகாரி பத்மநாபன் உட்பட ஐந்து பேர் இறந்தனர்.
இந்த விபத்தில் இறந்தோர் குடும்பத்திற்கு, தலா, 5 லட்ச ரூபாய் நிவாரண தொகையும், படுகாயமடைந்து சிகிச்சை பெறுவோருக்கு, 50 ஆயிரம் ரூபாய் நிவாரண தொகையும் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
பூமிநாதன், காவல் துறையில் பணியாற்றியவர். பத்மநாபன், தீயணைப்பு துறையில் பணியாற்றியவர். இருவருமே, அரசு துறை பணியாளர்களே!இவர்களில் ஒருவரின் குடும்பத்திற்கு, 1 கோடி ரூபாய் நிவாரண நிதி; மற்றொருவருக்கு, வெறும், 5 லட்ச ரூபாய் நிவாரண நிதி. இரண்டுக்கும் இடையே எவ்வளவு ஏற்றத்தாழ்வு?
ஏன் இந்த முரண்பாடு?இந்த இரண்டு மரணங்களில் மட்டுமில்லை. இதற்கு முன் அரசு வழங்கிய, அனைத்து மரணங்களுக்கான நிவாரண நிதியும் இப்படித் தான் இருந்திருக்கிறது.இந்த நிதியுதவியை, எந்த வகையில் கணக்கிடுகின்றனர் என்பதே, புரியாத புதிராக உள்ளது
தமிழக அரசு நிவாரணத் தொகை வழங்கும் முறையை பார்த்தால், உயிரே... உண்மையில் உன் விலை தான் என்ன என கேட்கத் தோன்றுகிறது.அரசு, தான் தோன்றித்தனமாக நிவாரண நிதி வழங்குவதை நிறுத்தி, அதற்கு ஒரு வரைமுறை ஏற்படுத்த வேண்டும்.
தினமலர்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
முருகப்பெருமானுக்கு சிறப்பு சேர்க்கும் திருத்தலங்கள் அவரது ஆறுபடை.
இதில் முதலாவது படை வீடாகத் திகழ்வது திருப்பரங்குன்றம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.
🙏🇮🇳1
மதுரைக்கு தென்மேற்கில் சுமார் எட்டு கி.மீ தொலைவில் உள்ள இங்குதான் முருகன் தெய்வானையை திருமணம் செய்து கொண்ட நிகழ்வு நடந்ததாகப் புராணங்கல் தெரிவிக்கின்றன.
இக்கோவிலில் முருகன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார்.
🙏🇮🇳2
*தல வரலாறு*
கயிலாயத்தில் சிவபெருமான், பார்வதி தேவி க்கு ஒம் எனும் பிரணவ(பரம்பொருளே எனும் பொருளுடைய) மந்திரத்தின் உட்பொருளை உபதேசிக்கும் போது, தன் தாயாரின் மடிமீது முருகப் பெருமான் அமர்ந்திருந்தார்.
பக்திநிலையில் அரும்பு, பூ, காய், கனி என்னும் நான்கு நிலைகள் உண்டு. இதில் மாணிக்கவாசகரை கனிந்தபக்திக்கு எடுத்துக் காட்டாகச் சொல்வர். இவர் பாடிய திருவாசகத்தின் பெருமையை திருவாசகத்திற்கு உருகார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்று குறிப்பிடுவர்.
திருவாசகத்தையும் சிவனையும் வேறுவேறாக பிரித்துப் பார்ப்பதில்லை. திருவாசகத்தின் ஒவ்வொருபாடலிலும் சிவனருள் நிறைந்திருக்கிறது. ஆங்கிலத்தில் திருவாசகத்தை மொழி பெயர்த்தவர் ஜி.யு.போப் என்ற வெளிநாட்டவர். இதை மொழிபெயர்த்த போது, பக்தியால் அவருக்கு கண்ணீர் பெருகியது.
அவர் குறிப்பெடுத்த காகிதகங்கள் அதனால் நனைத்து ஈரமானது. அம்மையப்பனாக விளங்கும் சிவனைத் தனது தாயாக பல இடங்களில் மாணிக்கவாசகர் போற்றுகிறார்.
ஆர். ரவி, வடக்கூர், துாத்துக்குடியிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நாட்டின் பாதுகாப்பு மற்றும் மக்கள் நலம் ஆகிய இரு முக்கிய காரணங்களால்,
மத்திய பா.ஜ., அரசு கடந்த ஆண்டு அறிமுகப்படுத்திய மூன்று வேளாண் சட்டங்களையும், 'வாபஸ்' வாங்கி இருக்கிறது.
காரணம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் போராட்டம் நடத்தும் மனோபாவம் உடைய கம்யூனிஸ்ட்களால், மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் வாங்கியதை ஜீரணிக்க முடியவில்லை.
டில்லியில் ஓராண்டுக்கும் மேலாக நீடித்த விவசாய, 'ஏஜென்டு'களின் போராட்டம் முடிவுக்கு வந்ததை, அவர்களால் தாங்கி கொள்ள இயலவில்லை.'