நான் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ படித்துவிட்டு வெளிநாட்டில் வேலை பார்க்கிறேன், நன்றாக இருக்கிறேன். இதற்கும் திமுகவிற்கும் என்ன சம்மந்தம்? இதற்கும் கலைஞருக்கும் என்ன சம்மந்தம்?
எங்கள் ஊர் தம்பிகள் சிலரின் கேள்வி இது.
அவர்களுக்கான பதில்.
உங்கள் வீட்டில், சித்தப்பா, பெரியப்பா வீடுகளில் 1967களுக்கு முன்பு எத்தனை பேர் எட்டாம் வகுப்பு தேர்ச்சியடைந்திருக்கிறார்கள் என்று விசாரித்துப்பார், அப்படி தேர்ச்சியடைந்திருந்தால், எத்தனை பேர் பதினோறாம் வகுப்பு(அன்றைய SSLC) தேர்ச்சியடைந்திருக்கிறார்கள் என்று
யோசித்துப் பார்க்கவும். அதையும் மீறி எத்தனை பேர் PUC தேர்ச்சியடைந்திருக்கிறார்கள் என்று தேடிப்பார்க்கவும்.
எனது அப்பா SSLCயில் மூன்றாவது முறைதான் தேர்ச்சியடைய முடிந்தது. எனது சித்தப்பா PUCயில் தோல்வியடைந்த பிறகு அவரால் அடுத்து படிக்க முடியவில்லை.
ஒரு ஊரில் நூறு பேர் SSLC தேர்வு எழுதினால் 97 தோல்வியடைவார்கள் என்கிற நிலையை மாற்றி 97 பேர் வெற்றியடைவார்கள் என்கிற நிலையை உருவாக்கியவர் கலைஞர்.
உனது அப்பாவோ எனது அப்பாவோ நம்மை விட முட்டாள்கள் கிடையாது. நம்மை விட குறைவாக உழைப்பை செலுத்தியவர்கள் அல்ல.
அவர்களால் பள்ளிக்கல்வியைத் தாண்ட முடியாதபோது நம்மால் தாண்டமுடிந்ததற்கு காரணம் கிராமப்புற மாணவர்கள் அனைவரும் உயர்கல்வி படிக்க வேண்டும் என்று நினைத்த கலைஞரின் சிந்தனையில் உருவான அரசாணைகள்.
கலைஞரையே தேர்வுகளில் தோற்கடித்த தேர்வுமுறையை நமக்காக நாம் வெற்றியடைவது போல மாற்றியவர் கலைஞர்
பெரும்பாலான மாணவர்கள் உயர்கல்விக்கு செல்லக்கூடாது என்றிருந்த கல்விமுறையை பெரும்பாலான மாணவர்கள் உயர்கல்விக்கு செல்ல வேண்டும் என்று மாற்றியவர் கலைஞர்.
இன்று இந்திய அளவில் உயர்கல்விக்கு செல்வோர் சதவிகிதம் 26% ஆக இருக்கும்போது அதை தமிழ்நாட்டில் 49% என்கிற நிலைமை உருவாக
அடிப்படைக்கட்டமைப்புகளையும் அரசாங்க விதிமுறைகளையும் மாற்றியவர் கலைஞர்.
ஒரு வேளை பத்தாம் வகுப்பு தேர்ச்சியடைவில்லையென்றால் அடுத்து டிப்ளமோ படித்திருக்க முடியாது, அதன் மூலம் ஓரளவிற்கு கௌரவமான வேலை வெளிநாடுகளில் கிடைத்திருக்காது, நமக்கு முந்தைய தலைமுறை போல வெயிலில் கம்பி கட்டுவது,
பாலைவனத்தில் ஒட்டகம் மேய்ப்பது என்கிற நிலைமைதான் இருக்கும். இன்றும் படிக்காகதவர்கள் 400 வெள்ளி அடிப்படை சம்பளம் பெறுவதற்கும், டிப்பளமோ படித்து 2000 வெள்ளி சம்பளம் பெறுவதற்குமான காரணம் நாம் திறமையாக படித்தோம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
நமக்கு வாய்ப்பை உருவாக்கினார்கள், அவர்களுக்கு வாய்ப்பை மறுத்தார்கள். அதுதான் வித்தியாசம்.
நாம் எதுவும் கேட்காமல் தானாக கிடைத்தால் அதன் அருமை புரிவதில்லை.
நம் அப்பா, தாத்தக்களுக்கு எப்படி கல்வியை மறுத்தார்களோ அந்த நிலைமையை நமது குழந்தைகளுக்கும் கொண்டுவர புதிய கல்விக்கொள்கையை
கொண்டுவர முயற்சிக்கிறார்கள்.
ஒருவேளை அடுத்த தலைமுறைக்கு கல்வி மறுக்கப்பட்டு வாழ்க்கயை தொலைத்துவிட்ட பிறகு புரியலாம்.
புத்தியுள்ளவன் இப்பொழுதே விழித்துக்கொள்ளுங்கள். கலைஞரைத்திட்டுகிறேன் என்று உங்கள் தலையில் மண்ணை வாரி போட்டுக்கொள்ளாதீர்கள்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
யார் நமக்கு நன்மையைச் செய்தார்களோ எது நமக்கு நன்மையை விளைவித்ததோ அதையே கெட்டதாக காட்டுவது சங்கிகளின் வித்தைகளில் ஒன்று.
குடிசைமாற்று வாரியத்தை அந்த மக்களுக்கு எதிரானமாக கட்டமைத்தார்கள்.
தந்தை பெரியார் சமத்துவபுரங்களை பட்டியலின மக்களுக்கு எதிரானதாக கட்டமைத்தார்கள்.
அதுபோன்றதொரு போலி கட்டமைப்புதான் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை இழிவானதாக கட்டமைத்திருக்கிறார்கள் சங்கிகளின் தம்பிகள்.
90களுக்கு முன்புவரை எங்கள் கிராமத்தில் பரவலாக கூரை வீடுகளை பார்க்க முடியும். பெரும்பாலோர் பள்ளிக்கல்வியோடு படிப்பை நிறுத்தியவர்கள்.
பலர் இரண்டு அல்லது மூன்று ஏக்கர் நிலம் மட்டுமே வைத்திருந்த சிறு விவசாயிகள். நீர்வளம் இல்லாத,மண் வளமும் இல்லாத அந்த நிலங்களில் விவசாயம் செய்வது வரவிற்கும் செலவிற்குமே பொதுமானதாக இருக்கும். எங்கள் பகுதிகளில் தொழில் வளர்ச்சியும் இல்லை.
வரலாற்றில் இதுவரை கிடைத்த ஆதராங்களின் படி முதன் முதலில் எழுத்து முறையை உருவாக்கியவர்கள் சுமேரியர்கள். சுமார் 8000 வருடங்களுக்கு முன்பே அதை உருவாக்கியிருந்தாலும் ஆரம்பத்தில் அதை வரி வசூல் கணக்குகளை எழுத பயன்படுத்தும் கணித குறியீட்டு மொழியாக மட்டுமே பயன்படுத்தி வந்துள்ளார்கள்.
அந்த சுமேரிய எழுத்து வரி வடிவத்தை இப்பொழுது க்யூனிஃபார்ம் என்று அழைக்கிறார்கள்.
5000 வருடங்களுக்கு முன்பு இந்த வரிவடிவத்தை வாக்கியங்கள் எழுதவும் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து விட்டார்கள்.
பாபிலோனிய அரசன் ஹமுராபியின் சட்டங்கள் இன்று நமக்கு தெரியக் காரணம் இந்த வரிவடிவத்தை ஆங்கிலேய அதிகாரி ஒருவர் எப்படி படிக்க வேண்டும் என்று கண்டறிந்த பின்பு தான்.
சரி விசயத்திற்கு வருவோம். ஹராப்பா, மொஹஞ்சதாரோ நாகரிகமும் சுமேரிய நாகரிகமும் சம காலத்தில் இருந்தன. இரண்டிற்கும் வர்த்தக
மன்னர்களிடம் வரியில்லா மானிய நிலங்களைப் பெற்று உழைக்காமல் உட்கார்ந்து தின்றுவிட்டு, வெள்ளைக்காரர்கள் வந்த பிறகு சென்னையில் இருந்தால்தான் வளர்ச்சி் என்று தங்கள் முன்னோர்களுக்கு இலவசமாக கிடைத்த நிலங்களை விற்றுவிட்டு சென்னையின் மையப்பகுதிகளில் குடியேறும் வாய்ப்பு எங்களுக்கு கிடைக்க
வில்லை. அப்படி குடியேறியவர்களின் தலைமுறை இன்று அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் உயர் பொறுப்புகளில் இருக்கிறார்கள். நாங்கள் இப்பொழுதுதான் முதல் தலைமுறையில் படித்து வெளியில் வருகிறோம். பெற்றோர் உதவியில்லாமல் பரம்பரை சொத்துக்களின் பலமில்லாமல் சொந்த உழைப்பில் புறநகர் பகுதிகளில்
அடுக்குமாடி வீடுகளை மட்டும்தான் வாங்க முடியும். மாநகரங்களில் தனி வீடு வாங்க கோடிகள் தேவைப்படும். அதிவும் மையப் பகுதிகளில் கனவு கூட காண முடியாது. மாநகரத்து கல்வி, வேலைவாய்ப்புகள் நம் குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்று நினைப்பதை குற்றமாக பார்க்க வைத்துவிட்டார்கள் போலி
திராவிடக் கொள்கைகளின் அடிப்படை நமது சுயமரியாதை,சமூகநீதி, கல்வி, வேலைவாய்ப்பு போன்றவைதான். நூறாண்டுகளாக நம் தலைவர்கள் இவற்றிற்குதான் தங்கள் வாழ்நாள் உழைப்பைக்கொடுத்தார்கள். நம்ம தலைவர்களின் கவனத்தை இவற்றில் இருந்து திசைதிருப்பத்தான் காவிகள் தொடர்ந்து முயற்சிக்கிறார்கள். இனியும்
ஈழத்தை வைத்து திசைதிருப்ப முடியாது. ஆகையால் பூமாதேவியை கையில் எடுத்திருக்கிறார்கள். சுற்றுச்சூழல் பிரச்சனை என்பது உலகளாவிய பிரச்சனை. வளர்ந்த நாடுகளின் அளவிற்கு மீறிய சுரண்டலால் ஏற்பட்டது. அதை அவர்களால்தான் சரி செய்யமுடியும். கடந்த 30 வருடங்கள் முன்பு வரை நம்மில் பெரும்பாலோர்
கூரை வீடுகளில்தான் வாழ்ந்தோம். இன்றுவரை பெரும்பாலோரிடம் நான்கு சக்கர வாகனங்கள் கிடையாது. தமிழர்கள் சிக்கனமானவர்கள். நம் உருவாக்கும் impact என்பது ஒப்பீட்டளவில் மிகவும் குறைவு. இவர்கள் இவற்றை நம்முடைய ஆகப்பெரிய பிரச்சனையாக பேசுவதன் நோக்கம், நம் தலைவர்களை அடிப்படை
நான் திமுகவின் அடிமட்டத் தொண்டன் என்பது கேவலமாம். மே 17 தம்பிகள் கிண்டல் செய்கிறார்கள். அவர்களுக்கு ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன். உலகின் எந்த மூலையிலும், எந்த மேடையிலும் நான் அறிஞர் அண்ணாவின் வழிவந்த திமுகவின் தொண்டன் என்பதை பெருமையாக எந்த பயமும் இல்லாமல் சொல்ல முடியும்.
உங்களால் தமிழ்நாட்டில் கூட தான் மே 17 இயக்கத்தின் உறுப்பினர் என்று முகத்தை காட்டிச் சொல்ல முடியவில்லை. முதலில் அது பதிவுகூட செய்யப்படாத அமைப்பு. RSS ஐ போல அதன் நிர்வாகிகள் யார் என்று கூட வெளியில் சொல்லாத அமைப்பு. இன்றுவரை தனது கொள்கை என்னவென்று கூட சொல்லாத ஏமாற்று அமைப்பு.
உங்களால் உங்கள் தலைவர் யார் என்றுகூட வெளிப்படையாக சொல்ல முடியாது. மக்களாட்சியின் மீது நம்பிக்கையிருக்கிறதா என்று கேட்டால் உளற ஆரம்பிக்கிறீர்கள். இதுவரை சுதந்தி்ர இந்தியாவை ஆண்ட மாநில முதலமைச்சர்களில் சிறந்தவர்களை பட்டியலிட முடியுமா என்றால் தப்பித்துச் செல்வீர்கள்.
புரட்சி் பாரத மேடையில் திருமுருகன் காந்தி புரட்சி. கேட்கவே அருமையா இருக்கு. அனிதா கொல்லப்பட்ட பின்பும் அதிமுக பாஜக கூட்டணியில் சேர்ந்தகட்சி இது. இன்னமும் அந்த கூட்டணியில் இருக்கும் கட்சி. அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை எதிர்த்து உச்ச நீதிமன்றம்வரை சென்று வழக்கு தொடுத்த குடந்தை அரசன்
மற்றும் நீட் கொலைகார கூட்டணி கட்சி இவர்களுடன் இணைந்து திருமுருகன் புரட்சி செய்கிறாராம். அப்ப நீட்டை எதிர்த்து போரட்டம் செய்கிறோம் என்பது எல்லாம் நாடகம் தானே. பாஐக அதிமுகவை எதிர்த்து பிரச்சாரம் செய்தேன் என்பதெல்லாம் நாடகம்தானே. திராவிட தலைவர்கள் யாராவது இந்தியாவை பாரதம் என்று
அழைத்து கேள்விப்பட்டிருக்கிறீர்ரகளா? இந்தியாவை பாரதம் என்று பெயர்மாற்றம் செய்ய வேண்டும் என்பது RSSன் நோக்கங்களில் ஒன்று. அவர்கள் நடத்தும் பத்திரிக்கையின் பெயரும் விஜயபாரதம். புரட்சி பாரதம் என்கிற பெயரிலேயே இருப்பது சங்கித்தனம். அந்த மேடையில் இவர் புரட்சி செய்கிறாராம்.