1. ஆரம்பத்திலேயே சொல்லி விடுகிறேன் இது இந்தப் படத்திற்கான விமர்சனம் அல்ல.
ஒரு மனிதன் மற்றொரு நபரை கொலை செய்து விட்டால் கொலையுண்ட நபரின் வருமானம் குடும்ப சூழலை கணக்கிட்டு 'இரத்த பணம்' (பிளட் மணி) கொலை செய்த நபரிடமிருந்து வசூலிக்கப்படும். கொலை செய்யப்பட்டவரின் வாரிசுகள் மன்னித்து
2. விட்டால் கொலை செய்தவர் தண்டனையிலிருந்தும் விலக்களிக்கப் படுவார். சில சமயம் இந்தப் பணத்தை அவர்கள் மறுத்து விடுவதும் உண்டு.
இந்தக் கருவை மையமாகக் கொண்டு வந்திருக்கும் படம்தான் இந்த ப்ளட் மணி.
ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சகோதரர்கள் துபாயில் செய்யாத கொலைக்கு தண்டனையாக மாட்டிக்
3.கொள்கிறார்கள். இரத்த பணம் 30லட்சம் கொடுத்திருந்தும் தூக்கில் போட நேரம் குறிக்கப்படுகிறது. அவர்கள் விடுதலையாகி விடுவார்கள் என நம்பியிருக்கும் குடும்பம் விஷயம் தெரிந்து உதவிக்காக அழுகையில், அதைக்காணும் ஒரு தொலைக்காட்சி செய்தியாளர் அதற்கு எப்படி உதவ முயற்சிக்கிறார். அந்த ஒருநாளில்
4. அவர் ஜெயித்தாரா இல்லையா என்பதுதான் கதை.
ஒரு செய்திச் சானலுக்குள் இருக்கும் அரசியல், ஒரு செய்தியை பரபரப்பாக்க அவர்கள் செய்யும் வேலைகள், அதனால் சானலுக்கு நிகழும் லாப நஷ்டங்களை ஒரு பக்கம் பேசியபடியே, வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் கஷ்டம், அவர்கள் அங்கே மாட்டிக் கொண்டால் அந்தக்
5. குடும்பம் இங்கே என்ன கஷ்டப்படும், அவர்களைக் காப்பாற்ற இந்திய அரசு சாதாரணமாய் என்ன செய்யும், அவசரத்தில் எப்படி வேலை செய்யும் என்பதைச் சொல்லும் அதே சமயம், இலங்கைத் தமிழர்கள் வலி, இந்து முஸ்லிம் ஒற்றுமை என பல விஷயங்களை ஒன்றரை மணிநேரத்தில் பேசி விடுகிறது படம்.
படம் ஆரம்பித்த சில
6. நிமிடங்களிலேயே கதைக்கு வந்துவிடுவதால் போரடிக்கவில்லை. படம் முடியும் வரை அந்த சுவை அப்படியே இருப்பது நம்ப முடியாத கதையையும் சுவாரசியமாய் பார்க்க வைத்துவிடுகிறது.
படத்தின் நாயகி பிரியா பவானிசங்கரும் மற்ற எல்லோருமே கொடுத்த பாத்திரத்துக்கு சிறப்பாய் செய்திருந்தார்கள் என்றாலும்,
7. தண்டனை பெற்றவரின் மகளாய் நடித்திருந்த அந்தக் குட்டிப் பெண் அற்புதம்.
ஒரு ஓடிடி ரிலீஸ் படத்திற்கு என்ன வேண்டுமோ அதை ட்விஸ்ட் & டர்ன்களோடு சிறப்பாகவே அளித்திருக்கிறார் டைரக்டர் இயக்குநர் சர்ஜுன் கே.எம். இவர் ‘லக்ஷ்மி’, ‘மா’ உள்ளிட்ட குறும்படங்களின் மூலம் ஏறகனவே பிரபலமாகி,
8.நயன்தாரா நடித்த ‘ஐரா’ படத்தை இயக்கியிருக்கிறார்.
ஆனால் நான் சொல்ல வந்தது இதே கருணைக் கடிதத்தை கருவாய் வைத்து 2004-ல் வந்த 'பெருமழக்காலம்' மலையாளப் படம் பற்றி.
கேரளாவின் கோழிக்கோட்டில், பாலக்காட்டில் வசிக்கும் இரு பெண்களின் கணவன்மார்களில் ஒருவன் கொலை செய்யப்படுகிறான்.
9.இன்னொருவன் குற்றவாளியாகிறான். அந்த இரு குடும்பங்களும் அதன் பிறகு எப்படி நிலைகுலைகிறது, ஒருத்தி விதவையாக இன்னொருத்தி எவ்வளவு அவமானங்களை சுமக்கிறாள் என்பதையும், உறவுகளே பலமாகவும் சுமையாகவும் எப்படி மாறும் என்பதையும் அற்புதமாக காட்டியிருப்பார்கள். இதில் பாலக்காட்டில் தமிழ்ப்
10. பிராமணக் குடும்பத்துப் பெண்ணிடம், கோழிக்கோட்டில் மலையாள முஸ்லிம் குடும்பத்துப் பெண் தன் கணவனைக் காக்க மன்னிப்புக் கடிதம் கேட்டுப் போராடுவாள். கணவனை இழந்த ஒருத்தியிடம், அவனைக் கொன்ற தன் கணவனைக் காப்பாற்ற கையெழுத்து வேண்டி நிற்கும் அவலத்தை என்னவென்று சொல்வது.?
ஒரு அளவான மழை
11. என்பது எல்லோருக்கும் சுகமானதுதான். ஆனால் பெருமழை என்பது அப்படியில்லை. அது மிகப்பெரும் சேதாரங்களை விளைவிக்கும். அப்படி கருணையும் பெருமழையாய் பெய்யும்போது அது என்ன சேதாரங்களை விளைவிக்கும் என்பதை படம் மிக அற்புதமாய் சொல்லியிருக்கும். காவ்யா மாதவன், மீரா ஜாஸ்மின் இருவரும் நடித்து
12. இயக்குநர் கமல் இயக்கத்தில் வந்த இந்தப் படம் பேசும் மனிதம் இன்னும் ஒரு அற்புதம்.
என்னைப் பொறுத்தவரை ரே படங்களுக்கு கொஞ்சமும் குறைவில்லாத இந்தப் படத்தையும் நீங்கள் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
❤️
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
அநேகமாய் இந்தப் பதிவில் இணைத்திருக்கும் இந்தப் படம்... பதிவைப் படித்த பிறகு மறுபடி ஒரு முறை உங்களை இப்படத்தைப் பார்க்கத் தூண்டின்லும் தூண்டும் என்றே நினைக்கிறேன்.
நண்பகல் நேரத்து மயக்கம்... என்றால் அது மதிய உணவுக்குப் பின்னான சிறு உறக்கம். உறங்கி உடனே++
எழுந்து விட்டால் நாம் உறங்கினோமா இல்லையா என்ற குழப்பம் ஏற்படும். அதிகம் உறங்கிவிட்டாலோ எழும்போது அது மாலையா பகலா என்ற குழப்பம் உண்டாகும். அதுபோல இந்தக் படத்தில் நாம் பார்த்த கதை அங்கே நிகழ்ந்ததா... இல்லை நிகழ்ந்தது போன்ற கற்பனையா என்று நம்முடன் டைரக்டர் விளையாடும் விளையாட்டு ++
தான் நண்பகல் நேரத்து மயக்கம் படத்தின் கதை. தமிழும் மலையாளமும் ஒன்றோடு ஒன்று கலந்து நிற்கும் போஸ்டர் டிசைன் சொல்வது போன்ற ஒரு குழப்பமான மயக்கம் அது.
படத்தில் ஒரு மதிய உணவுக்குப் பின்னான உறக்கத்தில் விழும் ஜேம்ஸ் விழிக்கும் போது சுந்தரமாய் விழிக்கிறான். பிறகு ஒருநாள் முழுவதும் ++
1. கொஞ்ச நாள் ஸ்கூல்ல பசங்க அது பண்ணாய்ங்க, இது பண்ணாய்ங்கனு விடாம வீடியோ போட்டு குறை சொன்னாய்ங்க ரெண்டு மாசம் முன்ன. தீபாவளி அப்ப டாஸ்மாக் சேல்ஸ் டாட்கெட் வைக்கறாய்ங்க, தீபாவளிக்கு குடிச்சே அழியறானுங்கனு குறை சொன்னாய்ங்க. இப்ப பொங்கலுக்கு துணிவு வாரிசுனு சினிமா ஸ்டார் பின்னாடி
"இத்தனை பேர் இருக்கற இந்தியால ஒரு 11 பேர் இல்லையா.. ஃபுட்பால் விளையாட.?" ன்னு திடீர்னு ஒரு லெபனானி என்ஜினியர் எங்களைப் பார்த்து கேட்டான் இங்க.
"நாங்க காலனியா இருந்தவங்க. அதனால கிரிக்கெட் அடிக்ட் ஆகிட்டோம் போல"னு நான் பதில் சொன்னேன் எப்பவும் போல.
உடனே
2. கூட இருந்த இன்னொரு எகிப்தைச் சேர்ந்த என்ஜினியர், "ஏன்.. நாங்களும்தான் காலனியா இருந்தோம். நாங்க என்ன கிரிக்கெட்டா ஆடறோம்.? ஃபுட்பால் தான ஆடறோம். இவ்வளவு ஏன்... நம்மை காலனியா வெச்சிருந்த இங்கிலாந்து கிட்டயே பெரிய ஃபுட்பால் டீம் இருக்கே.!"னு கேட்டதும், யோசிக்க ஆரம்பிச்சேன்
ஆனா,
3. இப்ப எனக்கு உதவிக்கு வந்த இன்னொரு இந்தியர் சொன்ன பதில் கொஞ்சம் பொருத்தமா தெரிஞ்சது.
அவர் சொன்னாரு, "இந்தியா ஒரு விநோதமான நாடு. இங்க அரசியல்ல விளையாடுவாங்க. விளையாட்டுல அரசியல் பண்ணுவாங்க.
இங்க ஃபுட்பால் மட்டுமில்லை. எங்க தேசிய விளையாட்டான ஹாக்கியவே அம்புட்டு கவனிக்க
விக்ரம் காதலிச்சு அவர் வீட்டால விரட்டப்பட்ட பொண்ணு தான் பாண்டியனை கட்டிகிட்டு, அவன் செத்த பிறகு
2. திரும்ப வந்து பழி வாங்க காத்திருக்குனு புரிய இன்னும் கொஞ்சம் நேரம் எடுக்குது.
வாய்ஸ் ஓவர்ல இந்த உறவெல்லாம் தெளிவுபடுத்திட்டு படத்தை ஸ்டார்ட் பண்ணிருந்தா படம் ஆரம்பிக்கறப்பவே கொஞ்சம் குழப்பம் இல்லாமல் பிக்கப் ஆகியிருக்கும்.
இதுல பாண்டியனை ஐஸ்வர்யாராய் கட்டிக்கிச்சா.. இல்லை,
3. விக்ரம் அப்படி நெனச்சார்னு அடுத்த பார்ட்ல ட்விஸ்ட் வைக்கப் போறாய்ங்களா தெரியலை. அப்படி வெச்சா சோழர்களேட உளவுப்படை பத்தி வேற நமக்கு சந்தேகம் வந்துடும்.
கூடவே, முறைப்படி விக்ரம் தான் மூத்தவர், அடுத்த அரசன்னு இருக்கறப்ப.. அவரை விட்டுட்டு எதுக்கு எல்லோரும் ஜெயம் ரவியை குறி
பொன்னியின் செல்வன் படத்தில் வரும் இந்தப் பாத்திரம் தான் உண்மையில் என்னை கவனிக்க வைத்தது.
சோழ தேசத்தில் அநாதையாய் இருக்கும் இவர், முதலில் சோழ இளவரசனை தனது அழகால் வளைக்கிறார்.
பிறகு சோழ இளவரசியால் விரட்டப்பட்டு காணாமல் போனாலும், பாண்டிய மன்னனை மணந்து பாண்டிய அரசியாய்
2. வாழ்கிறார்.
போரில் பாண்டியமன்னனை அதே சோழ இளவரசன் கொன்றதும், சோழ தேசம் திரும்பி அடுத்து தேசத்தைக் கைப்பற்ற விரும்பும் பழுவேட்டரையரைத்தான் மணந்திருக்கிறார்.
அப்படியே பழுவேட்டரையர் இறந்தாலும் சோழ இளவரசன் இன்னும் மணமுடிக்காமல்தான் இருக்கிறான்.
இடையில் வந்தியத்தேவனையும் வளைக்கப்
3. பார்க்கிறார்.
எல்லாப் பெண்களும் அழகுடன்தான் பிறக்கிறார்கள். ஆனால் அழகுடன் கொஞ்சம் அறிவும் உள்ள பெண்கள் அந்த அழகை வைத்து அரசனை அடிமையாக்கி, அத்தனை சவுகரியங்களை அனுபவித்து விடுகிறார்கள்.
யோசித்துப் பாருங்கள்.
பில்கேட்ஸ் மைக்ரோசாப்ட் கம்பெனியை வளர்க்கிறார்... ஆனால் பில்கேட்ஸ்ன்