இன்று #ஹனுமத்ஜெயந்தி
மேலான குணங்கள் அனைத்திற்கும் உதாரணமாக இருக்கும் ஸ்ரீ ஆஞ்சநேயர் பிறந்தது மார்கழி மாதம் மூலம் நட்சத்திர தினம். இத்தினத்தில் அனுமனை வழிபடுவதால் ஏற்படும் பலன்கள் ஏராளம். ஸ்ரீ ஆஞ்சநேயர் வானர குல வேந்தரான கேசரி மற்றும் அஞ்சனா தேவிக்கு மைந்தனாக அவதரித்தார். அவர்
சிவபெருமானின் அம்சமானவர். தன் இளம் வயதிலிருந்தே அனைத்து வகையான கலைகளை கற்றுத் தேர்ந்தவர். அவருக்கு சுந்தரன் என்கிற பெயரும் உண்டு. அதனால் தான் இராமாயணத்தில் மிக விசேஷமான பகுதியான அனுமன் சீதையைத் தேடிக் கண்டுபிடித்து சீதை இருக்கும் இடத்தை இராமபிரானிடம் வந்து கூறும் படலத்துக்கு
சுந்தரக் காண்டம் என்று பெயர். பிரம்மச்சர்யத்திற்கு உதாரண புருஷராக, முதலமானவராக இருப்பது ஸ்ரீ ஆஞ்சநேயர் தான். அனுமனை முதன் முதலாக ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி சந்தித்த போதே அனுமனின் பிரதிபலன் கருதா பக்தி, சிறந்த ஞானம், சிங்கத்தை ஒத்த தைரியம் ஆகியவற்றை கண்டு ஸ்ரீ ராமர் கண்டு கொண்டார்.
அனுமனின் பக்திக்கு தான் அடிமை என்பதை புரிந்து கொண்டார். ராம நாமத்தை நாம் ஜபிக்க ஜபிக்க இராமனை விட அனுமன் அதிக மகிழ்ச்சி கொள்கிறார். எல்லா நலன்களையும் இவ்வுலகத்திலும் அவ்வுலகத்திலும் தர வல்லது ராம நாமம். அதை அவர் இடைவிடாது ஜபித்து வருகிறார். அந்த ராம நாமத்தின் பலத்தினால் சேதுக்
கரையில் இருந்து வானர சேனைகள் இலங்கையை அடைய கடலில் பாலத்தைக் கட்டினார். இறவா வரம் பெற்ற சிரஞ்சீவிகளில் ஆஞ்சநேயரும் ஒருவர். இன்றும் இமய மலையில் அருவமாக ராமதியானத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயர் ஈடுபட்டிருக்கிறார். மகத்தான சக்தி கொண்ட ஆஞ்சநேயரின் அவதார தினமான மார்கழி மூல நட்சத்திர தினத்தில்
அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு, உணவு நீர் ஏதும் அருந்தாமல் அருகிலுள்ள ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று வழிபட்டு ஸ்ரீ ராமர் மற்றும் ஆஞ்சநேயரின் மந்திரங்கள் துதித்த வாரே, ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றுவதற்கு வடைகள் தயாரிக்கலாம் அல்லது வெற்றிலை மாலை சாற்ற வெற்றிலைகளை
கோர்க்கலாம். மாலையில் ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று ஆஞ்சநேயருக்கு நாம் தயாரித்த வடை, வெற்றிலை மலைகளை சாற்றி வழிபடலாம். இந்த முறையில் ஆஞ்சநேயரை வழிபடுவதால் வாழ்வில் ஏற்படும் துக்கங்கள், கஷ்டங்கள் நீங்கும். பீடைகள் ஒழியும். கிரக தோஷம் குறிப்பாக சனி கிரக தோஷங்கள் நீங்கும். துஷ்ட
சக்திகள், செய்வினை மாந்திரீக பாதிப்புகள் நீங்கும். தொழில், வியாபார முடக்க நிலை நீங்கி நல்ல லாபங்கள் கிடைக்கும். திருமண பாக்கியம், குழந்தை பேறு மற்றும் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி போன்ற நன்மைகள் ஸ்ரீ ஆஞ்சநேய மூர்த்தியின் அருளால் பெறலாம். இன்று முடிந்த அளவு ராம நாமத்தை ஜபிப்போம்.
#திலதர்ப்பணபுரி_திருக்கோவில்
ஸ்ரீ ராமரே நேரில் வந்திருந்து தர்ப்பணம் செய்த கோவில் இது. மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் உள்ள பூந்தோட்டம் என்ற ஊருக்கு அருகில் உள்ளது. பூந்தோட்டத்தில் இருந்து எரவாஞ்சேரி செல்லும் சாலையில் 2 கி.மீ தொலைவில் உள்ளது.
தல மூர்த்தி:
ஸ்ரீ முக்தீஸ்வரர்
தல இறைவி : சொர்ணவல்லி
தல தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம்
தல விருட்சம் : மந்தாரம்
திலம் என்றால் எள், புரி என்றால் தலம். எள் தர்ப்பணம் செய்ய சிறந்த தலம் என்பது பொருள். இந்தியாவில் பித்ரு தலங்கள் 7 உள்ளன. அவை காசி, ராமேஸ்வரம், கயா, திரிவேணி சங்கமம், ஸ்ரீவாஞ்சியம்,
திருவெண்காடு, ஏழாவதாக திலதர்ப்பணபுரி விளங்குகிறது. ராமேஸ்வரத்தில் செய்யப்படும் பித்ருக்கள் சம்பந்தமான அனைத்து பூஜைகளும் திலதர்ப்பணபுரியிலும் செய்யப் படுகின்றன. ராமாயணத்தில் சீதையை ராவணன் கவர்ந்து செல்லும் போது ஜடாயு என்ற பறவை ராவணனிடம் இருந்து சீதையை காப்பாற்ற முயன்று சிறகுகள்
#நவராத்திரி_ஸ்பெஷல்
துர்கையையும், லக்ஷ்மியையும், சரஸ்வதியையும் கொண்டாடும் 9 நாட்களை நவராத்திரி என்று கொண்டாடுகிறோம். நம் முயற்சிகள் வெற்றி தெய்வத்தின் துணை கட்டாயம் வேண்டும். இறைவன் நாம் கேட்கும் வரங்களை தாயாரின் பரிந்துரையின் பேரில் தான் நமக்கு அளிக்கிறார். சக்தி இல்லையே சிவன்
இல்லை. எனவே, அந்த சக்தியை நாம் நவராத்திரி நாட்களில் வழிபடும் போது, திருமகளின் திருவருளையும், திருமாலின் திருவருளையும் ஒருசேரப் பெற்றிட முடியும். நவராத்திரியின் 9 நாட்களுமே நம் வீட்டிற்கு வரும் பெண்களை சக்தி ஸ்வரூபமாகவே பாவித்து, அவர்களுக்கு வெற்றிலைப் பாக்கு, மஞ்சள் பூ பழங்கள்
என கொடுத்து அவர்களை மகிழ்விக்கும்போது சக்தி வடிவமான அம்பாளும் மகிழ்கிறாள். நவராத்திரியின் 9 நாட்களில், முதல் 3 நாட்கள் துர்கை வழிபாடு செய்கிறோம். இந்த நாட்களில், மாஹேஸ்வரி, கெளமாரி, வாராஹி என்ற பெயர்களில் துர்கைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். அடுத்த 3 நாட்கள் திருமகளை
#ஒப்பிலியப்பன்_கோவில்
108 திவ்ய தேசங்களில் விண்ணகரம் என்று சிறப்பிக்கப்படும் வைணவ தலங்கள் 6. அவற்றில் ஒன்று தான் உப்பிலியப்பன் கோவில். மற்றவை
சீராம விண்ணகரம்,
அரிமேய விண்ணகரம்,
வைகுந்த விண்ணகரம்,
நந்திபுரம் விண்ணகரம்,
பரமேஸ்வர விண்ணகரம்.
5 நிலை ராஜகோபுரங்களுடன் உள்ள இந்த
ஆலயத்தில் தங்க குடம் கொண்டே திருமஞ்சனத்திற்கு தீர்த்தம் எடுக்கப்படுகிறது. அனுமனுக்கு தங்கவால், வைர கிரீடம் அணிவிக்கப்படுகிறது. திருவிண்ணகரப்பன் எனப் போற்றப்படும் உப்பிலியப்பன் மூலவராகவும், பொன்னப்பன் என்ற திருநாமத்துடன் உற்சவராகவும் பூமாதேவி தாயாருடன் காட்சி தரும் பெருமாள்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் வீற்றிருந்து அருள் புரிகிறார். இங்கு புரட்டாசி, ஐப்பசி, பங்குனியில் பிரம்மோற்சவம் வெகு சிறப்பாக நடைபெறும். 108 திவ்ய தேசங்களில் இது 13 வது திவ்ய தேசமாகும். இக்கோவில் சோழர்களால் கட்டப்பட்டது. தென்திருப்பதி என அழைக்கப்
#விஷ்ணு_பாதம் #கயா
பித்ரு ஸ்ராத்தம் கயாவில் செய்வது நல்லது என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. அதில் அக்ஷயவடத்தருகே பிண்ட பிரதானம் செய்வது ஒரு வழக்கம். ஒவ்வொரு ஹிந்துவும் வாழ்வில் ஒரு தடவையாவது செல்ல வேண்டிய இடம் கயா. குடும்பம் சகல சம்பத்துகளும் ச்ரேயஸும் பெறும். 16 ஸ்லோகங்கள்
கொண்டது மாத்ரு ஷோடசி. தாய்க்கு மகன் அளிக்கும் 16 பிண்டங்கள் பற்றியது. அதன் அர்த்தம் புரிந்துகொண்டால் தாயின் அருமை தெரியும்.
அடே பயலே, அம்மா அப்பா உயிரோடு இருக்கும்போதே அவர்கள்
சொல்படி நட. அவர்களை சந்தோஷமாக வைத்துக்கொள். அவர்கள் ஆசீர்வாதம் தான் உன் படிப்பு மூலம் கிடைக்கும் சர்டிபிகேட்டை விட உன்னை நன்றாக வைக்கும். அவர்கள் காலம் முடிந்த பிறகு அந்தந்த திதியில் அவர்கள் பசியை போக்கு. அவர்களுக்கு தேவை அல்வா, ஜாங்கிரி, கீ ரோஸ்ட் அல்ல. வெறும் எள்ளும்
#பிராமணர்கள்_மேல்_சேற்றை_இறைக்கும்_அனைவரும்_படிக்க_வேண்டிய_பதிவு
குதர்க்கமாக கேள்வி கேட்கும் இளைஞனுக்கு திரு சோ அவர்கள் பதில் அளிக்கிறார்.
இளைஞன்: ராமாயணம், மகாபாரதம் எல்லாம் உண்மையாகவே நடந்தவை என்கிறார்களே, ஆனால், நிஜத்தில் எல்லாம் வெறும் கற்பனைக் கதைகள் தானே?
சோ: அவை கற்பனை
என்று எப்படித் தீர்மானித்தீர்கள்?
இளைஞன்: அப்படித்தான் சொல்கிறார்கள்!
சோ: அப்படிச் சொல்பவர்கள் எவ்வாறு அதை முடிவு செய்தார்கள்? அவர்களெல்லாம்தான் இதைச் சொல்வதற்கான அதிகாரம் படைத்தவர்களா? அவர்கள் சொல்வதே இறுதி முடிவா? இப்பொழுது நான் உங்களை ஒன்று கேட்கிறேன். உங்களுடைய தாத்தாவிற்குத்
தாத்தாவிற்குத் தாத்தாவிற்குத் தாத்தாவிற்குத் தாத்தா என்று ஒருவர் இருந்தார் அல்லவா?
இளைஞன்: ஆமாம்.
சோ: அவர் நல்ல மனிதரா? கெட்ட மனிதரா?
இளைஞன்: மிகமிக நல்ல மனிதர், நேர்மையானவர், நாணயமானவர். ஒழுக்கத்தில் சிறந்தவர்.
சோ: இவையெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்?
இளைஞன்: என் தாத்தா
#ராஜகாளி_அம்மன்
பாண்டிய வம்சத்தின் முதல் மன்னர் நம் அனைவருக்கும் கடவுளாக இருந்து நம்மை உருவாக்கிய சிவபெருமான் தான். இந்த பாண்டி வம்சத்தின் 108 வது மன்னராக அன்னை மீனாட்சி பொறுப்புக்கு வந்தாள். அப்பேர்ப்பட்ட பாண்டிய வம்சத்தின் ராஜ தெய்வம் தான் ராஜகாளி அம்மன். மதுரையில் இருந்து
ஒட்டன்சத்திரம் செல்லும் வழியில் கன்னிவாடி என்ற கிராமத்தில் இருந்து 2 கிமீ தொலைவில் அமைந்திருக்கும் சிறிய கிராமம் தெத்துப்பட்டி ஆகும். திண்டுக்கல்லில் இருந்து ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை டவுன் பஸ் வசதி இருக்கிறது இது கோயில் வாசல் வரை செல்கிறது. அல்லது கன்னிவாடியில் இறங்கி நடந்தே
செல்லலாம். இந்த கிராமத்தில் இருந்து கொண்டு பாண்டிய வம்சத்திற்கு வழி காட்டியாகவும் பாதுகாவலாகவும் இருந்து அருள் வாழ்த்த வருபவள் அன்னை ராஜகாளி!
சோழர்களின் சாம்ராஜ்யம் தான் மிகப் பிரமாண்டமானது என்று நாம் இதுவரை அறிந்திருந்தோம். ஆனால் பாண்டியர்களின் சாம்ராஜ்யம் அதையும் விட பெரியது