#சுசீந்திரம்#தாணுமாலய_சுவாமி
கன்னியாகுமரி மாவட்டத்தில் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் (தாணு= சிவன், மால்= திருமால், அயன்= பிரம்மா) மும்மூர்த்திகளும் இணைந்து ஒரே வடிவமாக தத்தாதிரேயராக கொன்றை மரத்தடியில் அருள்பாலிக்கின்றனர். அத்திரி மகரிஷியின் மனைவி அனசூயயை சோதிக்க வந்த
அவர்களை தன் கற்பின் திறத்தால் குழந்தைகளாக்கி, கொன்றை மரத்தில் தொட்டில் கட்டி ஆட்டினாளாம் அனசூயை. (அத்தரி மகரிஷி, அனுசுயா ஆகியோர் வாழ்ந்த இடம் இதையடுத்து உள்ளது. இவ்வூர் இன்றும் #ஆசிரமம் என்ற பெயரிலேயே வழங்கப்படுகிறது.) இதனால் தத்தாத்ரேயர் அத்திரி மகரிஷி அனுசுயாவின் புதல்வனாகக்
கருதப்படுகிறார். தத்தாத்ரேயரை வணங்கி அனைத்து நலன்களையும் பெறுவோம். #தத்தாத்ரேயர்#ஸ்லோகம்.
மாலகமண்டலு தர கரபத்மயுக்மே
மத்யஸ்த பாணியுகளே டமருத்ரிசூலம்!
அத்யஸ்த ஊர்த்வ கரயோ: சுப சங்கசக்ரே
வந்தே தமத்ரிவரதம் புஜ ஷட்க யுக்தம் ||
மாலையையும், கமண்டலத்தையும் இரு கைகளிலும், உடுக்கை
மற்றும் ஈட்டியை இரு கைகளிலும், சங்கு சக்கரத்தை மேலே உள்ள இரு கைகளிலும் தாங்கியுள்ள ஆறு கைகளையுடைய அத்ரி குமாரனான தத்தாத்ரேயப் பெருமானை நான் தியானிக்கிறேன்.
அகலிகை காரணமாகச் கௌதம முனிவரிடம் சாபம் பெற்ற இந்திரன் இங்கு வந்து மும்மூர்த்திகளையும் வழிபட்டு சுத்தமடைந்தத் தலமாதலால்
இத்தலம் சுசீந்திரம் என்னும் பெயர் பெற்றது. இன்றளவும் இரவில் மனிதர்கள் கண்களுக்குத் தெரியாமல் இந்திரன் இங்கு வந்து பூஜை செய்வதாக ஐதீகம். அதனால் தான் இன்றும் அங்கே கருவறையில் பூஜை செய்யும் அர்ச்சகர்கள் "அகம் கண்டதைப் புறம் சொல்ல மாட்டேன்" என்று இறைவனின் முன் சத்தியம் செய்துவிட்டு
பூஜையை செய்ய ஆரம்பிப்பது வழக்கமாக உள்ளது. அதாவது இரவில் எந்த குருக்கள் எவ்விதத்தில் பூஜை செய்து வைத்திருக்கிறாரோ, மறுநாள் காலையில் வேறு விதமாக இருக்கும் என்பதால் அங்கே எந்த விதத்தில் தான் செய்து வைத்திருந்தேன் என்னென்ன பொருட்களை எங்கே வைத்திருந்தேன், அது எவ்வாறு மாறியது என்பதை
ஒருவருக்கு ஒருவர் பேசித் தகவலைப் பரிமாறிக் கொள்ளக் கூடாது என்பதற்காக இந்த சத்தியத்தை செய்து கடைப் பிடிக்கின்றனர். இந்திரனின் சாபம் தீர்த்த மிகவும் சக்திவாய்ந்தப் புனிதத்தலம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி ஆலயம்.
இங்கு உள்ள தூணில் பெண் உருவில் விநாயகர் காட்சித் தருகிறார். இங்கே
பெண் வடிவிலுள்ள பிள்ளையாரை விக்னேசுவரி, விநாயகி, கணேசினி, கணேஸ்வரி எனப் பெயர்களில் வழிபடுகின்றனர். இவர் பெண் அணியும் நகைகளுடன் ஒரு காலை ஊன்றி, மறுகாலை மடக்கி, புடவையோடு அற்புதமாகப் பெண் வடிவில் காட்சி தருகிறார். புதிதாகத் திருமணமான தம்பதியர் அவசியம் வந்து வழிபட வேண்டிய கோயிலிது.
நம் நாட்டில் உள்ள பழமையான கோவில்களின் தல வரலாற்றினை அறிந்து கொள்வோம். ஒவ்வொன்றும் ஆன்மீக பெட்டகம். தெய்வநம்பிக்கை, சமய நம்பிக்கை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு கோயில் வழிபாடு, பூஜை, விழாக்கள், விரதங்கள் என்பவற்றின் பயனையும் நாம் இதன் மூலம் தெரிந்து கொண்டு பயனடையலாம்.
ஓம் ஓம் ஓம்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஸ்ரீ சக்ரம் பிரதிஷ்டையான ஆலயங்கள்:
ஸ்ரீசக்ர பிரதிஷ்டையான ஆலயங்கள், தமிழகத்தில் ஏராளம். ஸ்ரீ காஞ்சி ஸ்ரீகாமாட்சி, திருவொற்றியூர் மற்றும் ஸ்ரீமூகாம்பிகை ஆகிய புண்ணியத் தலங்கள் புகழ்பெற்றவை! இங்கெல்லாம், ஸ்ரீசக்ரத்துக்கு சக்தியூட்டி பிரதிஷ்டை செய்தவர் ஸ்ரீஆதிசங்கரர்.
திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரியின் காதுகளை அலங்கரிக்கும் ஸ்ரீசக்ர ஆபரணத்தின் தெய்விக கிரணங்கள், பக்தர்களின் குறை தீர்க்கும் ஆற்றல் மிக்கது!
பாஸ்கரராயர் 18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்து, தஞ்சையில் வாழ்ந்த மகான்- ஸ்ரீ பாசுரானந்தநாதர் எனும் பாஸ்கர
ராயர். இவர் வாழ்ந்த தலம், தஞ்சை மாவட்டத்தில் பாஸ்கரராஜபுரம் எனும் பெயரில் பிரபலமாக விளங்குகிறது. இங்கே பாஸ்கர ராயரால் ஸ்தாபிக்கப்பட்ட மகாமேரு உள்ளது. ஸ்ரீவித்யா உபாஸனை மற்றும் தியானத்தில் ஈடுபாடு உள்ளவர்கள் அவசியம் தரிசிக்க வேண்டிய தலம்.
#நற்சிந்தனை
மகாபாரத யுத்தத்தின் முடிவில் பாண்டவர்கள் வெற்றி பெற்று முழு பாரத காண்டத்தின் சக்ரவர்த்தியாக யுதிஷ்டிரர் முடிசூட்டப் பட்டார். பேரரசராக இருந்த யுதிஷ்டிரரை மகரிஷி வேத வியாசர் இமயமலையின் தொலைதூர பகுதிக்கு அழைத்துச் சென்று அங்கு மறைந்திருந்த பெரும் செல்வத்தை அவர்களுக்கு
வழங்கினார். அஸ்வமேத யாகங்களில் மிகப் பெரிய யாகத்தை ஒவ்வொரு பாண்டவரும் 3 வருடங்களாக தொடர்ந்து 15 வருடங்களாக யாகம் செய்தார்கள். தேவதைகளும் ரிஷிகளும் பித்ருக்களும் மனிதர்களும் யாகத்தின் பலனைப் பெற்று திருப்தி அடைந்தார்கள். தர்மம் முழு மகிமையுடன் பூமியில் செழித்து இருந்தது. பஞ்ச
பாண்டவர்கள் ஐவரும் தனது அரண்மனைக்கு முன்னால் ஒரு பெரிய மேளம் என்ற ஒரு மகாபேரி மேளத்தை நிறுவி எந்த தேவையாக இருந்தாலும் இங்கு வந்து இந்த மேளத்தை அடித்து தன் விருப்பத்தைத் தெரிவிக்கலாம். எங்களால் முடிந்தவரை அதை நிறைவேற்றுகிறோம் என்று தங்களது குடிமக்களுக்கு அறிவித்தார்கள். இதை
#HappyFathersDay
அன்னையர் தினத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் தந்தையர் தினத்துக்கு எப்பவும் இருப்பதில்லை. குடும்பத்துக்காக உழைத்து ஓடான பின்னர் அவரை கௌரவமாக வாழ வழி செய்ய வேண்டும். மூலையில் இருத்தி, மௌனத்தில் ஆழ்த்தி, மூன்று வேளையும் சாப்பிட்டு விட்டு பேசாமல் இருந்தால்
போதும் என்ற மனப்பான்மையுடன் தான் பல பிள்ளைகள் தந்தைமாரை நடத்தி வருகின்றனர். வயதான தந்தை தன் குடும்பத்தினரிடமிருந்து மிகக் கொஞ்சமாகத் தான் கேட்பார். ஏனெனில் கேட்டுப் பழகாத குடும்பத் தலைவராக இருந்தவர். கொடுக்க மட்டுமே தெரிந்து வைத்திருந்தவர். எனவே வயதான காலத்தில் வாய் திறந்து
கேட்க மாட்டார். குடும்பத்தினர் தான் அவரின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைக்க வேண்டும். வாசிக்கும் பழக்கம் உள்ளவரானால் குறைந்த பட்சம் வாரப் பத்திரிகையாவது வாங்கிக் கொடுக்க வேண்டும். பென்ஷன் வராதவராக இருந்தால் அவர் கைச் செலவுக்குப் பணம் கொடுக்க வேண்டும். பேரன் பேத்திகளை அவரிடம்
#பட்டீஸ்வரம்_துர்க்கை
இங்கு வந்து துர்கைஅம்மனை வணங்குவதால் கிடைக்கும் பலன்கள், நன்மைகள் ஏராளம்.
1.ராகு மற்றும் செய்வாய் தோஷம் நீங்கும்
2.மன துக்கம் விலகும்
3.காரிய வெற்றி கிடைக்கும்
4.பசு நெய் அல்லது நல்லெண்ணெய் விளக்கு ஏற்றி குங்கும அர்ச்சனை செய்தால் திருமணத் தடைகள்
பெண்களுக்கு விலகும்
5.குடும்ப வாழ்கை அமைதியாகும்
6.எழுமிச்ச மாலை அணிவித்து வேண்டிக் கொள்வதின் மூலம் தீராத நோய்களும் தீரும்.
பட்டீஸ்வரம் கும்பகோணத்தில் இருந்து 10கிமீ தொலைவில் உள்ளது. பட்டீஸ்வரம் என்றாலே அங்குள்ள துர்க்கை அம்மன் ஆலயம்தான் அனைவர் மனதிலும் வரும். காரணம் ராகு
தோஷம் உள்ளவர்கள் தமது தோஷத்தை களைந்து கொள்ள அந்த ஆலயத்துக்குதான் செல்கிறார்கள். ஆனால் அந்த ஆலயத்தின் முக்கியமான மற்றொரு மகிமை குறித்து பலரும் அறிந்திருக்கவில்லை. அந்த ஆலயத்தில் தான் மிகப் பெரிய பைரவர் சன்னதி உள்ளது. சோழ மன்னர்கள் அரசாண்ட காலத்தில் அவர்கள் அரண்மனையைப் பாதுகாக்க 4
#சில_விஷ்ணுகோவில்களின்_சிறப்புகள்
திருவரங்கத்தில் தேர்த் திருவிழாவின் போது மான் தோல் பையில் நீரைச் சுமந்து அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். இதற்கு 'தண்ணீர் சேவை' என்று பெயர். இரவில் தீப்பந்தங்களை ஏந்தியவாறு செய்யும் சேவைக்கு 'பந்த சேவை' என்று பெயர்.
சோளிங்கரில் நரசிம்மர்
யோக நிலையில் மலை மேல் காட்சித் தருகிறார். சப்த ரிஷிகள் மோட்சம் வேண்டி, நரசிம்மரை யோக நிலையில் காண விரும்பினர். அதன்படி நரசிம்ம பெருமாள், யோக நிலையில் மலை மீது அமர்ந்து காட்சி தந்தார். அவர் காட்சி தந்தது, கடிகைப் (24 நிமிடங்கள்) பொழுது என்பதால் இவ்வூர் கடிகாசலம் என்று வழங்கப்
படுகிறது.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் கோவிலில் இறைவனுக்குக் கோரைக் கிழங்கு சமைத்து நைவேத்தியம் செய்கிறார்கள்.
திருவரங்கத்தில் அரங்கநாதர் பள்ளிகொண்டு உள்ள சன்னிதியில் தேங்காய் உடைக்கும் வழக்கம் இல்லை. தேங்காய் உடைத்தால் சத்தம் எழும். அது இறைவனின் தூக்கத்தைக் கெடுத்துவிடும்
#ஆனிமாத_விசேஷங்கள்
இன்று ஆனிமாதப் பிறப்பு.
உத்திராயணப் புண்ணிய காலத்தின் கடைசி மாதம் ஆனி. இது தேவர்களின் சாஸ்திரம். மேலும் ஆனிமாதம் இளவேனிற் காலம். கோடையின் தாக்கம் நீங்கி இதமான காற்று வீசும். தமிழ் மாதங்களில் ஆனி மாதம் நீண்ட பகல் பொழுதைக் கொண்ட மாதம். சூரியன் மிதுன ராசியில்
சஞ்சரிக்கும் காலம் என்பதால் ஆனிமாதத்தை மிதுனமாதம்/ஜேஷ்டமாதம் என்பர். ஜேஷ்டா என்றால் மூத்த அல்லது பெரிய எனப் பொருள். ஜேஷ்டம் என்றால் கேட்டை நட்சத்திரம். மஹாவிஷ்ணு எடுத்த கூர்ம அவதாரம் நிகழ்வு ஆனி மாதத்தில் தான் நடத்துள்ளது.
ஆனித்திருமஞ்சனம்!
சூரியன் மிதுன ராசியிலும், சூரியனின்
நட்சத்திரமான உத்திரத்தில் அதாவது சந்திரன் கன்னி ராசியிலும் சஞ்சரிக்கும் நேரமே ஆனித்திருமஞ்சனத் திருநாள். ஆனி உத்திரத் திருநாளே ஆனித் திருமஞ்சனம் என சிறப்பிக்கப் படும். ஆனி மாதம், உத்திரம் நட்சத்திரத்தன்று மாலை வேளையில் சிவாலயங்களில் நடராஜப் பெருமானுக்கு திருமஞ்சனம் நடைபெறும்.