சமஸ்கிருதமும் தமிழறிஞர்களும்

சென்னை பிரசிடென்சி கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராக வேலை பார்த்த கா. நமச்சிவாயம் (முதலியார்) அவர்களுக்கு மாதச் சம்பளம் ரூ.81 ஆகவும், அதே நேரத்தில் Image
அக்கல்லூரியில் சமஸ்கிருதப் பேராசிரியராக வேலை பார்த்த குப்புசாமி சாஸ்த்திரிக்கு மாதச் சம்பளம் ரூ. 300 ஆகவும் இருந்த கொடுமையை எதிர்த்து தந்தை பெரியார் அவர்கள் தனது குடி அரசில் எழுத, அதன் அடிப்படையில் நீதிக்கட்சி ஆட்சியில் முதலமைச்சராக
இருந்த பனகல் அரசர் அந்த வேறுபாட்டை நீக்கி உத்தரவு பிறப்பித்தார் என்பது கடந்த கால வரலாறு.

“இராமலிங்க அடிகள் வரலாறு” என்ற நூலை எழுதியவர் சன்மார்க்க தேசிகன் என்னும் ஊரன் அடிகளார் ஆவார். இந்த வாழ்க்கை வரலாற்றிலே சுவையான செய்தி ஒன்று சுட்டிக்காட்டப் படுகிறது.
“சென்னையில் சங்கராச்சாரிய சுவாமிகளுடன் அளவளாவ நேரிட்ட போது, சங்கராச்சாரிய சுவாமிகள் சமஸ்கிருதமே எல்லா மொழிகளுக்கும் தாய்மொழி எனக் கூறினாராம். அடிகளார் அஃதுண்மை அன்றென மறுத்து சம்ஸ்கிருதம் எல்லா மொழிகளுக்கும் தாய்மொழியாயின் தமிழ் தந்தை மொழி எனக்கூறி தமிழின் சிறப்பை விரிவாக விளக்கி
ஆரிய அரசன் பிரகத்தனுக்கு தமிழறிவுறுத்துவான் வேண்டிக் கபிலர் ‘குறிஞ்சிப் பாட்’டினைப் பாடியதனை நிகர்ப்ப, ஆரியம் மட்டுமே நன்குணர்ந்த ஆச்சாரியராகிய சங்கராச்சாரியாருக்குத் தென்மொழிக் கடலும் வடமொழிக் கடலும் நிலைகண்டுணர்ந்த மொழிப்புலமையோடன்றித் திருவருட்புலமையால்,
உலகத்து மொழி அனைத்தும் முட்டற உணர்ந்த முற்றறிவினராகிய பெருமானார் தமிழ் என்னும் சொல்லுக்கு ஓர் உரையும் அப்போதே செய்து சங்கராச்சாரியாருக்குத் தமிழின் செவ்வியை செவியறிவுறுத்தியருளினார்” என்று இருக்கிறது.
எனவே சங்கராச்சாரியார் நினைத்தால் எது வேண்டுமானாலும் சொல்லுவார். சமஸ்கிருதம் அப்போது தாய்மொழி. இப்போது சமஸ்கிருதம் தந்தைமொழி என்கிறார். இதிலே கூட முரண்பாடற்ற சிந்தனை இல்லை. நேரத்திற்கும், காலத்திற்கும் தகுந்தாற்போல மாற்றிச் சொல்லுகின்றார்.
மேலும் சமஸ்கிருதத்தைப் பற்றி விளக்கம் சொல்லும் போது சமஸ்கிருதம் படித்தால் நரம்புக்கு மிகவும் நல்லது என்று சங்கராச்சாரியார் சொல்லுகிறார்.
சங்கராச்சாரியாருடைய சமஸ்கிருத அறிவைவிட, மறைமலை அடிகளாருடைய சமஸ்கிருத அறிவு குறைவானதல்ல. மறைமலை அடிகள் எழுதியிருக்கிற ‘அறிவுரைக்கொத்து’ என்ற நூலில் “உடல் நலம் கருதி யாரும் சமஸ்கிருதம் படிக்கக்கூடாது.
அதிலும் குறிப்பாகப் பிள்ளைகளுக்கு அது இருக்கக்கூடாது. வயிற்று வலியைத்தான் அது உண்டாக்கும்” என்று எழுதினார்.
அதை 1967ஆம் ஆண்டு அண்ணா அவர்கள் ஆட்சியில் எஸ்.எஸ்.எல்.சி வகுப்புக்குப் பாடமாக வைக்கப்பட்டது. அதை எதிர்த்து ‘இந்து’ பத்திரிக்கை, ‘எக்ஸ்பிரஸ்’ பத்திரிக்கையெல்லாம் கூப்பாடு போட்டன. வேண்டுமென்றே சமஸ்கிருதத்தை இழிவுபடுத்துவதற்காகவே இது
தி.மு.க ஆட்சியிலே பாடமாக வைக்கப்பட்டிருக்கிறது என்று சொல்ல - உடனே அண்ணா அவர்கள் இதை ஆய்வு செய்ய டாக்டர்.மு.வ. அவர்கள் தலைமையில் ஒரு குழுவை நியமித்தார். “மறைமலை அடிகளாருடைய கருத்து மொழியியல்படி கூறப்பட்டிருக்கின்ற கருத்தாகும். இதிலே மறுப்பதற்கு ஒன்றும் இல்லை”
என்று தெளிவாக அக்குழு சொல்லியது. அண்ணா அவர்கள் “இந்து”விற்கோ ”எக்ஸ்பிரஸி”ற்கோ பயந்து எடுக்க மாட்டேன் அது பாடமாக இருக்கும் என்று சொன்னார்.
“யான் இதுகாறும் எடுத்துக்காட்டியவற்றால் சமஸ்கிருதம் எந்த வகையிலும் தமிழ்மொழியோடு உறவுடைய மொழியல்ல என்பது தெளிவாகப் புரியும். தமிழுக்கும் தமிழனுக்கும் வேறுபட்டது சமஸ்கிருதம். ஆகவே அது தமிழனுடைய மொழி ஆகாது, தொன்று தொட்டுவரும் தமிழ் மொழியைவிட ஆரிய மொழியாகிய சமஸ்கிருதம்
உயர்ந்த மொழியா?

வடமொழி பேச்சிழந்து போனதற்குக் காரணம், செயற்கையான அதன் ஒலிப்பு முறையாகும் என்றும் மேலும், “நான் ஆயுள் முழுவதும் சமஸ்கிருத மொழியைப் பயின்று கொண்டிருக்கிறேன், எனினும் எனக்கே ஒவ்வொரு தடவையும் புதியதாகத் தோன்றுகிறதெனில், சாதாரன மக்களுக்கு
அவற்றைப் பயில்வது எவ்வளவு சிரமாயிருக்கும். எனவே இவ்வெண்ணங்கள் பொதுமக்களுடைய சொந்த மொழியில் மொழிபெயர்க்கப் பட வேண்டும்.”
சமஸ்கிருதம் பற்றி பெரியார்

“சமஸ்கிருதம் பரவினால்தான் பார்ப்பான் வாழமுடியும், சுரண்டமுடியும், நம்மைக் கீழ்சாதி மக்களாக ஆக்க முடியும். அவன் ‘பிராமணானாக’ இருக்க முடியும். சமஸ்கிருத்த்தின் நலிவு பார்ப்பன ஆதிக்கத்தின் நலிவு.
அதை உணர்ந்துதான் ஒவ்வொரு பார்ப்பனரும் சர்வசாக்கிரதையாகக் காரியம் ஆற்றுகின்றார்.” –- விடுதலை 15.02.1960

“சமஸ்கிருதத்தினால் தமிழர்களும், தமிழ்நாடும் இன்று என்ன நிலைமைக்குத் தாழ்ந்து தொல்லையும், மடமையும், இழிவும் அனுபவிக்கிறோம் என்பதைச் சிந்திக்கவேண்டும்.” - விடுதலை 05.08.1963
“பார்ப்பனர்கள் செத்த பாம்பான சமஸ்கிருதத்தை எடுத்து வைத்துக் கொண்டு எவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்? பொதுப் பணம் சமஸ்கிருதத்தின் பேரால் எவ்வளவு செலவாகின்றது?
பொதுமக்களின் வரிப்பணம் சமஸ்கிருதத்துக்கு ஆக ஏன் ஒரு பைசாவாவது செலவாக வேண்டும். தமிழ் மக்கள் யாரும் இதைப்பற்றிக் கவலைப்படுவதில்லை.” - விடுதலை 28.06.1964
“வடமொழியை நமது படுக்கை வீட்டுக்குள் விட்டுக் கொண்டு மதம், கலாச்சாரம், கடவுள், ஆத்மார்த்தம், நாகரிகம், இலக்கியங்கள் பேச்சு வழக்கு முதலியவைகளில் தன்னிகரில்லா ஆதிக்கம் செலுத்த விட்டுக் கொண்டு இருப்பவர்கள் இந்தி வெறுப்பு,
இந்தி எதிர்ப்புகள் நடத்துவது வெக்கக் கேடான காரியம் ஆகும்.” –- விடுதலை 17.07.1964

“இந்நாட்டில் வந்து குடியேறிய ஆரியப் பார்ப்பனர்கள் தங்கள் மொழிக்குக் (சமஸ்கிருதத்துக்கு) கடவுள் பேரால் பல மகத்துவங்களைக் கூறி நம்மக்களக் கொஞ்சம்
கொஞ்சமாய்ச் சமஸ்கிருதச் சொற்களை அதிகமாக உபயோகிக்கச் செய்து அதன் மூலமே தங்கள் கலை, ஆசார அனுஸ்டானங் களைப் புகுத்தி விட்டனர். அந்த வேற்று மொழிக்குச் தனிச் சிறப்பு எதுவுமில்லை. -விடுதலை 09.07.1965
ஆர்.எஸ்.எஸ் ஸின் மொழிக்கொள்கை

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு 1952ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் டாக்டர் முகர்ஜி தலைமையில் நடந்த ஜனசங்க மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானமானது, ‘நாடு முழுவதும் சமஸ்கிருதத்தைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும். அதே நேரத்தில் சமஸ்கிருத எழுத்துக்களை பிரபலப்படுத்த வேண்டும்;
எல்லா இந்திய மொழிகளுக்கும் சமஸ்கிருத எழுத்துக்களையே பொது எழுத்தாக அறிவிக்க வேண்டும். உபநிடதங்கள், பகவத்கீதை, இராமாயணம், மகாபாரதம் ஆகியவைகளே இந்தியாவின் இலக்கியங்கள்’ என்று கூறுகிறது
ஆர்.எஸ்.எஸ் சட்டதிட்டங்களில் ‘விதிகளும் ஒழுங்குமுறைகளும்’ என்ற தலைப்பில் மூன்றாவது பிரிவு கீழ்கண்டவாறு கூறுகிறது
இந்து சமாஜத்தில் பல்வேறு வகையில் பிரிந்து கிடக்கும் குழுக்களை ஒன்றுசேர்த்து அவர்களுக்கு எழுச்சி ஊட்டி இளமை இரத்தம் பாயச்செய்ய வேண்டும். இந்து தர்மம், மற்றும் சமஸ்கிருத அடிப்படையில் இது செய்யப்பட வேண்டும்.
இதன் மூலம் பாரதத்தின் எல்லாத் துறைகளிலும் வளர்ச்சி பெற முடியும்” இது தான் இந்த அமைப்பின் நோக்கமும் கொள்கையும் ஆகும்.

மொழிப்பிரச்சனையில் குருஜி கோல்வால்க்கரின் பார்வை என்னவென்றால்
“இணைப்பு மொழி என்கிற பிரச்சனைக்கு ஒரு தீர்வாக அந்த இடத்தைச் சமஸ்கிருதம் பெறுகிற வரை வசதி காரணமாக இந்திக்கு நாம் முன்னுரிமை கொடுக்க வேண்டும். இந்தியானது இதர பாரதீய மொழிகளைப்போல
சமஸ்கிருதத்திலிருந்து வந்தது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் என்ற நவீன அறிவின் அனைத்து துறைகளிலும் எதிர்கால வளர்ச்சியை அது சமஸ்கிருதத்திலிருந்து பெறுகிறது என்கிறார்.
சைவ, வைணவ சமயஞ்சார்ந்த திருநாவுக்கரசர், நம்மாழ்வார் போன்றவர்கள் அகம் பற்றிய சங்க இலக்கிய மரபுகளைப் பின்பற்றி நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளனர். பரஞ்ஜோதி முனிவர் - சிவப்பிரகாசர் - சேக்கிழார் போன்றோர் வடமொழியைத் தமிழினின்றும் வேறுபடுத்திக் குறைத்து மதிப்பிட்டுள்ளனர்.
தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை என்று கூறப்படும் ஆங்கிலம் - ஆரியம் - தீந்தமிழ் மூன்றிலும் பெரும்புலமை பெற்றிருந்த மறைமலை அடிகளார், கா.சுப்பிரமணியம் (பிள்ளை), எம்.எஸ். பூரணலிங்கம்(பிள்ளை), பேராசிரியர் சுந்தரம்(பிள்ளை), பொறியாளர் பா.வே.மாணிக்க (நாயக்கர்), சூர்ய நாராயண (சாஸ்திரியார்),
பண்டித நா.மு. வேங்கடசாமி (நாட்டார்), பண்டித கதிர்வேல்(பிள்ளை), மொழிஞாயிறு நா. தேவநேயப்பாவாணர் இன்னும் எண்ணற்ற தமிழர்கள் வடமொழியை வெறுத்து ஒதுக்கியே வந்துள்ளனர்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with தீ பரவட்டும்

தீ பரவட்டும் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Firebird1506

Jan 13,
#எதுவும்_நிரந்தரமில்லை ....
😥உலகப்புகழ்பெற்ற #டிசைனர்.( Crisda Rodriguez) சமீபத்தில் கேன்சரால் இறந்து போனார். அவர் கடைசியாக எழுதிய வார்த்தைகள்..

#மரணத்தை_விட_உண்மையானது இந்த உலகத்தில் எதுவுமே இல்லை. !

இந்த உலகத்தில் விலை உயர்ந்த #பிராண்டட் கார் என்னுடைய கேரேஜில் நிற்கிறது. Image
ஆனால் நான் #சக்கரநாற்காலியில் அழைத்து செல்லப் படுகிறேன்.!

இந்த உலகத்தில் உள்ள அனைத்து வகையான டிசைன்களிலும் கலர் களிலும் விலை உயர்ந்த ஆடைகள் விலை உயர்ந்த காலணிகள் விலை உயர்ந்த பொருட்கள் அனைத்தும் என் வீட்டில் உள்ளது. ஆனால் நான் மருத்துவமனை வழங்கிய #சிறிய_கவுனில் இருக்கிறேன்.!
என் #வங்கி கணக்கில் ஏராளமான பணம் கிடக்கிறது ஆனால் எதுவும் எனக்குப் பயன் இல்லையே.!!

என் வீடு அரண்மனை போன்று கோட்டை போன்று உள்ளது ஆனால் நான் மருத்துவமனையில் ஒரு சிறு #படுக்கையில் கிடக்கிறேன்.
Read 6 tweets
Dec 17, 2021
பெரியார் எதிர்ப்பாளர்களின் கருத்தும்; உண்மையும்...

இன்றைய காலகட்டத்தில் இந்து சனாதனத்தை நிறுவ சனநாயகத்தை படுகொலை செய்துகொண்டிருக்கிறார்கள். தனிப்பெரும்பான்மை செருக்கு அவர்களுக்கு துணை போய்க்கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் இவற்றையெல்லாம் தடுத்து நிறுத்தும் அரணாகவும், அவர்களின் நோக்கத்தை சீர்குலைக்கும் தத்துவமாகவும் இருப்பது பெரியார்தான். பெரியார் இருந்த காலத்திலேயே அவரை நேரடியாக தாக்கினர், அவரின் கருத்தை மூர்க்கமாக எதிர்த்தனர், வசை பாடினர். மறைந்த பிறகும் அது தொடர்ந்தது.
பெரியார் என்ற தத்துவம் மட்டுமல்ல, பெரியார் என்ற பெயரே இருக்கக்கூடாது என பாஜக, ஆர்.எஸ்.எஸ். போன்ற வெளிப்படையான அமைப்புகளும், நபர்களும் கூடவே நடுநிலை போர்வையிலிருக்கும் வலதுசாரி ஆதரவாளர்களும் நினைக்கின்றனர். அதற்கு தீவிரமாக முயற்சியும் செய்கிறார்கள்.
Read 62 tweets
Dec 17, 2021
“தோலைக் கடித்து, துருத்தியைக் கடித்து, மெள்ள மெள்ள வேட்டை நாய் ஆகிவிட்டது” என்பதாக தமிழ் நாட்டுப் பழமொழி ஒன்று உண்டு.

பார்ப்பன மாடாதிபதி, விளக்கம் கொடுத்த பார்ப்பன நீதிபதி உட்பட அனைவரும் தமிழ்த் தாய் வாழ்த்தின் போது எழுந்து நின்று மரியாதை செய்ய ,
ஆணை பிறப்பித்த தமிழ் மகன் ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு 🙏🙏

பண்ணையார் சொல்வதும், பார்ப்பான் சொல்வதும்தான் சட்டம்” என்றொரு காலம் இருந்தது. தங்களது தீர்ப்பு குறித்தும், அதன் நியாயம் குறித்தும்,
அவர்கள் எந்த விதத்திலும் மக்களுக்கு விளக்கம் சொல்லக் கடமைப் பட்டவர்களாக இல்லை. நீதிபதிகளும் அதே நிலையில்தான் இருக்கிறார்கள்.

இதில் கலைஞர் இந்த *ஆரியம் போல்* வரியை நீக்கியும் அதில் பார்ப்பனர் அல்லாத திராவிடத்தை காட்டியதைபோல்,
Read 6 tweets
Dec 17, 2021
#செருப்புபிஞ்சிடும்_சீமான்

பெண்களின் வாழ்வை சீரழித்து
அவர்களை நோக வைத்து நொங்கு திண்ணும் செபாஸ்தியான் என்ற
செந்தமிழன் மகன் சைமன் என்ற சீமான் என்ற நயவஞ்சகன் யாரை செருப்பாலடிப்பதாக
சொன்னான்?
ஒரு நிமிட சுகத்துக்காக
ஒரு துளி விந்தளித்து
கட்டுவிரியனை பெற்றெடுக்க
கோவணம் அவிழ்த்த தந்தையையா?

அற்ப சுகத்துக்கு அயர்ந்துறங்கி
அய்ந்து*இருமாதங்கள் சுமந்து
அருங்கால் விஷம் கொண்ட
அரவத்தை பெற்ற அன்னையையா?
ஊரில் ஆயிரத்திற்கும் மேல்
உத்தமர்கள் உலா வர
ஊரை ஏமாற்றும் ஒருவனுக்காக
உள் மனதை துறந்தவளையா?

புண்ணாக்கு வசனம் பேசும்
பொறம்போக்கை நம்பி
பணத்தை அனுப்பி ஏமாந்த
புலம் பெயர்ந்த தமிழர்களையா?
Read 4 tweets
Dec 16, 2021
*கருத்துச் சுதந்திர களவாணிகள் !*

மாரிதாஸ் கைதுக்கு மார்பில் அடித்துக் கொண்டு கதறுகிறார்கள் சங்கிகள். கருத்து சுதந்திரம் பறிக்கப்படுகிறது என தமிழக பாஜக தலைவர் கொதிக்கிறார்.

கருத்துச் சுதந்திரத்தின் காவலர்கள் ஆட்சியின் நிலை என்ன தெரியுமா?
கருத்துச் சொன்னார்கள் என்ற ஒரே காரணத்திற்காகத் தனிநபர்கள் மீதும், பத்திரிகையாளர்கள் மீதும், ஊடக நிறுவனங்கள் மீதும் தொடர்ந்து வழக்குகளை போட்டு வருகிறது மோடி அரசு.

கருத்துகளை வெளியிட்டதால் கடந்த ஓராண்டில் 154 பத்திரிகையாளர்களை கைது செய்திருக்கிறது மோடி அரசு.
வெளிநாட்டு பத்திரிக்கையாளர்கள் 8 பேர் சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பிவிட்டார்கள்.  கடந்த ஐந்தாண்டுகளில் பத்திரிகையாளர்கள் மீதான நேரடியான வன்முறை தாக்குதல்கள் எண்ணிக்கை மட்டும் 198.
Read 21 tweets
Nov 27, 2021
சரிந்த சாம்ராஜ்யங்கள்-14

கஜினி முகம்மது (தவறான கண்ணோட்டங்கள்)

இந்தியாவில் இந்து – முசுலீம் முரண்பாட்டின் துவக்கமே கஜினியின் இந்தப் படையெடுப்புதான் என இன்று பாரதிய ஜனதா கும்பல் செய்து வரும் பிரச்சாரத்திற்கு உறுதியான அடித்தளத்தை வழங்குகின்றன நமது பாடநூல்கள்.
பாபர் மசூதியை இடிக்கத் தனது ரதயாத்திரையை குஜராத்திலுள்ள சோமநாதபுரத்திலிருந்துதான் துவங்கினார் அத்வானி.

அயோத்திக்கு பாபர்;

சோமநாதபுரத்திற்கு கஜினி.

அயோத்தியில் ராமர் கோயில் எதையும் பாபர் இடிக்கவில்லை என்பது பல வரலாற்று ஆசிரியர்களாலும்
தொல்பொருள் ஆய்வாளர்களாலும் தெளிவாக நிரூபிக்கப்பட்டுவிட்டது.

ஆனால் சோமநாதபுரத்தின் விசயம் அப்படி அல்ல. சோமநாதபுரம் கோயிலை கஜினி முகமது கொள்ளையிட்ட செய்தி நீண்ட நாட்களாகவே நமது வரலாற்றுப் பாட நூல்களில் இடம் பெற்று வருகிறது.
Read 87 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(