மதுரை மாவட்டத்தில் எங்கு ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டாலும், குறிப்பாக அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரம் பகுதிகளில் சாமி மாடு என்று முதலாவாக ஒன்றை அவிழ்த்து ஓடவிடுவார்கள். அதை யாரும் பிடிக்கக்கூடாது என்பது ஆண்டாண்டு கால மரபு அந்த மாடு மாவீரன்
அழகாத்தேவன் நினைவாகவே
அவிழ்த்துவிடப்படுகிறது ..

யார் இந்த அழகாத்தேவன்?

மதுரை மாவட்டத்தில் சொரிநாயக்கன் பட்டி இன்றைக்கு அது சொரிக்காம்பட்டியை சேர்ந்தவர்
கருத்தமாயன். நிலபுலன்களோடு
வாழ்ந்த செல்வந்தர்.

அவரது கடைக்குட்டி அழகாத்தேவன் பொறுப்பில்லாமல் தனது நண்பன் தோட்டி மாயாண்டியோடு ஊர் சுற்றுகின்ற நாடோடி
அழகாத்தேவனுக்கு கால்கட்டு (கல்யாணம்) போட்டுவிட்டால் பையன்
ஒழுங்காக இருப்பான் என்று
பெரியவர்கள் கூறியதைக் கேட்ட
கருத்தமாயன் பெண் பார்க்கும்
படலத்தைத் தொடங்கினார்.

நாகமலைக்கு அருகேயுள்ள
கீழக்குயில்குடியில் வாழ்ந்து வரும்
கருத்தமலையின் மகள் ஒய்யம்மாள்குறித்து அறிந்து, தன்
செல்வாக்குக்கு சமமாக இல்லையெனினும் கருத்த மாயன், கருத்தமலையின் வீட்டிற்கு பெண் பார்க்கச் செல்கிறார்

கருத்தமலைக்கோ ஏகமகிழ்ச்சி. தனது மகளைப் பெண்பார்க்க கருத்தமாயன் வருவதையறிந்து ஊருக்குள் தடபுடல் செய்கிறார். வழக்கமான சம்பிரதாயங்கள் முடிந்தபின்னர் கருத்தமாயன், தனது மகன்
அழகாத்தேவனுக்கு ஒய்யம்மாளை கேட்கிறார். கருத்தமலையோ தனது மகளிடம் ஒரு வார்த்தை கேட்க வேண்டும் என்று கூறி ஒய்யம்மாளிடம் கேட்கிறார்

அவளுக்குப் அழகாத்தேவனைப்
பிடித்துப்போனாலும், நிபந்தனை
ஒன்றை விதிக்கிறாள். தான் வளர்த்துவரும் ஏழு காளைகளை அழகாத்தேவன் அடக்கினால், திருமணத்திற்கு ஒத்துக்
கொள்வதாகவும், ஒருவேளை தோற்றால் தனது வீட்டில் பண்ணை அடிமையாக வேலை பார்க்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கிறாள்.

இந்த சவாலை அழகாத்தேவனும் ஏற்றுக்கொள்கிறான். காளையை
அடக்குவதற்கு நாள் குறிக்கிறார்கள்.தனது நண்பன் தோட்டி மாயாண்டியோடு இணைந்து கடும் பயிற்சி மேற்கொள்கிறான் அழகாத்தேவன்.
அந்த நாளும் வருகிறது. இரண்டு ஊர்ப்பொது மக்கள் மட்டுமன்றி, பக்கத்து ஊர் சனங்களும் கூடி நிற்க அழகாத்தேவன், வாடிவாசல் அருகே ஒய்யம்மாள் வளர்த்த ஏழு காளைகளை ஒவ்வொன்றாக எதிர்கொள்கிறான்.

அனைத்துக் காளைகளையும் மிகத்திறமையாகக் கையாண்டு வீழ்த்திய அழகாத்தேவன், ஏழாவது காளையோடு
மல்லுக்கட்டுகிறான். கடுமையான போராட்டத்திற்கிடையே அந்தக் காளை அழகாத்தேவனின் வயிற்றைப் பதம் பார்க்கிறது.

குடல் வெளியே சரிந்த நிலையிலும் போராடி அந்தக் காளையை அடக்கிவிடுகிறான். உயிருக்கு ஆபத்தான நிலையில், அழகாத்தேவனை அழைத்துச் செல்கின்றனர். ஆனாலும்
வாக்குக் கொடுத்த காரணத்திற்காக
கருத்தமலை பெண் கொடுக்க சம்மதம் தெரிவிக்கிறார்.
சுத்துப்பட்டு கிராம ஜல்லிக்கட்டுகளில் பெயர் பெற்ற தங்களது காளைகளை அடக்கி விட்டானே என்ற பொறாமையின்
காரணமாக ஒய்யம்மாளின்
சகோதரர்களுக்கு அழகாத்தேவனைப்
பிடிக்கவில்லை. ஆகையால் அவர்கள் ஒரு சூழ்ச்சி செய்து அழகாத்தேவனுக்கு மருத்துவம் பார்த்த
பெண்ணை சரிக்கட்டி அவனது உடம்பில் கொஞ்சம் கொஞ்சமாக விஷம் ஏற்றிக் கொலை செய்து விடுகிறார்கள்..

இந்த செய்தி ஒய்யம்மாளுக்குத்
தெரியவரும் போது தாங்கொணாத துயரத்தில் அழகாத்தேவனோடு
உடன்கட்டை ஏறி தனது உயிரை
மாய்த்துக் கொள்கிறாள் அழகாத்தேவன் நினைவாக அவனது பரம்பரையில் வந்தோர் மதுரை மாவட்டம்
செக்கணூரணிக்கு
அருகிலுள்ள சொரிக்காம்பட்டியில்
கோயில் கட்டி வணங்கி வருகின்றனர்.

கருவறையில் காளையோடு
அழகாத்தேவன் நிற்க அக்கோயிலுக்கு வெளியே அமைக்கப்பட்ட நினைவு
வளைவில் நண்பன் தோட்டி மாயாண்டிக்கும் சிலை எழுப்பியுள்ளனர்

கீழக்குயில் குடிக்காரர்களிடம்
சொரிக்காம் பட்டிக்காரர்கள்
எந்தவிதமன உறவோ கொடுக்கல் வாங்கலோ இப்போதும் வைத்துக் கொள்வதில்லை. இந்த மரபு காலங்காலமாக தொடர்கிறது

இந்த காதல் வரலாற்றை மதுரை மாவட்ட ஜல்லிக்கட்டு போட்டிகள்
இன்றும் தழும்பாய் சுமந்து
கொண்டிருக்கின்றன .. சொரிக்காம்பட்டி கிராம எல்லையில். தோட்டி மாயாண்டி காவல் நிற்க அழகாத்தேவன்
கருவறையில் காளையோடு அருள் பாலித்துக் கொண்டிருக்கிறான் 🙏.

பகிர்வு..

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @vanamadevi

Jan 2
"கோவையில் சில தனியார் கல்வி நிறுவனங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஷாகா பயிற்சி நடைபெறுவதாகவும், இது வன்முறை பயிற்சி என்றும், இதனை எப்படி காவல் துறை அனுமதித்தது என்றும்" திராவிடர் கழகத் தலைவர் திரு. கி.வீரமணி அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆர்எஸ்எஸ் என்றழைக்கப்படும் ராஷ்ட்ரீய
ஸ்வயம்சேவக சங்கம் தடை செய்யப்பட்ட அமைப்பு அல்ல. இந்திய அரசியல் சட்டப்படி, மற்ற பொது அமைப்புகளைப் போலவே இயங்கி வரும் பேரியக்கம்.1925-ம் ஆண்டு RSS அமைப்பை நிறுவிய டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார், இளம் வயது முதலே விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர். மருத்துவப் படிப்பை முடித்தும்
, மருத்துவராகப் பணியாற்றாமல் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர். மகாராஷ்டிர பகுதியில் காங்கிரஸின் முக்கியத் தவைவராக இருந்தவர்.

விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறையில் இருந்தபோது,இவ்வளவு பெரிய நாடு எப்படி அடிமைப்பட்டது, அதற்கு என்ன காரணம் என்று சிந்தித்தார். மக்களிடம் மாற்றத்தை
Read 10 tweets
Dec 28, 2021
பாற்கடலை கடைய அமுதம் வருமா?
பைத்தியக்காரத்தனம்.

அப்படி கடைவதற்கு மேரு மலை மத்தாக பயன்பட்டதாம்.வாசுகி பாம்பு கயிறாக பயன்பட்டதாம்-யப்பா முடியலடா சாமி.

இதைவிட ஒரு காமெடி என்னன்னா
அவ்ளோ பெரிய மலையை ஒரு ஆமை தான் முதுகுல தாங்கிக்கிச்சாம் கேட்டா அது விஷ்ணுவோட அவதாரமாம்.அவ்ளோ பெரிய
ஆமையை Discovery சேனல்ல கூட காமிக்கலையே.

தேவர்களும்,அசுரர்களும் பாம்பின் தலையையும் வாலையும் பிடித்து இழுத்தார்களாம்.

அப்படி இழுக்கும் போது முதலில் ஆலகால விஷம் வந்ததாம்.அத அப்படியே சிவன் அள்ளிக் குடிச்சாராம்.சிவன் செத்துறக் கூடாதுன்னு அவரோட சம்சாரம் சக்தி தொண்டையிலேயே அந்த
விஷத்த நிக்க வச்சிருச்சாம்.விஷத்த குடிச்சா சாமி சாகுமா?இல்ல அப்படி செத்தா அதுசாமியா?

அப்புறம் அமுதம் வந்துச்சாம் அத குடிச்ச தேவர்கள் சாகவே இல்லையாம்.

இப்படி ஒரு Fantacy கதைய Hollywood படத்துல கூட சொன்னதில்ல.இந்த கதையையெல்லாம் நம்பிக்கிட்டு இன்னமும் நீ சாமி கும்பிட்டுகிட்டு
Read 16 tweets
Dec 21, 2021
சௌதி அரேபிய ஷேக் ஒருவர் இதயமாற்று அறுவைச் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் அட்மிட் ஆனார்.

அவரது ரத்தம் அரிதான ஒரு வகை ரத்தம். அதே வகை ரத்தம் கொடுக்க இந்தியாவில் ஆள் கிடைக்குமா என்று தேடினார்கள்.

கிடைத்தார் ஒரு சென்னைக்காரர். அவர் சௌதி அரேபிய ஷேக்குக்கு ரத்தம்
கொடுக்க முன் வந்தார். அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்தது.

அகமகிழ்ந்து போன சௌதி அரேபிய ஷேக், அந்த சென்னைகாரருக்கு ஒரு டொயோட்டா பிராடோ கார், லாபிஸ் லேசுலாய் பதித்த நகைகள், வைரங்கள், ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் இவற்றைப் பரிசளித்தார்.

சென்னைக்காரர் செம ஜாலியாகி விட்டார்.

சில
ஆண்டுகள் கழித்து அதே சௌதி அரேபிய ஷேக்குக்கு, மும்பையில் மீண்டும் வேறு ஒரு அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. அந்த சென்னைக்காரருக்கு மீண்டும் அழைப்பு போனது. அவர், ரத்தம் கொடுக்க ஓடோடி வந்தார்.

ஆபரேஷன் நல்லபடியாக முடிந்தபோது அந்த சென்னைக்காரருக்கு ஷேக், நன்றி கூறி, ஒரு
Read 5 tweets
Dec 21, 2021
ரபேல் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கியது உச்சநீதிமன்றம்.

அப்போது உச்ச நீதிமன்றம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர்களிடம் 6 கேள்விகளை கேட்டது

உச்சநீதிமன்றம் கேட்ட 6 விஷயங்கள் ...

1 )நாட்டின் பாதுகாப்பு சம்பந்தபட்ட விசயத்தில்
முன்னாள் மத்திய அரசாக இருந்த காங்கிரஸ் அரசியல் செய்வது ஏன்?

2) காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தத்தை விட குறைவான விலையிலேயே ரபேல் விமானம் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது இதில் யார் தவறு செய்திருக்க வாய்ப்புண்டு?

3 ) சம்பந்தபட்ட நிறுவனமே விளக்கம் அளித்துள்ள போது நாட்டு
மக்களிடையே தவறான தகவல்களை கொண்டு சேர்த்ததற்காக உங்கள் மீது நடவடிக்கை எடுக்கலாமா?

4) ராணுவத்தின் பாதுகாப்பு சம்பந்தமான விவகாரங்களில் அரசியல் செய்யும் அளவிற்கு சென்றுவிட்டதா எதிர்க்கட்சிகள்

5) ஊழல் நடந்துள்ளதற்கான முகாந்திரத்தை கூட உங்களால நிரூபிக்க முடியவில்லையே ஏன்?

6) 5ம்
Read 4 tweets
Dec 21, 2021
பாசுரம் 6..

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய்! பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்

பொருள்:

அன்புத்தோழியே! நீ உடனே எழுந்திரு! பறவைகள் அதிகாலையில் எழுந்து கீச்சிடும் இனிய ஒலி இன்னும் கேட்கவில்லையா? கருடனை வாகனமாகக் கொண்ட எம்பிரானின் கோயிலில் வெள்ளை நிற சங்குகள் எழுப்பும் முழக்கம் காதில் விழவில்லையா? பேய் வடிவம் எடுத்து
தன்னைக் கொல்ல வந்த பூதகி என்ற அரக்கியிடம் பால் குடிப்பது போல் நடித்து அவளது உயிரைப் பறித்தவனும், சக்கர வடிவில் வந்த சகடன் என்ற அரக்கனின் உயிரைக் குடித்தவனுமான கண்ணபிரானை யோகிகளும், முனிவர்களும் "ஹரி ஹரி என்று அழைக்கும் குரலுமா உன்னை எட்டவில்லை! உடனே எழுந்து இவற்றையெல்லாம் கேட்டு
Read 4 tweets
Dec 20, 2021
இந்து நாளிதழ் சென்ற டிசம்பர் 9 ஆம் தேதி
‘ராவத் கொல்லப்பட்டார் ‘ என வெறும் மொட்டையாக எழுதி , ஏதோ குப்பன், சுப்பன் இறந்தது போல் செய்தி வெளியிட்டு இந்திய ராணுவத்தையே அவமானப்படுத்தியது. அவருடைய ரேங்கை குறிப்பிடாதது ஒரு குற்றமென்றால் ‘வீரமரணம்’ அடைந்தவரை ‘கொல்லப்பட்டார், என செய்தி
வெளியிட்டது அதை விட பெரிய மன்னிக்க முடியாத குற்றம்.
அதற்கு விளக்கம் கேட்டு ஒரு வாசகர் எழுதிய கடிதத்திற்கு ‘நாங்கள் சாதரணமாக இது போன்ற சந்தர்ப்பங்களில் இறந்தவர்களின் ரேங்க்,மற்றும் அன்னாருக்கு கொடுக்கப்பட்ட கௌரவ பட்டங்களை போடுவதில்லை என்ற மரபை கடைப்பிடிக்கிறோம் எனவும்
General Rawat க்கு அவமரியாதை செய்யும் எண்ணமில்லை எனவும் பூசி, மெழுகி மறுநாள் பதில் கொடுத்திருந்தது. இந்த கேடுகெட்ட பத்திரிகைக்கு protocol, rules and regulations எல்லாம் என என்ன வேண்டியிருக்கு..?

இதை ஒரு வாதத்திற்கு எடுத்துக் கொண்டால் கூட பாகிஸ்தான் ராணுவ தளபதி General Bajwa
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(